ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை உள்ள எந்த தமிழனும் சிங்கள அரசை சந்தோசப்படுத்தும் எந்த வேலைத்திட்டங்களிலும் ஈடுபடமாட்டார்கள்:.. இது வரையில், அதாவது 1948ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளரிடமிருந்து இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து அரசியல் ரீதியான நோக்கில், வெற்றி என்பது சிறீலங்கா அரசிற்கே உரியது. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ் வெற்றியை சிறீலங்காவின் ஆட்சியாளரான சிங்களவர் எப்படியாகப் பெற்றார்கள் என்பதை ஆராயுமிடத்து, அது தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கியது மட்டுமல்லாது இதற்கு துணைபோன எமது உடன்பிறவா சகோதரர்களான தமிழ்த் தலைமைகளும் தமிழ் குழுக்களும் காரணமாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். இதேவேளை ஏன் தமிழ் தலைம…
-
- 2 replies
- 957 views
-
-
வெள்ளை வேன் ஆட்கடத்தலில் பின்னணியில் கோத்தபாய? Thursday, November 24, 2011, 14:21 இலங்கையில் வெள்ளைவான்கள் மூலம் ஆட்களை கடத்திச் செல்லும் குழுவினரை பாதுதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷவே முழுமையான அறிவுறுத்தல்களுக்கு அமைய வழிநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ விசேட அதிரடிப்படையின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் மேஜர் ஒருவரே இந்த குழுவை வழி நடத்தி வருவதாகவும் வவுனியா மாமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இவ் ராணுவ அதிகாரி ஒரு காலை இழந்தவர். அங்கவீனம் காரணமாக சேவையில் இருந்து விலகி கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது விசேட அதிரடிப்படையின் தலைமையத்தில் இருந்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இன்று (15) நள்ளிரவு 8 மணிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் எமது இணையத்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (14) வெளியிட்ட கருத்துக்களினால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் முழுமையாக சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்தார். இது மிகப்பாரிய அனர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து தனக்கு தனித் தீர்மானமொன்றை எடுக்க முடியாது என்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தி…
-
- 0 replies
- 393 views
-
-
விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://…
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
எங்களது இளமைக்காலத்தில் தெற்கின் தலைவர்கள் எங்களுக்களித்தபடிப்பினைகளை எண்ணி எங்களால் பெருமிதம் கொள்ள முடியவில்லை. இதனை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவிக்க நேர்ந்ததையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன்.கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாறறும் போதே வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு: மேதகு.ஜனாதிபதி அவர்கள், வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து ஆற்றிய உரையிலிருத்து ஆரம்பிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி அவர்கள் தனது இளமைக்காலத்தில் தெற்கின் முன்னோடித் தலைவர்கள் …
-
- 0 replies
- 479 views
-
-
தேர்தலில் மக்கள் ஆணை கிடைத்தால் தமிழர் தாயகப் பகுதியை ஒருங்கிணைத்து வடக்கு கிழக்கை உள்ளடக்கிய ஒரு அதிகார மையம் உருவாக்கப்பட்டு அதற்குத் ‘தமிழ்த் தேசிய அவை’ எனப் பெயரிடப்படும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இந்த அதிகார மையமானது 2001க்குப் பின்பு இருந்த நிழல் அரசாங்கத்தைப்போல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அரசியல்சார்ந்த வேலைகளில் ஈடுபடும் அதேநேரம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை காணொலியூடாகத் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=50072
-
- 0 replies
- 439 views
-
-
திங்கள் 15-10-2007 21:52 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாறையில் பதுங்கியிருந்து தாக்கியதில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் காயம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் காயமடைந்தவர்களை கண்டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப்பிரதேசத்தில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நான்கு மணிநேரம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 875 views
-
-
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் படையினர் சோதனையில் ஈடுபட்டார்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இலங்கைப் படையினர் இன்று அதிகாலை; சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். வீதியால் நடந்து சென்றவர்கள் வழிமறிக்கப்பட்டு விசாரரிக்கப்பட்டார்கள். அவர்களது தேசிய அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டன. விமானப்படையினரும் இராணுவத்தினரும், இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறினார்கள். அவசரகால சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சோதனை நடவடிக்கைகளை படையினர் மேற்கொள்ள முடியாதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தார். http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10…
-
- 0 replies
- 865 views
-
-
தனது விரல்களைப் பாதுகாக்க சும்மா தள்ளிவிட்டேன் என்கிறார் மகிந்தJUL 23, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டத்துக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச திடீரென ஆவேசமடைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஒருவரைத் தாக்க முயன்றார். மகிந்த ராஜபக்சவின் கையைப் பிடித்த ஆதரவாளரை அவர் தாக்க முதுயன்ற போது, அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். அப்போது …
-
- 0 replies
- 750 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது. …
-
- 0 replies
- 447 views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது 12 டிசம்பர் 2011 யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. புதிய சிறைச்சாலை அமைப்பது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் யாழ்;ப்பாணத்தில் நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள சிறைச்சாலையில் ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்க முடியுமு; என தெரிவிக்கப்படுகிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் நான்கு வாடகை வீடுகளில் சிறைச்சாலை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 560 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம் பன்னை பிரதேசத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில…
-
- 0 replies
- 464 views
-
-
யாழ்ப்பாணம் நல்லுார் ஆலயத்தின் முன்றலில் காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல்போன தமது பிள்ளைகள் தொடர்பில் தமக்கு உரிய பதில் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் ''நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத் தருவாயா?'' 'தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம்?' 'எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா'' உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சமூக அமைப்புக்கள் கல…
-
- 1 reply
- 317 views
-
-
`இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்' - எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக JEWEL SAMAD இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; "இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை" என்றும் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பேராசிரியர் நுஃமானிடம், பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொண்ட செவ்வியிலேயே, இந்த கருத்துக்களை பேராசிரிய…
-
- 1 reply
- 841 views
-
-
ஜஹ்ரானின் மனைவி மகளின் நிலை எவ்வாறு உள்ளது- ரொய்ட்டர் தகவல் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் மனைவியினதும் மகளினதும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து ஜஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முகமட் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாதியாவிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை தேசிய வைத்தியசாலையில் கிசிச்சை பெற்றுவருகின்றனர். தாயும் மகளும் பத்துமுதல் 15 வீத எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் பொது…
-
- 0 replies
- 689 views
-
-
Published By: VISHNU 03 JUN, 2024 | 03:34 AM யாழ் அச்சுவேலி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழு ஒன்று பெற்றோல் குண்டு தாக்குதலில் வீடு பலத்த சேதமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது; அச்சுவேலி மேற்கு கருமந்திரதுறை வீதியிலுள்ள பாலசிங்கம் சதானந்தன் என்பவரது வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவர் பண்ணை ஒன்றை நடாத்திவருவதாகவும் இவரின் சகோதரிக்கும் இவருக்கும் இடையே சொத்து சம்மந்தமான பிரச்சனை இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (02) சதானந்தன் சகோதரியின் உறவினர் ஒரு…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
சனி 03-11-2007 15:17 மணி தமிழீழம் [செந்தமிழ்] படையினரது வாகனம் மோதியதில் ஐநா தொண்டர் பரிதாப மரணம் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தொண்டராக பணியுரிந்த ஒருவர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சிறீலங்கா படையினரது வாகனம் மோதியதில் உயிழிழந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு தேஸ்ரன் வீதியில் (Thurstan Road )உந்துருளியில் பயணித்த றோமன் மேசிகி (Roman Mirceski) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார.; http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார் - [ சனிக்கிழமை, 24 டிசெம்பர் 2011, 09:08 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா காவல்து…
-
- 25 replies
- 3.5k views
-
-
யாழ்.முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல்துறை தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில் பொதுத்தேர்தல் 2015 தொடர்பில் ஐந்து கேள்விக்கொத்துக்கள் அடங்கிய கேள்விநேரம் யூரோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கேள்விநேரத்தில் • முதலாவதாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, இலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இரண்டும் ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசியல் தீர்வு என்று கூறியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையில் எவ்வாறான அரசியல் தீர்வொன்றை நோக்கி நீங்கள் முன்னெடுக்கவ…
-
- 0 replies
- 273 views
-
-
தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்த, பேஸ்புக், யூடியூப் ஊடாக மூளைச் சலவை செய்த சஹ்ரான் 2019.05.05 பி.ப 5.50 உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே, பகிரங்கமாகத் தேடிக் கண்டுபிடித்துள்ளாரென, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆறு இளைஞர்களையும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகும் மனநிலைக்குக் கொண்டுவருவதற்கான மூளைச் சலவையை, தொடர்ந்து பல மாதங்களாக, தனிப்பட்ட “ஷெட்ரூம்” ஊடாக மேற்கொண்டுள்ளார் என்று, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிலோன் த…
-
- 0 replies
- 534 views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்புAUG 13, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் அதுல் கெசாப்பின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பங்கேற்றிருந்தனர். அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மை அதிகாரியும், இராஜாங்கச் செயலரின் சிறப்பு ஆலோசகருமான, கவுன்சிலர் தோமஸ் ஏ.சானோன் நேற்று முன்தினம் பிற்பகல், சிறிலங்காவுக்கான புதிய தூதுவர் அதுல் கெசாப்புடன், ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.…
-
- 0 replies
- 372 views
-
-
Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 04:25 PM மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்று வெள்ளிக்கிழமை (21) அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பல வருடங்களாக குறித்த சோதனை சாவடியை அகற்றுமாறும் குறித்த சோதனை சாவடியினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்த துடன்,சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர். இந்த நிலையி, அண்ம…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
"ஒரு கருவூலம் கருகிவிட்டது" என்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தமிழகக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற வெளி நாட்டுப் பிரதிநிதிகள், கத்தோலிக்க மதம் சார்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந்து கொள்வர். ஆனால், அவர்கள் எவரும் இந்து மதத் தலைமைகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இந்து சமயத்தில் இருக்கக்கூடிய மதத் தலைமைகள் சிந்திப்பதும் இல்லை. வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து என்ன பயன்? ஆகையால் நாங்கள் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று யாரேனும் கூறிக்கொள்ளலாம் . ஆனால் அதனை ஒரு தக்க பதிலாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று முன்தினம்கூட பிரித்தானியத் த…
-
- 27 replies
- 2.5k views
-
-
திருகோணமலையில் சம்பந்தனுக்கு கீரிடம் சூட்டி வரவேற்பு! [Wednesday 2015-08-19 18:00] திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு,நேற்று மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை திருகோணமலை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்திற்குச் சென்று, சம்பந்தன் வழிபாடு நடத்தினார். இதன்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி, கிரீடம் வைத்து, ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெருமளவு ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். நாடாளுமன்ற தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் 33,853 விருப்பு வாக்குகளைப் பெற்று சம்பந்தன் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 11 replies
- 2.9k views
-
-
சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார். ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில்…
-
- 8 replies
- 1.3k views
-