ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தம் குறித்து நேற்று வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 618 views
-
-
முஸ்லிம் காங்கிரஸுக்குள் பெரும் குழப்பம்! - திவிநெகுமவை ஆதரிப்பதா? இல்லையா? கருத்து மோதல் உச்சம்!! 'திவிநெகும' சட்டமூலம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதனை எதிர்ப்பதா? அல்லது ஆதரிப்பதா? என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய கருத்து முரண்பாடு தோன்றியுள்ளது. இந்தக் கருத்து முரண்பாடு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடிய முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டத்தில் பகிரங்கமாகியுள்ளது. மு.காவின் அதியுயர்பீடக் கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு 11மணிவரை நடைபெற்றது. இருந்தபோதிலும் 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் தீர்க்கமான முடிவின்றியே கூட்டம் நிறைவுபெற்றுள்ளது. 'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் சில விடயங்களுக்கு த…
-
- 2 replies
- 415 views
-
-
வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது? யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர் வழியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்;கப்பட்டுள்ளது. பொதுவாக பங்களாதேஸ் அல்லது டுபாய் வழியாகவே இதுவரை காலமும் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டனர். எனினும், இந்தப் பாதைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதனால் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற…
-
- 5 replies
- 528 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை பெருமளவில் அதிகரித்திருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அண்மையில் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும் கடுமையான மழை காரணமாக உள்நாட்டு மரக்கறிச் செய்கை பாதிப்புக்குள்ளானதே இந்த விலையேற்றத்திற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மலையகப் பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மரக்கறிகளுடன் இரண்டொரு லொறிகள் மட்டுமே வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தக்காளி 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளியின் விலை 80 ரூபாவாக இருந்தது.தற்போது இரு மடங்காக விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இதேவேளை, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 80 ரூபாவாகவும், லீக்ஸ் 10…
-
- 0 replies
- 556 views
-
-
கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்டவருமான முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்தார். இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள் தாம் கிளிநொச்சி பொலிஸாரின் ஒத்துழைப்புடனே உடைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்த அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற அனுமதி இன்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் கட்டங்களை உடைக்க முடியாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும்…
-
- 1 reply
- 535 views
-
-
இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. இது பற்றிய சிந்தனையை தூண்டுவதே இந்த வாக்கெடுப்பின் நோக்கமாகும்.
-
- 23 replies
- 4.4k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலர் பொன்காந்தன் கட்டுநாயக்கவில் கைது [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 04:33 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தனிப்பட்ட செயலரான பொன்காந்தன் எனப்படும் பொன்னம்பலம் லக்ஸ்மிகாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா செல்ல முயன்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிளிநொச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, விசாரிக்கவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிட…
-
- 4 replies
- 859 views
-
-
முல்லைத்தீவு முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வே சமாதான பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் முல்லைத்தீவில் மேற்கொண்டுவரும் படை முன்னகர்வுகளை இடைநிறுத்த நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஹான்சன் பவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த முயற்சிகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் விடுதலைப் புலி முகவர்கள் முல்லைத்தீவு யுத்தத்தை நிறுத்துமாறு நோர்வே பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காதென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் முக்கிய மூன்று கொள்கைகளான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவு ஆகியவற்றை முன்னிறுத்தி நாட்டிற்கும் பிரஜைகளுக்கும் முக்கியத்துவமளித்து, சர்வதேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் 5 - 10 வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச்செல்வதை நோக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே உறுதியளித்தார். அதேவேளை, காலமாற்றங்களுக்கு ஏற்ப வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டுக்கொள்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவச…
-
- 0 replies
- 269 views
-
-
கொழும்பு : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வரும் போரில் ராணுவத்திற்கு ஒரு சில மாதங்களில் முழு வெற்றி கிட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர் என்றும், எனவே ராணுவம் தன்னை நெருங்கும் வரை அவர் காத்திருக்க மாட்டார் என்று கூறிய பொன்சேகா, பிரபாகரன் ஏற்கெனவே கடல் மார்க்கமாக இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பிரபாகரன் எங்கு சென்றிருப்பார் என்பது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த பொன்சேகா , பிரபாகரன் சயனைட் விழுங்கி தற்கொ…
-
- 16 replies
- 3.4k views
-
-
இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராகக் குரூரமாகக் கட்டவிழ்ந்த அரச ஒடுக்குமுறையின் பெறுபேறே இலங்கை இனப்பிரச்சினை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இங்கு மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய பௌத்த - சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்குடைய சகல அரசுகளினதும் அடக்குமுறைச் செயற்பாடுகளின் வரலாற்றுப் பிறப்பே இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தோற்றுவித்துள்ள இந்த இனப்பிரச்சினையின் மூலமாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக - நீதி வேண்டி - சுமார் மூன்றரை தசாப்த காலம் அஹிம்சை வழியில் போராடிய தமிழினம், அந்த மார்க்கத்தில் இந்த நோய்க்கு மருந்து கிட்டாத பின்னணியிலேயே ஆயுதப் போராட்டம் என்ற மருத்துவத்தை நாட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு உள்ளான…
-
- 0 replies
- 787 views
-
-
வீரகேசரி இணையம் - வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார். அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். பொது மக்களுக்க உயிரிழப்பை தவிர்க்கம் வகையில் இலங்கை அரசாங…
-
- 0 replies
- 899 views
-
-
பூட்டிய விடுதியைத் திறந்து வாயடைத்து நின்றார் எம்.பி க. அகரன் தனக்கு வழங்கப்பட்ட விடுதியைத் திறக்கும் போது, அங்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் அவருடைய ஆதரவாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமையைப் பார்த்து, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வாயடைத்து நின்றுவிட்டார். அந்த விடுதி, சிவசக்தி ஆனந்தன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, விடுதியைப் பூட்டிவிட்டு, அதன…
-
- 3 replies
- 536 views
-
-
புத்த பிக்குவுக்கு காணிமீது உள்ள உரிமை ஏன் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடாது? – விக்கினேஸ்வரன் மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என சிறீலங்கா பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கு மீதான விவாதம் மீது இன்று (9) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் உரையின் முழு வடிவம் வருமாறு: மாண்புமிகு சபாநாய…
-
- 1 reply
- 398 views
-
-
ஈழத்தமிழருக்காக நேற்று சென்னையில் தீக்குளித்து இன்னுயிரைத் தியாகம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்துக்குமார் அவர்களது இறுதிச்சடங்கு இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. அங்கு செய்தியாளர்களிடம் முத்துக்குமாரின் தந்தை தனது மகனின் மரணம் குறித்து தெரிவிக்கையில், என் மகன் இறந்ததை நினைத்தால் மனசுக்கு வருத்தமாயிருக்கு (அழுகிறார்). ஆனால் அவன் நாட்டுக்காக, நமது தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழருக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்று நினைக்கிறபோது ரொம்ப பெருமையாயிருக்கு (கண்ணீரை துடைத்துக் கொள்கிறார்) என்று தெரிவித்தார். www.tamilwin.com
-
- 1 reply
- 748 views
-
-
அடிப்படைவாத முஸ்லிம்களின் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு : பொது பலசேனா நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்குவதற்கு பொது பலசேனா ஒருபோதும் துணையாக இருக்கமாட்டாது. பொது பலசேனா முஸ்லிம்களுக்கு விரோதமான இயக்கமல்ல என்று பொது பலசேனா அமைப்பு நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தது. மேற்படி கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போதே பொது பலசேனாவினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அமைப்பு சார்பாக கருத்துத் தெரிவிக்கையில், பொது பலசேனா பௌத்தர்களின் உரிமைகளையும் கலாசாரத…
-
- 1 reply
- 739 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியான இயக்கமாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது புலிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலிகளை சட்ட ரீதியாக நவநீதம்பிள்ளை முயற்சித்துள்ளார். இந்த அறிக்கையானது நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையீடு செய்தலாகும்.இந்த அறிக்கையின் 63-3 பிரிவில் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தி படையினரை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 508 views
-
-
கொடுத்த வாக்குறுதியை நாமல் நிறைவேற்றவில்லை ; ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்ட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச நிறைவேற்றவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 29.09.2020 நேற்று இடம்பெற்ற நிலையில் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை…
-
- 0 replies
- 549 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தமது பிரதேச பெண்கள் அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வதை தவிர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாக கூறகின்றது. இதற்கான காரணங்களை அறிந்து ''கூட்டு ஸக்காத் நிதி'' மூலம் அவர்களுக்கு உதவுதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டுவருவதாக சம்மேளனத்தின் செயலாளர் அப்துல் கபூர் கூறுகின்றார். சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக் என்ற பணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையே, இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டி தம்மை தூண்டியதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தமது பிரதேசத்திலிருந்து பணிப்பெண்கள் செல்வது தற்போது குறைந்திருந்தாலும் முதற்கட்டமாக அரபு நாடுகள…
-
- 2 replies
- 672 views
-
-
முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன்
-
- 11 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஈனத் தமிழினமே, இன்னும் ஏன் தூங்குகிறாய். நீ உசுப்பிவிட சிங்களவன் எல்லாவற்றையும் சுருட்டுகிறான். போராட்டத்தையும் கூட. இங்கு பாருங்கள் செய்தியை Sri Lankan expatriates, live in the United States are expected to organize a massive protest rally at South of the White House, Washington D.C, on Friday, February 20, 2009. Organizers said that this peaceful rally to urge the US authorities to ....................................................., and to stand up against the............................that has plagued ........................................ This protest is scheduled to start at 10 am ,17th Street & Constitution Av NW Washington D.C. ...........…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு 30 நாடுகள் ஆதரவளித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாகவும், நேரடியாக 30 நாடுகள் ஆதரவளிப்ப சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் நேரடி ஒத்துழைப்பை வழங்கத் தயார் என அறிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்திற் ஆதரவளிப்பதா இல்லை என்பது குறித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இன்னமும் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும், இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்தத் தீர்மானத்திற்கு…
-
- 1 reply
- 762 views
-
-
யாழில் மூன்று இளைஞர்கள் கைது -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் யாழ்.கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்றுச் சனிக்கிழமை(05) கைது செய்யப்பட்டுள்ள தாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகு தியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப்பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவி ந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து …
-
- 0 replies
- 278 views
-
-
மோடி - கூட்டமைப்பு பேச்சு தாமதமாகலாம் என்கிறார் சம்பந்தன்.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சு தாமதமாகலாம் என்று தெரியவருகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், "நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எமது கட்சியுடன் பேசுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டியிருந்தார். எனினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தப் பேச்சு இப்போதைக்கு நடைபெறுமா என்பது தெரியவில்லை. இந்தியப் பிரதமர் மோடியே கூட்டமைப்பினரை பேச்சுக்கு அணுகினார். ஆதலால் இந்தியத் தரப்பினரே சந்திப்புக்கான காலத்தை ஒழுங்குசெய்வார்கள் என்று எதிர்பார்த்துள்ளோம். இந்தப் பேச்சு இணைய தொடர்பாடல் மூலம் நடைபெறும் என்றே நம்புகி…
-
- 0 replies
- 349 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 434 views
-