ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி "கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது: "மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன. ந…
-
- 10 replies
- 1.7k views
-
-
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இலங்கை விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்! கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர். இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா] 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: கேள்…
-
- 5 replies
- 1.7k views
-
-
இராணுவப்புரட்சியை மகிந்த ராஜபக்சே மேற்கொண்டால் அவருக்கு நன்கு பாடம் புகட்டப்படும்: சரத் பொன்சேகா சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா தோல்வியடைந்த பின்னர் இராணுவத்தின் மூலம் பதவியை கைப்பற்ற முனைந்தால் அவருக்கு நல்ல பாடம் புகட்டப்படும் என நேற்று (23.01.2010) கொழும்பில் உள்ள ஹில்ட்டன் ஆடம்பர விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இம் மாநாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, ஜே.வி.பி தலைவர் சோமவன்சா அமரசிங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், திரு எஸ். சதாசிவம் உட்பட பெருமளவான அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜெனரல் பொன்சேகா அளித்த ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
பயங்கரவாதிகள் பட்டியலில் மருத்துவர் சிவசங்கர்!? மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் கொழும்புத் தாய்ச் சங்கம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக் கோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ். கிளைத் தலைவர் மருத்துவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். அநுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மர…
-
- 21 replies
- 1.7k views
-
-
திங்கள் 02-04-2007 21:50 மணி தமிழீழம் [முகிலன்] மகிந்த ராஜபக்ச மணிசங்கர் ஜயர் பஞ்சாயத்து முறைமை தொடர்பில் கலந்துரையாடல் இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணிசங்கர் ஜயரை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று புதுடெல்லியில் அமைந்துள்ள மயூரா சராட்டன் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மணிசங்கர் ஜயரின் பஞ்சாயத்து முறைமை கொண்ட அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆலோசனையைப் பெறுமுகமாகவே இச்சந்திப்பு இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பதிவு
-
- 9 replies
- 1.7k views
-
-
சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும…
-
- 3 replies
- 1.7k views
-
-
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-01 09:48:08| யாழ்ப்பாணம்] ‘இருட்டினில் வாழும் உயிர்களுக்கு அந்த இறைவன்தானே கைவிளக்கு. விடிந்த பின்னால் அந்த விளக்கெதற்கு? எல்லாம் முடிந்த பின்னால் அவன் அருள் எதற்கு?’ இது சினிமாப் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் மிகவும் அற்புதமானது. பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள இழப்பின் துயரம் இறைவனைப் பார்த்து நொந்து கொள்கிறது. இந்த நிலையில்தான் தமிழ் மக்களாகிய நாங்களும் இருக்கின்றோம். நம்பியிருந்தவர்கள் போரில் தோற்றுப் போனார்கள். நாம் நம்பியவர்கள் யாரை நம்பினார்களோ அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள். இப்போது யாருமற்றவர்கள் நாங்கள். எங்கள் மனங்களில் புதையுண்ட சோகங்கள், துன்பங்கள் …
-
- 0 replies
- 1.7k views
-
-
சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் வாய்த்தர்க்கம் நல்லிணக்க ஆணைக்குழு முடிவுகளை தாம் நிறைவேற்றி வருவதாக சிங்கள பிரதிநிதி மகிந்த சமரசிங்க கூறிய பொழுது தமிழர் தரப்பினர் குறுக்கிட்டு நீங்கள் எதையுமே என்றுமே நிறைவேற்றியதில்லை எனக்கூறினார்கள். இன்று ஜெனீவாவில் வெளிப்படியான சுயாதீன விவாத நிகழ்வில் சிங்கள ஆட்சியாளர்களும் தமிழர் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் வாய்த்தர்க்கம் செய்துகொண்டனர். - முப்பது வருட யுத்தத்தின் பின்னர் புலம்பெயர் தமிழர்களுடன் ஈடுபடவந்துள்ளோம் - மகிந்த சமரசிங்க - அமெரிக்கா சிங்களம் மீது ஒரு பிரேரணனையை கொண்டுவருவதில் எந்த நியாயமும் இல்லை - சிங்கள குழு - சிங்கள அரசை சேர்ந்த ஒருவர் தம்மை புகைப்படம் எடுத்ததாக தமிழர் தரப…
-
- 1 reply
- 1.7k views
-
-
Invitation for a discussion with Professor Tissa Vitarana - Minister of Science and Technology & Chainman of All Party Representative Committee (APRC). You are invited for a discussion with Professor Tissa Vitarana regarding the recent political development in Sri Lanka and the current state of the APRC. Please note we intend to give more time for discussion rather than a speech. Date : Sunday 18th October 09 Time : 3.30 PM - 6.30 PM Venue Star Lounge 32 Station Approach Harrow Weald Middlesex HA3 5AA…
-
- 2 replies
- 1.7k views
-
-
கோத்தபாய.. பிரித் ஓத.. மகிந்த தண்ணி கொடுக்க.. சிங்கள நேர்ஸ் சேலைன் ஏத்த.. விமல் வீரவன்சவின் நாடகம் நிறைவடைந்தது. வந்து விடுப்புப் பார்த்துச் சென்ற சிங்களக் கூலிகளுக்கு மகிந்தவின் நன்றிகள் பல. ரணில் சொன்னாய்யா.. புஸ்வாணம் ஆகிடுமின்னு. அப்பட்டியே ஆச்சே. Wimal’s fast to death ends Minister Wimal Weerawansa has ended his fast unto death after President Mahinda Rajapaksa visited him outside the UN office a short while ago. President Rajapaksa had offered Weerawansa water which the Minister accepted and he was later driven away in an ambulance to hospital. Defence Secretary Gotabaya Rajapaksa and the family of Minister Weerawansa also visited the…
-
- 18 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதல்: பங்குச் சந்தை சரிந்தது [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:13 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது இன்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு பங்குச் சந்தை சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான தகவல்களை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே தமிழீழ வான்படையினரால் சிறிலங்கா மீது நடத்தப்பட்ட முதலாவது வான் தாக்குதல் இது என அனைத்துலக ஊடகங்களும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. சிறிலங்காவின் ஒரே ஒரு அனைத்துலக …
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான். தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள
-
- 4 replies
- 1.6k views
-
-
சர்வதேசமே சிறிலங்கா அரசின் படுகொலைப் பயங்கரவாததிற்கு உனது பதில் என்ன? Five civilians shot and killed by SLA soldiers in Puthur East, Jaffna [TamilNet, April 19, 2006 03:11 GMT] Sri Lanka Army (SLA) soldiers shot and killed five Tamil civilians Tuesday night close to an SLA 51-1 Division camp located at Vatharavathai, 13 km north-east of Jaffna. The SLA soldiers took the five civilians, a Municipal Council official, an electrical mechanic, a farmer and two auto-rikshaw drivers, inside the army camp and later brought them out to an open terrain and gunned them down, villagers said. A terror-campaign, let loose on the civilians in the area by the soldie…
-
- 12 replies
- 1.6k views
-
-
பார்வதி அம்மாளுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்து நிற்கும் தென்னிலங்கைச் சிங்களவர்கள்! சனி, 12 பெப்ரவரி 2011 02:09 தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் 81 வயதுத் தாய் பார்வதி அம்மாளை பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர். இவ்வைத்தியசாலையை சேர்ந்த அதிகாரிகள் இத்தகவலை எமக்கு வழங்கி உள்ளனர். இது ஒரு அரச வைத்தியசாலை, இங்கு மட்டுப்பாடுகள் கிடையாது, எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தலைமை வைத்தியர் கே.எம்.பெருமாள் தெரிவித்தார். tamilcnn
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் – வாயைப் பிளந்த மங்கள சமரவீர APR 25, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு, சென்று, பேச்சுக்களை நடத்தி விட்டுத் திரும்பியுள்ளது. அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், வளைகுடாவில் பாதுகாப்பு பணியை முடித்துக் கொண்டு, தாய்த்தளமான, ஹவாயில் உள்ள சான் டியாகோ நோக்கிச் சென்ற போதே, சிறிலங்கா, குழுவினர், அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சிறிலங்காவில்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு இணையத்தில் ஒரு கட்டுரை செஞ்சோலை சிறுமிகள் படுகொலையை நியாயப்படுத்தி வெளிவந்திருகிறது.முகமாலையில
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவால்? புகைப்படங்கள் இணைப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவாலான முறையில் நாம் இந்த தேர்தலில் சுயேற்சையாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் இவ்வாறு வன்னி மாவட்ட சுயேற்சைக்குழுவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் வன்னி மாவட்ட ஈபிஆர்எல்எவ் எம்பியுமாகிய இராசு குகனேஸ்வரன் தெரிவித்தார். வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுடைய சுயமான மீள்குடியேற்றம் அதுமட்டுமல்ல அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்கப்படவேண்டும். இந்த விடயத்தை முன்னுரிமைப்படுத்தி தேர்தலின் போட்டியிட முன்வந்துள்ளோம். வன்னி மாவட்ட மக்களுடைய தேவைகளை இயன்றளவு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்ட திரு குகனேஸ்வரன், நாங்கள் எந்த தேசி…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்…
-
- 11 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் : மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கள்ளியங்காடு பாரதி வீதியில் அமைந்துள்ள வளவிலுள்ள பாழடைந்த கிணற்றொன்றில் இருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/tamil_news....=9077&cat=1
-
- 10 replies
- 1.6k views
-
-
இலங்கையில் புத்த தர்மம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் நடந்த கூத்து: மாட்டிக்கொண்ட இராணுவத்தினர் ! யாழில் நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கிச் சென்ற பதாதைகளை இங்கே போட்டிருக்கிறோம். இதனை சற்று உற்றுப்பாருங்கள். தமிழில் மட்டும் எத்தனை பிழைகள் என்று தெரியும். நிச்சயம் இது தமிழர்களால் எழுதப்படவில்லை என்பதனை எவரும் இலகுவாக அறிந்துகொள்வார்கள். இதனை விட மிகவும் வேடிக்கையான விடையம் ஒன்றும் நடந்துள்ளது. தமிழைத்தான் இவ்வாறு பிழையாக எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால்... அங்கே இலங்கையின் கொடியைக் கூட ஒருவர் தலைகிழாகப் பிடித்துள்ளார் என்றால் பாருங்களேன். யாழ் இந்தியத் தூதுவர் மகாலிங்கத்துக்கு எதிராகவும் சிலர் பதாதைகளை தாங்கிச் சென்…
-
- 14 replies
- 1.6k views
-
-
கடவுளை நம்பி தோணியை கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத்தமிழர் நிலை கடவுள் தன்னை எப்படியும் வந்து காப்பாற்றிவிடுவார் என்ற நினைப்பில் அருகில் வந்த படகையும் கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத் தமிழரின் நிலை. எப்படியும் அருகில் இருக்கும் இந்தியா தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஈழத்தமிழர், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நாட்டுடனும் இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வமான தொடர்பைப் பேணவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். சீனாவுடன் நல்லதொரு தொடர்பை வைத்திருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர் இன்று சுதந்திர தமிழீழத்தை பெற்றிருப்பார்கள். ஏதோ வாய்க்கு வந்தபடி சீனாவையும் அதன் தோழமை நாடுகளையும் வசைபாடுவதனால் இந்திய சமுத்திரப் பிராந்திய பூகோள-அரசியலில் தமிழர் எதன…
-
- 10 replies
- 1.6k views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கை ரத்து செய்யக்கோரியும், தூக்கை ஆயுளாக குறைக்கக்கோரும் அரசு தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்தும் வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். நகர் வரை 5 நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முடிவெடுத்தார். அதன்படி இன்று அவர் வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து சீமான் நடைபயணத்தை துவங்கினார். அனுமதி இன்றி நடை பயணம் செல்வதாக கூறி சத்துவாச்சாரியில் சீமான் கைது செய்யப்பட்டார். அவருடன் 100 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமணம் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=60885
-
- 5 replies
- 1.6k views
-
-
எதிரணியின் கூட்டணியில் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து தேர்தல் களத்தில் குதித்தமை பாரிய தேசத் துரோகச் செயலாகும். முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக் கொண்ட நிலையிலே ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேத்தானந்த தேரர் குறிப்பிட்டார். வட பகுதி தமிழ் மக்களின் வாக்குகள் அனைத்தும் அரசாங்கத்திற்கே கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரானவர் யாரும் இல்லை எனவும் அவர் தெவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெவித்தத…
-
- 0 replies
- 1.6k views
-