ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
சுவிஸ் வங்கியில் இலங்யைர்களின் 307 மில்லியன் பிராங் வைப்பில் இலங்கையர்களால் கடந்த ஆண்டில் சுவிஸ் வங்கியில் 307 மில்லியன் சுவிஸ் பிராங்க் சேமிக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின் றது. சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. உலகெங்கிலுள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தின் தொகையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் 1.41 ட்ரில்லியன் சுவிஸ் பிராங்கில் இலிருந்து 1.42 ட்ரில்லி யன் வரை அதிகரித்துள்ளத…
-
- 0 replies
- 354 views
-
-
-
ஆவா குழுவினர் இருவர் கைது - பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்…
-
- 1 reply
- 408 views
-
-
புதிய 1000 ரூபா நாணயத்தாள் நேற்று முதல் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழிபிறந்துள்ளதை நினைவுகூரும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் புதிய நாணயத்தாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புழக்கத்திற்கு விடப்பட்டது. …
-
- 4 replies
- 860 views
-
-
எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…
-
- 6 replies
- 895 views
-
-
தென்பகுதி மீனவர்களின் வருகையை கண்டித்து மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராம மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார் சௌத்பார் தென் பகுதி கடற்கரையில் தங்கி நின்று கடல் தொழிலில் ஈடுபட வருகை தரவிருக்கும் தென்பகுதி மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபபட்டது. . http://www.virakesari.com/?q=node/359026
-
- 0 replies
- 282 views
-
-
-
- 1 reply
- 361 views
-
-
களுத்துறை நகரில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேக்காவின் புகைப்படத்துடன் கூடிய கட்அவுட்டுக்கள் கடந்த 29ம் திகதி இனந்தெரியாத சிலரினால் அகற்றப்பட்டமைக்கு எதிராக களுத்துறை நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. சரத் பொன்சேக்காவின் புகைப்படத்தை ஏந்திய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான, மாகாண சபை உறுப்பினர் பி.டி.அபேரத்ன தலைமையில், களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், பொன்சேக்காவின் படத்தைத் தாங்கியவாறு களுத்துறை நகரில் பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுபபினர் லக்ஸ்மன் விஜேமான, யுத்தத்தின் மூலம் நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினரின் படங்களை அழிப்பதற்…
-
- 7 replies
- 926 views
-
-
Wednesday, 2013-11-13 வடக்கு மக்களைப் போல் மிகக் கொடூரமானதொரு வாழ்க்கையினை இலங்கையில் வேறொருவரும் அனுபவிக்கவில்லை. யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இராணுவத்தினரும் அரசாங்கமுமே முழுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஜக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 1,47,642 பொது மக்களின் நிலமை என்ன? சர்வதேச ஊடகங்கள் தலையிட்டில்லாதிருப்பின் இலங்கையில் நடந்த இனப்படுகொலை மூடி மறைக்கப்பட்டிருக்கும். எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ கொத்தாவில் நேற்று சமகி இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர்…
-
- 8 replies
- 979 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவருக்கு பதவி நீடிப்பு ஏன்? பன்னாட்டுச் சமூகத்தின் அறிக்கைகளில் குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஒரு வருட காலத்துக்கு மீண்டும் பதவி நீடிப்பை வழங்கி மனித உரிமைகள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இலங்கையின் உள்நாட்டுப் போர் மிக மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்திய இலங்கை யின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிய சிசிர மென்டிஸுக்கே அமைச்சரவை பதவி நீடிப்பை வழங்கியுள்ளது. கூட்டு அரசு , உள்நாட்டுப் போரின்போது இடம் பெற்ற பெரியளவிலா குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது குறி…
-
- 0 replies
- 316 views
-
-
சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என அறிவிப்பது தவறு – ஆனந்த சங்கரி குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சில கட்சிகள…
-
- 0 replies
- 228 views
-
-
ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிந்து வாழ்வதற்கு இலங்கை மக்கள் என்றுமே தயாராக இல்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற வியட்நாம் தேசிய தலைவரின் சிலை திறப்பு வைபவத்தில் உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் மேன்மையாக மதிக்கும் நாடு. இலங்கை மக்களின் சுயாதீனமாக போராட்டங்களின் சாரம்சத்தை பிழிந்தே மகிந்த சிந்தனை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியட்நாம் தேசிய தலைவர் வோ சீ மிங்கின் சிலையை இலங்கை நிர்மாணித்ததை காலத்திற்கு உகந்த நடவடிக்கை என்றார். http://www.seithy.com/breifNews.php?newsID=97639&category=TamilNews&…
-
- 9 replies
- 819 views
-
-
சண்டேலீடர் பத்திரிகைக்கு ஜெனரல் சரத் பொன்சேக்கா வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டமை சம்பந்தமாக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அவர் சண்டேலீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜயன்ஸக்கு தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அறிவித்தலொன்றை அனுப்பியுள்ளார். தான் தெரிவித்த கருத்துக்களைத் திரிபுபடுத்தியமை தொடர்பாக சட்டத்தரணி அறிவித்தலை அனுப்பியுள்ள சரத் பொன்சேக்கா 38 வருடகாலமாக இராணுவத்தில் பணியாற்றி ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறும் அப்படியில்லை எனில் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சண்டேலீடர் பத்திரிகை 500 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். …
-
- 5 replies
- 656 views
-
-
வடக்கில் பொலிஸ் சேவையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதனால் அதில் இணைய முன்வர வேண்டும் – சீ . வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பொலிஸ் சேவையில்தான் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்பதனால் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செஞ்சோலை சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் இன்றைய தினம் மாகாணசபை அமர்வினை நேரில் பார்க்க வந்திருந்தனர். அதன்போது சபை தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைக்கப்பட்ட போது முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது சிறுமிகள் தங்களுக்கு இல்லத்தில் கல்வி கற்க மண்டப வசதி செய்து தரவும், நுளம்பு…
-
- 2 replies
- 407 views
-
-
சரத் பொன்சேகா பல விடயங்களில் தமிழ் கூட்டமைப்பிற்கு உத்தரவாதம் – அவர்களின் ஆதரவு கிடைக்கலாம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத்திட்டங்களும் சமாதான வழிமுறைகளும் அடங்கிய ஆவணம் ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கையளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கையளிக்கப்பட்ட ஆவணத்தில் 10 அம்சங்கள் உள்ளடக்கப்படடுள்ளன. சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படைகள் மற்றும் ஆயுதக்குழுக்களை தடைசெய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வு அளித்தல் போன்றவை இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப…
-
- 4 replies
- 660 views
-
-
‘நாடகங்களைத் தவிர்த்து காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’ “அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் அம்மக்களது பாவனைக்கு வழங்கப்படாதுள்ள நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். கேப்பாப்புலவு மக…
-
- 1 reply
- 205 views
-
-
வீரகேசரி இணையம் 1/10/2010 10:13:57 PM - கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் நினைவாக ஞாபகார்த்த மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த மண்டபத்தினை திறந்துவைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய, அமரர் மகேஸ்வரனின் மனைவி, பிள்ளைகள் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
-
- 0 replies
- 652 views
-
-
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது! அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு அரச உத்தியோகத்தரும் 55 வயதிற்குப் பின்னர் விரும்பினா…
-
- 0 replies
- 197 views
-
-
யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளி லேயே டெங்கு நோயின் பரம்பல் அதிகரித் துக் காணப்படுவதாக யாழ். பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ். மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் டெங்கு நோய் பீடிக்கப்பட்ட 308 நோயாளர் கள் இனங்காணப்பட்டதுடன் அதில் 5 பேர் உயிரிழந்தனர்.அத்துடன் இம் மாத ஆரம்பத்திலிருந்து நேற்று முன்தினம் வரை 350 நோயாளர்கள் இனங்காணப் பட்டதுடன் அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் இம் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து நேற்று முன்தினம் வரை மாத்திரம் யாழ். மா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக் கும் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் நல்லூர் பிரதேச சபைப்பிரி வில் 56 நோய…
-
- 0 replies
- 461 views
-
-
'லங்கா' வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ‘லங்கா’ வார இதழின் அலுவலகம் பொலிஸாரால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை குறை கூறியது தொடர்பாக இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெள்ளிகிழமையன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கத்தை குறை கூறுபவர்களிடம் கணக்கு தீர்க்கும் நேரமாக ஜனாதிபதி செயற்படுவது போல தோன்றுவதாக ஹியூமன் ரைட்ஸ…
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்போ, அன்றி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமோ கிடையாதென தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த தனது வருடாந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள மேற்படி சங்கம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர மீறல்களுக்குப் பேர் பெற்றுள்ளதுடன், ஊடக சுதந்திரம் பேணப்பட்டுவருவது குறித்து 2013ஆம் ஆண்டின் தனது சுட்டியில் அடங்கும் 179 நாடுகளுள் 162ஆம் இடத்தையும் இலங்கை பெற்றுள்ளதனால் "எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு அதனை "தீவிர கண்காணிப்பின் கீழ்" உள்ள நாடொன்றாக வகைப்படுத்தியிருந்ததை நினைவுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கான அச்ச…
-
- 1 reply
- 427 views
-
-
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் நாளை முதல் யாழ்.போதனாவில் மீள ஆரம்பம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான…
-
- 0 replies
- 235 views
-
-
சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜெனிவாவில் பரப்புரைப் போர் சரத் வீரசேகரவை களமிறக்குகிறது மகிந்த அணி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத்தொடரில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பரப்புரைப் போரை முன்னெடுப்பதற்காக முன்னாள் படை அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை மகிந்த அணி ஜெனிவாவில் களமிறக்கவுள்ளது. சிறப்பு அறிக்கையுடன் நாளை மறுதினம் புதன்கிழமை ஜெனிவாவுக்குப் புறப்படுகின்றார் சரத் வீரசேகர. இந்தத் தகவலை ‘உதயன்’ பத்திரிகையிடம் உறுதிப்படுத்திய அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என…
-
- 3 replies
- 391 views
-
-
இன்று முதல் மின்வெட்டு குறைக்கப்படும் இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பை பொறுத்து திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு குறைக்கப்படலாம் அல்லது இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, 28,300 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளுடன் மற்றொரு எண்ணெய் டேங்கர் கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளது. இதற்கான கொடுப்பனவாக சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவி…
-
- 3 replies
- 306 views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பேர்னாட் சவேஜ் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வாரஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார். அதன் தமிழ் வடிவம் வருமாறு: கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன? பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொண்டது. அதனை நாம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி அறி…
-
- 0 replies
- 845 views
-