ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன் November 21, 2020 இலட்சியத்திற்காக பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “விடுதலைப் புலிகளில் இருந்து மரணித்த வீர மறவர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர் வரும் 27 ஆம் திகதி இடம் பெற இரு…
-
- 0 replies
- 399 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த கடலூர் ஆனந்த்தின் உடலம் அவரின் சொந்த ஊரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
நோர்தேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்த உத்தரவு யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமான நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தேன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட …
-
- 0 replies
- 198 views
-
-
இடைநடுவில் நீதிமன்ற உத்தரவை கையளித்ததால் கிழித்தெறிந்தோம் பிரச்சினைக்கு பொலிஸாரே காரணம் என்கிறார் ஞானசாரதேரர் (க.கமலநாதன்) மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் போதி பூஜை நடத்துவதற்காக நாம் அங்கு சென்றபோது தமிழ், முஸ்லிம் குழுக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் எம்மை இடை நடுவில் தடுத்ததுடன் நீதிமன்ற தடையுத்தரவையும் கையளித்தனர். இடைநடுவில் இந்த உத்தரவினை கையளித்தமையினால் தான் அதனை நாம் கிழித்தெறிந்தோம் என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலிருந்து சிங்கள,தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றபோது நாம் அவர்களை இடைநடுவில் தடுத…
-
- 0 replies
- 255 views
-
-
நோர்வே அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் பாரிய துரோகத்தை தொடர்ந்தும் இழைத்து வருகிறது. எனவே, நோர்வே அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக ரத்துச் செய்வதுடன் இலங்கையில் நோர்வேயின் செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையினர் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான கே.பி. எனப்படும் குமார் பத்மநாதனுடன் தொலைபேசியில் உரையாடியமை இலங்கைக்கு எதிரான செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு பத்தமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே விமல் வீரவன்ச மேற்கண…
-
- 0 replies
- 450 views
-
-
மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்தநிலையில் சாவகச்சேரி முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினர். புதுகுடியிருப்பு வல்லிபுனம் பகுதியை சேர்ந்த பி…
-
- 6 replies
- 792 views
-
-
இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் தொடர்பில் சிவமோகன் எம்.பி-அமைச்சர் பொன்சேகா சொற்போர் வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்கும், முன்னாள் இரா ணுவத் தளபதியும், தற்போது அமைச்சராக இருக்கின்ற பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவு க்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நாடாளு மன்ற சிவமோகனின் கோரிக்கையையும் நிராகரித்த அமைச்சர் சரத் பொன்சேகா, வடக்கி லிருந்து இராணுவத்தை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறினார். அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட…
-
- 0 replies
- 280 views
-
-
உரிமை கோரப்படாத உடல்களை... உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை! கொரோனா தொற்றினால் மரணித்து உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட் 19 நோயினால் மரணித்து உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சுமார் 19 சடலங்கள் நாட்டின் பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அ…
-
- 0 replies
- 402 views
-
-
அண்மையில் சிறி லங்கா கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுளில் உயிரிழந்த பொது மக்களின் விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் உடனடியாக தந்து உதவுங்கள்.நன்றி.
-
- 0 replies
- 636 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஈழத் தமிழர்கள் மீதான கொடிய போரை அனைத்துலக சமூகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கவிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
மாணவச்செல்வங்களே தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒருவரை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமையில் நான் சொல்கிறேன். அவருடைய தோட்டத்தில் அவருடைய நிலத்தில் அவர் அமைத்த பாசறையில்தான் நம் நெஞ்சால் பூஜிக்கின்ற பிரபாகரன் தன் படைத்தரிப்பை கொண்டுவந்து பயிற்சிக்கொடுத்தார். பொன்னம்மான் பயிற்சி பெற்றார். புலேந்திரன் குமரப்பா பயிற்சிபெற்றார்கள். கிட்டு வந்துவிட்டுப்போனார். எல்லோரும் பயிற்சிபெற்றது அந்த புலியூரிலே அந்த மண்ணில் அவருடைய இடத்தில் நிலத்தில் பாசறைகள் அமைத்துத்தந்ததன் விளைவாக கருஞ்சட்டைப்பட்டையினுடைய உறுதி வாய்ந்த போர்க்கலமாக 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலே வாடியவராக கர்நாடக சிறையிலே வாடியவராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத... நானாவது தேர்தல் களத்திற்கு செல்லுபவன். …
-
- 1 reply
- 613 views
-
-
'புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும்' - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய 20 ஏப்ரல் 2013 "கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா - தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்" மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு - மனித உரிமை கலாசாரத்தை நோக்கி இவர்கள் முணுமுணுக்க இடம் கொடுக்காமல் கூட புதைக்கப்பட்டிருக்கலாம். அது மிகப்பெரிய கொலைக்களமாக இருந்திருக்கும். தற்போது அவர்கள் 25 வருடங்களுக்கு பின்னர், மண்ணுக்குள் இருந்து வெளியில் வந்துள்ளனர். அவர்கள் சரியாக விடயங்களை வெளிப்படுத்தும் தருணத்தில் வந்துள்ளனர். அடையாளங்கள் இல்லாது காணாமல் போனதாக இவர்கள் வரலாற்றில் அழிந்து போய்விடுவார்கள் கொலையாளிகள் சிந்தித்திருக்க கூடிய ஜே.வி.பியி…
-
- 0 replies
- 465 views
-
-
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஓர் பயங்கரவாதத் தலைவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதிகளையும், குற்றவாளிகளையும் அரசாங்கம் தம் பக்கம் இணைத்துக் கொண்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான குற்றச் சாட்…
-
- 1 reply
- 546 views
-
-
ஒரு போர்க்குற்றவாளி என கோட்டபாய நிரூப்பித்துவிட்டார் – அனந்தி சசிதரன் 57 Views தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோட்டாபய ராஜபக்ஷ கூறியமை தொடர்பில், வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன், தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு தனது கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில், “எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் – இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது. உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் மரண சான்றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வை…
-
- 1 reply
- 633 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இலங்கை அரசுக்கு ராஜதந்திர ரீதியில் கொடுக்க வேண்டிய அழுத்தங்களை இப்போதுதான் இந்திய அரசு கொடுக்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறோம். ஆனால் இலங்கை அரசு இத்தகைய அழுத்தங்களுக்கு செவிமடுப்பதாக தெரி யவில்லை. எனவே இலங்கை அரசுக்கு நன்றாக விளங்கக் கூடிய வகையில் அழுத்தங்களை கொடுக்கும் பாணியை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறோம். இலங்கை அரசு செவிசாய்க்காவிட்டால் இந்திய அரசு அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக் கையை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். டில்லி சென்று இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்…
-
- 4 replies
- 998 views
-
-
ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் ‐ பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் ‐ உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் க…
-
- 0 replies
- 879 views
-
-
ஜி.எஸ்.பி சலுகை அடுத்தவாரம் கிடைக்கும்: ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189271/ஜ-எஸ-ப-சல-க-அட-த-தவ-ரம-க-ட-க-க-ம-ஜன-த-பத-#sthash.32tMAxBn.dpuf
-
- 1 reply
- 310 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமாதம் 26 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயிருந்தார். கடந்த 11 ஆம்திகதி வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர்வெளியே அழைத்துச் செல்லப்பட்டபொழுது வைத்தியசாலை வாசலில் வெள்ளை வானில் நின்றவர்களால் இவர் கடத்திச்செல்லப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. அதன்பின் 11 நாட்களுக்குப் பின்னர் கண்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜா-எலவில் மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த 28 வயதான முருகதாஸ் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போய் அடி காயங்களுடன் மீட்கப்பட்டவரா…
-
- 0 replies
- 1k views
-
-
பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார். 2014ஆம் ஆண்டு கண்டக்கெட்டிய பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரின் கொலை வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/131089?ref=home
-
- 2 replies
- 426 views
-
-
புனானையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ! 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி By கிருசாயிதன் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று (29) காலை 6.30 மணிக்கு புனானைப் பிரதேசத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பேருந்…
-
- 0 replies
- 454 views
-
-
துரோகக் குற்றச்சாற்றும் பழியும் மறுக்க முடியாத உண்மையாகிவிடும் என்பதால் கருணாநிதி திடீரென்று அண்ணா சதுக்கத்தில் உண்ணாவிரதம் எனும் மோசடி நாடகத்தை நடத்தியுள்ளார் என்று குற்றம்சாற்றியுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, கல்லறைக்குள் இருக்கும் அறிஞர் அண்ணா கருணாநிதியின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஊஐகஉ இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் எச்சரித்ததாலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டித்ததாலும் கிழக்கு தைமூரிலும் கொசோவாவிலும் தலையிட்டதைப்போல இலங்கையிலும் சர்வதேச நாடு…
-
- 0 replies
- 959 views
-
-
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்க…
-
- 0 replies
- 201 views
-
-
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தனி ஈழம் அமைப்பதே தங்கள் கூட்டணியின் முதல் வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஈழத்தமிழர் பிரச்சனையில கருணாநிதியும், சிதம்பரமும் பேசி வைத்துக் கொண்டு நாடகம் நடத்தியுள்ளனர். இலங்கை பிரச்சனையில் கருணாநிதி மனித சங்கிலி உள்பட அவராக எதுவும் செய்யவில்லை. எல்லாம் நான் சொல்லி செய்ததுதான். இலங்கையில் போரை நிறுத்த போனை எடுத்து கருணாநிதி சோனியாவிடம் பேசினாலே போதும். போரை நிறுத்தவிட்டால் கூட்டணியை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருக்கலாமே, இப்போதும் சொல்லலாமே, இப்போது போர் நின்று விட்டது…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர…
-
- 6 replies
- 796 views
-