ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143519 topics in this forum
-
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் உள்ள மருதனார்மடம், சுன்னாகம் மற்றும் மல்லாகம் பகுதிகளில் இராணுவத்தினர் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கையில் நேற்றுக் காலையில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தமது கடமைகளுக்காக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றவர்கள் அனைவரும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்றன. இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
-
- 0 replies
- 598 views
-
-
காணொளி : இலங்கைச் சித்திரவதைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளியை பார்க்க,,, http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9998:2013-11-14-13-41-47&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 406 views
-
-
நாட்டின் தலைவர் குறிப்பிட்ட இனத்தின் தலைவராக செயற்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை புறம் தள்ளிவிட்டு , பல்லின மக்கள் வாழும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இன வர்க்கத்தின் தலைவராக ஒரு நாட்டின் தலைவர் செயற்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயற்பாடாகும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் திறன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமையவில்லை எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் த…
-
- 0 replies
- 711 views
-
-
இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா! தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம் - தமிழர் தலைவர் அறிக்கை. இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாத தீமையாகும் என்றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெ…
-
- 10 replies
- 2.2k views
-
-
காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 'காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனால், அவர்களின் உறவினர்களுக்கு, அவர்களில் தங்கி வாழ்ந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்வோம். சிலர் தகவல்களை வழங்க அச்சப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் எங்களிடம் மக்களை முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்' என்றார் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. http://www.seithy.com/breifNews.php?newsID=9903…
-
- 0 replies
- 208 views
-
-
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-20#page-8
-
- 0 replies
- 280 views
-
-
பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் கிழக்கை முஸ்லிம்கள் ஆள முடியும் - ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நாம் கிழக்கு மாகாண சபையினை ஆள முடியும். இவ்வாறு கூறியுள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். கிழக்கு மாகாணத்தில் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார் ஹக்கீம். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுத குழுக்களை கலைத்து விட்டு நாம் மாகாண சபையினை நிர்வகிக்க முடியும். அதற்கு நீங்கள் எமது திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றார் ஹக்கீம். நாம் போட்ட திட்டத்தின் படியே நடக்கின்றது. அந்த திட்டம் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றால் நாம் மாகாண சபையினை நிர்வகிப்போம…
-
- 2 replies
- 527 views
-
-
கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார். எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருட…
-
- 2 replies
- 744 views
-
-
யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பிரான்ஸ் சென்றிருந்தார். 2014ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்காக அவர் தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அந்த விஜயத்தில் இணைத்து கொண்டிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது. அந்த பணத்தில் 153,608 ரூபாய் மது அருந்துவதற்கு மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக விலை பட்டியல் ஒன்று தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஷிரந்தி ராஜபக்சவினால் மே மாதம் 22ஆம் திகதி 45,864 ரூபாய் மதுப…
-
- 3 replies
- 483 views
-
-
https://tamilwin.com/article/india-should-not-oppress-tamil-people-s-slaves-1643487811 இந்தியா தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்கக்கூடாது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நன்கு தெரியும். எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட காரியாலயத்தில் இன்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இன்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக கோட்டாபய அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்காகத் திட்ட…
-
- 0 replies
- 326 views
-
-
நுரைச்சோலை அனல்மின் நிலையம் அடிக்கடி செயலிழந்ததன் காரணமாக, 920 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கத்தின் ஆலோசகர் பந்துல சந்ரசேகர கூறுகிறார். அந்த அனல்மின் நிலையம் செயலிழந்தன் காரணமாக நாளொன்றிற்கு 72 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுரைச்சோலை அனல் மின்நிலையம் கடந்த 13ம் திகதி தொடக்கம் மீண்டும் செயலிழந்துள்ளதாக தேசிய மின் நுகர்வோர் இயக்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் திருத்தப் பணிகள் காரணமாகவே நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் தொழிற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொறியிலாளர் செனுஜித் தசநாயக்க தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100049&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 372 views
-
-
கனேடிய அரசினது உயர்மட்ட அதிகாரிகளது தலையீட்டையடுத்து யாழைில் நடைபெற்ற ராதிகா சிற்சபேசன் மீதான நெருக்குதல்கள் விசாரணைகள் குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது. முன்னதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தினில் வைத்து அவரை கைது செய்யும் முயற்சிகள் நடந்திருந்த நிலையில் அது வெற்றி பெற்றிருக்கவில்லை. அதை தொடர்ந்து யாழ்.நகரில் அவர் தங்கியுள்ள விடுதியில் வைத்து அவர் இரவிரவாக விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நேற்றிரவு நீண்டநேரம் அங்கு தங்கியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துஐவி துருவி ராதிகாவிடம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் உடனடியாகவே நேரடியாக கனேடிய அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு ராதிகா கொண்டு சென்றிர…
-
- 0 replies
- 874 views
-
-
யுத்த காலத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காகவே சரத் பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தாம் சாட்சியமளிக்கத் தயார் என்று பொன்சேகா கூறிய சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தனக்குத் தெரிந்தவை, தான் கேள்விப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளதாக பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார் http://www.eelamweb.com/
-
- 5 replies
- 2.1k views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அமெர…
-
- 0 replies
- 494 views
-
-
கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரென பற்றி எரிகிறது மீதேன் வாயுப் பெருக்கமே காரணம்: அச்சத்தில் மக்கள் யாழ்ப்பாணத்தின் கழிவுகளைக் கொட்டும் இடமான கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரெனத் தீப்பற்றி எரிகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வால் அந்தப் பகுதி மக்களும் அதன் வழியே பயணம் செய்பவர்களும் அச்சமடைந்துள்ளனர். இரவில் பயணிப்போர் மேலும் கலங்கிப் போகின்றனர். குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் அளவுக்கதிகமான மீதேன் வாயுவே தீ எரிவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ‘‘அதிகரித்த வெப்பம் காரணமாக குப்பைகளிலிருந்து வெளியேறும் உயிர…
-
- 0 replies
- 592 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) உக்ரேன், ரஷ்யா மோதல் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான யுத்த நிலை காரணமாக, அதனால் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு எற்படும் பாதிப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்போகின்றது. எமது ஏற்றுமதியில் நுற்றுக்கு 1.49 வீதம் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று ரஷ்யாவுக்கு எமது ஏற்றுமதி வீதம் நூற்றுக்கு 9.57மாகும். சில நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க முயற்சிக்கின்றன. இவ்வாறான நிலையில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும…
-
- 6 replies
- 482 views
-
-
கலைஞரின் குடுமி சும்மா ஆடாது!உதயன் ஆசிரியர் தலையங்கம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை சத்தமிட்டு இவ்விடயத்தில் தமது இருப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அரசு தவறுமானால் அதை தி.மு.க. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இராது என மிரட் டல் விட்டிருக்கின்றார் அவர். இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விவகாரம்தான். இனிமேல் இதையும் விட மேலும் தீவிரமாக அவர் எகிறிக் குதிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடூர யுத்தம் கட்டவிழ்ந்து, பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் கள் அநியாயமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதே அதைத் தடுக்க வக்கற்றவராக இருந்துகொண்டு பல் வேறு அரசியல…
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கையின் முதலாவது மக்கள் மயப்பட்ட வன வள கிராமமாக மணற்காடு Published on 2022-03-05 18:49:28 யாழ்ப்பாணம், மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் பயன்பாட்டுக்குரிய மக்கள் மயப்படுத்தப்பட்ட சவுக்கு மரக்காடாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க வாக்குறுதி வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை 5 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெ…
-
- 0 replies
- 538 views
-
-
குச்சவெளியில் வதியும் 400 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது.திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் தற்காலிகமாகக் கொட்டில்கள் அமைத்து வசித்து வரும் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பங்களையே அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குடும்பங்களுக்கு காணிகளோ அல்லது தற்காலிக வீட்டு வசதிகளோ இன்னமும் வழங்கப்படாத நிலையில் பசில் இராகபக்ஷ அந்த குடும்பங்களை வெளியேறுமாறு பணித்துள்ளார். http://www.sankamam.com/beta/index.php?eNoljDEOwjAMXDD_0qGbJTu246SIIY7Tf6B2YVwwhvJ_tYLlprs7FmJaptf2-D73-2D2wl7BiQiyYYMgzZB6DHNW5y7z8XcFa6OqBjbowqoKV0kgFmIjI9US8_Z5_77qNYsXGFxcOuReEkRyhHA2aasTGk63E506XCIM
-
- 5 replies
- 969 views
-
-
இலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்ட போராளிகளில் 4ஆயிரம் பேர் மாயம் TUESDAY, 02 MARCH 2010 17:24 செய்திகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். போராளிகளை விடுதலை செய்யும் படி சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. தற்போது 10,732 பேர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரணசிங்க இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுவிக்கப்படுவர் என்றும் இதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனி…
-
- 0 replies
- 953 views
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரன் கிருஸ்ணபிள்ளை என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜையுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தைத் தொடர்ந்து வாகனத்தில் குறித்த பிரஜையை மோதிக் கொன்றதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இன்று காலை சார்ஜாவில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பாக்கியினால் சுட்டு குறித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நட்டஈடு வழங்கி தண்டனையைக் குறைத்துக் கொள்ள ரவீந்திரனின் குடும்பத்தினர் முயற்சித்த போதிலும், கொலையுண்டவரின் குடும்பத்தினர் அ…
-
- 1 reply
- 659 views
-
-
டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் பிரதிவாதிகளுக்கான நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு, ஒக்டோபர் 3ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (19) அறிவித்தது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.குணசீலன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்குமாறும் அந…
-
- 0 replies
- 310 views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மேற்கத்திய வல்லரசு நாடுகள்-இலங்கை கண்டனம்! வியாழக்கிழமை, மார்ச் 11, 2010, 11:55[iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] அமைப்புகளின் கிளைகளுக்கு உலக வல்லரசு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இலங்கை [^]யில் அமைதி திரும்புவதை இவை விரும்பவிலலை என்று கூறியுள்ளார் இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயகே. புலிகள் இயக்கத்திற்கான எதிராக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோது அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அவரது உடலை எரித்து சாம்பலை கடலில் போட்டு விட்டோம் என்றெல்லாம் கூறிய இலங்கை அரசு இன்னும் நெருக்கடி நிலையை விலக்கவில்லை. மாறாக ஆயுதங்களைக் குவித்துக்…
-
- 0 replies
- 944 views
-
-
போர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலும் வலி.வடக்கு மற்றும் சம்பூரைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர். அவர்களை குடியேற்றுவதாகப் பலமுறை அரசு நாடாளுமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தும் அதனை நிறைவேற்றாமல் உள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் என்பன இடித்து அழிக்கப்பட்டு இராணுவ ஆக்கரமிப்புக்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் …
-
- 0 replies
- 289 views
-
-
மறு சீரமைப்புப் பணிகளால் கல்வியங்காட்டுச் சந்தை வேறு இடத்தில் Share கல்வியங்காடு செங்குந்தா சந்தை கட்டடத்தின் பின்புறமாகவுள்ள மரக்கறி, மீன் விற்பனை சந்தையின் தொகுதி மறு சீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளது. இதனால் இன்று முதல் மரக்கறி சந்தையும், மீன் சந்தையும் புதிய இடத்தில் தற்காலிகமாக மாற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். இதன்படி ஆடியபாதம் வீதியில் நாயன்மார்கட்டு சந்தைக்கு இடையில் (தற்போதைய சந்தையில் இருந்து 75 மீற்றர் தூரத்தில்) தற்காலிகமாக சந்தை மாற்றப்படுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. ht…
-
- 0 replies
- 304 views
-