Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்ரேலியாவுக்கு கடந்த வருடம் 254 இலங்கையரை சட்டவிரோதமாக அழைத்து செல்லமுயன்ற கப்டன் பிராம் என்று அறியப்படும் ஏபிரகாம் லவுகேன பெஸ்லி என்பவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 25 மில்லியன் ரூபியாவை தண்டப்பணமாக அபராதம் விதித்துள்ளது கப்பல் பயண சட்டத்தை மீறியதாக 18 மாதங்களை நன்நடத்தை காலமாகவும் அறிவித்துள்ளது. ஜாயா லெஸ்ரறி என்ற கப்பலுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் பணியாளர்களை நியமித்த குற்றச்சாட்டும் இவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது; இந்தோனேசியத் தீவான பாட்டமிலிருந்து 254 தமிழர்களை அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கப்பலில் கொண்டு செல்ல முற்பட்டபோது இந்தோனேசிய கடற்படையால் கப்பல் பிடிபட்டது;இவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாள 1500 க்குமேற்பட்ட புகலிடம் கோருவோரை அவுஸ்ரேலியாவுக்கு …

  2. (சிவா ஸ்ரீதரராவ்) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவுக்கு மிகப்பெரிய சேவை செய்த வேவலதெனிய மஹிந்தோதய விகாரைக்கு சொந்தமான ராஜா யானை இறக்கும் போது அதற்கு வயது 55 ஆகும். இது குறித்து மேற்படி விகாரையின் நிர்வாக குழு தலைவரான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த ராஜா யானை தென் மாகாணத்தின் அகுனுகொலபெலஸ் பிரதேசத்தில் பிடிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு அப்போதைய உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சராக இருந்த பீ.பீ.ஜீ.களுகல்லவின் ஊடாக வேவலதெனிய விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி ராஜா…

    • 10 replies
    • 726 views
  3. இராயப்பு யோசப் ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்த சம்பந்தன் ஐயா மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரான இராயப்பு யோசப் ஆண்டகை கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் ஓய்வுநிலையில் இருந்து வருகின்றார். இன்று பிற்பகல் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.vir…

  4. புதிய அமைச்சரவை.. அடுத்த வாரம், பதவியேற்கும் – ஆளும்தரப்பு அறிவிப்பு ! புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275765

  5. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தி திறன் விருத்தி அமைச்சருமான பசீர் சேகுதாவூதின் மகளின் திருமண விருந்துபசார வைபவம் இன்று மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஈஸ்ட் லகூன் ஹோட்டலிலுள்ள நினைவுப் பதிவேட்டில் ஜனாதிபதி கையொப்பமிட்டார். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்) http://tamil.dailymirror.lk/--main/100338-2014-02-16-10-54-01.html

  6. ஜனாதிபதி... பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தி பாதயாத்திரை! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1276511

  7. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரனுடன் ஒரு சந்திப்பு… டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம். தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மூத்தவர் வேலுப்பிள்ளை மனோகரனாகும். தனது தம்பி ஓர் இனத்தின் தேசியத் தலைவராகவும், சகல அதிகாரங்களுடனும் வாழ்ந்தால் அண்ணனாக இருப்பவர் எத்தகைய அதிகாரமுடையவராக இருப்பார் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ராஜபக்ஷ அதிபராக இருக்க அவருடைய சகோதரரும் மகனும் அரசியலில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிக் கொண்டு அவர்களோடு வேலுப்பிள்ளை மன…

  8. சஜித் பிரேமதாச கூறியது... அப்பட்டமான பொய்- சபாநாயகர் கடும் சாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பட்டமான பொய் கூறியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்ததாக சஜித் பிரேமதாச கூறியிருந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்கூறியிருந்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நிலையில் தான் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியது அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ள சபாநாயகர். அவரின் கருத்து முற்றாக நிராகரித்துள்ளார். இ…

  9. சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு [ புதன்கிழமை, 21 ஏப்ரல் 2010, 10:08 GMT புதினப்பலககை] [ கி.வேணி ] சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செ…

  10. ரம்புக்கனை... துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த, CIDஇன் அறிக்கை.. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பு! ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். இதேவேளை, போராட்டங்களின்போது தனிநபர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக பொலிஸாருக்கு புதிய பரிந்துரைகளை வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட …

  11. தேசிய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும், போராளிகளுக்கு உறுதுணையாக நின்ற மக்களும் தமிழீழத்தில் வேலை வாய்ப்புக்கள் இன்று பட்டினியால் வாடும் நிலையில் இலண்டனில் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசு என்ற குழுவினரால் குத்தாட்ட நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்தக் குத்தாட்ட நிகழ்வில் நாடுகடந்த கும்பலின் இலண்டன் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சம்பேய்ன், உவைன் போன்ற மதுபானங்களை அருந்தித் திழைத்தும், நடனமாடியும் குத்தாட்டத்தை மேற்கொண்டதை உறுதிசெய்யும் நிழற்படங்கள் வெளிவந்துள்ளன. நாடுகடந்த அரசு என்ற கும்பலின் தாயக அபிவிருத்தி அமைச்சராக விளங்கும் பாலாம்பிகை முருகதாஸ் என்பவரும், அவரது அமைச்சுச் செயலாளரான தாம…

  12. மே தின, பேரணிகளை... அண்மித்து இருக்கும், மதுபானக் கடைகளை... மூடுமாறு உத்தரவு மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மதுபானக் கடைகளை மூடுமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2022/1279349

  13. விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம் மேலும் படிக்க http://www.sankathi.com/uploads/images/news/2010/05/03/Arikkai-17-05-2010.pdf நன்றி - சங்கதி

    • 7 replies
    • 1.3k views
  14. ‘மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியிலுள்ளது’ “யுத்தம் மௌனித்த பிற்பாடு, பலவிதமான கருத்துகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு மந்தகதியில் இருக்கின்றது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக மக்கள் பலரையும் நாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது” என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். “இவைகளில் இருந்து விடுபட்டு எமது மக்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனநாயகப்போராளிகள் கட்சியால் “திலீபனின் வழியில் நாங்கள்” என்ற இறுவட்டு வெளியீடு, திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அங்கு…

  15. வெறுப்பைப் பரப்புவதிலும், வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்ட... அனைவரையும், சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – நாமல் இலங்கை முன்னோக்கி செல்வதற்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வெறுப்பைப் பரப்புவதிலும் வன்முறையைத் தூண்டுவதிலும் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், அதே நேரத்தில் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியுள்ளார். https://athavannews.com/2022/1281621

    • 1 reply
    • 281 views
  16. தமிழர்குரல் என்ற நாமம் தரித்து செய்கோள் ஊடாக ஐரோப்பிய மத்தியகிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு உங்களுடன் உறவாட நாம் வருகின்றோம். கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் நாம் யுரோபேர்ட் 9 ஒலித்த போதும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பல தடைகளை தாண்டி ஒருவாறு கொர்ட்பேர்ட் 13 ஊடாக ஒலிக்க வருகின்றோம். தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்புக்களை வழங்கி எமது உரிமைக்குரலை சிற்றலையுடாக தாயகத்துக்கு எடுத்து செல்ல வளம் உள்ள உள்ளங்கள் தங்களின் விளம்பரங்களை தமிழர்களின்குரல் வானொலிக்கு தந்துதவி எமது தேசியக்குரலை சிற்றலையுடாக எடுத்து செல்ல உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றோம். யூன் மாதம் முதலாம் திகதி காலை 9மணிக்கு உங்களை அனைவரையும் சந்திக்கும…

  17. ஜெனிவா தீர்மானம்: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தினார் டேவிட் கமரூன்! [saturday, 2014-03-22 16:54:49] இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் – மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானத்திற்கு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினதும் ஆதரவைத் தாம் உறுதி செய்திருப்பதாகப் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியப் பேரவையில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புக்களைத் தொடர்ந்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைத்திருக்கும் டேவிட் கமரூன், கடந்த காலங்களில் நிகழ்ந்தேறிய சம்பவங்களுக்கு சரியான தீர்வை எட்டும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என…

  18. வவுனியாவில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்பு வவுனியா, கல்நட்டன்குளம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாப் பகுதி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கயை குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜீ வகையை சேர்ந்த சுமார் 500 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை விடுதலைப்புலிகளினால் யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை…

  19. பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான... மக்கள் பேரணி திருகோணமலையில், ஆரம்பம்! இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலையை வந்தடைந்தது. அதனைந்தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த குறித்த பேரணி திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குறித்த பேரணி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகி நிலாவெளி,குச்சவெளி, புல்மோட்டை ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து அங்கிருந்து வவுனியா ஊடாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. அத்துடன் போரணியின் ஆரம்பத…

  20. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் நவநீதம்பிள்ளைக்கு விசாரணை நடத்த அதிகாரமில்லையாம்! – கோமின் தயாசிறி கூறுகிறார். [Friday, 2014-03-28 08:26:42] ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு விசாரணை நடாத்தும் அதிகாரம் கிடையாது என சிரேஸ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், விசாரணை நடத்தும் அதிகாரம் கிடையாது. நவனீதம்பிள்ளைக்கு இல்லாத அதிகாரமொன்றை அமெரிக்கா இந்த தீர்மானத்தின் ஊடாக வழங்க முயற்சித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங் கிடையாது.எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் குறுகிய நோக்கத்திற்காக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்…

  21. மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் கைது மு.இராமச்சந்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சிநிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கடந்த 26ஆம் திகதி, ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்ஙிரஸின் ஆதரவளர்கள் …

  22. யாழ்ப்பாணம் நூலகம் சிங்களவரால் எரிக்கப்பட்டதற்கு தாம் தமிழர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஜாதிக ஹெல உறுமைய கட்சியினை சேர்ந்தவரும் அரசாங்க அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். யாழ் மக்களிடம் இன்று காலை தனது மன்னிப்பொனை அரசாங்கம் சார்பாகவும் சிங்கள மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் யாழ் நூலகத்திற்கு சில புத்தகக்ங்களையும் அன்பளிப்பு செய்துள்ளாராம் ஈழநாதம்

    • 1 reply
    • 1.5k views
  23. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவுமென ஏற்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுத் திட்டங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு உதவும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கென அமெரிக்க அரசாங்கம் இந்த வருடம் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க எதிர்பார்த்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் பாடசாலையை விட்டு விலக நேரிடும் சிறுவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறும் சிறுவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வலுவூட்டு…

    • 4 replies
    • 599 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று இன்று தென்னாபிரிக்கா பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவே இன்று தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. இந்தக் குழுவினர், பிரிட்டோரியாவிலும், கேப்டவுனிலும் அடுத்த நான்கு நாட்கள் தங்கியிருந்து தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர். குறிப்பாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாள தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரதிநிதி, சிறிஸ் ரமபோசாவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர். இதற்கிடையே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் இடம்…

  25. கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.! (படங்கள் இணைப்பு) வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு பொருட்கள், மீள்நிரப்பு அட்டை மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் கல்மடு வீதியின் ஊடாக தப்பித்துச்சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற முச்சக்கரவண்டியினை அதிகாலை 2.00 மணியளவில் கல்மடு கட்டடையர்குளத்தில் ரோந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.