ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் மக்கள் திரள் - செங்கொடி தகனம் நாளைவரை ஒத்திவைப்பு:- 30 ஆகஸ்ட் 2011 தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த இளம் பெண் செங்கொடிக்கு காஞ்சிபுரம் மக்கள் மொத்தமாக திரண்டு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழவைப்பதாக இருந்தது. காஞ்சிபுரம் இதுவரை கண்டிராத அளவில் செங்கொடி அஞ்சலி நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார். அஞ்சலி செலுத்த பல ஆயிரம் மக்கள் திரண்டுள்ளதால் உடல் தகன நிகழ்ச்சியை நாளை வரை ஏற்பாட்டாளர்கள் பிற்போட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ஒப்படைக்கப்பட்ட செங்கொடிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
தாம் விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் தமது குடும்பத்தினர் விடுதலைக்கான மன்னிப்பை கோர மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா வலியுறுத்தியுள்ளார். உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு இன்று அழைத்துவரப்பட்ட போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். தாம் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் தமது மனைவி மன்னிப்புக் கோரவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி கூறினார். தாம் விரும்பும் வரை அது நடக்காது எனக் குறிப்பிட்ட அவர், அமைச்சரின் குடும்பத்தில் என்ன நேருகின்றது எனத் தெரியாது எனக் குறிப்பிட்டார். கொலைப் பட்டியலில் அமைச்சர் விமல் வீரவங்சவின் பெயர் இருந்ததாக கூறப்படுதாக சுட்டிக…
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அல்லோலகல்லோலம்; நடந்தது என்ன? யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு யானைகள் புகுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வேளையில் ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் காட்டு யானைக…
-
- 8 replies
- 1.6k views
-
-
பிளவுப்பட்டு வருகிறதா ராஜபக்ஸ சகோதர நிறுவனம்... வியாழக்கிழமை, 31 மார்ச் 2011 16:54 ராஜபக்ஸ சகோதர நிறுவனம் வெடித்து பிளவுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜபக்ஸ நிறுவனத்தின் இரண்டு சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து, மற்றுமொரு சகோதரான பசில் ராஜபக்ஷவை ஓரங்கட்டி வருவதால், அவர்களுக்குள் இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற போதிலும், அவரது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி கொள்ள முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தவர்கள் மற்றும் புதிய திட்டங்களுடன் வருபவர்களை, சந்திப்பதை, பசில் தவிர்த்து வருகிறார். நிதியமைச்சில், அமைச்சர் பசில் ரா…
-
- 0 replies
- 1.6k views
-
-
மீண்டுமொரு ஜயசிக்குறு?; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன் -(பீஷ்மர்) [15 - October - 2006] [Font Size - A - A - A] சம்பூர் நடவடிக்கை முதல் தென்னிலங்கையில் ஒரு `மறுதலிக்க முடியாத அண்மைக்கால உண்மை' எனப் போற்றப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம் கிளாலி முகமாலைப் போரின் முடிவின் பின்னர் சுக்குநூறாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் படைத்திட்டத்திறனிலும் யுத்த நடத்துகைத் திறனிலும் தமக்குரிய இடத்தை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் இப்பொழுது ஓர் அரசியல் முதிர்வினையும் காட்டிக் கொண்டுள்ளார்கள். முகமாலை, கிளாலி யுத்தத்துடன் இந்த நீண்ட நெடும் போர் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், அதன் பின்னர் இலங்கை அரசும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள விரும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்…
-
- 15 replies
- 1.6k views
-
-
29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்! ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது. சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில…
-
- 3 replies
- 1.6k views
-
-
தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார். அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத…
-
- 23 replies
- 1.6k views
-
-
Jul 20, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் முத்தையன்கட்டில் சுற்றிவளைப்பு - அச்சத்தில் மக்கள் : மணலாற்றில் வான் தாக்குதல்? கிளிநொச்சி முத்தையன்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படையினர் சுற்றிவைளப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளமை மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா படையினர் வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற போதிலும், சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ளாது இருந்தனர். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முத்தையன்கட்டை சுற்றி வளைத்த படையினர் வீடு வீடாக சோதனை நடத்தியதுடன், வீதிகளில் சென்றோரை மறித்து ஆள் அடையாள அட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரிட்டனுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் அனுமதிக்கமாட்டோம் வீரகேசரி நாளேடு பிரிட்டனுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் இலங்கையிலிருந்து திட்டமிடவோ மேற்கொள்ளவோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சமாதானம், ஜனநாயகம் மீதான எமது ஈடுபாடும் உறுதியும் பயங்கரவாதத்துக்கு முன்னால் மண்டியிடாது என தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் புதிய பிரதமர் கோர்டன் பிரௌணுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தை தாக்குவதற்கு தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டமை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதி இக்கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ம…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிட்னியில் சிங்கள காடையர் தமிழர் மீது தாக்குதல் - இருவர் மருத்துவ மனையில் அனுமதி Sinhalese mob attacks Tamil Civilians in Sydney
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
முரசொலி எனும் பத்திரிகை திமுகவின் சொந்த பத்திரிகையென்பதும் கலைரின் மேற்பார்வையில் வெளியாகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதில் ஜெயலலிதா மற்றும் பார்ப்பனர்களை சீண்ட புலிகளை இழுத்திருக்கிறார்கள். அவர்கள் எழுதுகிறார்கள் - சீமான் புலிகளுக்கு ஆதரவாக பேசினால் கைது செய்ய சொல்லும் ஜெயலலிதா விகடன் புலிகளை ஆதரித்தால் ஏன் கைது செய்யச் சொல்வதில்லை என கேட்டு பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். முழுவதும் வாசித்தால் காறித் துப்ப வேண்டும் போலிருக்கிறது. அவர்களின் அரசியலுக்கு நாம் பகடைக்காய்கள் என்பதை இனியேனும் புரிவோம். விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்! ( முரசொலி 4-11-08 அன்று வந்த கட்டுரை ) இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் களிழைக்கப்படும் ஒவ்வொரு கா…
-
- 3 replies
- 1.6k views
-
-
சூரியப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும் குறிப்பாக இங்கு அதிகளவான மாணவர்கள் வருகை தந்திருப்பதானது மகிழ்ச்சியளிக்கின்றது. நமது நாட்டின் மீது நாம் அன்பு செலுத்தும் அதேவேளை எமக்கே உரித்த thx http://www.newjaffna.com/
-
- 7 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய இதழின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன்கூறியுள்ளார். நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல் சூழலி…
-
- 23 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசைபத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறுதினம் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ தீர்மானமொன்றை எடுக்க உள்ளதாகத் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். கிழக்குத் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு பிராந்தியத் தலைவர் நவ்சாட் ஏ மஜீத்துடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டும் என கட்சிக்குள் அழுத்தங்கள் பரவலாக எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுக…
-
- 2 replies
- 1.6k views
-
-
Posted on : Mon Jun 25 6:59:07 EEST 2007 இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் இன்று கூடுகின்றன இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது. நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியன தொடர் பாக இன்றைய மாநாட்டில் விரிவாகவும் முன்னுரிமை கொடுத்தும் ஆராயப்படவுள்ளது. சமாதான முயற்சிகள் தொடர்பாக நாளைய மாநாட் டில் ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் முடிவில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளி யிடும் சாத்தியம் இல்லை என்றும் தீர்மானங்கள் இரு தரப்புகளுக்கும் அன…
-
- 7 replies
- 1.6k views
-
-
வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வன்னி பெரும் நிலப்பரப்பில் இந்த வாரத்தில் இடம்பெற்ற கடும் மோதலினால் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தின் நான்கு நிபுணர்கள் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்ட இந்திய இராணுவத்தின் முழுவிபரங்கள் கிடைக்காவிட்டாலும் சிறிலங்காவுக்கு இந்தியா 3000 இந்திய துருப்புக்களை அனுப்பியுள்ளதாக இந்திய தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. இதேவேளை…
-
- 6 replies
- 1.6k views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மேற்படி வழக்கிற்கு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சென்றிருந்த நிலையில் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு என்றும், அனந்தியே உனது கணவன் காணாமல் போனதாக நீ கூறும் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்?, எங்கே எமது பிள்ளைகள் ஒழிந்திருக்கும் உன் கணவரிடம…
-
- 2 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சாத்திரி ஒரு பேப்பர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சாரத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து அங்கு வந்திருந்த தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணித்தலைவர் கஜதீபனுடன் தொர்பு கொண்டு கதைத்திருந்தேன். அவருடன் தொலைபேசியில் உரையாடியவற்றின் சுருக்கத்தினை செவ்வி வடிவில் இங்கு தருகிறேன். சாத்திரி. வணக்கம் கஜதீபன் நீங்கள் கிழக்கிற்கு வந்திருக்கும் நோக்கம் என்ன எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள் கஜதீபன். வணக்கம் தமிழரசு கட்சியின் இளைஞரணி சார்பாகவும் யாழ் பல்கலைக்கழக ஒன்றியம் சார்பாக அதன் செயலாளர் தர்சானந் உட்பட யாழ் பல்கலைக்கழக மா…
-
- 18 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் உலகின் முக்கிய நாடுகள் இலங்கை மீது பல்வேறு பொருளாதார அழுத்தங்களை பிரயோகிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மற்றும் வர்த்தக சலுகைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம், சர்வதேச நாணய நிதியக் கடன் உள்ளிட்ட முக்கிய பொருளாதார சலுகைகளை முடக்குவதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவத…
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைத் தமிழரான சரவணபவன் என்பவர் தம்மீதான அவதானிப்பு சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அவருக்கு தற்போது 50 வயதாகிறது.[/size][/size] [size=3][size=4]சென்னை பல்கலைக்கழகத்தின் 170 வருட கால வரலாற்றில், 50 வயது மாணவர் ஒருவர் கல்வி பயிலும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]அவர் இரண்டாம் வகுப்பு பரீட்சையை மாத்திரம் 16 வருடங்களாக எழுதியிருப்பத…
-
- 7 replies
- 1.6k views
-
-
மாலைதீவு ஜனாதிபதிக்கு "லங்கா மித்ர விபூசன" பட்டம் வழங்கப்படவுள்ளது 2ஃ12ஃ2008 3:14:58 Pஆ வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமிக்கு லங்கா மித்ர விபூசன என்ற சிறப்புப் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாத்திய வேறுபாடுகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் வகையிலேயே இலங்கையில் வழங்கப்படும் இந்த உயர் தேசிய கௌரவப் பட்டடம் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபத…
-
- 3 replies
- 1.6k views
-
-
கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் - இது சரியா?? : வளர்மதி on 14-07-2009 20:39 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம் திசையெட்டும் திரிந்து நா வளர்த்த மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு வழமையான ரசம்தான் என் ரசம் அலாதி அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய எரும உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு உப்பில்லாத பண்டம் குப்பையிலே எவரோ சொன்னது பழந்தமிழர் வீரமறவராம் இருக்கலாம் மற்றவர்க்கு எப்படியோ எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு. கவிதை எழுதப் பழகிய புதிதில் 'க…
-
- 0 replies
- 1.6k views
-