ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142848 topics in this forum
-
அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய மேற்படி வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும். பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான…
-
- 0 replies
- 710 views
-
-
அரச காணிகளை சுவீகரிப்பதில் அரசியல்வாதிகள் மும்முரம் சகோதர இனமான முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது பலத்தைப் பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காணிகளை விலைக்கு வாங்குவதிலும், சுவீகரிப்பதிலும் மும்மூரமாக ஈடுப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அரச காணிகளை இரவோடு இரவாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர், சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் திருநாள் உழவர் விழா வந்தாறுமூலை அம்பலத்தடி உழவர் சிலை அருகில் அருகில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 411 views
-
-
வடக்கில் பொதுமக்களின் பெருமளவிலான காணிகளை இராணுவம் அபகரித்து வைத்துள்ள நிலையில் அரச காணிகளையும் சட்ட ரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு திரைமறைவில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எமது கட்டுப்பாட்டை பிரயோகிக்க முடிகிறது. பிரதேச மட்டத்தில் எமது மாகாண அலுவலர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். …
-
- 0 replies
- 268 views
-
-
அரச காணியிலிருந்தோரை வெளியேற்றியது நீதிமன்று மடு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மழுவராஜன் கட்டை அடம்பனில் 10 ஏக்கர் கொண்ட அரச காணியை அடாத்தாகக் கைப்பற்றி அங்கு குடியிருந்த 2 குடும்பங்களையும் மன்னார் நீதிமன்று வெளியாத்து நடவடிக்கை மூலமாக வெளியேற்றியுள்ளது.மன்னார் மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.குறித்த காணியில் 2 குடும்பங்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து குடியிருக்கின்றன. அதனுள் குடியிக்க வேண்டாம் என்று பிரதேச செயலர் அறிவுறுத்தியும் அந்த அறிவுறுத் தலை அந்தக் குடும்பத்தினர் பின்பற்றியிருக்கவில்லை. அதனால் அவர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இது தொடர்பில், விசாரணையின் பின்னர் அரசினால…
-
- 1 reply
- 499 views
-
-
அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது? news இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. இவ்வாறு கோப்பாயில் அரச காணியில் தங்கியுள்ள, வலி. வடக்கைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரச காணியில் மக்கள் தங்கியுள்ளமைக்கு எதிராகக் கோப்பாய் பிரதேச செயலாளரால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு கேள்வியயழுப்பியுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூதர்மடம் பகுதியில், இராணுவத்தினர் அரச காணியில் நீண்டகாலமாக நிலை கொண்டிருந்தனர். குறித்த காணியிலிருந்து இராணுவத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில், வலி…
-
- 1 reply
- 796 views
-
-
அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். இவர்களில் ஒருவர் அரச குடும்பத்து உறுப்பினர் எனவும் அவரது வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்துக்கு நெருக்கமான வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரது வங்கிக் கணக்கில் 504 மில்லியன் அமெரிக்க வைப்புச் செய்யப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் நிறுவனம் ஒன்றின் தலைவராக இரு…
-
- 0 replies
- 368 views
-
-
செய்தியாளர் சத்தியன் 01/08/2009, 13:42 அரச சமாதானச் செயலகம் நேற்றிரவுடன் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது - ரஜீவ விஜேசிங்க சிறீலங்கா அரசின் சமாதான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட சமாதானச் செயலகத்தின் பணிகள் முடிவுக்குள் வந்துள்ளதால் அதனை மூடியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவுடன் சமாதானச் செயலகம் மூடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றதால் இனிவரும் காலத்தில் சமாதான நடவடிக்க…
-
- 0 replies
- 324 views
-
-
அரச சம்பளத் தொகையில் பெரும்பகுதி இராணுவத்திற்கே செல்கிறது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) பெரும்பகுதி பொலிஸ் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு செலவிடப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க மாத்திரம் 33,940 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேர…
-
- 1 reply
- 555 views
-
-
சிறிலங்காவில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் அவற்றில் பணிபுரிபவர்களுக்கும் சிறிலங்கா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 495 views
-
-
இன்று ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில், காணாமற்போனவர்களின் உறவுகளும் அடுத்த வாரமளவில் சாட்சியம் அளிக்க உள்ளனர். அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன. ஜெனிவா மனித உரிமைகள் குறித்த ராஜதந்திர சமர்க்களத்தில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராகச் சாட்சியமளிப்பதற்கு காணாமற்போனோரது உறவினர்களும் ஜெனிவாவுக்கும் செல்லவுள்ளனர். இவர்களை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகள் சிலவும் மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு இந்தக் குழுவில் காணாமற்போனோர்க…
-
- 3 replies
- 594 views
-
-
செப் 18, 2010 / பகுதி: செய்தி / அரச சார்பற்ற நிறுவத்தின் அமெரிக்க அதிகாரி நாடுகடத்தல் - சிறீலங்கா அரசு அதிரடி வன்முறைகள் அற்ற அமைதிப்படை எனப்படும் அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் அமெரிக்க அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறீலங்கா அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் இயங்கிவரும் வன்முறைகள் அற்ற அமைதிப்படை எனப்படும் அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் அமெரிக்க அதிகாரி டான் ஹொகன் என்பவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறீலங்கா அரசு பணித்துள்ளது. சிறீலங்காவில் உள்ள கிளையின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக டான் பணியாற்றி வந்ததுடன், மட்டக்களப்பு, வவுனியா பகுதிளிலும் பணியாற்றியிருந்தார். அவரின் நுளைவு அனுமதி நீடிப்பை நிராகரித்துள்ள சிறீல…
-
- 1 reply
- 576 views
-
-
அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன். ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமைய, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார் http://www.puthinapp…
-
- 0 replies
- 338 views
-
-
அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு தொடர்பில் புதிய சட்ட மூலம் தயாரிப்பு! அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்வது தொடர்பான புதிய சட்ட மூலம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிகளை கண்காணிக்கும் வகையில் சட்ட மூலம் ஒன்றை தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சட்ட மூலம்தற்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்குகின்ற நிதிகளை அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://…
-
- 0 replies
- 441 views
-
-
-கெலும் பண்டார அரசசார்பற்ற நிறுவனங்களுக்கென புதிய சட்டமூலமொன்றை தயாரித்து இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் தாமாகவே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அரசசார்பற்ற நிறுவனங்கள் 1412, இச்செயலகத்தில் ஏற்கெனவே பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இச்செயலகத்தினால் அனுமதி அளிக்கப்பட்டால் மாத்திரமே வருடாந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதாகவும் அந்த நிறுவனங்களினால் ஊடகவியலாளர் மாநாடுகளையோ அல்லது கருத்தரங்குகளை…
-
- 0 replies
- 230 views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு [திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2008, 11:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் உள்ளுர் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உத்தரவை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் …
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=4][/size] [size=4]இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் போர்க்குற்ற சாட்சியங்களை திரட்டும் நோக்கில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டார்கள் இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.[/size] [size=4]இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளை தோண்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது. படையினர் இரசாயன ஆயுத…
-
- 0 replies
- 437 views
-
-
அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசுக்கும் எதிரான சேறுபூசும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கிறன இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சிறப்பான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஆனால், இதனை கவனத்தில் கொள்ளாது அரச சார்பற்ற நிறுவனங்கள் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்; அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சேறு பூசும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஓர் ஆக்கம் தான் ஐ.நா. மனித உரிமை பேரவைக் குழுக் கூ…
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 6 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Interfaith International, Switzerland; International Movement Against All Forms of Discrimination and Racism – IMADR, Japan; International League for the Rights and Liberation of Peoples – LIDLIP, Switzerland; Liberation- United Kingdom; International Educational Development IED, USA; International Association of Democratic Lawyers – IADL, Switzerland ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மா…
-
- 0 replies
- 822 views
-
-
அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது எல்லையை மீறி செயற்பட முயற்சி அனுமதிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி (எம்.எம்.மின்ஹாஜ்) எனது சொத்து விபரங்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் பெறலாம் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்களை கோரி யுள்ளது. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று 2வருடங்களுக்குள் சொத்து விப ரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நான்தான் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே…
-
- 0 replies
- 314 views
-
-
அரச சார்பற்ற வெளிநாட்டவர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார் - கோதபாய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பணியாளார் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த திட்ட முகாமையாளர் ஒருவரே இவ்வாறு புலிகளுடன் இணைந்துள்ளதாக பாதுகாப்புப் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச சர்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு அரசாங்கம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து குறித்த இத்தாலி பிரஜை விடுதலைப் புலிகளுடனேயே தாம் தங்கியிருக்கப் போவதாகவும்இ தாம் வன்னியிலேயே உயிர் துறக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏனைய பணிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/110621_colombo_reporter.mp3
-
- 0 replies
- 614 views
-
-
[size=4]கைதடி அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்குமாறு அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கைதடி அரச சிறுவர் இல்லத்தில் 31 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களை பராமரிப்பதற்கு 7 பெண்கள் மாத்திரமே இருக்கின்றனர். 31 சிறுவர்களை 7 பெண்கள்; பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். இதில் 2 தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிறுவர்களை பராமரிக்க செல்லும் பட்சத்தில் மிகுதி 5 தாய்மார்களினாலும் 31 சிறுவர்களை சரியான முறையில் கவனிப்பது மிகவும் கஷ்டமானதொரு விடயம். என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே இவ்ற்றை எல்லாம் கருத்திற் கொண்டு ஆளணி வசதியை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது.…
-
- 0 replies
- 544 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப்பெறுகின்ற அரச சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகள் இல்லாமலே பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக செயற்படுவேன் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன முன்னணியில் இன்று வெள்ளிக்கிழமை உடற்கட்டமைப்பு போட்டியில் சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்ற இலங்கையரான லுஷன் புஷ்பராஜை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், …
-
- 0 replies
- 263 views
-
-
கொழும்பு பேராயர் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்காக வத்திகான் வானொலிக்கு தெரிவித்ததாக சொல்லப்பட்டு வந்த செய்திகள் அரசால் திரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்று கொழும்பு பேராயர் 26-07-2008 திகதியிட்டு விட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை அழித்தால் தான் சமாதானம் வரும் என்று நம்புகிறார்கள் என்ற தகவலையே பேராயர் பகிர்ந்து கொண்டதாகவும்.. அதுவே தனது நிலைப்பாடு என்பதாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (அண்மைய கணக்கெடுப்புகளில் சிங்களவர்களில் பெரும்பாலானோர் அப்படியான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பது வெளிப்பட்டிருந்தது ஊடகங்கள் மூலம் செய்தியாக்கப்பட்டிருந்தன.) Archbishop of Colombo blames government for…
-
- 1 reply
- 806 views
-
-
அரச செலவினங்களை... குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்! அரச செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆரம்பிக்கப்படவிருந்த அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை நிரப்பப்படாத வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு ஒத்திவைப்பு, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவுகள், உதவித்தொகை வழங்குவதை நிறுத்துதல், அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளை இந்த வருட இறுதி வ…
-
- 2 replies
- 212 views
-