ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
[size=4]அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பதால் கிழக்கில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். அதைவிடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் அடிப்படை வாதம் தலைதூக்கி தனி முஸ்லிம் ராஜ்ஜியம் உருவாகும் ௭ன்று சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ௭ச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அக்கட்சியின் சரிந்த செல்வாக்கை மீண்டும் சரிசெய்து கொள்ள முடியும் ௭ன்றும் அவ் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு விஜேராமவிலுள்ள சௌசிரியபாய கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டி…
-
- 0 replies
- 332 views
-
-
வடமாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு March 12, 2020 வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு…
-
- 1 reply
- 517 views
-
-
ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு! எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (02) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார். இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.c…
-
- 0 replies
- 282 views
-
-
ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 11 ஆவது நினைவு தினம் இன்று: யாழ், அக்கரைப்பற்றில் நினைவு தின நிகழ்வுகள் ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கொல்லப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. தர்மரத்தினம் சிவராம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். மறுநாளான ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக்கு கட்டடத்துக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த நினைவு தினம் நாளை சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவிய…
-
- 0 replies
- 367 views
-
-
சிறீலங்காப் படையினரின் வடக்கு நோக்கிய யுத்த முன்னெடுப்புகள் ஆரம்பமாகவுள்ள பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தடைப்படலாம் என அரசியல் ஆய்வாளரான முன்னாள் இராணுவத் தளபதியுமான சுசந்த செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஏபி செய்திச் சேவை நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியதுபோன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் பின்வாங்கல், சிறீலங்காப் படையினரை கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சி நிரலாக அமையலாம். காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் த…
-
- 21 replies
- 5.1k views
-
-
23 Sep, 2025 | 02:26 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது ஆளும் கட்சி உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வியெழுப்புகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட சி…
-
- 1 reply
- 238 views
- 1 follower
-
-
புலிகளின் வானூர்தி தாக்குதல் தந்திரோபாயமானது: கோத்தாபய ராஜபக்ச [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தந்திரோபாயமானது என்பதுடன் உளவியல் ரீதியான தாக்குதலும் கூட என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் தங்குவார்களாக இருந்தால் அவர்களுக்கான சகல சலுகைகளையும், உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கின…
-
- 3 replies
- 1.9k views
-
-
அரசியல் கட்சியுமல்ல பொது ௭திர்க்கட்சியும் அல்ல - ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு பொன்சேகாவின் புதிய அமைப்பு! [Tuesday, 2012-10-02 11:22:44] நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும் 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச்செய்து 17 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தும் வகையிலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் வகையிலும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் பொது அமைப்பு ஒன்றை ௭திர்வரும் 18 ஆம் திகதி உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த பொது மேடையானது அரசியல் கட்சியுமல்ல. பொது ௭திர்க்கட்சியும் அல்ல. தேர்தல்களில் போட்டியிடும் ௭ண்ணமும் ௭மக்க…
-
- 0 replies
- 324 views
-
-
மனித உரிமைகள் செயல்திட்டமொன்றை வரைய அமைச்சரவை அனுமதி [ Thursday,12 May 2016, 03:08:20 ] தேசிய மனித உரிமைகள் செயல்திட்டமொன்றை வரைவதற்கு அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இந்த செயல்திட்ட வரைபு உருவாக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார். நாட்டு மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டும், பலப்படுத்தும் மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் அரசின் கொள்கைக்கு அமைவாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நல்ல…
-
- 0 replies
- 272 views
-
-
மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை …
-
- 2 replies
- 267 views
-
-
வன்னியில் நீண்ட காலத்துக்கு பாடசாலைகளைத் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். வன்னி மீது சீறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால்,வன்னியில் உள்ள பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை எற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். படை நடவடிக்கையால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/tamileelam/vann...2008-08-04.html
-
- 0 replies
- 559 views
-
-
சிங்கபூரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுக்குள்ளாd குறித்த இலங்கையர் மூவரும் 33,37 மற்றும் 44 வயதுடையவர்கள் என சிங்கபூர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/79120
-
- 0 replies
- 266 views
-
-
மட்டக்களப்பு கிரானில் புலிகளின் தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் பலி, மூவர் காயம் கிரானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 4 பேர் பலி; 3 பேர் காயம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 04:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாவடி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சிறப்பு அதி…
-
- 0 replies
- 782 views
-
-
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2012 ஆம் ஆண்டில் 6 தசம் 7 சதவீதமென சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி குறைவானது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் அண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்த அதேவேளை, 2011 ஆம் ஆண்டு 8 தசம் 3 சதவீதமாக அதிகரித்து சாதனை படைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கி 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினை எதிர்பார்த்த போதிலும் 6 தசம் எட்டு சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி உயரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையின் பணவீக்கம் இந்த வருட இறுதியில் 10 தசம் ஒரு சதவீதத்தினால் அதிக…
-
- 0 replies
- 347 views
-
-
இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள். இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு! தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந…
-
- 53 replies
- 3.7k views
-
-
கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மந்திகை வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். அவர் வீசிங் நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு …
-
- 0 replies
- 606 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இளம் பெண் பொறியியலாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 864 views
-
-
வெளி நாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என மஹிந்த உத்தரவு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 17, 2012 AT 09:51 இந்த மாதத்தின் அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்தையரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது (23 ஆம் திகதி ஆரம்பமாகிறது) பல சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளமையால் இவை தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்ளவும் அவற்றுக்கு வாக்களித்து நிறைவேற்றிக் கொள்ளவும் வசதியாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, திவிநெ…
-
- 0 replies
- 359 views
-
-
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரிசி வகைகளின் கிலோகிராம் ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா - ரூபாய் 90, கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 90, நாட்டரிசி - ரூபாய் 90, பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 85. நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்…
-
- 2 replies
- 437 views
-
-
அந்த ஊழலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளியே வரும்போது, நடிகையாக மாறிய அந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்றார். பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன். எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர். நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை. துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது. பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் கஷ்டப்பட்டு என…
-
-
- 14 replies
- 1.1k views
-
-
ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 999 views
-
-
சிறீலங்காவில் தொடரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக மிஸ்டுகால்-அம்னஸ்டி இன்டர்நேஷனல்! சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 00:30 ஐக்கிய நாடுகள் சபையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் நவம்பர் 1-ம் நாள் சிறீலங்கா நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் சிறீலங்கா தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் விரிவானதோர் ஆய்வு அறிக்கை தயாரித்திருக்கிறது.ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. சிறீலங்கா அரசின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் பற்றிய விரிவான ஆய்வு 2008ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ள…
-
- 0 replies
- 485 views
-
-
சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் தேர்முட்டிக்குள் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ஆம் திகதி சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் தேர்முட்டியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி ஆயுதங்களை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய மானிப்பாய் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் மூவர் காயங்கள் காரணமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ் போதனா வைத்த…
-
- 2 replies
- 2.2k views
-
-
திவிநெகும சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணாக இருப்பதாலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது - TNA 02 நவம்பர் 2012 திவிநெகும சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணாக இருப்பதாலேயே அதற்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மக்களைப் பாதிக்கின்ற, சமுர்த்திப் பயனாளிகளைப் பாதிக்கின்ற எந்தவொரு விடயத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாக இருக்க மாட்டாது. வழக்கைத் தாக்கல் செய்த என்னிடம் தேவையான விளக்கத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு அரச தரப்பு உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள். இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) கான்ஸர் எனப்படும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (12.06.2016) தினம் யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார். இவருக்கும் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர்தான் கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் யு…
-
- 2 replies
- 552 views
-