ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இன்றைய குரலுக்குரிய அம்மாவின் 3ஆண்பிள்ளைகளும் மண்ணுக்காக மடிந்து போனார்கள். இன்னும் ஒரு 17வயது மகன் முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டான். இன்றைய அம்மாவின் நம்பிக்கை 9வயது மகள் மட்டுமே. இரவல் வீடுகளில் அம்மாவின் வாழ்வு இப்போது கழிகிறது. தனது பிள்ளைகளை இழந்த வலியும் வேதனையும் நிரம்பிய மனசுக்குள் உறைந்து துயரங்களை யாருக்கும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துயரங்களால் தின்னப்பட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் 9வயது மகளின் விருப்பங்களை நிறைவுசெய்ய முடியாது தனக்குள் குமுறும் இந்தத்தாய் தனது மகளுக்கான கல்வியைக் கோருகிறார். தானில்லாது போனால் தனது மகளை காப்பாற்றுங்கள் எனக்கெஞ்சுகிறாள். இந்தத்தாய் போல் பல்லாயிரம் தாய்கள் தங்கள் காணாமற்போன பிள்ளைகளையும…
-
- 5 replies
- 1.8k views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும்.'' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ள சமிக்ஞையைக் கருத்திற் கொண்டு சாதகமாக - பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். "வடக்கு - கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணம் இணக்கம…
-
- 34 replies
- 1.8k views
-
-
சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலையிலும், பள்ளத்தாக்கிலும், பாலைவனத்திலும், பொட்டல் காட்டிலும்,…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா ஊர்காவற் படையை யாழ். குடாநாட்டில் அமைக்க டக்ளஸ் திட்டம்! திகதி: 19.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] கிழக்கில் சிறிலங்கா ஊர்காவல் படையினர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் நிலையில், யாழ்.குடாநாட்டிலும் அவ்வாறான ஒரு ஊர்காவல் படையினரை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத் துணைக்குழுகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் முடிவு செய்துள்ளார். சட்டம் ஒழுங்கைப் பேணவும், பல்வேறு சமூகச் சீர்கேடுகள் மற்றும் பாதிப்புக்களை அகற்றும் என்ற பெயரில் இந்த ஊர்காவல் படையினரை உருவாக்கும் திட்டம் குறித்து டக்ளஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.தேசவள விவசாயிகள் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட யாழ்.மாவட்ட விவசாய மக்களின் பிரதிநிதிக…
-
- 15 replies
- 1.8k views
-
-
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணிஇ இயக்குநர் சீமான்இ மற்றும் தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் சீமான் காரை எரித்து காங்கிரசு ரவுடிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் கருத்துரிமை - பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றி மாபெரும் ஆர்ப்பாட்டம் 22-12-2008 அன்று புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் புதுவை மாநில அமைப்புச் செயலர் சு. பாவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்திப் பே…
-
- 1 reply
- 1.8k views
-
-
முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி…
-
- 15 replies
- 1.8k views
-
-
இரண்டு அதிரடிப்படையினரை சுட்டுக்கொன்ற புலனாய்வு அதிகாரி அம்பாறையில் அமைந்துள்ள சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் முகாமில் புலனாய்வு அதிகாரி ஒருவர் அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரண்டு அதிரடிப்படையினரும் உயிரிழந்தனர். எனவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி தனக்குத்தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஆபத்தான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. - சங்கதி
-
- 1 reply
- 1.8k views
-
-
புதன்கிழமை, நவம்பர் 16, 2011 ‘லங்கா ஈ நியூஸ்’ ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொடவைக் கொலை செய்து அவரது சடலத்தை நீர்கொழும்பு களப்புக் கடலில் தானும் தனது குழுவினரும் வீசினோம் என கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்ந்திரவின் படுகொலை தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பாதாள உலகத்தைச் சேர்ந்த முக்கிய நபரான தெமட்டகொட சமிந்த என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என ‘லங்கா வெப் நியூஸ்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. . தம்மால் கொலை செய்யப்பட்டுக் கடலில் வீசப்படும் நபர் யார் என்பது தொடர்பில் சம்பவ தினத்தன்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் அதன் பின்னர் கொழும்பிலுள்ள பிரபல ஹோ…
-
- 2 replies
- 1.8k views
-
-
அர்னாபை அலறவைத்த திருமுருகன் காந்தி! Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்தியா எம்மை காப்பாற்றவேண்டும்; விலாங்கு மீன் போல் இந்தியா செயற்படுமாக இருந்தால் இந்தியாவுடனான உறவில் கடும் நெருக்கடி ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளது ஜாதிக ஹெல உறுமைய. . ஜாதிக ஹெல உறுமைய மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ள கட்சி. மஹிந்தவின் சில கொள்கைகளை இவர்கள்தான் கூறுவார்கள் ஏனென்றால் மஹிந்த நேரடியாக கூறினால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதேயாகும். . தற்போதைய அழுத்தங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிறிலங்காவை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது. உள் நோக்கங்களுடன் செயற்பட்டு நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு துணை போனால் இந்தியாவுடனான எதிர்கால உறவுகள் முறிக்கப்படும் என எச்சரித்துள்லனர் இந்த மஹிந்தவின் எடுபிடிகலான ஹெல உறுமை…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு:எரிக் சொல்ஹெய்மின் வேண்டுகோள் நெடியவனால் நிராகரிப்பு [Thursday, 2011-03-24 05:45:09] நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நோர்வே ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
08.12.11 மற்றவை ‘இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும்’ என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ‘‘தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல’’ என கொந் தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் ‘நல்லிணக்கமும், போருக்குப் பின்னரான நிலையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ‘‘அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆக…
-
- 1 reply
- 1.8k views
-
-
செஞ்சிலுவை சங்க பணியாளர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் வன்னிப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர்: ரம்புக்வெல. இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை பொலிசார் இனம் கண்டுள்ளதாகவும் எனினும் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளார் மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங் கட்டுப்பாடற்ற வன்னி பிரதேசத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகுவம் அதனால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் எனினும் ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை நாடு கடந்த தமிழீழ அரசின் ஒரு அங்கமாக, நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமை தாங்கினார். முதலில் ஈழத்தில் உயிர் நீத்த தமிழர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அறிமுக உரையை தோழர் தியாகு நிகழ்த்தினார். கருத்துரை கொளத்தூர் மணி பெரியார் திராவிடர் கழகம், மணிவண்ணன் இயக்குனர் எஸ்.எம்.பாக்கர், சி.ராஜன், அய்யநாதன், மருத்துவர் எழிலன், மற்றும் …
-
- 5 replies
- 1.8k views
-
-
'இப்பொழுது ஊரில் பெடியளே இல்லை..' இவர் ஒரு இளைஞர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள சிறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியில் இறுதிப் போர் நடந்தபோது, அந்தப் போரிலே சிக்கியிருந்தவர். போரின் காரணமாகத் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில் ஒருவர். இவரைப்போல இருக்கும் ஏராளம் இளைஞர்களின் பிரச்சினைகளை இவர் இங்கே பேசுகிறார். மேலும் இந்தப் போர் தொடர்பான அபிப்பிராயங்களையும் போர் தின்ற ஊரிலே வாழும் இவர், போர்ப் பசியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கதைகளைச் சொல்லும் ஒரு சாட்சி. முக்கியமாக தன் சக வயதினரை தன்னுடைய நண்பர்களை இழந்த நிலையில் இளம்பிராயத்தின் நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனச் சொல்கிறார். யா…
-
- 3 replies
- 1.8k views
-
-
குழந்தைகள் கடத்தல் [14 - January - 2008] [Font Size - A - A - A] ஆட்கடத்தல், படுகொலைகள், கப்பம் அறவிடுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை ஒருபுறமிருக்க, பச்சிளம் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் குரூரத்தனமான நடவடிக்கைகள் குறித்து தற்போது தகவல்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் நடவடிக்கைகளின் பின்னணியிலிருந்து செயற்பட்ட செல்வந்தப் பெண் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் தேடிவருகிறார்கள். ஆஸ்பத்திரிகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளை கடத்திச்சென்று விற்பனை செய்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் ஒத்தாசை புரிவத…
-
- 1 reply
- 1.8k views
-
-
யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx
-
- 12 replies
- 1.8k views
-
-
நளினிஅக்கா பற்றி ஓர் விவாதம் போய்ட்டிருக்கு... Dear J, What is your opinion about the ongoing drama about Nalini’s release? Do you think she should be released? I feel the whole purpose of jail & punishment is to reform a person and NOT a state-sponsored revenge. Rajiv’s murder is terrible but so are the Kovai blasts. If the terrorists responsible for Kovai blasts can be released after 10 years why not Nalini? Knowing well how carefully the LTTE plans a secret operation, Nalini definitely may not be a part of conspiracy, but might have got some clue at the end just before the incident. In her youthful enthusiasm at that time, she even might have been…
-
- 11 replies
- 1.8k views
-
-
இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் ஜயந்த தனபால இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுத பரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார். 20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’, என்றும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.8k views
-
-
பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு வீரகேசரி நாளேடு எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகிகன்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கி…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.யாழ்.சென்.ரோக்ஸ் சனசமூக நிலையத்தினரால் கட்டப்பட்ட மறைந்த முன்னோடிகள் நினைவுத்தூபி இன்று புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் , அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஏனைய கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளில் மோதலுறுகின்றனர். மற்றையபடி அவர்களுடன் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளோ அல்லது கோபதாபங்களோ எங்களுக்குக் கிடையாது.…
-
- 31 replies
- 1.8k views
-
-
இராணுவம் 3 மணி நேரம் யாழ்-- பருத்திதுறை வீதியை மூடி நாகர்கோவிலில் காயப்பட்ட ,இறந்த ராணுவத்தினரை கொண்டுசென்றதோடு ஆயுதங்களை பலாலியில் இருந்து நாகர்கோவிலுக்கும் கொண்டு சென்றுள்ளார்கள். SLA blocks Jaffna - Pt.Pedro Road to transport supplies, casualties [TamilNet, Monday, 21 January 2008, 20:30 GMT] Sri Lanka Army in Jaffna blocked Jaffna - Point Pedro Road for more than 3 hours Monday morning to transport dead and wounded soldiers in two vehicles from Naakarkoayil frontline where an artillery duel and direct clash was reported in the early hours of Monday. Meanwhile, truck loads of military hardware were transported from Palaali military base to SLA positions in Naaka…
-
- 0 replies
- 1.8k views
-
-
வெள்ளி 06-04-2007 19:55 மணி தமிழீழம் [மயூரன்] சுவாமியார் வேடத்தில்வந்தவாகள் துப்பாக்கி முனையில் கொள்ளை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு அண்மையாக உள்ள மதுபாணக் கடைக்கு சுவாமியார் வேடத்தில் நண் பகல் நேரம் உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் இருக்கும் சுகுமார் என்பவருக்குச் சொந்தமான மதுக்கடையிலேயே இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை நன்பகல் 12.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது இதனைத் தொடாந்து உந்துருளியில் சென்ற இந்த திருடர்கள் இராணுவ முகாம் அமைந்துள்ள கொக்குவில் கிழக்கு சபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணுடைய கழுத்தில் இருந்த ச…
-
- 9 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகச் செயற்பாடுகளில் இணைந்துகொண்டால் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலுக்குள் நுழைந்திருக்கும் பிள்ளையான் மற்றும் கருணாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு வடபகுதி மக்கள் அவரைத் தெரிவுசெய்தால் வடக்கில் முக்கிய பகுதி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறினார். “பிரபாகரன் அரசியலுக்கு வருவதை அரசாங்கம் தடுக்கவில்லை. அவர் ஆயுதங்களைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிடவேண்டும், அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் ம…
-
- 6 replies
- 1.8k views
-
-
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் அவர்களின் மகன் கிரி அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் எனவும் இவர் தென் பகுதியில் பலமுக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்ற தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக மகிந்தவினை சந்தித்த தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகிந்தவும் குறிப்பிட்டிருந்தார். அதாவது என்னை கனகரட்னம் அவர்களின் மகன் கொலை செய்ய திட்டமிட்டார் என கூறியிருந்தமை குறிபிடத்தக்கது. முன் நாள் வெளிவிவகார அமைச்சர் கொலையினையும் திட்டமிட்டதாக குற்றம் சாட்டபட்டுள்ளதுடன் மகிந்த, கோத்தபாய உட்பட பலரை கொல்லு திட்டம் இவரிடம் இருந்ததாக கூறப்படுகின்றது. திரு கிரி அவர்கள் கொழும்பில் தந்தையின் இருந்த வீட்டில் இருந்து தான் இந்த திட்டங்களை செயற்ப…
-
- 0 replies
- 1.8k views
-