ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
மறத்தமிழன் அண்ணன் http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/ மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்........நன்றி வினவு.கொம்
-
- 0 replies
- 567 views
-
-
உலகநாடுகளிடம் புகார் அளிக்க த.தே.கூட்டமைப்பு முடிவு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து புகார் தெரிவிக்க உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, காமன்வெல்த் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று கூறினார். அதேசமயம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதால் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு நிலவி வருகிறது. http://www.puthiyathalaim…
-
- 6 replies
- 740 views
-
-
கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது - மலேசிய எதிர்க்கட்சி [sunday, 2013-10-27 09:43:20] இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் லிம் குஹான் எங் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு மலேசிய அரசாங்கம் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறி…
-
- 0 replies
- 668 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டமையை ஒப்புக்கொண்டது அரசாங்கம்! [sunday, 2013-10-27 08:29:06] உலகில் உள்ள எல்லா நாடுகளையும் போலவே இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன. அதன் காரணத்தினால் சர்வதேச நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அமர்வுகளில் பங்கேற்க தவறும் நாடுகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக் கூடும். …
-
- 0 replies
- 325 views
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு (26) பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து சென்ற அதிசொகுசு தனியார் பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம், மாதம்பே பகுதியில் உள்ள 67ஆம் வளைவில் இந்த பஸ் தீக்கிரையாகியுள்ளது. தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் சுமார் 25 பயணிகள் இருந்தபோதிலும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. http://tamilworldtoday.com/home http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 544 views
-
-
[ சனிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2013, 09:21 GMT ] கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம். அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு அமோக வாக்குகளை வழங்கி என்னை முன்னணி வேட்பாளர் ஆக்கியமைக்கு யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கும் மற்றும் பல சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்து வாக்களித்த பிறமாவட்டங்களில் வசித்து வரும் யாழ். மாவட்…
-
- 2 replies
- 400 views
-
-
வட மாகாண தேர்தல்கள் முடிந்ததும்,பதவிக்காக பெரும் அடிபாடு நடக்கப் போகின்றது என வாக்களித்த மக்களும், வட, தென் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். பங்காளிக் கட்சிகளுக்கு எல்லாம் பதவி என்றால், மகிந்தர் போல, 30 பேருக்கும் பதவி கொடுத்து நாற வேண்டும் என்று உணர்ந்த முதல்வர், எந்த கட்சியிலும் நீங்கள் இருக்கலாம். உங்கள் கல்வித் தகமைக்கு ஏற்ப தான் பதவி என்று கூறியது மட்டுமில்லாது, பதவி விரும்புவோர், தமது CV களை சமர்பிக்குமாறும், அவர்களது கல்வித் தகமைகள், உறுதிப் படுத்தப்படும் என்று கூறியதுடன், கல்வித்தகமை கொண்டவர்களுக்கே பதவியும் கொடுக்க, முள்ளிவாய்க்காலில் பிரமாணம், எனக்கு பதவி, எனது கட்சிக்கு பதவி என்றவர்கள், கொழும்பு படித்த குடி வருவதா, என்று கு…
-
- 21 replies
- 1.7k views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் முக்கியமான மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கின்ற நிலையில் ஹலாலுக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் நாட்டின் அமைதிக்கும் இனங்களின் ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்த யாரும் முற்படக்கூடாதெனத் தெரிவித்த நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் ஹலால் தொடர்பில் சிறுகுழுவினரின் கருத்தல்ல. முழுநாட்டு மக்களின் கருத்துகளும் அறியப்படவேண்டும் எனவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரைகள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்; ஹலால் என்றதொரு விடயத்தை முன்வைத்துநாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வர…
-
- 2 replies
- 562 views
-
-
கொழும்பில் நடக்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டை தென்னாபிரிக்கா புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்து ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் க்வெட் மந்தாசெ அவர்களுக்கு கடிதம் ஒன்றை உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வண. ஜே. இம்மானுவல் அடிகளார் அனுப்பி வைத்துள்ளார். 2009இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்ததில் இருந்து, இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்கள் மற்றும் பொறுப்பு கூறலிலும் மீளிணக்கத்திலும் இருந்த குறைபாடுகள் என்பவற்றை உலகின் கவனத்துக்கு கொண்டுவருவதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரிதும் சேவையாற்றி உள்ளது. அதன் பொதுச் செயலாளர் என்ற வகையில் இந்த விடயத்தை ஜனாதிபதி உட்பட தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களிடம் வலியுறுத்துமாறு அவர் கடிதத்தில் வேண்டு…
-
- 0 replies
- 331 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று கனடா ஏற்கனவே நேரடியாக அறிவித்து விட்டது. பிரித்தான…
-
- 6 replies
- 754 views
-
-
கடந்த 24-10-2013 திகதியன்று தமிழ் நாடு சட்டசபையில் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கொமென்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இந்தியப் பிரதமர் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கேனும் அம்மாநாட்டில் அமையக்கூடாதென்றும், அத்துடன் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களவர்களுக்கு இணையாகவும் இலங்கையில் வாழக்கூடிய சூழலை சிறீலங்கா அரசு உருவாக்கும் வரையில் கொமென்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கை தற்காலிகமாக நீக்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதலமைச்சரும், அ.தி.மு.க தலைவியுமான மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் இத்தீர்மானத்தை முன்மொழிந்திருந்த நிலையில் மேற்படி தீர்மானம் அனைத்துக் கட…
-
- 1 reply
- 310 views
-
-
கடந்த 24-10-2013 திகதியன்று தமிழ் நாடு சட்டசபையில் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கொமென்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இந்தியப் பிரதமர் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும் என்றும்�� இந்தியாவின் பிரதிநிதித்துவம் பெயரளவுக்கேனும் அம்மாநாட்டில் அமையக்கூடாதென்றும்�� அத்துடன் தமிழர்கள் சுதந்திரமாகவும் சிங்களவர்களுக்கு இணையாகவும் இலங்கையில் வாழக்கூடிய சூழலை சிறீலங்கா அரசு உருவாக்கும் வரையில் கொமென்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கை தற்காலிகமாக நீக்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முதலமைச்சரும்�� அ.தி.மு.க தலைவியுமான மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் இத்தீர்மானத்தை முன்மொழிந்திருந்த நிலையில் மேற்படி தீர்மா…
-
- 1 reply
- 327 views
-
-
பழைய ஒரு பேப்பரிலிருந்து பொதுநலவாயத் தலைமை கள்வனுக்கு விதானை வேலை போன்றது ஒருவாறு வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. எதிர்பார்த்தபடி ஒருமனதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும், எதிர்பாராதபடி அரசகூட்டமைப்பின் வேட்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர். இது தமிழர் தரப்பின் நிதானமான அரசியற் போக்கையும், அரசதரப்பின் தளம்பற் போக்கையும் காட்டி நிற்கின்றது. வடக்கில் என்னதான் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றி தமிழர்களின் மனங்களைக் கவர்ந்திழுக்க அரசதரப்பு முயன்றாலும் தேர்தலென்று வரும்போது மக்கள் அதையெல்லாம் கணக்கிலெடுக்கப் போவதில்லையென்பதைத்தான் முடிவுகள் காட்டப்போகின்றன. மக்களைச் சுற்றிவரப் போடப்பட்டுள்ள ராணுவ …
-
- 1 reply
- 444 views
-
-
"உலகின் எல்லா நாடுகளிலும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன நாங்களும் மீறினோம் இப்போ சரி செய்கிறோம்" 26 அக்டோபர் 2013 உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன என அவர் சுடடிக்காட்டியுள்ளார். எனவே, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். அமர்வுகளி;ல் பங்கேற்கத் தவற…
-
- 1 reply
- 422 views
-
-
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் காணமல் போனதற்கு பொறுப்பாகவிருந்த முதன்மை போர்க்குற்றவாளிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் கத்துருசிங்காவுடன் கைகோர்த்த விக்னேஸ்வரன் வட மாகாண சபைக்காக கைதடியில் அமைக்கப்பட்ட கட்டிடத்தை இன்று திறந்த வைத்தார். அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்காப் படைகளை ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைக்க வேண்டும் என தெரிவித்தார். ஐ.நா.பாதுகாப்பு படையில் இணைந்த சிங்கள இன அழிப்பு படைகள் கெயிட்டி உட்பட்ட சில நாடுகளில் அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தை விட்டு சிங்கள ஆக்கிரமிப்பு அகல வேண்டும் எனத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூ…
-
- 19 replies
- 1.4k views
-
-
இன அடிப்படையில் காவல்துறை சேவையை கூறு போட முடியாது – காவல்துறை மா அதிபர் முதலமைச்சருக்கு பதிலடி 26 அக்டோபர் 2013 இன அடிப்படையில் காவல்துறை சேவையை கூறு போட முடியாது என காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு ஏற்ற வகையில் வேறு வேறு காவல்துறை சேவைகளை அமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஒரே காவல்துறை சேவையே கடமையில் ஈடுபட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வடக்கின் ஒவ்வொரு காவல்துறை நிலையங்களிலும் 3-4 தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியமானது என்ற போதிலும், தனித் தனி காவல்துறை சேவைகளை அமைப்பது தீர்வாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். த…
-
- 1 reply
- 474 views
-
-
வடக்கில் அரசியல் கட்சியொன்று ஆயுதங்களுடன் செயற்படுவது மீண்டும் ஒரு பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்காதாவென கேள்வியெழுப்பிய ஐ.தே.க. எம்.பி. சஜித் பிரேமதாச வட மாகாண சபைக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஈ.பி.டி.பி. ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டது எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போதே இவ்வாறு தெரிவித்த சஜித் மேலும் கூறுகையில் ; ஈ.பி.டி.பி. வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டதென கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட ஈ.பி.டி.பி. வன்முறைகளில் ஈடுபட்டது. ஆயுதம் தாங்கிய குழுக்கள் வடக்கில் உள்ளன. அசிய ல் கட்சிய…
-
- 0 replies
- 379 views
-
-
-
கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெருமளவில் வெளியிட்டு முடிக்கப்பட்டுள்ளன. எனினும் மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க கொழும்புக்கு வருவதற்கு விண்ணப்பித்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கமெரா கலைஞருக்கு மட்டுமே இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்தது. ஊடகங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்தின் டுவிட்டாரில் வழங்கியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோனத்தன் மில்லர், இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்று வ…
-
- 0 replies
- 297 views
-
-
இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது! இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா துணைப் பொதுச் செயலாளர் அம்சா, தமிழக மக்கள் சனநாயக கட்சி மா…
-
- 2 replies
- 611 views
-
-
கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை குறித்து குற்றச்சாட்டு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 அக்டோபர், 2013 - 15:04 ஜிஎம் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவரான அருட்தந்தை மங்களராஜா அவர்கள் வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர். ஜோசப் ஸ்பிட்டரி அவர்களுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார். அருட்தந்தை மங்களராஜா செவ்வி http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/forciblesterilisation_131023_fatheronfamily_au_bb.mp3 கிளிந…
-
- 6 replies
- 742 views
-
-
ஈழவிடுதலைக்கான வேலைப்பகுப்பு (Division of Labor for Elam Liberation) "மகாநாட்டிற்கு முன் TNAயின் அங்கத்துவக் கட்சிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும்" மாவை 133000 விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சரான எனக்கு ஆலோசணைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை:-விக்கி மாவை சேனாதி ராசா அவர்கள் உள்நோக்கத்துடன் திரு விக்னேஸ்வரனை செயல்படாமல் முடக்க முனைபவர்களின் கைப்பாவையாக மாறிவிடக்கூடாது. திரு விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தனது அடிப்படை பணிகளை உறுதியோடு மேற்கொள்ள கடமைப்பட்டவர் அதற்கான மக்கள் ஆணையும் அவருக்குள்ளது. அதேசமயம் தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டால் அதுபற்றி பகிரங்கமாக அறிக்கைவிடுவதுக்கு மக்கள் அவருக்கு அணைதரவில்லை. மேற்படி சூழலில் அ…
-
- 11 replies
- 982 views
-
-
-சுமித்தி தங்கராசா எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதன்போதே, பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பதில்லையென்பதுடன் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு …
-
- 5 replies
- 500 views
-
-
ஜிஎஸ்பி எனப்படும் வரிச்சலுகையை சிறிலங்கா இழந்ததால், 2010ம் ஆண்டுக்குப் பின்னர், ஆடை ஏற்றுமதி மூலம் கிடைத்திருக்க வேண்டிய 782 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்காவுக்கு வழங்கி வந்த வரிச்சலுகையை கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறுத்தியது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவில் 25 ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 10 ஆயிரம் பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தகவல் வெளியிட்ட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மகிந்…
-
- 0 replies
- 301 views
-
-
-மொஹொமட் ஆஸிக் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச இயக்கங்கள் சில உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியாரின் அலுவலகம் இன்று சனிக்கிழமை கண்டியில் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தம் முடிவுற்ற பின் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் சில பிரச்சினைகள்; கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் இவ்வாறான நெருக்கடிகளை உருவாக்குவதில் சிலர் மும்முரமாக உ…
-
- 0 replies
- 361 views
-