ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
லண்டன் சென்று நிம்மதியாக சுதந்திரமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பேச முடியாது அவதிப்பட்ட மகிந்த ராசபக்ச ஒருவாறு தப்பி பிழைத்து இன்று காலை கொழும்பை சென்றடைந்தார். பிரித்தானிய மகாராணி எலிசபத் பதவி ஏற்ற வைரவிழா கொண்டாட்டங்களுக்காக மஹிந்த கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தார். விமான நிலையத்தில் சென்று இறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை ஓழித்து ஓடியத்திரிய வேண்டிய அவலநிலையிலேயே அவர் காணப்பட்டார். வழமையாக எந்த ஒரு நாட்டின் அதிபரும் வெளிநாடு சென்றால் அங்கு காரில் பயணம் செய்யும் போது அக்காரில் தேசியக் கொடி பறக்கும். ஆனால் மகிந்த லண்டனில் போய் இறங்கியது தொடக்கம் லண்டனை விட்டு புறப்படும் வரை சிறிலங்கா கொடியை தூக்கி வீசிவிட்டே ஒழித்து திரி…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது இதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு நாமும் பதிலடி கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவருக்கு இந்தியாவின் தமிழக மாநிலத்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. இவ்வவவாறு அவர்களுடைய செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. அத்துடன் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதும் நாம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அத்துடன் சார்க்கிற்கான வீசாவின் மூ…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின…
-
- 4 replies
- 602 views
-
-
ஈழத்தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது,ஈழத்தமிழ் மக்களால் மட்டுமல்ல,தமிழகம்,மலேசியா என உலகத்தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறிவிட்ட நிலையில்,தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட,உலகத்தமிழர்களையும் ஒருங்கிணைத்தே,போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. [media=]
-
- 0 replies
- 772 views
-
-
போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். [media=] "இசைப்பிரியா பங்கேற்ற வேலி குறும்படம்" http://www.youtube.com/watch?v=9gKWiUuMtp8
-
- 0 replies
- 1.4k views
-
-
ஹிராந்துருகோட்டே ரத்கித பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை வெண் சுருட்டால் (சிகரட்டினால்) சுட்டு காயப்படுத்திய இளைஞனை கைதுசெய்ய பொலிஸார் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.குழந்தையின் முகத்தில் காணப்பட்ட காயங்களை அடுத்து இதுகுறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும், எனினும் அந்த இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் முகத்தில் எட்டு இடங்களில் சூட்டுக் காயம் காணப்படுவதாகவும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தாயும், குழந்தையும் உற்றார் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றிருந்தபோதே இந்த இளைஞன் குழந்தையை சுட்டுள்ளதாகவும் தேடப்பட்டு வரும் இளைஞனுக்கு தற்போது 16 வயது எனவும் பொல…
-
- 1 reply
- 703 views
-
-
வலிவடக்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான 10 பரப்புக்காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரியிருந்த நிலையில் அந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என சபையின் நேற்றைய விசேட கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாலம்பை கலட்டியில் உள்ள 10 பரப்புடைய பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரி சபைத் தவிசாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் . 14 ஆவது கெமுனு ஜோச் படைப்பிரிவினரே குறித்த காணியைத் தமக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த காணி தனிநபருக்கு சொந்தமானது எனவும் அவர் அதனை படைத்தரப்புக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்து மாவட்ட விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேய…
-
- 0 replies
- 668 views
-
-
யாழ்ப்பாணம் தீவகத்தில்உள்ள மண்டைதீவு பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகளை அபரித்து கடற்படை தளத்தினை விரிவு படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.மண்டைதீவு கடற்படை தளத்தினை அண்மிய பகுதிகளில் உள்ள தமிழ்மக்களின் காணிகளை அபகரித்துக்கொள்ளும் நோகில் அவற்றிற்கு உதவுமாறு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளை சிறீலங்கா கடற்படையினர் நாடியுள்ளதாக யாழில்இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் நிலைகொண்டுள்ள படையினர்அந்த காணிகளை படையினருக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் குறிப்பாக அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து தற்போது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து…
-
- 0 replies
- 602 views
-
-
மனித உரிமைகள் விவகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிசேல் சிசன் வெளியிட்டுள்ள கருத்துகளானது அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர மட்டத்திலான உறவில் பனிப்போர் மூண்டுள்ள இவ்வேளையில், புதிதாக நியமனம் பெற்று கொழும்பு வரவுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிவித்துள்ளமையானது அரசுக்கு இனியில்லை யென்றளவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நியமனத்துக்கான உறுதியை அமெரிக்க செனட் கடந்த புதன்கிழமை மிச்செலி சிசனுக்கு வழங்கியது. நியமனத்தை பெற்றப் பின…
-
- 1 reply
- 617 views
-
-
சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும் - நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். ௭னவே, சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி அவருக்கு ௭திராக நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் தமிழீழக் கொள்கைகளிலிருந்து விடுபடவில்லை. ;றமை இன்று நாட்டிற்கு தெரியவந்து விட்டது என தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியந்ஜித் விதாரண தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட…
-
- 1 reply
- 645 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தில் பிழையான தகவல்களை வெளியிடும் தமிழர் தரப்பினருக்கு ஜனாதிபதி மஹிந்தவின் பிரித்தானிய விஜயம் சிறந்த பதிலடியாக அமைந்தது என அவர் சுடடிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் பல உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமகள் குறித்து பிரித்தானிய அதிகாரிகள், ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது ஜனா…
-
- 16 replies
- 1.2k views
-
-
எந்த அவசரநிலையிலும் சிறிலங்காவுக்கு உதவ சீன இராணுவம் தயார் – சீனப் பாதுகாப்பு அமைச்சர் உறுதி எந்தவொரு அவசரநிலையிலும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீயைச் சந்தித்துப் பேசியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகத்தில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சீன இராணுவத்தின் அழைப்பின் பேரில் சிறிலங்கா இராணுவத்தளபதி ஆறுநாள் பயணமாக நேற்றுமுன்தினம் மாலை பெய்ஜிங்கை சென்றடைந்தார். அவரை நேற்று சந்தித்தபோது, இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை அதி…
-
- 0 replies
- 591 views
-
-
By Matthew Russell Lee UNITED NATIONS, June 8 -- Amid gleeful coverage in Sri Lankan state media and apparent happiness at the highest levels of the UN, the UN Correspondents Association Excutive Committee on Friday voted to reject a proposed two-sided clarification drafted by Inner City Press, and voted, including with the votes of members not even present to hear the proposal, to suspend Inner City Press. Now they say begins a ten-day "Board of Examination" process to "investigate" Inner City Press, based on a file held by UNCA President Giampaolo Pioli but never shown to Inner City Press. Pioli has proposed as chairman of the Board of Examinatio…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் அண்மையில் வெளியிடப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான புதிய வீடியோக்காட்சிகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று என ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் வெளிவருகின்ற இன்டிபென்டன்ட் என்னும் பத்திரிகையானது இலங்கையில் இவ்வாறான யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் போலியானவை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்ததானியாவிற்கு சென்றிருந்த சமயம் இவை பிரச்சார நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டவை. அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும், இராணுவத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான வீடியோக்காட்சிகள் தயாரிக்கப்ப…
-
- 0 replies
- 756 views
-
-
இலங்கையை கெடுக்கும் நால்வர்! தமிழ் முஸ்லிம் மக்கள் உலக ஆதரவுடன் போராட வேண்டிய நிலை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளந்த நடவடிக்கைகளாக கொண்டுள்ளார்கள். இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்பு கூற வேண்டும். இந்த நாட்ட…
-
- 4 replies
- 890 views
-
-
கெஹெலிய ரம்புக்வெல்ல பயங்கரவாத்தை தோற்கடிக்கும் வேலைத்திட்டத்தில், பாரிய இராணுவ வெற்றியை இராணுவத்தினர் தாய் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தில், எவருக்கும் யுத்தம் செய்ய முடியும் எனக் கூறி, தாய் நாட்டுக்கு துரோகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற தலைமை ஆசனத்திற்குக் கூட மதிப்பளிக்காது, தற்போது, புலிகளின் நிழல்களின் சாப்பாத்துக்களை நக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அந்த நாட்டுக்கு சென்ற ஜனாதிபதியும் ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் சிலர் மற்றும் பொதுநலவாயத்தின் தலைவர் ஒரு…
-
- 0 replies
- 833 views
-
-
பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞன் 17 நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த பின் மன அழுத்தத்துக்கு உள்ளாகியமைக்கு பிரித்தானிய அரசாங்கமே காரணமாகும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத் தளத்தில் Donna Covey எழுதி யுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழரான ஹரி என்பவர் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்பட்டதானது மிகப் பயங்கரமான சாட்சியமாக இருப்பதுடன், புகலிடம் கோரி வரும் மக்கள் இந்நாட்டில் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள் என்பதைக் காண்பிக…
-
- 1 reply
- 576 views
-
-
இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார். பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருட…
-
- 1 reply
- 2.4k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்பாடல்களை மையமாகக் கொண்டு முறைப்பாடு எதனையும் செய்யத் திட்டமிடவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராக அண்மையில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, மனித உரிமைப் பேரவை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைப் பேரவையின் ஆசிய பசுபிக் பிராந்திய பொறுப்பாளர் ரொரி முன்கூவானின் மின்னஞ்சல் தொடர்பாடல்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பிற்க…
-
- 0 replies
- 555 views
-
-
இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவுக்கான பயணத்தினைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, வத்திக்கானுக்கு சென்று புனித பார்பரசரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். சிறிலங்காவின் ஆயுதப்படை…
-
- 2 replies
- 897 views
-
-
மருத்துவப்பீடத்திற்கு வடக்கில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தெரிவு - என்கிறார் டக்ளஸ்:- கடந்த வருடம் மருத்துவப்பீடத்திற்கு வடக்கில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்திற்கான விவசாயப்பீடம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தேசியக் கொடியை ஏந்தி, மேதினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.சம்பந்தன், அதற்கு முன்னர், தேசியக் கொடிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் எனவும் அவ்வாறு கருத்துக்களை …
-
- 3 replies
- 995 views
-
-
இலண்டன் போல் மால் மாளிகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகிழூர்தி ஈழத்தமிழர்களின் கூழ்முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது. விருந்துண்ணும் நிமித்தம் இன்று மதியம் 12:00 மணியளவில் போல் மால் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்த மகிந்தரின் மகிழூர்தியை இலக்கு வைத்து ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் சரமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டன. இதில் சில கூழ்முட்டைகள் மகிந்தர் பயணித்த மகிழூர்தி மீது வீழ்ந்து சிதறியுள்ளன.இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாளிகைக்குள் மகிந்தர் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தியாளர் அறியத் தந்துள்ளார். எதிரிகளின் பொய் பரப்புரையை முறியடித்து. தேசியத் தலைவர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட அனைதுலக தமிழர் ஒரிங்கினைப்புக்குழு பெரும் திரளான …
-
- 41 replies
- 5.8k views
-
-
இலங்கையில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும்படி ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் தமிழ் குழுவான, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிரிட்டன் பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர், பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனுக்கு எழுதிய கடிதத்தில், சூடான் வாக்கெடுப்பு மூலம் ஒரு நீண்டகால இரத்தக் களரியுடனான உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததுடன், தென் சூடான் என்ற புதிய நாட்டை உருவாக்கும் ஒரு நல்ல முடிவாக அமைந்தது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் இந்தத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் கிடைக்காது தொடர்ந்து துன்புறுகின்றனர். கொழும்பு ஆட்சியினால் வடகிழக்கில் தமிழர்கள் அமைதிய…
-
- 1 reply
- 588 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர்பிலான உத்தேச அமுலாக்க யோசனைகளை இலங்கை அரசு நேரடியாக அமெரிக்காவிடம் கையளித்திருப்பது தொடர்பில் புதுடெல்லி இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பைக் கொழும்புக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப அமுல்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலான திட்டவரைபை அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்திருந்தார். ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமுலாக்க யோசனைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசு அமெரிக்காவிடம் உறுதியளித்திருந்…
-
- 2 replies
- 1k views
-