Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் நாடு திரும்பும் நிலையில் அவர்களைக் கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=27884

    • 3 replies
    • 749 views
  2. யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாத…

    • 8 replies
    • 925 views
  3. சிறிலங்காவின் ஊவா மாகாண சபைக்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 25 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் அதேவேளையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்திருக்கின்ற

    • 0 replies
    • 444 views
  4. சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, போருக்குப் பின்னர் சிவிலியன் விவகாரங்களை கையாளும் பொலிஸ் பிரிவை, அரச படைகளை கையாளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பிரித்து தனியாக இந்த புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அமைச்சின் செயலராக பணியாற்றுவார். முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாக சேவையில் பதவி வழங்கப்படுகின்றமை ஆ…

    • 1 reply
    • 788 views
  5. இலங்கையில் சுமூக நிலை ஏற்பட்டுவிட்டதா! கருணாநிதியிடம் ராமதாஸ் கேள்வி? இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையில் சுமூகம் ஏற்பட்டு விட்டதா? ஏன தமிழக முதல்வரிடம் கருனாநிதியிடம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்: சென்னை சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய கருணாநிதி, இலங்கைப் பிரச்சினையில் சுமுக நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார். அப்படி சுமுக நிலை ஏற்படக்கூடாது என்று சிலர் விரும்பியதாகவும், ஆனால் அதையும் மீறி அத்தகைய சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும், அதற்குப் பிறகும் கூட அதை சிலர் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இராணுவத்தின் தாக்குதல் காரணம…

    • 0 replies
    • 626 views
  6. இந்திய சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா அசாரே இம்மாதம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதனை அன்னா அசாரேவின் வழக்கறிஞரான மிலிந்த் பவார் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளார். அசாரே இம்மாதம் கனடா மற்றும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், அவருக்கு ஒழுங்கான பாதுகாப்பளிக்க வேண்டியது இந்திய மத்திய அரசின் கடமை எனவும் அன்னா அசாரேவின் வழக்கறிஞரான மிலிந்த் பவார் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=6851

    • 6 replies
    • 712 views
  7. முறையான விசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் பெண் ஒருவர் கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகளின் அனுசரணையுடன் எவ்வாறு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என பிரித்தானியாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்சை வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைத்த அமைச்சர் ரோகித போகொல்லாகம, உள்நாட்டு குடியேற்ற சட்டங்களை மீறும் வகையிலான இந்த நகர்வு குறித்த அரசின் வருத்தத்தை நேரடியாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பீற்றர் ஹெய்ஸ் பதிலளித்தார் எனத் தெரிய வருகிறது. தகவல்களைத் திரட்டிக்கொண்டு அடுத்த வாரத்தில் இது குறித்துப் பதிலளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம…

    • 0 replies
    • 1.3k views
  8. பொய்களின் வடிவங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.2k views
  9. அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் பாரிய கூட்டணி இன்னும் ஒரு மாத காலத்தில் அமைக்கப்பட்டுவிடும் எனவும், ரணில் விக்கிரமசிங்க இதன் தலைவராகச் செயற்படுவார் எனவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. ஐ.நாவில் சிறிலங்கா விவகாரம் : தவறிய பான் கீ மூனும் சுட்டிக்காட்டிய சுவிஸ் பிரதிநிதியும் ! Posted By:தமிழ் ஆதவன் வெல்லும் வரை செல்வோம் R2Pஇனப்படுகொலை, போர் குற்றங்கள், இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவனற்றினை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் ( R2P) குறித்த உள்ளக மாநாடொன்றில் சிறிலங்கா விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஏற்பட்டு வரும் மனித உயிரிழப்புக்களை தடுப்பதற்கான ஐ.நாவின் கடப்பாடுகள் குறித்தான உள்ளக உரையாடலொன்று ஐ.நா அங்கத்துவ நாடுகள் இடையே நியூ யோர்க்கில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் ஐ.நாவின் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்கள், ருவண்டா மற்றும் செர்பிறேனிக்கா ஆகிய நாடுகளைச் சுட்டிக்காட்டி தொட…

    • 2 replies
    • 509 views
  11. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென க…

    • 8 replies
    • 438 views
  12. அகதி நிலைத் தகுதி கோரும் 80 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்திக் கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கும் எதிராக அந்நாட்டுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பனர் தங்கராசா என்பவர் வரணியில் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சயந்தன் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும், அப்போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தங்கராசா விடுதலை செய்யப்பட்டதாக அறிந்து, அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சயந்தனின் வாகனத்தை நோக்கி அந்தப் பகுதியில் இருந்த இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் வேட்பாளர் சயந்தனோ அல்லது வேறு எவருமோ காயமடையவில்லை என்றும் மாவை சேனாதிராஜா கூறினார். இதேவேளை இந்தச் சம்பவம் பற்றி அறிந்து அவிடத்திற்குச் சென்று த…

  14. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி மோதல்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு பிரச்சினைகள் நடைபெற்றுள்ளன என்பதை கொழும்பில் உள்ள காவல்துறைப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து வாசிக்க

  15. றிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இந்திய அரசாங்கம் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயற்பட்டு வருகிறது. அதுபோலத் தொடர்ந்து செயற்படும். சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய …

  16. சி.வி. விக்னேஸ்வரன் TNAயின் அங்கத்தவர் பட்டியலை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் கையளித்துள்ளார். 30 செப்டம்பர் 2013 இணைப்பு 2 வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் பெயர் பட்டியலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடம் இன்று கையளித்துள்ளார்.அதை தொடர்ந்து இருவரும் அமையவுள்ள மாகாணசபை மற்றும் அதனது காரியாலயம் பற்றி ஆராய்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கியசந்திப்பு நடைபெறுகிறது வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வசிப்பிடத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது. வட மாகாணசபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற…

  17. சக்தி டிவி செய்திகள் 8PM (15/06/2017)

  18. இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NAGULESWARAN PRAVEEN இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார். பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத…

  19. ஈழநாடு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு நேற்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, புதன்கிழமை (07.10.2009) பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வ…

  20. மன்னாரில் படகு கவிழ்ந்து 5 பேர் பரிதாப மரணம் [ சனிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2013, 13:41 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] மன்னாரில் படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்ளிட்ட 5 பேர் கடலில் மூழ்கி உயரிழந்தனர். இன்று பிற்பகல், மீன்பிடிப் படகு ஒன்றில் 16 பேர் கடலைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தனர். இதன்போதே, படகைத் திருப்பும் போது, அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, சிறிலங்கா கடற்படையினர் விரைந்து சென்று 11 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. குழந்தை ஒன்று காணாமற்போயிருந்தது. இறுதியாக, குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20131005109196

  21. ஆயுத கடத்தல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பில் தெ…

    • 2 replies
    • 437 views
  22. தற்போது சுவிஸில் அகதி தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்களை நாடு கடத்துவதை சுவிஸ் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. எற்கனவே சுவிஸ் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப் பட்ட தமிழர்கள், தங்கள் முதல் இருந்த மாநிலத்தில்() புதிதாக பதிந்து, தங்களுக்கு சேர வேண்டிய உதவிப்பணத்தை பெற்றுக்கொள்ளலாம். வேலை செய்வதற்கான அனுமதி வைத்திருந்தவர்கள், திரும்பி வேலை செய்வதற்கு அனுமதிக்கப் படுகிறது. அடுத்த வருடத் தொடக்கத்தில் சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகளுக்கான திணைக்களம் இலங்கை தொடர்பாக எடுக்கும் உத்தியோக பூர்வமான முடிவிக்குப் பின், சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரும் தமிழர்களின் எதிர்காலம் தெரிய வரும். கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் நீங்கள் தொடர்புகொண்டால் மேலதிக விபரங்கள் தெரியவரும். Fre…

  23. மக்­களின் இயல்­பு­நி­லையை பாதிக்கும் போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள் நாட்டில் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் தொடர்ந்த வண்ணம் இருப்­பதை காண­மு­டி­கின்­றது. குறிப்­பாக பல்­வேறு பிரச்­சி­னை­களை முன்­வைத்து வேலை­நி­றுத்தப் போராட்­டங்கள், சத்­தி­யாக்­கி­ரக போராட்­டங்கள், எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் என தொடர்ச்­சி­யாக மக்­களை சிர­மத்­திற்­குள்­ளாக்கும் விட­யங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. சைட்டம் விவ­கா­ரத்தை முன்­வைத்து அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் அவ்வப்போது வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­வ­துடன் எதிர்­கா­லத்தில் தொடர்ச்­சி­யான வேலை­நி­றுத்தம் இடம்­பெறும் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. அத்­துடன் சைட்டம் விவ­கா…

  24. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வது தொடர்பாக தற்போது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை நீதி அமைச்சருக்கு வழங்குவது உள்ளிட்ட யோசனைகள் அடங்கிய திட்டமொன்று உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாபாவின் தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்டு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் அமைக்கப்பட்ட இந்த குழு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் மற்றும் அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் யோசனையொன்றை தயாரித்துள்ளது. சிறைக் கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை அதிகாரிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு உரிய விடயங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த யோசனைகள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக…

    • 0 replies
    • 553 views
  25. திடீரெனத் தீப்பற்றிய பனை வடலிகள் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும் இணைந்து மூன்று மணி போhராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதெனவும் தெரிவி்க்கப்படுகிறது. http://uthayandaily.com/story/9820.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.