Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 26 09 2017 , 8PM

  2. கொழும்பு, மஹரகமவில் பதற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர். வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காரியாலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் சுதந்திர மாவத்தை வரையிலும் பேரணியாக சென்றனர். அங்கு வீதித்தடை போட்டப்படிருந்தது. அதனையும் மீறி செய்வதற்கு முயன்றபோதே, அங்கு பதற்றமான நிலைமையொன்று எற்பட்டுள்ளது. இதேவேளை, மஹரகமவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பௌத்த தேரர் உள்ளிட்ட ஒரு குழுவினர், பொ…

  3. வடபகுதி மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு மூன்றாம் தரப்பினரது ஒத்துழைப்பு மிக அவசியம் என வடமாகாண முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளரிடம் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் ஹகோலியங் ஸு இன்று வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது தமது வடபகுதிக்கான விஜயத்தின் நோக்கம் வடமாகாணத்தில் பாரியளவான அபிவிருத்தி வேலைதிட்டத்தை முன்னெடுப்பது என தெரிவித்த ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர், வடமாகாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி பணிகள் தற்போது தேவைப்படுகிறது எனவும் வடமாகாண முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ…

  4. இலங்கையின்... தற்போதைய நிதியமைச்சர், அலி சப்ரியே – அரசாங்கம் நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவரே நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275867

  5. வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தமிழ் உச்சரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்களைத் திட்டினார் ராஜபக்சே. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார். இந்த கூட்டத்தில் இலங்கை ஐனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழில் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார். தப்பும் தவறுமாக அவர் பேசியது தமிழ்தானா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. ஒரு பக்கம் வறுத்தெடுக்கும் வெயில், மறுபக்கம் அதைவிட கொடூரமான ராஜபக்சேவின் தமிழ் உச்சரிப்பு. எனவே மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ர…

    • 2 replies
    • 1.1k views
  6. ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! - திமுக மாநாட்டில் தீர்மானம். [sunday, 2014-02-16 18:32:05] இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன ஒழிப்பு சம்பந்தமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிப்பதோடு ஐ.நா. மேற்பார்வையில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று திருச்சியில் நடந்த திமுக 10வது மாநில மாநாட்டில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் இன்று மதியம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விபரம் வருமாறு:– 1. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும். தென்மாவட்ட மக்களின் வேலை வாய்ப்புக்கும், வாழ்வாதாரத்…

  7. வாழைச்சேனை கடதாசி ஆலை 8 மாதங்களுக்குள் இயங்க நடவடிக்கை : இந்திய பொறியியலாளர் குழு வாழைச்சேனை கடதாசி ஆலையின் மீள் புனரமைப்பு செய்யவும் பழுதடைந்து காணப்படும் அதன் இயந்திரங்களை திருத்தம்செய்து தொழிலாளரின் பாவனைக்கு வழங்கவும் இந்திய எஸ்.வி.தொழிற்சாலையின் பொறியியலாளர் குழு சனிக்கிழமையன்று கடதாசி ஆலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இத் தொழிற்சாலையினை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் திருத்தம் செய்து மீண்டும் இயங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறியிலாளர் குழு இதன்போது கருத்து தெரிவித்தது. இதனை திருத்தம் செய்வதன் மூலம் சுமார் 100 மெற்றிக் தொன் அளவிலான கடதாசிகளை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும். இதனால் இலங்கை ரூ…

  8. மட்டக்களப்பை சேர்ந்த மூவர்... அகதிகளாக, தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1277559

  9. நாடுகடந்த அரசாங்கத்திற்கு பிரான்சிலிருந்து நான்கு பேர் போட்டியின்றித் தெரிவு நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவாகியுள்ளனர் மாவட்ட அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை உரிய முறையில் தாக்கல் செய்திருந்தனர். இதில்; வோல் து மார்ன்(94) சென் ஏ மார்ன்(77) வடக்கு மற்றும் கிழக்கு பிரான்ஸ்; தெற்கு மற்றும் மத்திய பிரான்ஸ் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளுக்கு தலா ஒவ்வொருவர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 6 பிரதிநிதிகள் பார…

    • 2 replies
    • 977 views
  10. ‘வலிந்து காணாமலாக்கப்படுதலை குற்றமாக்கு’ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும். தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால், அரசு மௌனமாக உள்ளது. ஆகையால், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில், கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோ…

  11. மஹிந்தவிற்கு.... ஆதரவான பிரேரணையில், 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. எனினும் இதுவரையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவான பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1278364

  12. குருபரன் ‐ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது? ருத்திரகுமாரன் ‐ இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எங்கட அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என நான் கருதுகின்றேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக்காண முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் தமது இறைமையை பிரயோகிப்பதற்கு கொ…

    • 0 replies
    • 1.1k views
  13. முழு சமூகத்தின்.... அவமான சின்னமாக, ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற... வேதனை தான் எங்களுக்கு உள்ளது – ஹக்கீம்! முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த ஊரை சேர்ந்த ஒருவர் அமைச்சு பதவி எடுத்துள்ள விவகாரம் மிக மோசமான விமர்சனத்திற்கான விவகாரமாக மாறியுள்ளது என்பது சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. அது ஊரும் அங்கீகரிக்கின்ற விடயம் அல்ல. ஆனால், அவர் தாமா…

  14. மே 17 தாயகத்தில் துக்க தினம் கூட்டமைப்பு வேண்டுகோள் வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 உலகத்தமிழர்கள் மே மாதத்தில் 12- 19 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு படுத்தி அனுட்டிக்கின்றனர். ஆகவே தாயகத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என புலம்பெயர் மக்கள் மற்றும் ஏனையோரும் கேட்டதற்கு அமைய தாயகத்திலும் வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக…

  15. கட்டாரிலுள்ள பாடசாலையில் தூதுவர் லியனகேவின் தலையீடு - நிர்மலா கன்னங்கர கட்டாருக்கான இலங்கைத் தூதுவர், டோகாவிலுள்ள தனியார் இலங்கைப் பாடசாலையொன்றுக்குத் துன்புறுத்தல்களை வழங்க, தனது இராஜதந்திர அதிகாரங்களைப் பயன்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை, அங்கு வாழும் இலங்கையரிடையே விசனத்தைத் தோற்றுவித்தது. தூதுவர் A.S.P. லியனகே, சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் நீதியற்ற வகையிலும், ஸ்டஃபோர்ட் இலங்கைப் பாடசாலையின் விவகாரங்களில், அண்மையில் தலையிட்டாரென விமர்சிக்கப்படுகின்றார். இவர், பாடசாலையின் வங்கிக் கணக்கை முடக்கியதோடு, பாடசாலை முகாமைத்துவத்துக்கு எதிராக, கட்டார் கல்வியமைச்சில் முறைப்பாடுகளை…

  16. இரணைத்தீவில் நில அளவீட்டுப் பணிகள் ஆரம்பம் – பூநகரி பிரதேச செயலா் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இரணைதீவில் காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மிகவும் கடல் வளம் கொண்ட பிரதேசமான இரணைதீவு பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர். 1990ம…

  17. உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர், நீண்ட கொடூரமான சமராக அமைந்தது. பகலும் இரவும் தெரியாத அளவிற்கு குண்டுவீச்சின் ஒளி அந்நகரை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. கட்டடங்கள்மீது பொழியப்பட்ட குண்டுவீச்சுகளால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எஃகு சட்டங்கள் உருகி நீராய் பெருகியது. ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் எண்ணெய் சதுக்கங்கள்கூட குண்டுவீச்சால் பற்றி எரிய தொடங்கியது. புயலாய் ஸ்டாலின்கிராடை பிடிப்போம் என்று கொக்கரித்த இட்லருக்கு மிக அமைதியான பதில் மொழியா…

    • 3 replies
    • 1.1k views
  18. ஆயுதக் குழுக்களுக்கு கவசமாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்2010-06-09 06:18:56 ; ஆயுதக் குழுக்களுக்கு கவசமாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் கொழும்பு, ஜூன் 9 குடாநாட்டில் தொடரும் குற்றச் செயல் களின் பின்னால் சட்ட விரோத ஆயு தக் குழுக்களும் அவர்களுக்கு கவசமாக அரசி யல் பலமும் இருப்பதையே புலபடுத் து கின்றன. ஜனநாயக நீரோட்டத் தில் தம்மை இணைத் துக்கொண்டு விட்டதா கக் கூறிக் கொள்ளும் முன்னாள் ஆயுதக் குழுக்களே இக்குற் றங் களின் பின்னால் நிற்கின்றன என்ற சந் தேகம் மக்கள் மத்தி யில் மேலோங்கி நிற்கி றது. மக்கள் தமக்கு இழைக்கப்படும் குற் றங்களை நேரடியாக பொலிஸில் முறை யிட முடியாத அளவுக்கு கண்ணுக்குத் தெரி யாத பயங்கரவாதம்…

    • 0 replies
    • 814 views
  19. முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார். உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை சிறிகாந்தன் என்பவரே நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த இவர் உடையார் கட்டுப்பகுதியில் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ரி.ஐ.டி யினரால் இதுவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://ww…

  20. கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்­பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய வி…

  21. ஒரு போதும்... பதவி, விலகப் போவதில்லை – ஜனாதிபதி தாம் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதன்காரணமாகவே அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம…

    • 2 replies
    • 394 views
  22. யாழில் 456 குடும்பங்கள் இடம்பெயர்வு – 46வீடுகள் முற்றாக சேதம் SAMSUNG CAMERA PICTURES குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்து உள்ளது. மேலும் யாழில்.மழை காரணமாக 2, 727 குடும்பங்களை சேர்ந்த 9 , 894 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அதில் 456 குடும்பங்களை சேர்ந்த 1, 724 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் 46 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 172 வீடுகள் பகுதிகளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் மழை த…

  23. விசாரணைக் குழுவை அறிவிக்க முன் மூனுடன் பேசுவார் நவநீதம்பிள்ளை news இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்படவுள்ள ஐ.நா. விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவா…

  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவினர் இன்று காலை நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கக் கூடாதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளனர் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எஸ்.சிறிதரன் எம்.பி வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன், மாகாண சபை உற…

    • 0 replies
    • 832 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.