ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
யாழில்... சிகிச்சை நிலையத்துக்கு செல்ல, மறுப்பு தெரிவித்து... எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வைரஸ் தொற்றாளர்கள் யாழ்ப்பாணம்- சுன்னாகம், மயிலங்காடு பகுதியிலுள்ள 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை நிலையத்துக்கு செல்ல முடியாது என அவர்கள் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர்களுக்கு, இவ்விடயத்தில் சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியபோதும் அதனை ஏற்காது அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பினை இராணுவத்தினரிடம் சுகாதார துறையினர் வழங்கியுள்ளனர். சுன்னாகம்- மயிலங்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை…
-
- 1 reply
- 303 views
-
-
செய்தியாளர் கயல்விழி 13/07/2009, 15:40 அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 73 பேர் கைது அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 73 பேர் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் அதிகம் உள்ளடங்கியுள்ள இந்த மக்கள், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர முற்பட்ட போதிலும், அங்கு செல்ல முன்னரே கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள் எனவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 360 views
-
-
வன்னியில் சிங்கள ராணுவம், மற்றும் மஹிந்த அரசு, அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் விதி முறைகளை மீறி பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவகின்றனர். தேர்தல் விதி முறைகளை கடைப்பிடித்து பிரச்சாரம் செய்தால் ஒரு டசின் மக்கள் கூட அரச ஆதரவு பிரச்சார கூட்டங்களுக்கு வரமாட்டார்கள். ஆகவே பாடசாலை நிகழ்ச்சிகள், நிவாரணம் வழங்குதல் போன்ற நிகழ்வுகளை பிரச்சார களமாக மாற்றுகின்றனர் அரச தரப்பினர். கண்டாவளை புளியம்பொக்கணையில் சமூர்த்தி வங்கிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கரங்களைப் பலப்படுத்துங்கள் என்று குரல்கள் எழுப்பியுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தமிழ் விழா என்ற பெயரில் மேற்படி …
-
- 2 replies
- 485 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 20/07/2009, 01:29 ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும் - சீமான் இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க, இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் வலியுறுத்தியுள்ளார். "நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிம்போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே முகாம்களில் சிறீலங்கா அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டம் தெரிவித்தார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு மக்களிற்கு, அரசு போதிய கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக…
-
- 19 replies
- 1.3k views
-
-
அறிமுகமாகிறது இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் வசதி..! இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அன…
-
- 0 replies
- 261 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குகான சாத்தியங்கள் ஏதும் இல்லை என்று சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த ஈழ ஆதரவு நிகழ்வொன்றில் இலங்கை பல்லைக்கழகங்களை சேர்ந்த நான்கு விரிவுரையாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், லண்டனில் நடைபெற்ற ஈழ ஆதரவு நிகழ்வில் இலங்கை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரியவந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 04 விரிவுரையாளர்களே இந்த மாதம் லண்டன் சென்றுள்ளனர்.…
-
- 1 reply
- 293 views
-
-
சீன நிறுவனத்தின், கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்! கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமை…
-
- 0 replies
- 543 views
-
-
சிறிலங்காவில் மேலும் இரண்டு பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்நாள் உறுதி செய்யப்பட்ட இந்த இரண்டு பேருடன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாகக் கண்டறியப்பட்ட இருவரும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் தொடர்பான முதல் அறிக்கை ஜூன் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. அவுஸ்திரேலியரான 8 வயது சிறுவன் ஒருவனே கண்டறியப்பட்ட முதல் நோயாளி. அவனது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவருக்கும் நோய்த் தொற்று இருப்பது பின்னர் கண்டறியப்பட்டது…
-
- 0 replies
- 359 views
-
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாமில் பயிற்சி – சரத் வீரசேகர இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். இராணுவ முகாம்களில் குறித்த தலைமைப் பயிற்சி வழங்கப்படும் என்றும் இது போன்ற பயிற்சிக்கு சிறந்த இடம் அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமைப் பயிற்சி என்பது இளைஞர்களை இராணுவதிற்குள் இணைக்கும் முயற்சி அல்ல என்றும் அது நாட்டில் சிறந்த ஒழுக்கம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2021/1229107
-
- 3 replies
- 330 views
-
-
வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து புலிகளின் விமான தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சியினைப் பெற்ற நிபுணர் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் விமானப்படையைச் சேர்ந்த இவர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்நபர் ரேடர், தகவல் பரிமாற்றம் ஆகியன பற்றி இரண்டு வருட பயிற்சியினை வெளிநாடொன்றில் முடித்துள்ளதாகவும், இவை பிரபாகரனின் ஆலோசனையில் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய விமான ஒடுத்தளங்களில் இருந்து புறப்படும் தாக்குதல் ஜெட் வி…
-
- 1 reply
- 1.5k views
-
-
‘மஹிந்தவின் பாதுகாப்பில் தலையீடு இல்லை’ -கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…
-
- 0 replies
- 197 views
-
-
அமெரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் யாப்பா பதிலடி எவரது அழுத்தம் கருத்தியும் முகாம் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த மாட்டோம். சுதந்திர நடமாட்ட அனுமதியையு எவரது அழுத்தம் காரணமாகவும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்க ளில் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக மீளக் குடியேற்றிவிட முடியாது. அந்த மக் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண் டியது அரசின் பொறுப்பாகும். நிவாரணக் கிராமத்தில்... தொடர்ந்து வாசிக்க.. http://www.uthayan.com/Welcome/full.php?id...hayan1251027279 நன்றி - உதயன் இணையம்
-
- 0 replies
- 515 views
-
-
மட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாக குறித்த பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாலயத்தில், வருடாந்தம் பிரதேச மக்களால் திருவிழா மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் அதிகாரிகளால், தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில் யுத்த காலத்தின் பின்னர் பௌத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு, வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், அங்கு முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு, ஆலய நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் தரவையிலுள்…
-
- 2 replies
- 708 views
-
-
வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார். வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு …
-
- 8 replies
- 721 views
-
-
நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி 07 செப்டம்பர் 2013 நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். குறுந்தகவல்கள், வீதிப் போராட்டங்கள், இளைஞர்களை திசை திருப்பி மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரேபிய நாடுகளில் கிளர்ச்சி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கிளர்ச்சிகள் காரணமாக சில மத்திய கிழக்கு அரசாங்கங்கள் ஆட்சி கவிழ்க்கப…
-
- 2 replies
- 519 views
-
-
Published by Gayathri on 2021-08-13 16:29:23 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி கிண்ணியாவில் இன்று( 13) ஜும்ஆ தொழுகை பின் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இக் கையெழுத்தினை அகில இலங்கை மக்கள் காங்ரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தியினால் முன்னெ டுக்கப்பட்டன. நாடு முழுவதும் சுமார் ஒரு இலட்சம் கையெழுத்தினை மக்களிடமிருந்து பெற்று பாராளுமன்ற உப்பினர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அனுப்பும் நோக்கில் இன்று கிண்ணியாவிலும் கையெழுத்து பெறப்பட்டது. …
-
- 7 replies
- 489 views
-
-
சிறிலங்காவுடன் தனது அணுவாயுத தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தூரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தூரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தெ…
-
- 0 replies
- 580 views
-
-
பிரிவினைவாதத்தை தூண்டும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என விமல் தமிழர்களிடம் கோரிக்கை 12 செப்டம்பர் 2013 பிரிவினைவாதத்தை தூண்டும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என, அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் வாக்காளர்களிடம் கோரியுள்ளார். இனவாத கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தேசியக் கொடியில் சிங்கத்திற்கு பதிலாக புலியை பொறிக்க வேண்டுமென கோரியதாகவும் அவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்…
-
- 2 replies
- 403 views
-
-
தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: [Tuesday 2015-05-26 07:00] இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிர…
-
- 0 replies
- 413 views
-
-
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார். திடீரென சுகயீனமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே காலமானார். தமிழ் அரசியல் கைகளின் வழக்குகள் உள்ளிட்ட இலங்கையில் பிரபல்யமான இருந்த பல வழக்குகளில் ஆஜராகி, தனது வாதத்திறமையால் நியாயத்தை பெற்றுக்கொடுத்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா என்பது குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்
-
- 5 replies
- 670 views
-
-
தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் பிணையில் விடுதலை தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் காலம்சென்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் இன்று கொழும்பு நீதிமன்றத்தால் 2.5 மில்லியன் சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் கடும்சமர் நடைபெற்ற வேளையில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். சரணடைந்திருந்த இவர்கள் மீது சிறிலங்கா அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தொடுத்திருந்தது. இருப்பினும் இருவரின் உடல்நலம் மற்றும் அகவையைக் கருத்தில் கொண்டு 2.5 மில்லியன் சொந்தப் பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் இவர்கள் இருவரையும் அனுமதித்துள்ளது.
-
- 0 replies
- 1k views
-
-
அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி சாரதியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்னாயக்க மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அநுராதபுரம் விலச்சியைச்சேர்ந்த நிர்மல பியதிஸ்ஸ (வயது 49) என்ற கான்டபிளுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதிஇந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/82805-2013-09-17-11-02-49.html
-
- 0 replies
- 388 views
-
-
பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தன ( படங்கள் இணைப்பு ) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானிய அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் பி.என்.எஸ். சுல்பிகார் கடற்படை கப்பல் மூலம் நேற்று இலங்கை வந்தடைந்தன. பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர் சர்ப்ராஸ் அஹமட் கான் சிப்ரா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இந்த பொருட்களை கையளித்தார். இதன்பொழுது கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர், கடினமான தருணத்திலே பாகிஸ்தானிய அரசாங்கமும் அதன் மக்களும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு ஒருபோதும்…
-
- 2 replies
- 575 views
-
-
பொதுபலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்தே தீருவோம் : பொலிஸ் மா அதிபர் பூஜித பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ள நிலையில் குற்றமிழைத்த எவரையும் தப்பிக்க விடப் போவதில்லை, ஞானசாரரின் கைது உறுதியானது எனவும் நீதிமன்ற உத்தரவுகள், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்பு நடவடிக்கையாக அது இடம்பெறும் என்றும் பொலிஸ் …
-
- 1 reply
- 426 views
-