Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாரிய நெருக்கடியை நோக்கி சிங்கள இனவாத அரசு! பாதுகாப்பு சபையின் பிரதிநிதியாகிறார் மிச்செல்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அமரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளத. அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா எண்ணங்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்செய்ல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார. இந்தநிலையில் புதிய பதவியின் நிமித்தம் அவர் இலங்கை தூதுவர் பதவியை விட்டு செல்வாரா? அல்லது அந்த பதவிக்க…

  2. கொள்ளையடிப்பதற்காகவா அரசியல்வாதிகளை தெரிவு செய்கிறீர்கள் ; யாழில் அநுரகுமார கேள்வி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக 2 கோடி ரூபா பணத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த கருத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மக்கள் கொள்ளையடிப்பதற்காக இவர்களை தேர்வு செய்தார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில், கொள்ளையர்களை பிடிக்கப்போகிறோம். ச…

  3. Oct 31, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – அம்பாந்தோட்டை தூதரகத்தை திறந்து வைப்பார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அடுத்த மாதம் 25 ஆம் நாள் சிறீலங்கா வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: மூன்று நாள் பயணமாக எதிர்வரும் நவம்பர் 25 ஆம் சிறீலங்கா வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்களை திறந்து வைக்கவுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சந்திக்கும் அவர், அங்கு நடைபெறும் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்களையும் பாhவையிடுவார். வடக்கில்…

  4. பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹண இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இனிவரும் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுக்கு எதிராக கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். http://www.onlineuthayan.com/News_More.php?id=290683223814376824

  5. ‘நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை’ - க.அகரன் “நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, காணாமலாக்கபட்டோர் என எவரும் இல்லை. எனவே காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஒரு வருட காலமாக உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வோம் என தெரிவித்த ஜனாதிபதி, இப்போது கா…

  6. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பைச் சென்றடைந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கடலில் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையிலேயே குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் அவுஸ்திரேலிய அரசாங்கததின் சார்பில் சட்டத்தரணி டொனாகி கியுசி. அந்நாட்டு மேல் நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகலிடக் கோரிக்கையாளர் ஆர்வலர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்க…

  7. 300 எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக வெளியான செய்தி குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கம் By DIGITAL DESK 5 07 SEP, 2022 | 12:24 PM (எம்.மனோசித்ரா) எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள…

  8. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய கடலையும் திருகோணமலை துறைமுகத்தையும் பாதுகாப்பது புலிகளே [11 - July - 2006] [Font Size - A - A - A] இந்தியா இதை உணர வேண்டுமென்கிறார் திருமாவளவன் இந்தியாவுக்கு எதிராக விடுதலைப்புலிகள் எப்போதும் செயல்பட்டது கிடையாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைந்து நடத்திய ஈழத் தமிழர் பாதுகாப்புக்கான மனிதநேயப் பேரணி - பொதுக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் கடந்த சனிக்கிழமை நடந்தது. பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; அரசியல் ரீதியாக நான் வேறு கூட்டணியில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சிலர் தவிர்த்துள்ளது வருத்தமாக உள்ளது. …

  9. காணாமல் போன தனது தாயைக் கண்டு பிடித்து தருமாறு 13 வயதுச் சிறுமி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை ‐ ஜீரிஎன் செய்தியாளர் 13 November 10 01:15 pm (BST) வன்னி யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போன தனது தாயைக் கண்டு பிடித்து தருமாறு 13 வயதான பெண் குழந்தை ஒன்று இன்று சாவகச்சேரியில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன் வாக்குமூலமளித்துள்ளது. செவ்வராசா இலக்கியா என்னும் 13 பெண்குழந்தையே தனது தாயைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தனது தந்தையான செல்வராசா உயிரிழந்ததாகத் தெரிவித்த அக்குழந்தை தனது தாயாரான செல்வராசா சுகந்தியை தோளில் காயமடைந்த நிலையில் கைவிட்டு விட்டுச் சென்றதாக தெரிவித்தார். தனது தாயாரை படையினர் மீட்டெடுத்துச் சென்…

  10. மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அண்மையில் வெளியிட்ட தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் எரோ ஸ்பேஸ் நிறுவனம் இலங்கையின் சீனேட் நிறுவனம் இணைந்து விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதற்கு இடத்தை ஒதுக்குமாறு மத்தல விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார். மத்தல விமான நிலையத்திற்கு சர்…

  11. வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று உயர்மட்டத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளும…

    • 0 replies
    • 605 views
  12. மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்த…

  13. யாழ் குடா நிலவரம்!!! தொடர்ந்து மூன்று நாட்களாக போர்களமாக மாறியிருக்கும் யாழ் குடாநாட்டின் உண்மையான நிலவரம் ஒரு மர்மமாகவே தொடர்ந்தும் இருக்கிறது. உண்மையான செய்திகளை அறிய முடியாத நிலையில் வெறும் ஊகங்களும் வதந்திகளும் பரவி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. போர்முனைச் செய்திகளை விடுதலைப்புலிகளும் அடக்கியே வாசிக்கின்றனர். பலாலியில் வான்புலிகளின் தாக்குதல் பற்றியும் விடுதலைப்புலிகள் பட்டும் படாமலுமே கருத்து தெரிவித்திருந்தனர். முகமாலை, மண்டைதீவு சண்டைகள் குறித்தும் பெருமளவிலான தகவல்கள் விடுதலைப்புலிகளிடம் இருந்து வரவில்லை. சில ராஜதந்திரக் காரணங்களாலேயே விடுதலைப்புலிகள் இவ்வாறு நடந்து கொள்வதாக நம்பப்படுகிறது. சிறிலங்கா அரசு உத்தியோகபூர்வமாக யுத்தப்…

  14. அத்துமீறிய விசாரணைக்கான செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும்..; பாதுகாப்பு அமைச்சு மிரட்டல்! சர்­வ­தேச விசா­ரணை தொடர்பில் அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்­களை மீறி சர்­வ­தேசம் செயற்­ப­டு­மாயின் அதற்­க­மை­வாக எமது பாது­காப்பு செயற்­பா­டு­களை மேற்­கொள்வோம். இலங்­கைக்குள் அத்துமீறிய விசா­ர­ணைக்­கான செயற்­பா­டு­களை யார் மேற்­கொள்­வ­தற்கும் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று தெரி­விக்கும் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ருவான் வணிக சூரிய பாது­காப்பு செய­லாளர் போர்க் குற்­ற­வாளி என்றால் ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பி­யுங்கள் எனவும் கூறினார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடக மையத்­தினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் பின்னர் இது க…

    • 2 replies
    • 679 views
  15. IMF ஒப்பந்தம் சபை ஒப்புதல் அளித்த பின்னரே வெளியிடப்படும் -ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அதனை உறுதிப்படுத்தும் வரை மற்றும் அதன் பிரதான கடனாளிகளுடன் இலங்கை உடன்பாடுகளை எட்டும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை வெளியிட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளை உள்ளடக்கிய புதிய ஊழல் சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் நீதி அமைச்சர் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் எ…

  16. சுப்பிரமணியன் சுவாமி.... பார்ப்பனியத்தின் ஒரு வக்கிர முகம்! [Tuesday 2014-07-22 11:00] பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி என்று பெரியார் சொன்னார். அதற்கான அர்த்தத்தை நாம் எங்கள் நாட்களில் வெகுவாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழர்கள் மத்தியிலேயே, தீர்க்க முடியாத பெரு வியாதியாக... அகற்ற முடியாத பெரு வினையாக... தவிர்க்க முடியாத பெரும் வலியாக பார்ப்பனீயம் கறையான் புற்றாகப் புரையெடுத்து நிலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பேரவலங்களுக்கும், பேரிழப்பிற்கும் பார்ப்பனிய சதி வலையும் ஒரு முக்கிய காரணமாகவே தொடர்கின்றது. ஒரு மதம் என்ற வகையில் இந்து மதம் தமது மக்களான தமிழர்களைக் காப்பாற்றவும்,…

  17. கலவரத்தின் பின்னணியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் இருவர் யார்? : ஜே.வி.பி.யின் கேள்வியினால் சபையில் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம் பெற்ற கலவரத்திற்கு புதிய கட்சி ஒன்றுடன் தொடர்புடைய பாராளு மன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்புபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் அந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி சபையில் கோரிக்கை விடுத்ததை அடுத்து நேற்று கூட்டு எதிர்க்கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்க…

  18. ஆறு கடற்படையினருடன் படகு மாயம் - போதைப்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தகவல் By RAJEEBAN 14 OCT, 2022 | 08:28 AM ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளையே கடற்படையினர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேள…

  19. கூட்டமைப்பு-தமிழ்க்கட்சி அரங்கம் அரசியல் தீர்வுக்காக ஒன்றிணைவு - நேற்றைய சந்திப்பில் இணக்கம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:36:20| யாழ்ப்பாணம்] arankam_01தமிழ் மக்களுக்கான காத்திரமான அரசியல் தீர்வைப் பெற் றுக்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளின் அரங்கமும் இணைந்து செயற்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே இத் தீர்மானம் எடுக் கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தின. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அனை த்துக் கட்சிகளும் ஒன்று சே…

  20. ''காமினி திசாநாயக்க ஒரு இனவாதி'' - சிறிதன் எம்.பி.க்கும் மயந்தவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் By Digital Desk 5 21 Oct, 2022 | 09:17 AM (இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்) முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க ஒரு இனவாதி என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்ததால் அவருக்கும் சபைக்கு தலைமை தாங்கிய காமினி திஸாநாயக்கவின் மகனும் ஐக்கிய மக்கள் சக்ததியின் உறுப்பினருமான மயந்த திஸாநாயக்கவுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. சபைக்கு தலைமை தாங்கும் ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு நீங்களும் இனவாதம் பேசுகின்றீர்கள்..அந்த ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டு இவ்வாறு உ…

  21. சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் என்ற கொள்கைக்கு இணங்காத எந்தவொரு நபருக்கும் உள்நாட்டில் இடமில்லை என தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சிங்கள பௌத்த கலாசாரத்திற்கு அடிபணிந்தே ஏனைய சிறுபான்மை இனங்கள் வாழ வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள கலாசாரமும் அதன் மொழிகளுமே தேசிய கொள்கைகளாக கருதப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியும். ஆனால் தேசிய பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டவர்களாகவே அவர்கள் வாழ வேண்டும். மேலும் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள தடையானது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்…

  22. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் 14 ஆவது அமர்வில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் விசேட கூட்டம் ஒன்றில் விவாதித்து தீர்மானம் எடுக்கப்படும் என் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 14ஆவது அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் 3 பிரேரணையினை கொண்டு வந்தார். அதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். அத்துடன் குறித்த பிரேரணைகள் தொடர்பில் ஆளும்கட்சிக்குள்ளும் பல விவாதங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து குறித்த பிரேரணைகள் குறித்து விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து தீர்மானம் எடுக்கலாம் என்ற வேண்டுகோளினை முதலமைச்சர் முன்வைத்தார். இதனையடுத்து உறுப்பினர் கொண்டுவந்த 3 பிரேரணையில் 2ஆவது மற்றும் 3அவது பிரேரணைகள் உறுப்…

  23. சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் பயணம் சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கடந்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஹில்டன் விடுதியில், சீனத் தூதுவர் செங் ஷியுவான், வரவேற்பு உபசாரம் ஒன்றை அளித்தார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரைக் கொண்ட இந்தக் குழுவினர், சீனாவின் பீஜிங் நகருக்கும், குவாங்டோங் மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கன்ரன், சென்ஷென், ஹுய்சோ நகரங்களுக்கும், துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும், இவர்கள்…

  24. வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கு வர வேண்டிய சூழல் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பொருத்தமான காணிகளை ஆராயுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். https://…

    • 2 replies
    • 289 views
  25. தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் வெறுமனே ஆயுதமேந்திய போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை ஜனாதிபதி இந்த வரவுசெலவுத்திட்ட உரையிலே நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலே 225 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களைப் பெற்றதாகக் கூறியிருந்தார். அவருடைய கூற்று உண்மையிலே முற்றிலும் சரியானதாகும். அதேபோன்றே வடக்கு,கிழக்கிலுள்ள 18 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் 14 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம். தென்பகுதியிலுள்ள பெரும்பான்மைச் சிங்கள மக்கள் எந்த அளவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்களோ அதேயளவுக்கு வடக்கு,கிழக்கிலுள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருக்கிறார்கள் என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.