ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142829 topics in this forum
-
மட்டக்களப்பு கிரானில் புலிகளின் தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் பலி, மூவர் காயம் கிரானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 4 பேர் பலி; 3 பேர் காயம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 04:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாவடி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சிறப்பு அதி…
-
- 0 replies
- 777 views
-
-
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2012 ஆம் ஆண்டில் 6 தசம் 7 சதவீதமென சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி குறைவானது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்த அதேவேளை, 2011 ஆம் ஆண்டு 8 தசம் 3 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கி 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை எதிர்பார்த்த போதிலும் 6 தசம் எட்டு சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி உயரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையின் பணவீக்கம் இந்த வருட இறுதியில் 10 தசம் ஒரு சதவீதத்தினால் அதிக…
-
- 0 replies
- 332 views
-
-
இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள். இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு! தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந…
-
- 53 replies
- 3.7k views
-
-
கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மந்திகை வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். அவர் வீசிங் நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு …
-
- 0 replies
- 602 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இளம் பெண் பொறியியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 859 views
-
-
வெளி நாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என மஹிந்த உத்தரவு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:51 இந்த மாதத்தின் அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்தையரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது (23 ஆம் திகதி ஆரம்பமாகிறது) பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளமையால் இவை தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்ளவும் அவற்றுக்கு வாக்களித்து நிறைவேற்றிக் கொள்ளவும் வசதியாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, திவிநெ…
-
- 0 replies
- 347 views
-
-
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரிசி வகைகளின் கிலோகிராம் ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா - ரூபாய் 90, கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 90, நாட்டரிசி - ரூபாய் 90, பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 85. நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்…
-
- 2 replies
- 432 views
-
-
அந்த ஊழலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளியே வரும்போது, நடிகையாக மாறிய அந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்றார். பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன். எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர். நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை. துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது. பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் கஷ்டப்பட்டு என…
-
-
- 14 replies
- 959 views
-
-
ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 995 views
-
-
சிறீலங்காவில் தொடரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக மிஸ்டுகால்-அம்னஸ்டி இன்டர்நேஷனல்! சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 00:30 ஐக்கிய நாடுகள் சபையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் நவம்பர் 1-ம் நாள் சிறீலங்கா நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் சிறீலங்கா தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் விரிவானதோர் ஆய்வு அறிக்கை தயாரித்திருக்கிறது.ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. சிறீலங்கா அரசின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் பற்றிய விரிவான ஆய்வு 2008ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ள…
-
- 0 replies
- 482 views
-
-
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் தேர்முட்டிக்குள் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் தேர்முட்டியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய மானிப்பாய் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் மூவர் காயங்கள் காரணமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ் போதனா வைத்த…
-
- 2 replies
- 2.2k views
-
-
திவிநெகும சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணாக இருப்பதாலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது - TNA 02 நவம்பர் 2012 திவிநெகும சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணாக இருப்பதாலேயே அதற்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மக்களைப் பாதிக்கின்ற, சமுர்த்திப் பயனாளிகளைப் பாதிக்கின்ற எந்தவொரு விடயத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாக இருக்க மாட்டாது. வழக்கைத் தாக்கல் செய்த என்னிடம் தேவையான விளக்கத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு அரச தரப்பு உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள். இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) கான்ஸர் எனப்படும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (12.06.2016) தினம் யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். இவருக்கும் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர்தான் கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் யு…
-
- 2 replies
- 547 views
-
-
G.C.E(O/L) பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் வெளியாகின்றது! கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாய…
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கையின் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் யுத்த மோதல்களின் போது படுகாயமடைந்து, உடலில் உலோகத் துண்டுகளான குண்டுச் சிதறல்ளுடன் வாழ்கின்ற மாணவர்களுக்கு விசேட வைத்திய வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. யுத்த மோதல்களில் சிக்கி படுகாயமடைந்த பலர் குண்டுச் சிதறல்கள் உடலில் பாய்ந்ததனால், உலோகத் துண்டுகளுடன் கடந்த மூன்று வருடங்களாகப் பெரும் அவஸ்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தத்தின் எச்சங்களான இவற்றை அகற்றுவதற்கு குறிப்பாக மாணவர்களுடைய உடலில் இருந்து அகற்றுவதற்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகக் கூடிய மாவட்ட ஒருங்கிணைப்புக்…
-
- 2 replies
- 550 views
-
-
மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்! 19 Dec, 2025 | 11:45 AM மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப…
-
- 0 replies
- 56 views
- 1 follower
-
-
கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே? பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்? இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இணையம் மூலம் பகிடிவதை முறைபாடுகளை தெரிவிக்கலாம் என உயர்கல்வி அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும், இந்த ஏற்பாடானது மாணவர்களை ஒடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை என இலங்கை மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பகிடிவதையானது முற்றாக நாட்டிலிருந்து அகற்றுவதற்காக இணையம் மூலமாக மாத்திரமின்றி விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் மிக நீண்ட காலமாக முன்னெடுத்து வரும் மாணவர் ஒடுக்குமுறையின் புதிய ஒரு ஆயுதமாக இப்பகிடிவதையை பயன்படுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கமானது தற்போது இந்…
-
- 0 replies
- 341 views
-
-
தலைவர் பிரபாகரன் உருவப் பொம்மையை எரித்த காங்கிரஸார் கடலூர்: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் கொடும்பாவியை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கோஷமிட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இலங்கை பிரச்சனை தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கடலூர் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினர். மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர். செயற்குழு கூட்டம் முடிந்ததை அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உருவ பொம்மையை …
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீனவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கடல்தொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என முல்லைத்தீவு கடல்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த 5ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் 153 படகுகளுடன் 80 தென்னிலங்கை மீனவர்கள், தொழில் செய்து வருகின்றனர். அத்துடன் கொக்குளாய் பகுதியில் 300 தென்னிலங்கை மீனவ…
-
- 0 replies
- 620 views
-
-
கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – பந்துல குணவர்த்தன by : Benitlas கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் இப்போதுள்ள நிலையில் நாட்டிற்கான இறக்குமதியை குறைத்தாக வேண்டும். இது குறித்து ஆரம்பத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ இறக்குமதியின் தடைகள் இல்லை. அத்துடன் கட்டுமானப்பணிகளுக்கான பொருட்…
-
- 2 replies
- 655 views
-
-
மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர் 08 Jan, 2026 | 04:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மதியிறுக்கம் (ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
எழுச்சி கொள்ளும் தமிழகமும் இந்திய மத்திய அரசும் - தாரகா - சமீப நாட்களாக தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுச் செயற்பாடுகள் முன்னர் எப்போதும் இல்லாதளவிற்கு அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மற்றும் அதற்கான அமைப்புக்கள் சார்ந்த வட்டத்திற்குள் மட்டுமே அதிகம் வெளிப்பட்ட ஈழ ஆதரவு நிலைப்பாடானது, தற்போது கம்யூனிஸ்ட் கட்சியே, ஈழத் தமிழ் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் அளவிற்கு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியம், திராவிட அரசியல் குறித்து விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அனைவரும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஓரணியில் திரள வேண்டிய அவசியப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. கட்சி ரீதியாக கம்யூனிஸ்ட்…
-
- 0 replies
- 939 views
-
-
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் ராஜதந்திரி ஒருவருக்கு பிரித்தானியாவில் தண்டனை 21 நவம்பர் 2012 இலங்கையைச்; சேர்ந்த முன்னாள் ராஜதந்திரி ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. போலந்துக்கான இலங்கை தூதுவரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டியுடர் குணவர்தனவிற்கு எதிராகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடற் பயிற்சி நிலையமொன்றில் கடமையாற்றிய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 77 வயதான டியுடர் குணவர்தனவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் டியுடருக்கு தண்டனை விதித்துள்ளது. 1000 பவுண்ட் அபராதமும், 1000 பவுண்ட் நட்டஈடும், சட்டச் செலவாக 1250 பவுண்ட்களையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட…
-
- 3 replies
- 804 views
-
-
ஐக்கியப்பட்ட நடவடிக்கையே தமிழகத்திலிருந்து எதிர்பார்ப்பு [02 நவம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:20 மு.ப இலங்கை] வீரியத்தை விட, காரியம்தான் முக்கியமானது. வேகத்தை விடவும் விவேகம்தான் முக்கிய மானது. எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும் பான்மையினரால் ஈவு, இரக்கமற்ற அடக்கு முறைக்கு ஆளாகியிருக்கின்ற சொற்ப எண்ணிக் கையினரான- சிறுபான்மையினரான-ஈழத் தமிழர்களுக்கும் அவர்க ளது தலைமைத்துவங்களுக்கும் ஆதரவு சக்திக ளுக்கும் இதுதான் பிரதான விடயமாகும். வேகம் காரணமாக விவேகத்தையோ, வீரியம் காரணமாக காரியத்தையோ கோட்டை விட்டுவிட லாகாது. ஈழத் தமிழ் மண்ணில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேரவலத்திலிருந்து அவர்களை விடுவிக்கும் முயற் சியில் இந்த விவேகச் செயற்பாடும் காரியத்தில் கண்ணும் அவசி…
-
- 0 replies
- 737 views
-