Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தீர்வா திருகுதாளமா.. போர்க்குற்ற விளையாட்டை மீன்பிடி விளையாட்டாக மாற்றுவதில் சிறீலங்காவும், இந்தியாவும் முனைப்பாக ஈடுபட்டிருக்கின்றன.. கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீர்வுத்திட்டத்தை அறிமுகம் செய்வதும் – பின் ஏமாற்றுவதும் – தமிழரின் காதில் பூ வைப்பதும் – சிங்கள இனவாத அரசு நடாத்திய அரதப் பழைய கூத்துகளாகும். இப்போது கொஞ்சம் வித்தியாசமான தீர்வுத்திட்டம் பற்றி சிங்கள அரசு பேச ஆரம்பித்திருக்கிறது. ஆறு மாதங்கள் பொறுங்கள் அரிசி கொத கொதவென வேகிவிடும் என்று கூறுகிறார் பக்கா கில்லாடியான பசில் ராஜபக்ஷ. ஏனிந்த ஆறு மாதங்கள்… சனல் – 4ம் போர்க்குற்றமும் சிறீலங்கா அரசை விரட்டிக் கொண்டிருக்கின்றது. அரசியல் கடலில் போர்க்குற்ற மீன் மகிந்த அன் கம்பனியை விழுங…

    • 0 replies
    • 608 views
  2. மஹிந்தவிடம் பணம் பெற்றதை நிரூபியுங்கள்: வியாழேந்திரன் சவால் மஹிந்தவுடன் இணைந்து கொள்ள பணம் பெற்றுக்கொண்டதாக போலி பிரசாரங்களை செய்வதை தவிர்த்து, முடியுமாயின் அதனை நிரூபித்து காட்டுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”நான் மஹிந்தவோடு இணைந்து கொண்டேன் என்று கூறுகின்றவர்கள் முதலில் அதனை நிரூபிக்க வேண்டும். நான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவருடன் இணைந்து அவர் தலைமையிலான அமைச்சரவையிலேயே அங்கம் வகித்தேன். அரசியலுக்கு வந்த பிறகும் தொழில் செய்தே நாங்கள் வாழ்கிறோம். ம…

    • 3 replies
    • 859 views
  3. கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி! adminNovember 27, 2023 யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2023/197858/

  4. புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:34 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கல…

  5. செப்டம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கமானது சில இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் இந்திய ஊடகக்ங்களும் குறிப்பிட்டுள்லன.இது ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை தமக்கு எதிரான மனுக்களை சமர்ப்பிப்பதனை தடுக்கும் நாடகங்களில் ஒன்றாக இருக்கும் என கூறபப்டுகின்றது. . ஏற்கனவே சில இராணுவ சிப்பாய்களும் , அதிகாரிகளும் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பொன்சேகாவுக்கும் எதிரணிகளுக்கும் ஆதரவான ஆட்களாகவும் இருக்கலாம். அல்லது ஏற்கனவே இராணுவத்தை விட்டு ஓடி வெளி நாட்டுக்குச்சென்றவர்களாகவும் இருக்கலாம். ஈழநாதம்

  6. சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும APR 24, 2015 | 16:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்த கொடிகள், சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மையினங்களைக் குறிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட- தனியே சிங்கள இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர…

    • 5 replies
    • 667 views
  7. சந்தேக நபரைப் பிடிக்க முயன்ற பொலிசாருக்கு கத்திக் குத்து! - மூளாயில் பதற்றநிலை [Wednesday 2015-04-29 08:00] பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றவரைப் பிடிக்க முயன்ற போது, மூளாய், மாவடி பகுதியில் நேற்று மாலைபொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகலால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்ய முற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த இடத்துக்கு மேலதிக பொலிஸார் வ…

  8. முஸ்லீம்களாக மாறிய சம்மந்தன் சுமந்திரன்?; அதிர்ச்சியில் கூட்டமைப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசுடன் பங்கு பற்றி தமிழ் மக்கள் விடயத்தில் உறுதியான தீர்வினை பெற்றுக் கொடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரை முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், முஸ்லிம்களுக்கு 13 அமைச்சுக்களையும், ஆளுநரையும் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாழ்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது காட்டும் உச்சக்கட்ட கோவத்தின் வெளிப்பாடாகவே கருதப்ப…

    • 3 replies
    • 951 views
  9. சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை! adminDecember 18, 2023 உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்ட…

  10. கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் கடத்தல் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 09:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரான சக்கிவேல்பிள்ளை பிரகாஸ் (வயது 29) எனபவர் கடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ஊடக அமைப்பின் செய்தி முகவர் நிலையத்தின் இலங்கைக்கான ஊடகவியலாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புறக்கோட்டை சிறிலங்கா அதிகாரிகள் தாம் சக்கிவேல்பிள்ளை பிரகாஸை கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். சக்கிவேல் பிரகாஸ் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகவும் தொழிற்பட்டு வந்திருக…

  11. ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பான விவகாரத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளதாக ‘ரொய்ட்டர்‘ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அடுத்த ஆண்டு வரை இந்த அறிக்கை தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டரிடம் கூறியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தூதுவர்கள் முறைசாரா கலந்துரையாடல் குறித்த மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், பாரிய மனிதஉரிமை மீறல்கள் , மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசை…

  12. 19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை – நீதி அமைச்சர் 19ம் திருத்தச் சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த குழு நிலை விவாதத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை உள்ளடக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டு சட்டம் முழுவடிவம் பெற்றதன் பின்னரே சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் உறுதிப்படுத்தப்படும் வ…

  13. மென்வலுவூடான அரசியல் உரிமையை பெறுவது எப்படி என்கிறார் சாணக்கியர்! மென்வலுவின் ஊடாக அரசியல் உரிமையைப் பெறுவது எவ்வாறு? புதிய அரசமைப்பு உருவாக்கவிடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறானதொரு மென்வலுவைப் பிரயோகிக்கின்றது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளான கற்றறிந்த சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மீது சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலனமின்றி விளக்கமளிக்கையிலேயே அவர் இவை தொடர்பிலும் கருத்துரைத்திருக்கின்றார். அவரது விளக்கம் வருமாறு:- மென்வலு என்பது கத்தியின்றி, …

    • 0 replies
    • 360 views
  14. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம் வட்டமிட்டதன் பின்னரே கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் கூடுதலாக எரிபொருட்கள் இருந்த நிலையில், அது தரையிறக்கப்பட்டமை ஆபத்தானது என்றும் மலாக்கா நீரிணைக்கு மேலாக விமானத்தை வட்டமடிக்கவேண்டிய நிலைமை விமானிக்கு ஏற்பட்டது என்றும் மலேசியா ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பிரகாரம் நேற்றிரவு 11.30க்கு புறப்பட்ட…

  15. ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த ஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள சுருக்கமான செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். சமல் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், உங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது, அதற்கு அவர், ”நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். ஒவ்வொருவதும் பரப்புரை …

    • 0 replies
    • 466 views
  16. வடக்கில் தாக்குதலை ஆரம்பிப்பதா? கிழக்கை தொடர்ந்து தக்கவைப்பதா? -விதுரன்- தெற்கில் அரசியல் நிலைமை மோசமடைகிறது. கிழக்கை கைப்பற்றி பாரிய வெற்றிக் கொண்டாட்டத்தை அரசு நடத்திய போதிலும் தெற்கில் அரசுக்கெதிராக பெரும் உணர்வலைகள் எழுந்துள்ளதை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணி காட்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை படையினர் கைப்பற்றியதற்கு அரசியல் ரீதியாக வழங்கப்படும் முக்கியத்துவமானது, குடும்பிமலையின் (தொப்பிகல) வீழ்ச்சியானது இராணுவ ரீதியில் புலிகளுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தவில்லையென்பதை தெளிவுபடுத்துகிறது. அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் கிழக்கை இழந்தது புலிகளுக்கு பின்னடைவுதானென்றாலும் குடும…

    • 3 replies
    • 1.5k views
  17. [ திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பு வாதப்பிரதிவாதங்கள், குறுக்குவிசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்த சந்திப்பாகவே நடந்திருப்பதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அவசரகாலச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், அவசரகாலச்சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் ச…

  18. இந்தியாவின் 70வது குடியரசு தினம் யாழில் கொண்டாடப்பட்டது… January 26, 2019 இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26.01.2019) யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசுதின நிகழ்வுகள் காலையில் தூதரகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. காலை நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவழியினர் ஊடகவியலாளர்கள் என 80ற்கும் மேற்பட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடரந்து இந்திய ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட குடியரசுதின வாழ்த்துச் செய்தி இந்திய துணைத் தூ…

    • 18 replies
    • 1.9k views
  19. சிறையில் இருந்து வெளிவந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு தென்மராட்சி - சாவகச்சேரி - மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட அன்று நீர்வேலியிலுள்ள உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் சகோதரருக்கு உறவினர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரை யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை ப…

  20. மகிந்தாவுக்கு மீண்டும் அழைப்பாணை நேற்று ( செப்டெம்பர் மாதம், திகதி 30) இலங்கை உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகங்களுக்கு ஊடாக அழைப்பாணை மகிந்தவுக்கு அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெயின் விடுத்துள்ளார். அதேநேரம் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த பிடியாணையை ஏற்றுக்கொள்ள கேட்டும் தாக்கல் செய்தார். அதாவது நேரடியாக பிடியாணையை கொடுக்க முயன்றும் அவரை சுற்றி நின்ற பாதுகாவலர்கள் ஏற்க மறுத்ததால் தாம் இலங்கை-உலக ஊடகங்கள் மூலம் இந்த ஆணையை அவரிடம் சேர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். இதை நீதிமன்றம் ஏற்கும் என நம்பிக்கையும் தெரிவித்தார். Mr. President “You Have Been Served” On Friday September 30, a thirty page long complaint detailing charges against President Rajapak…

  21. சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம்;மாணவி கொலைக்கு நீதி கிடைக்கும்! - என்கிறார் ரணில். [saturday 2015-05-23 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விவகாரத்தில் பொலிஸார் கடமைகளைச் சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தவும் மாணவியின் படுகொலை தொடர்பில் உண்மைகளைக் கண்டறியவும் விசேட பொலிஸ் குழுவினர் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாடசாலை மாணவி வித…

  22. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சிறிலங்கா படைத்தரப்பின் முக்கிய அதிகாரிகள் சிலர், வீரச் சாவடைந்த விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது தற்செயலாக நடந்த நிகழ்வுதான் ஆனால் செய்வதறியாது படை அதிகாரிகள் நின்றனர். வவுனியா செந்தில்நாதன் நற்பணி மன்ற மாணவர்களின் இசை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். குறிப்பிட்ட இசை நிகழச்சி ஆரம்பமாவதற்கு முன்னராக இடம்பெற்ற, தாயக மீட்புப் போரில் வீரமரணமடைந்த போராளிகளுக்கும் மற்றும் கொலையுண்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் என விழா ஆரம்பிப்பாளரால் தைரியமாக சொல்லப்பட்டது. உடனடியாக அனைவரும் எழுந்து நின்று அகவணக்…

  23. சிறிலங்காவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல் MAY 29, 2015 | 3:29by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும். இவ்வாறு the diplomat ஊடகத்தில் Peshan Gunaratne மற்றும் J. Berkshire Miller ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நி்த்தியபாரதி. சிறிலங்காவின் கேந்திர மூலோபாய அமைவிடமானது இந்திய மாக்கடல் பிராந்தியம் மீதான போட்டியாளர்களான சீனா, இந்தியா மற…

    • 0 replies
    • 370 views
  24. ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ் உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கி…

  25. சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த ஆட்சியில் இன்றும் சிறீலங்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு சிறீலங்கா உடவலவ, பணஹடுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள்,ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு,இவர்களை சுட்டவர்கள் யார் என்பது தொடர்பாக சிறீலங்கா பொலீஸார் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக அந்நாட்டு பொலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.