Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச ஊழியர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு - அமைச்சர் தினேஷ் குணவர்தன தொழில் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தர…

  2. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியும் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று (02) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நியாயமான சம்பளம் தொடர்ந்தும் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர், மே தினமன்று கொட்டகலையில் 1750 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் எந்த தோட்டத் தொழிலாளிக்கும் அந்த சம்பளம் வழங்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம…

  3. இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி உலக வங்கி வேண்டுகோள் விடுத்த போதும் அதனை செய்வதற்கு அரசு தயார் இல்லை என்று பிரதமர் டீ.எம்.ஜயரத்ன தெரிவித்தார். இன்று கண்டி, மலையக கலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கண்டி மாவட்ட ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர், மேலும் உரையாற்றுகையில், ‘இலங்கையில் 12 இலட்சம் அரச ஊழியர்களும் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் அரச கொடுப்பனவு பட்டியலில் உள்ளனர். இது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாரிய சுமை என்றும் அதனை எட்டில் ஒன்றாக குறைக்க வேண்டும் என்றும் உலக வங்கி உட்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் வே…

  4. அரச ஊழியர்களை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் - துமிந்த திஸாநாயக்க By VISHNU 10 SEP, 2022 | 03:52 PM (இராஜதுரை ஹஷான்) அரச ஊழியர்கள் 60 வயதுடன் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை போல் அரசியல்வாதிகளும் 60 வயதுடன் அரசியலில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும். சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் பிரதேச சபையில் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலங்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவா…

  5. அரச ஊழியர்களை... இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த முடிவு அரச ஊழியர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1212655

  6. அரச ஊழியர்களை... பணிக்கு அழைப்பதை, மட்டுப்படுத்தி உத்தரவு! அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283828

  7. வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொழில்புரியும் அரச ஊழியர்களுக்காக ஓமந்தை இராணுவச் சோதனையூடான மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் ஏற்பட்டடிருக்கும் நெருக்கடிநிலையை அடுத்து சிறிலங்காப் படைத்தரப்பு வவுனியா ஒமந்தைää மன்னார் உயிலங்குளம் ஆகிய சோதனை நிலையங்களை சிறிலங்காப் படைத்தரரப்பு மூடியுளளனர். இந்நிலையில் இன்று வவுனியா ஒமந்தை சோதனை நிலையம் ஊடாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையினை சோதனைச் சாவடியில் காட்டி செல்ல முடியும்மெனவும் சிறிலங்கா இராணுவத்ததினர் தெரிவித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி-www.newstamilnet.com

  8. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 30.06.2025 முதல் 31.08.2025 வரை தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளுக்கு சட்ட விதிகளுக்கு அமைவாக அபராதம் விதிக்கப்படும் என்றும், அதற்கமைய, இதுவரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள் யாராவது இருந்தால், அவர்கள் அந்த அறிவிப்புகளை விரைவில் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் ச…

  9. அரச ஊழியர்கள், சமூக வலைதளங்களில்... கருத்து, வெளியிடத் தடை ! சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1301632

  10. அரச ஊழியர்கள்... தடையின்றி, வெளிநாடு செல்ல... அமைச்சரவை அனுமதி! அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கள் பதவிக்காலத்தில் வெளிநாடு செல்ல முடியும். இத்திருத்தத்தின் கீழ், தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியரின் ஓய்வூதியக் கணக்கீடு உள்ளிட்டவற்றை பாதிக்கும் விதிகள் தளர்த்தப்படும். அத்தகைய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை விரைவாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/12…

  11. அரச ஊழியர்கள்... திங்கட்கிழமை முதல், வீட்டில் இருந்து... வேலை செய்யும் திட்டம் அறிமுகம். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரிய நடைமுறைகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு வெளியிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாற…

  12. அரச ஊழியர்கள்... வேலை வாய்ப்பிற்காக, வெளிநாடு செல்ல சந்தர்ப்பம். பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழில் பயிற்சி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிலவுகின்ற பொருளாதார பின்னடைவை எதிர்கொள…

  13. அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது. மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தத…

    • 64 replies
    • 3.6k views
  14. அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் 28 பேரை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கைதுசெய்யப்பட வேண்டிய 28 பேருடைய பெயர்ப் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே காவற்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக காவற்துறைத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த பட்டியலில் தம்பர அமில தேரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய உத்தரவு கிடைத்தவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியவவற்றின் பொறுப்பத…

    • 0 replies
    • 675 views
  15. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அலரிமளிகையை சென்றடைந்தது! (3ஆம் இணைப்பு) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்சமயம் அலரிமளிகைக்கு முன்பாக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் (2ஆம் இணைப்பு) மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்…

    • 7 replies
    • 917 views
  16. பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு! (ஆதவன்) ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கையுடன் உடன் படமறுக்கும் மக்களின் நடவடிக்கைகளை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இதன்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளின் பாதகத்தன்மைகள் தொடர்பில் சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இலங்கை சட்டத்தரணிகள…

    • 1 reply
    • 486 views
  17. அரச ஓய்வூதியம் பெறும் சுமார் 20,000 பேர்வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆழ அவதானிக்கப்பட்டு வருவதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரட்ன தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த இரு வருடங்களில் வெளிநாடுகளில் சென்று ஓய்வூதியம் பெறும் 3000 பேர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைப் பணம் அநாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களை பெற்று புதிய முறையின் கீழ் அதனை வழங்கவுள்ள…

  18. அரச ஓய்வூதியர்களுக்கான மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் செப்டெம்பர் மாத கொடுப்பனவுடன் சேர்த்து வழங்குமாறு அரசாங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் (09) வெளியிட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிட்டமைக்கு, எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் உண்மைகளை தெளிவுபடுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சட்ட நடவடிக்கை மேலும், அரச சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்…

  19. அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள். அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும், இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனி…

  20. அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் - ஜனாதிபதி December 9, 2024 08:15 pm எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற "2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர…

  21. அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்க கூடாது - சர்வதேச மன்னிப்புச் சபை வன்னி பகுதியிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் பொதுமக்கள் மீது எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை நிபுணர் யொலென்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார் அரச படைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் காரணம் காட்டி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் சிவிலியன்கள் மீது படையினர் அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சப…

    • 0 replies
    • 547 views
  22. அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 714 பொதுமக்கள் பிரிகேடியர் உதய நாணயக்கார: கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 714 பொதுமக்கள் வந்தடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இவர்களில் கடந்த 90 மணித்தியாலயங்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 143 பேர் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்;. இதில், கடந்த 20ம் திகதியில் மாத்திரம் 42 ஆயிரத்து 316 பேரும், 21 ஆம் 22 ஆம் திகதிகளில் 20 ஆயிரத்து 123 பேரும், ஏனையவர்கள் நேற்றைய தினத்திலும் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பி…

    • 0 replies
    • 510 views
  23. சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் தனியாரிடம் கையளிக்கப்படவுள்ளன. எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை, கந்தளாய் சீனித் தொழிற்சாலை ஆகியனவற்றையே முப்பது வருட குத்தகை அடிப்படையில் இரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.இந்த நிறுவனங்கள் அவுஸ்ரேலிய நாட்டைச்சேர்ந்தவை ஆகும். அண்மையில் பொது நலவாய நாட்டில் மஹிந்தரைக் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியாவும் பெரும் உதவி புரிந்தது இதற்கு பிரதி உபகாரமாக மஹிந்த அரசு பல சலுகைகளை அவுஸ்ரேலியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது. . இதன் முதல் கட்டமாக எம்பிலிப்பிட்டிய சீனித் தொழிற்சாலை அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைகக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.இந்தத் தொழிற்சா…

  24. அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா (Stanislaus Joseph Yogarajah)மற்றும் லரீனா அப்துல் ஹக் (Lareena Abdul Haq) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. https://athavannews.com/2025/1415382

  25. அரச காணிகளின் அதிகாரம் வடக்கு ஆளுநரின் கையில் வடமாகாணத்தில் உள்ள அரசகாணிகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந் திரசிறி. நாவற்குழியில் புதிதாக சிங்களக் குடியேற்றமொன்று அமைக் கப்பட்டுவரும் நிலையிலும், அரச காணிகளை படையினரின் பாவனைக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற்று வரும் நிலையிலும் அவசர அவசரமாக அரச காணிகளின் அதிகாரத்தை ஆளுநரின் கைகளில் ஒப்படைத்தமை தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தி லுள்ள அரச காணிக ளின் பயன்பாடு தொடர் பாக நடவடிக்கைகளை முற்றுமுழுதுமாகத் தீர் மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.