ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143500 topics in this forum
-
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருந்த சரத் பொன்சேகாவின் எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகியி ருக்கிறது . தேர்தலுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார். அத்துடன் அவரது அரசியல் எதிர்காலமே இப்போது கிட்டத்தட்ட சூனியமாகி விட்டது. ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று நள்ளிரவில் சரத் பொன்சேகா தங்கியிருந்த விடுதி முற்றுகையிடப்பட்டது. இது தற்காப்பு ஏற்பாடு என்றும் ஆயுதப் புரட்சியைத் தடுக்கின்ற நடவடிக்கை என்றும் அரசாங்கம் கூறியது. ஆனால் சரத் பொன்சேகாவோ தன்னைக் கைது செய்வதற்கு கொலை செய்வதற்கான முயற்சி என்று அபாயக்குரல் எழுப்பினார். பெரும் பிரயத்தனங்களின் பின்னரே அவர் அந்த விடுதியில் இருந்து வெளியேற முடிந்தது. சரத் பொன்சே…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்களவரின் மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான் தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு 3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர் சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளிலாகும் என கூட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் எம்.பி. 6 தமிழ் கட்சிகளின் கூட்டு ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அ…
-
- 15 replies
- 913 views
-
-
இழுபறிக்குள் இருந்த இடைக்கால அறிக்கை நேற்று முழுமையானது செப். 21 சபைக்கு முன்வைப்பு; ஒக்டோபரில் விவாதம் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 21ஆம் திகதி காலை, நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இடைக் கால அறிக்கையை அன்றைய தினம் முன்வைப்பார். இந்த அறிக்கை மீதான விவாதம் ஒக்ரோபர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவின் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற…
-
- 0 replies
- 158 views
-
-
மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்களை நேற்று சந்தித்து இலங்கையில் மனிதஉரிமை நிலவரம் பற்றி கலந்துரையாடியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ சுவையர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 'இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் தொடர் முன்னேற்றத்தில் பிரித்தானியா கொண்டிருக்கும் அக்கறையை தான் தெளிவாக எடுத்துக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=101091&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 239 views
-
-
மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள் பாரிய அசெளகாரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மேற்கொண்டனர். மாநகர சபையினரின் குறித்த அசமந்த போக்கின் காரணமாக மட்டக்களப்பு பூராகவும் துர்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது என்றும் பாதையோரங்களிலும், வாவிகளிலும், வடிகான்களிலும் கழிவுகளை மக்கள் போடுவதனால் மட்டக்களப்பு நகரம் முழுவதும் குப்பைகள் நிரம்பி வழிகின்றது என்றும் ஆர்ப்பாட்…
-
- 9 replies
- 595 views
-
-
எரிபொருள் நிலையத்தை கடந்து செல்கையில் மக்கள் தாக்குவார்களோ என அச்சமாக உள்ளது – கீதா குமாரசிங்க -சி.எல்.சிசில்- எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இன்று எரிபொருள் பிரச்சினை முழு இலங்கையையும் பாதித்துள்ளது. நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன். நான் ஓட்டுனரை விரைவாக செல்லச் சொல்கிறேன். அப்படியொரு நிலை உருவாகியுள்ளது. …
-
- 2 replies
- 399 views
-
-
சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளரும் அரசின் கைப்பாவையுமான சிறீரங்கா இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களை வடக்கு கிழக்கு தமிழ் மாணவர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கி அதில் இணையுமாறு கேட்டுள்ளார், வரப்போகும் பொதுத்தேர்தலில் மாணவர்கள் சார்பாக இரு மாணவர்களைப் போட்டியிட வருமாறு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் சென்று அழைப்புவிடுத்துள்ளார். விபரம் தெரியாமல் மாணவர்கள் அவருக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். ரங்காவைப் பற்றி அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி இந்தச் சதிவலையில் சிக்காமல் இருக்க உதவுமாறு உங்களுக்குத் தெரிந்ததானைவருக்கும் தெரியப்படுத்துங்கள். இன்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ரங்கா இதற்கு அழைப்புவிடுத்துள்ளார்
-
- 0 replies
- 959 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடெல்லி செல்லும் அவர், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகப் பிரமுகர்களுடனும் ரணில் சந்திப்பு நடாத்த உள்ளார். தென், மேல் மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=101356&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 332 views
-
-
தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுவோர் குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் ஹிக்கடுவை பிரதேசத்தில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், தேசிய கிறிஸ்தவ தேவாலய பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தூதரகப் பேச்சாளர் ஜூலியானா ஸ்பவன் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 384 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தீர்மானித்துக்கொண்டிருக்கின்ற அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகிய மூவரை கொண்ட எஸ்எம்எஸ் அணியை புறக்கணிக்குமாறும் அதற்கு பதிலாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்களிக்குமாறு பிரான்சு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இக்கூட்டமைப்பானது பிரான்சிலுள்ள 64 சங்கங்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பெரிய கட்டமைப்பாகும் அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு: தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 21 replies
- 1.7k views
-
-
ஐ.நா மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை குறித்து ஜப்பான் இன்னமும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளியான பின்னரே பிரேரணை குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதொ ஹொபொ தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான பிரேரணை நகல் வெளியாகிய பின்னர், அது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், இதுதொடர்பில் டோக்கியோ அதிக கரிசனை செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கு ஜப்பானிய அரசாங்கம் 160 மில்லியன் ரூபாவை அ…
-
- 1 reply
- 362 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 23.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 407 views
-
-
இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை ரொய்ட்டர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள…
-
- 11 replies
- 704 views
-
-
மன்னார் பகுதியில் எண்ணெய்க் கொள்ளை - தென்செய்தி திகதி: 18.03.2010 // தமிழீழம் இந்திய - இலங்கை உடன் பாட்டை மீறும் வகையிலும் இந்தியா வின் நலன்களுக்கு எதிராகவும் சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியில் பெட்ரோல் கிடைப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. காவிரிப் படுகைப் பகுதி என்பது நாகை மாவட்டப் பகுதியிலும் மன்னார் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் மன்னார்-யாழ்ப்பாணம் பகுதி வரை பரவி உள்ளது. மன்னார் வளைகுடாவில் உள்ள கடல் பகுதியில் பெட்ரோல் எடுப்பது என்பதை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும், அதனை இரு நாடுகளுமே சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என 1974ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை செய்து கொண்டிரு…
-
- 0 replies
- 594 views
-
-
சிலிண்டர்களின் விலை, 21,000 ரூபாவாக.... அதிகரிப்பு ! லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது . தலை நகரிலும் அதை தாண்டி பல மாவட்டங்களின் பல மாதங்கள் கடந்தும் சிலிண்டரின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இந்த நிலையில் வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வெற்று எரிவாயு சிலிண்டர் 16,000 ரூபா வரையிலும், 5 கிலோ சிலிண்டர் 9,900 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274583
-
- 4 replies
- 401 views
-
-
சென்னை, மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.) இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது. 2009 மே 18}ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நா…
-
- 53 replies
- 3.6k views
-
-
யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை யாழ் நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010 எமது மண் ஆக்கிரமிக்கப்படுகின்ற அதேவேளை, எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து வளங்களும் சுரண்டப் படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு எமது மண்ணில் இருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் எமது மக்கள் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தமது சொந்தங்களைப் பிரிந்து மீள முடியாத சோகத்தில் வாடும் எமது மக்கள் தமது சொந்த …
-
- 20 replies
- 1.6k views
-
-
99.38 விகிதமான அவுஸ்திரெலியாத் தமிழர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மொத்த வாக்குகள் - 8272 நிராகரிக்கப்பட்டவை - 67 நிராகரிக்கப்படாதவை - 8205 ஆம் என வாக்களித்தோர் - 8154 (99.38%) இல்லை என வாக்களித்தோர் - 51 (0.62%)
-
- 6 replies
- 949 views
-
-
‘புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அனுபவங்களையும் பெற முடியும்’ “எமது புதிய அரசமைப்புக்கு பின்லாந்தின் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான அனுபவங்களையும் எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பின்லாந்தின் பிரதமர் யுஹா சிபிலாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டமை இரு நாடுகளுக்குமிடயிலான நட்புறவை வளர்க்கும், பலப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாகும்” என பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலா தெரிவித்தார்…
-
- 4 replies
- 512 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக.... வாக்களிக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு! தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். https://athavannews.com/2022/1278351
-
- 0 replies
- 93 views
-
-
சக்தி டிவி செய்திகள் 15-10-2017
-
- 0 replies
- 835 views
-
-
நாட்டில்... இன்று, மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எனினும் நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதிகளில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி? குறித்த வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. …
-
- 0 replies
- 150 views
-
-
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான பலத்தைக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அரசியலமைப்புக்கு சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்திருக்கிறது. இரு திருத்தங்கள் முதலில் கொண்டுவரப்படுமென்று அண்மையில் செய்தியாளர் மகாநாடொன்றில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். எதிரணிக் கட்சிகளின் சில உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசியலமைப்புக்கான திருத்தங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட முடியுமென்று அரசாங்கம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அரசியலமைப்புத் திருத்தத்தையே முதலில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்…
-
- 0 replies
- 539 views
-
-
Sri Lanka Tamil killings 'ordered from the top' சனல் நியூஸ்.. திகைக்கவைக்கும் படங்கள்.. http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687 untitled.bmp
-
- 20 replies
- 2.5k views
-
-
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை நேரம் இரவு 10.05ற்கு கைதான இவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் தனியாக விசாரணைக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser,…
-
- 4 replies
- 871 views
-