ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்து 500 கோடி ரூபா பணத்தை எடுத்துள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கை வங்கிகளில் 5ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இது குறித்து நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் கசிந்துள்ளது. இந்த பெருந் தொகை பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவரது ஆலோனைக்கு அமையவே இந்த பணத்தை வங்கிகள் விடுத்துள்ளன. மைத்திரிபால சிறிசேன பதவிக்கு…
-
- 2 replies
- 699 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காட்டுப் பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களில் கடமைபுரிந்துவரும் 500 ற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினருக்கு மலேரியா நோய் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அவர்கள் மேற்படி காட்டுப்பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சியில் இயங்கும் இராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை May 3, 2025 11:36 am 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இவ்வாண்டு 2ஆயிரம் பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இதில் 500 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். https://oruvan.com/action-to-induct-500-tamil…
-
- 1 reply
- 228 views
-
-
500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து இராணுவத்தின் கையில் ஒப்படைத்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தருமாறும் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை 10 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்ட்ச்செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்தனர். …
-
- 0 replies
- 386 views
-
-
500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியரிமை வழங்கப்பட்டுள்ளது. 25,000 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு தாய் நாட்டுக்கு சேவையாற்ற இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன தெரிவித்துள்ளார். சில தசாப்தங்களாக தங்களது தாய் நாட்டுக்கு சேவையாற்ற புலம்பெயர் சமூகத்திற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தங்களது அந்த நாடுகளின் நண்பர்களுக்கு இலங்கை…
-
- 0 replies
- 330 views
-
-
வியாழக்கிழமை, மார்ச் 24, 2011 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சட்டதரணியுமான விஜேதாஸ ராஜபக்ஷ்விற்கு 500 மில்லியன் ரூபாவினை நட்டஈடாக வழங்க வேண்டும் என லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2007ஆம் ஆண்டு சிலுமின பத்திரிகையில் வெளியான செய்தியினால் தனது பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ், கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்தரப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் எதுவித விவாதங்களையும் முன்வைக்கப்படவில்லை என எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்…
-
- 0 replies
- 1k views
-
-
500 மில்லியன் கோரிய விஜயதாஸவிடம் 5000 மில்லியன் கோரும் பொன்சேகா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் இருந்து 5000 மில்லியன் ரூபாய் நஸ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மினுவான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை முன்னதாக 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரி பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக விஜதாஸ ராஜபக்ஷ கூற…
-
- 0 replies
- 388 views
-
-
500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 500 அறைகளை கொண்ட விடுதி ஒன்றினை கொழும்பில் அமைப்பதற்கு ஹொங்கொங் நாட்டைத் தளமாக கொண்டு இயங்கும் ஷங்கிரி லா நிறுவனத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபை அனுமதியளித்துள்ளது என திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் ஷங்கரி-லா லங்கா ஹோட்டல் லிமிடட் என பெயரிடப்படவுள்ள இந்த விடுதிக்காக தற்போதே நிலம் மற்றும் சில தேவைகளுக்காக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈழ நாதம்
-
- 1 reply
- 915 views
-
-
500 மில்லியன் டொலரை கடனாகப் பெற முடிவு: சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி [வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007, 18:20 ஈழம்] [கொழும்பு நிருபர்] 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 13 வெளிநாட்டு வங்கிகளிடமிருந்தும், இரண்டு உள்நாட்டு வங்கிகளிடமிருந்தும் கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை கூடியபோது வாழ்க்கைச் செலவு குறித்து எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை நிகழ்த்தினார். அந்த உரையில், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், சலுகைகளையும் நிறுத்தியுள்ள மகிந்த அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 500 மில்லியன் டொலர் அமெரிக்க டொலர…
-
- 1 reply
- 831 views
-
-
500 மில்லியன் டொலர் : உலக வங்கியுடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் 500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 மில்லியன் டொலர்களில் 200 மில்லியன் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் இணையதளம் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1336431
-
- 2 replies
- 517 views
- 1 follower
-
-
500 மில்லியன் ரூபா செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய சிறைச்சாலை அமைக்க அரசு திட்டம். [Tuesday, 2012-11-13 07:30:17] அமெரிக்காவைப் போன்று அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கொழும்பிற்கு வெளியே சிறைச்சாலை ஒன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெலிக்கடைச் சிறைக் கைதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களை பார்வையிட செல்வோர் தொடர்பில் கண்காணிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. சிறைச்சாலையில் அதிகளவு சன நெரிசல் நிலவுவதனால் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படுவதால், கைதிகளை சந்திக்க செல்வோரை வீடியோ பதிவு செய்யக் கூடிய வகையில் சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த அதி நவீன சிறைச்சாலையை அமைப்பதற்கு 500 மில்லிய…
-
- 1 reply
- 369 views
-
-
500 மில்லியன் ரூபா பசில் லஞ்சம் - செல்லசாமி மறுப்பு அரசாங்கத்தில் இருந்து விலகி தபால் தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம்.எஸ்.செல்லசாமி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்தால் அவருக்கு அமைச்சு பதவியும் 500 மில்லியன் ரூபா பணத்தை வழங்க தயார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சா செல்லசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா 200 மில்லியன் பணத்தை நேற்று அதிகாலை செல்லசாமியின் வீட்டுக் கொண்டு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தில் மீண்டும் இணைந்தால் இந்த பணத்தை இப்போதே வழங்க முடியும் என கூறியுள்ளார். செல்லசாமி இதனை நிராகரித்தை தொடர்ந்து, அமைச்சர் மேர்வின் சில்வாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பசில் ராஜபக்சா மேற்குறிப்பிட்ட தனது யோசனை முன்வ…
-
- 3 replies
- 760 views
-
-
500 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியளவில் குறித்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேசன், நிறப்பூச்சு மற்றும் கைப்பணி போன்ற துறைகளில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 24 புனர்வாழ்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை ஒன்பதாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11700 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 7200 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்க…
-
- 0 replies
- 510 views
-
-
கொழும்பு மாநகரசபையின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபா நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. வட்ட வடிவிலுள்ள இந்த நாணயத்தின் விளிம்பில் "இலங்கை மாநகர சபை" என தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்கள் கொழும்பில் அமைந்துள்ள நகர மண்டபத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=147571&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 405 views
-
-
5000 சிறிலங்கா நாட்டவர்களுக்கு 2011ல் அமெரிக்காச் சீட்டிலுப்பின் மூலம் அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவில் தமிழர்கள் உயிரோடு வாழ்வதற்கே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. உங்களின் உறவுகள் சிறிலங்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ விருப்பம் இருந்தால் முயற்சித்துப் பார்க்கலாம். US Lottery visa.-INFORM ALL Help some one who you wants to immigrate to USA.. They are selecting about 5000 Srilankans this time in US Lottery visa Remember green card application should be sent before December 14th.. do not wait until the last day You may have a chance.. let your family members and friends try... http://www.dvlot…
-
- 1 reply
- 965 views
-
-
இலங்கையின் சுதந்திரதின விழாவில் 5 ஆயிரம் முப்படையினரே இம்முறை கலந்து கொள்வர் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார். இலங்கையின் 67 வது சுதந்திர தினவிழா வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படுகின்றது. பத்தரமுல்ல நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் இடம்பெறும் இந்த நிகழ்வில் முப்படைகளையும் சேர்ந்த 101 அதிகாரிகளும் 2250 இராணுவ சிப்பாய்களும், 25 அதிகாரிகளும் 595 கடற்படை சிப்பாய்களும், 30 அதிகாரிகள் 470 விமானப் படையினரும் 975 பொலிஸாரும், 11 அதிகாரிகளும் 498 விசேட அதிரடிப் படையினரும் 450 இளைஞர் படையினரும் 5 ஆயிரம் வரையிலானோரே கலந்து கொள்வர். http://seithy.com/breifNews.php?newsID=125824&catego…
-
- 4 replies
- 504 views
-
-
ஐ. நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை எதிர்வரும் காலங்களில் கூடுதல் பங்களிப்பு வழங்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய ஐயாயிரம் படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொழில்சார் இராணுவம் என்ற ரீதியில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் கூடுதல் பங்களிப்பு வழங்க உத்தேசித்துள்ளது. அதன்படி அதிகளவான படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றது. ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த 900 படையினர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் ஹெய்ட்டி மற்றும் லெபனான் ஆகிய…
-
- 9 replies
- 663 views
-
-
5000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஒரு சில தினங்களில் புதிய நியமனங்கள்! [ புதன்கிழமை, 30 டிசெம்பர் 2015, 03:51.44 AM GMT ] எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாக இருந்து வருகி…
-
- 0 replies
- 482 views
-
-
சிரியாவில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதல் அவற்றை அடக்குவதற்காக சிரியாவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 5000 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவியான நவி பிள்ளை கூறியுள்ளார். 14,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 12,400 பேர் வரை அண்டைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாகவும் ஐநாவின் பாதுகாப்புச் சபைக்கு நவி பிள்ளை கூறியுள்ளார். சிரியாவில் உள்ள நிலைமைகளை சகிக்க முடியாதவை என்று நவி பிள்ளை விபரித்துள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடின்மை, சிரியாவின் அரசாங்கம் மேலும் திமிரடைய மாத்திரமே உதவும் என்றும் அவர் எச்சரி…
-
- 0 replies
- 763 views
-
-
5000 போராளிகளே தடுப்பு முகாமில் உள்ளதாக அரசு தெரிவிப்பு: மிகுதிப்பேர் எங்கே? * Sunday, December 26, 2010, 4:13 இன்னமும் 5000 போராளிகளே தமது தடுப்பு முகாமில் உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. மிகுதிப்பேரை தாம் விடுவித்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் 15,000 போராளிகள் சரணடைந்ததாக 2009 மே யூன் மாதம் அறிவித்திருந்தது. இந்த எண்ணிக்கை படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் கடத்தப்பட்டவர்களை உள்ளடக்காத தொகையாகும். ஆனால் இந்த வருடம் தம்மிடம் 12,000 போராளிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியது.அவர்களை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும் கூறியது. சில நூறு போராளிகளை விடுவித்தும் இருந்தது. ஆனால் இப்போ 5000 போராளிகளே இருப்பதாக கூறுகின்றது. இதன்ப…
-
- 0 replies
- 293 views
-
-
5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மீண்டும் ஆரம்பம் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Thinakkural.lk <p>புத்தாண்டை முன்னிட்டு கொரோனா த…
-
- 2 replies
- 532 views
-
-
கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தொடர்பாக விசேட விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகளை வழங்கும் போது பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் கிடைக்க வேண்டியவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காத நிலையில், வேறு நபர்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த முறைகேடுகள் சம்பந்தமாக மக்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள கணக்காய்வாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. முறைப்பாடுகளை செய்வோர் http://www.auditorgeneral.gov.lk/ என்ற இணையத்தளத…
-
- 0 replies
- 409 views
-
-
5000 விடுதலைப் புலிப்படையினரில் 4698 புலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்? Monday, 23 June 2008 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 2008 ஜனவரி 1ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 20 திகதி வரையிலான காலப் பகுதியில் அரச படைகளால் கொல்லப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தொகை 4698 ஆகும். இவர்கள் தரை வழித் தாக்குதல்களாலும் கடல் வழி தாக்குதல்களாலும் கொல்லப்பட்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமான குண்டு வீச்சுகளால் கொல்லப்பட்வர்கள் இதில் அடங்கவில்லை. இவை குறித்து சுதந்திர ஊடக வழி உறுதிப்படுத்த முடியாவில்லை. இருந்த போதிலும் இதை நம்புவதாக இருந்தால் இராணுவ தளபதி 4ம் கட்ட ஈழப்போரைத் தொடங்கிய போது கூறியவை தற்போது முழுமைபெற்று இருக்க வேண்டும். 5000 விட…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
Published By: Vishnu 06 Nov, 2025 | 12:51 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஏற்கவே சுமார் 2000 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் மேலும் 5000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாககிக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு ஆயிரக்கணக்கில் வைத்தியர்கள் மருத்துவ சேவையிலிருந்து நீக்குவதைத் தவிர்ப்பதற்கும், சுகாதாரத்துறையிலுள்ள ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் 2026 வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் …
-
- 0 replies
- 55 views
- 1 follower
-
-
50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை – தமிழன்பன் தெற்காசியாவில் மனிதவுரிமைகள் மீறல்கள் என்ற கருத்தரங்கு (25/10/2009) நடைபெற்றது. நிகழ்வில் தெற்காசியாவின் மனிதவுரிமை மீறல்களை எடுத்து வைத்து பேசிய மனிதவுரிமை ஆர்வலர்கள் 50000 ஈழத்தமிழர்கள் மீள்குடியேற்றம் என்பது சுத்த பொய் என்றும் வன்னிமுகாமிலிருந்து ஜப்னா முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதே உண்மை என்று குற்றம் சுமத்தினர். ஈழத்தில் நடைபெற்ற மனிதபேரவலங்கள் தெற்காசியாவின் மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் ஈழத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சோதனைகள் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் காஷ்மீரிலும் நடைபெறுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ளன என்று கவலை தெரிவித்தனர். தெற்காசிய…
-
- 1 reply
- 692 views
-