ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
இந்தியா உதவும் என்பதில் இன்னமும் நம்பிக்கை உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்க எமது அண்டை நாடான இந்தியா முன்வந்து உதவும் என்பதில் எமக்கு இன்னமும் நம்பிக்கையுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களில்தான் தலையிடப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அ ரசியலின் தற்போதைய நிலைவரம் காரணமாக மத்திய அரசை பகை…
-
- 9 replies
- 1.6k views
-
-
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவில் இன்று பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டார்கள். காலை 7.00 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேதராக முருகப் பெருமான் புறப்பட்டு வந்தார். தேரில் ஏறி அமர்ந்த பெருமான் 7.30 மணிக்கு வெளி வீதியுலா வலம் வரத் தொடங்கினார். தேரின் பின்னால் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சை செய்தும், அடியடித்தும், கற்பூரச்சட்டி ஏந்தியும் சென்றார்கள். அடியவர்களின் அரோகரா ஒலி வானைப் பிளந்தது. ஆயிரக்கணக்கான அடியவர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றார்கள். குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்தும் வந்திருந்த அடியவர்கள் ஏ…
-
- 6 replies
- 1.6k views
-
-
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மருதானை - பாணந்துறை தொடருந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, வில்பத்து சரணாலயப்பகுதியில் உள்ள இராஜாங்கன பகுதியில் உள்ள ஜாயா 18 பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ஊர்காவல் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில…
-
- 4 replies
- 1.6k views
-
-
வடக்கை நோக்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் இணைந்துகொள்வதற்கு பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 2ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும்இ இந்தக் காலப்பகுதியில் மீண்டும் இணைந்துகொள்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதெனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதலாம் திகதியிலிருந்து இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில் மீண்டும் இணைந்துகொள்ளமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
இயந்திரக்கோளாறு காரணமாக தமிழீழக் கடற்பரப்பில் கரையொதுங்கி நிற்கும் மேற்படி ஜோர்தானிய சரக்குக்கப்பலை மீளப் பெறுவதற்கு அதன் உரிமையாளர்களான ஜோர்தானிய கப்பல் கம்பனி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இக்கப்பலையும் அதில் ஏற்றப்பட்டுள்ள பெருமளவு அரிசியையும் எப்படியாவது சேதமின்றி மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை அக்கம்பனி முடுக்கிவிட்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக பார்க்கும்போது விடுதலைப்புலிகள் இத் தனியார்சரக்குக்கப்பலை சீரற்ற காலநிலைக்கும் இயந்திரக்கோளாறுக்கும் மத்தியில் மிகச் சாதுரியமான முறையில் செயற்பட்டு கப்பல்பணியாளர்கள் அனைவரையும் காப்பாற்றிப் பாதுகாப்பாகக் கரைசேர்த்தது மிகவும் வரவேற்கக்கூடியதே. அதேவேளை கப்பலிலிலிருந்து அனுப்பப்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
பூநகரிக்கும் கல்முனைக்கும் இடையிலான கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு படகுகளை சிறிலங்கா கடற்படையினர் நேற்று( 29) இரவு 11 மணியளவில் தாக்கியழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/sea-ti...2008-09-30.html
-
- 0 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தானும், சீனாவும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்கின்றது - இந்தியா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆயுத உதவிகளின் அளவு குறைக்கப்பட்டமையினால் பாகிஸ்தானும், சீனாவும் தான் பெருமளவு ஆயுதங்களை சிறிலங்காவுக்கு வழங்கிவருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கப் படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த முன்நகர்வுகளுக்கு பாகிஸ்தானும்இ சீனாவும் பெருமளவு இராணுவத் தளபாடங்களை வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானியில் நிலவரம் கவலைக்கிடமாக மாறிவரும் நிலையில் உலக நாடுகளின் கிரீகெட் அணியினர் அங்கு செல்வதை மறுத்துவந்தனர் இந்நிலையில் பாகிஸ்தானில் நிலைமை மாறியுள்ளது என்பதைக் காட்டுவதற்கும், ஆயுத விநியோகத்திற்கு நன்…
-
- 8 replies
- 1.6k views
-
-
I தம்மீதான நிறவெறிக் கொடுமைகளை மன்னிக்கலாம், மறக்க முடியாது என்றார் தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா. வரலாற்றிலிருந்து இனக்கொலை தொடர்பான விசாரணை ஒன்று, உள்நாட்டில் நிறவெறி தொடர்பான கொலைகள் குறித்த விசாரணையென ஒன்று என இரண்டு விதமான விசாரணைகளை மட்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் மீது ஜெர்மானியர்கள் நிகழ்த்திய இனக்கொலைகள் குறித்த நூரம்பர்க் விசாரணைகள் நாம் அறிந்தவை. விசாரணையின் முடிவில் இனக்கொலை புரிந்த நாசித்தலைவர்கள் தண்டனை பெற்றார்கள். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது உண்மை காணலும் நல்லிணக்கமும் என்பதற்கு அமைக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.6k views
-
-
வேலை தெரியாத கபடத்தனமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது இயலாமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்க பொது எதிரியாக ஜே.வீ.பீயினரையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். ஹிட்லர் அன்றும், றொபர்ட் முகாபே தற்போதும் இவ்வாறு போலி எதிரிகளைச் சுட்டிக்காட்டி தமது தவறினால் ஏற்பட்ட பொருளாதார சமூக சீரழிவுகளுக்கான காரணங்களை அந்தப் போலி எதிரிகள் மீது சுமத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கள்ள மற்றும் வன்முறை மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான சக…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசு மீது ஜேர்மன் அதிருப்தி! இலங்கைக்கான ஜேர்மனியத் தூதர் யூர்ஜென் வீர்த் மீது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சுமத்தி யிருக்கின்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கை அரசி டம் விளக்கம் கோருவதற்கு ஜேர்மன் அரசு தீர்மானித் திருப்பதாகத் தெரியவருகிறது. ""கொழும்புக்கான ஜேர்மன் தூதர் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செயற்படுகின்றார். அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது'' என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சமீபத் தில் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துஜேர்மன் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அமைச்சரின் இந் தப் பகிரங்கக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜேர் மனின் வெளிவிவகார …
-
- 0 replies
- 1.6k views
-
-
ரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களைப் பொறுத்து 2011ம் ஆண்டு திருப்புமுனைகளை ஏற்படுத்தும்! ருத்ரகுமாரன் நம்பிக்கை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆண்டாக அமையும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலண்டனில் இன்று நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலில் இணையத்தினூடாக உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறிலங்கா அரசு வன்னிப்போரில் இழைத்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கப்போகிறது என்றும் 5000 பொது மக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
'உண்மையில் இந்தச் சம்பவத்தில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும்' - நோர்வே தாக்குதலில் தப்பிய ஈழத்தமிழ் பெண் [ திங்கட்கிழமை, 25 யூலை 2011, 09:51 GMT ] [ நித்தியபாரதி ] நோர்வேயில் இடம்பெற்ற கோடைகால முகாம் மீது துப்பாக்கிதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது சிறிலங்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் [Khamshajiny Gunaratnam] என்ற இந்தப் பெண் 2004-2007 வரையான காலப்பகுதியில் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன், இவர் 2007ல் இருந்து தொழிலாளர் கட்சி இளைஞர் அணியின் ஒஸ்லோ பொதுச் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அவ்வகையில், வெள்ளியன்று இடம்பெற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலவச கைத்தொழில் கண்காட்சி நாளை ஆரம்பம் கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம் எனும் தொனிப்பொருளிலான இலவசக் கைத்தொழில் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (07) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களமும் கிராம அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜெய்னுலாப்தீன் நஸீர் அகமட்டின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பார். இதன்போது, மரவேலை, வனைதல், துணிவர்ணமிடல், நெசவு, கடைச்சல், மோட்டார் திருத்தம், நிறமூட்டல்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமே கவனத்தை திருப்பென உரத்த கோஷங்கள் படுகொலையுண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டமும் கண்டனப் பேரணியும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றபோது இன, மத வேறுபாடுகளை நிராகரித்து விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். படுகொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற திடமான உறுதிப்பாட்டுடன் திரண்டு வந்த மக்கள், கட்டுக்காவலுடன் உள்ள தலைநகரில் பட்டப் பகலில் இடம்பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென உரத்த கோஷங்களை எழுப்பினர். கொழும்பு பொரளையிலுள்ள ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஞாயிறு 23-12-2007 15:35 மணி தமிழீழம் [சிறீதரன்] மன்னார் சந்தைப்பகுதியில் சிறீலங்கா படையினரின் அடாவடித்தனம் சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் இன்று காலை கூட்டாக 7 மணியளவில் மன்னார் சந்தைப்பகுதியில் அமைந்துள்ள நடைபாதையோர வியாபாரநிலையங்கள் உட்பட 100ற்கு மேற்பட்ட கடைகளை அடித்தும் நொருக்கியும் குறைந்தது 80 தமிழ் முஸ்லீம் வர்த்தகர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது. சனிக்கிழமை இரவு இப்பகுதியில் சிகரெட் வாங்குவதற்கு சென்ற சிறீலங்கா காவல்துறையைசேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்
-
- 3 replies
- 1.6k views
-
-
இராணுவத் தளபதியாக இருந்தபோது ஜெனரல் சரத் பொன்சேகாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரி, இராணுவத் தலைமையக வளாகத்திற்குள் அழைத்துவந்த சரத் பொன்சேகாவின் சமையற்காரர் ஹனீபா நம் கடந்த 16ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் உயிரிழந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்த தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியாக இது இருக்கக் கூடும் என பொன்செகா முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு வழமைபோல் எமது மின்னஞ்சலுக்கும் பிரதியொன்றை அனுப்பியுள்ளனர். எனினும், சரத் பொன்சேகா மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக குண்டுதாரியை அழைத்துவந்த முஸ்லிம் பிரஜையான பொன்சேகாவின் சமையல்கார் …
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம்பொதுநூலகம் எரிக்கப்பட்டு 38 ம் ஆண்டு நிறைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேள்வியுற்று அதிர்ச்சியில் மரணமடைந்த தனிநாயகம் அடிகளாரின் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணம் பொது நூலக எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நினைவு தினம் ரெலோ கடசியினரால் இன்று நினைவு கூரப்பட்டது. இந்த நிகழ்வு ரெலோ அமைப்பின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் யாழ் பொது நூலக முன்றலில் நடைபெற்றது.இந்த நினைவு தின நிகழ்வில் ரெலோவின் உள…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மவ்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனிசாமி பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரமேஸ்வரி தாக்கதல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த சட்டமா அதிபர் குழு, பரமேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாததைக் கருத்திற்கொண்டே, பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி கூறி தீர்ப்பளித்தது. பரமேஸ்வரி நேற்றைய தினம் விடுதலை செய்யப்படவிருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சூழ நிரம்பியிருந்தமையினால், பொலிஸார் அவரை நீதிமன்றுக்கு அழைத்து வரவில்லை.எனவே, ஊடகவியலாளர் பரமேஸ்வரி இன்று நீதிமன்றுக்கு அழ…
-
- 4 replies
- 1.6k views
-
-
ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை எங்களை ஏமாற்றி விட்டார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமை…
-
- 8 replies
- 1.6k views
-
-
பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார் முன்னாள் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள் கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார…
-
- 7 replies
- 1.6k views
-
-
கொழும்பு புதுச்செட்டித்தெரு 70/27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார். வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வீட்டுச் சோதனைக்காக பிரவேசித்த கடற்படைச் சிப்பாய்கள் தனது கணவரை தாக்கி இழுத்துச்ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிலியந்தல பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக 68 பேர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்; குண்டுவெடிப்பு பகுதியை வீடியோவில் பார்க்க...................... http://isoorya.blogspot.com/2008/04/9_25.html
-
- 1 reply
- 1.6k views
-
-
நண்பர்களே, தாயக மனித அவலங்களுக்கு எதிராக தொடர்ந்தது குரல் கொடுங்கள். உங்களுக்கு முகவும் பரிச்சயமான ஒரு நோர்வே சமாதான தூதரின் பதிலை கீழே இணைத்துள்ளேன். உடனடியாக இந்த இன அழிப்புப் போரை நிறுத்தும் சக்தி இவர்களுக்கும் உண்டு. எனவே, தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் இவர்களுக்கு போரை நிறுத்த அழுத்தம் கொடுங்கள். அதுவுன் உடனடியாக. நன்றி. Dear Mr ....... Thank you for your e-mail. With Norway’s strong commitment to peace in Sri Lanka, it is important and valuable for us to receive different assessments of the situation in Sri Lanka. I would like to underline that your engagement is appreciated. I fully share your concern about developments. Conditions are becoming…
-
- 1 reply
- 1.6k views
-
-
வெள்ளி 23-03-2007 13:20 மணி தமிழீழம் [மயூரன்] ஊழல் மோசடிப் பணம் அமெரிக்க வங்கியில் 'வைப்பு' -எம்.பி. பாலித ரங்க பண்டார விமானப் படையினருக்கான விமானக் கொள்வனவில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்மிடமுண்டு. மிக் -27 விமானம் மூலம் பெறப்பட்ட பணம் தற்போது அமெரிக்க வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இம்மோசடிப் பணம் அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையரொருவரின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்யப்போவதாக கூறிய அரசு 1980 இல் தயாரிக்கப்பட்ட மிக்-27 விமானங்களைக் கொள்வனவு செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது எனவும் ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார குற்றம் சுமத்தியுள்ளார் pathivu.com
-
- 4 replies
- 1.6k views
-