Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மர்ம படகுகள் குறித்த அச்சத்தால் படையினர் கடலை நோக்கி தாக்குதல். வேலனை கடற்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.00 மணியளவில் கடற்படைமுகாமிலிருந்தும் கடற்படையின் டோராப் பீரங்கிப் படகிலிருந்தும் சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களும் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்று இருப்பதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதாகவும் இதனைத் தொடர்ந்து குறித்த படகுகள் தொடர்பான அச்சத்தால் கலக்கமடைந்த படைத்தரப்பு கடற்பகுதியை நோக்கி தாக்குதலை மேற்கொண்டு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தின் கடற்படைபரப்பின் மீது காலை 6.00 மணியளவில் இரு தடவைகள் படை உலங்கு வானூர்தி இரண்டு கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் இப்பிரதேச மீனவர்கள் தெரி…

  2. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு துணை இராணுவக்குழுக்களான ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு உட்பட பல குழுக்களை பயன்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்டுவந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த கொலைக் கும்பலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, கொழும்பின் பாதுகாப்புக்கும் மகிந்தா இந்த குழுக்களை பயன்படுத்தி வந்துள்ளார். கொழும்பில் தங்கியிருப்பவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா…

  3. வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதில் ஜே.வி.பி. உறுதி வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கும் தமது தீர்மானத்தில் மாற்றமில்லை என்பதை பல்வேறு ஊடகங்களுக்கும் தாம் அளித்து வரும் பேட்டிகள் மூலம்ஜவி.பி தலைவர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர். இதே சமயம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை இலங்கையில் தடை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்தமை போல புலிகளையும் தலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி மீண்டும அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஆனால், அவ்வாறு புலிகளைத் தடைசெய்ய அரசு முடிவெடுத்தாலும் கூட அடுத்த மாதம் 14ம் திகதி நாடாளுமன்றில் இடம் பெறவுள்ள, வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதராவக வாக்களிக்…

  4. அரசுடன் இணைந்தது பௌத்த பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய. சிங்கள பௌத்த பேரினவாத இனவெறிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமயவினர் இன்று புதன்கிழமை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே இந்தக் கட்சியிலிருந்து கருத்து பேதங்களால் வெளியேறிய வண. ஒமல்பே சோபித தேரவின் இடத்திற்கு, அக்கட்சியின் ஆலோசகராகவும் வன்முறை அரசியலை அக்கட்சிக்குள் புகுத்துபவராக அங்கம் வகித்து வரும் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியினர், தங்களை ஆளும் சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் ந…

  5. நாடாளுமன்றத்தில் பொன்சேகா: மறைந்திருந்து பார்த்தார் மகிந்தா சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அதிகம் பேசப்பட்ட விடயம் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பானது. பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுக்கும் அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தாலும் மகிந்தா ராஜபக்சா மங்கலான வெளிச்சத்தை உடைய ஒரு அறையில் அமர்ந்து நாடாளுமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அதிகம் பேசப்பட்ட விடயம் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பானது. பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுக்கும் சட்டங்கள் ஏதும் உண்டா …

  6. யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச - சு.ஞாலவன் - குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது …

    • 5 replies
    • 1.6k views
  7. கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி by : Jeyachandran Vithushan குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில்விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன. கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிடூபித்துள்ளனர். 1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட…

  8. பாறுக் ஷிஹான் நான் போராளிகள் அனைவரும் மதிக்கின்றவன் . ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(20) மாலை மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் நான் போராளிகள் அனைவரும் மதிக்கின்றவன் . ஏனெனில் எனக்கு தோள் கொடுத்தவர்கள் அவர்கள்தான் .ஜெயந்தன் படையணி என்றால் உங்களுக்கு தெரியும் எதிரிகளுக்கு நடுக்கம் பிடிக்கும். உங்களால் எங்களத…

  9. புலிளிடம் இருந்த 21 கப்பல்ககளில் 11 கப்பல்களை கடற்படையினர் அழித்துள்ளனர்-தினேஷ் குணவர்த்தன! [ பிரசுரித்த திகதி : 2011-01-06 04:19:00 PM GMT ] புலிகளிடம் இருந்த 21 கப்பல்களில் 11 கப்பல்களை கடற்படையினர் அழித்துள்ளதாகவும் மீதமுள்ள கப்பல்களை கைப்பற்றுவதற்காக அரச புலனாய்வுதுறையினர் அந்த கப்பல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நாடுகளில் புலனாய்வுதுறையினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ர பெரேரா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளின் இந்த கப்பல்கள் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு…

    • 2 replies
    • 1.6k views
  10. 2000 மில்லியன் மக்களைக் கொண்ட பொது நலவாய நாடுகளின் குழுமத்தில் ஜனநாயகமும், மனித உரிமையும் எவ்வளவு முக்கியம் என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் சிறுபிள்ளைத்தனமாக அவுஸ்ரேலிய பிரதமர் யூலியா கில்லட் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார் பத்திரிகைகள் கூறியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிப்பகுதியில் 40,000 மக்களைக் கொன்றுள்ளது. சரண்டைந்தவர்களை சுட்டுக்கொலை செய்துள்ளது, பெண்களை பலாத்காரம் செய்துள்ளது. மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியுள்ளது. இவற்றையெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. மிகப்பெரிய, கொடூரமான போர்க்குற்றங்களை புரிந்துள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலிய பிரதமர் நல்ல பெயரை வாங்கி கொடுக்க நினைத்தது எப்படி?. இதே வேளை கனேடியப் பிரதமர்…

    • 3 replies
    • 1.6k views
  11. குடும்பிமலை காட்டுக்குள் பிரவேசிக்க முனைந்த அதிரடிபடையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 18 அதிரடைபடையினர் காயமடைந்தனர்.புலிகளின் மோட்டார் தாக்குதலால் மற்றும் ஆட்டிலெறி தாக்குதலால் காயமடைந்த 11 அதிரடிபடையினர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருகின்றனர் அத்துடன் 7 அதிரடி படையினர் மாகா ஓயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலிகள் இந்த சம்பவம் தொடர்பாக எந்த செய்தியையும் இன்னும் வெளியிடவில்லை ஆதாரம் -தமிழ் நெட் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22284

  12. சிறிலங்கா அரசு தீவின் கிழக்கு பகுதியில் போராளிகளின் பலமிக்க பிரதேசங்களை கைபற்றிய பின்னர் கடந்த திங்களன்று "புலிகளை காட்டுக்கு அடித்து விரட்டுவோம்" என்று சூழுரைத்துள்ளது. "ஆனால் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் மேற்கொண்டு யுத்தத்தை தவிர்க்கலாம்" என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தீர்கள், இனி அவர்கள் ஆடும் முறை. அதற்குள் என்ன அவசரம்!

  13. http://pagetamil.com/?p=2427 தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆளும் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. Share.

    • 1 reply
    • 1.6k views
  14. புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலையிலும் மாலையிலும் பல தடவைகள் விமானக் குண்டுவீச்சு! பாடசாலை மாணவர்கள் அல்லோல கல்லோலம்!! முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்றுக் காலை யிலும் மாலையிலுமாக மிக் விமானங்கள் 15 இற்கு மேற்பட்ட குண்டு களை வீசித் தாக்கின. "மிக் 27' ரக விமானங்கள் நான்கு, புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்பை அண்டிய பிரசேத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட குண்டுகளை வீசின. இதனால் பொது மக்கள் அவலங்களுக்கு ஆளா கினர். முதலில் காலை 8.25 மணியளவில் விமானத் தாக்குதல் ஆரம் பிக்கப்பட்டது தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் பாடசாலைகளில் காலை ஒன்று கூடல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனால் மாணவர்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் சிதறி பாதுகாப்புத் தேடி ஓடினர்…

  15. ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் நடவடிக்கையினால் இக்கட்டானநிலை ஏற்பட்டுள்ளது மாவிலாறு பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா வீரகேசரி நாளேடு மாவிலாறு அணைக்கட்டு விவகாரத்தை புலிகளுடன் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் சுய அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையால் இன்று இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது. சேருவில விகாரையின் தேரர் கூட இதனை உறுதிப்படுத்தியிருந்தார் என்று அரசியல் அமைப்பு விவகார ,தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மாவிலாறு அணைக்கட்டு பிரச்சினை இன்று பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உ…

  16. புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி! i விடுதலைப் புலிகள் 600 பொலிசாரைக் கொன்று போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஐ.நாவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஆதரவாக தான் சாட்சியமளிக்க மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா தெரிவித்துள்ளார். தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரிடம் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளார்களென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் வ…

    • 9 replies
    • 1.6k views
  17. அடேல் பாலசிங்கம் “தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு’’ என்பதனை “சுதந்திர வேட்கை’’ எனும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். இந்நூல் 2002இல் வெளிவந்தது. இந்நூலில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி முன்னெடுத்த “விடுதலைப் புலிகள்’’ அமைப்பை மையப்படுத்திய நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்தது முதல் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது வரையான அறிமுகம் தொடங்கி பிரேமதாசா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணப் போருக்குள் வாழ்க்கை, வன்னியில் அனுபவித்த இன்னல்கள்... எனப் பல்வேறு காலகட்டப் பதிவுகள் உள்ளன. குறிப்பாகப் பெண் போராளிகள் பற்றிய பதிவுகளில் இருந்து சில பகுதிகளை இங்குத் தொகுத்துள்ளோம். புலி…

  18. வடபோர் முனையில் கடந்த வாரம் நிகழ்ந்த மோதல்கள் பற்றிய செய்திகளை கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" வார ஏடு தொகுத்து வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

    • 1 reply
    • 1.6k views
  19. கப்டன் பண்டிதர் அவர்களின் வீரவணக்க நாள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது. கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) கம்பர்மலை பிறப்பு : 25.12.1959 – வீரச்சாவு : 09.01.1985 அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக…

  20. போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:13 [iST] சென்னை: இலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில், இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன…

    • 6 replies
    • 1.6k views
  21. நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1291079

  22. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று (25) சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த வருடத்தில் பல தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதால், மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கக்கூடிய வகையில், இந்த வரவு – செலவுத் திட்டம் அமையலாமென, பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி, நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையிலான திட்டங்களை கொண்டிருக்கும் வகையிலேயே, இன்றைய வரவு – செலவுத் திட்ட யோசனைகள் அமைந்திருக்குமென்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டுள்ள…

  23. வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் வெள்ளிக்கிழமை கனகராயன் குளத்தை கைப்பற்றியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியில் தமது முன்னரங்குகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புளியங்குளத்திலிருந்து கிழக்காக 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இப்பகுதியை கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இதன் மூலம் ஓமந்தையிலிருந்து 2 கிலோ மீற்றர் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கனகராயன்குளம் கைப்பற்றப்பட்ட வேளை அப்பகுதியிலிருந்த ஆறு பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர் எனவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.uthayan.com/p…

  24. ஞாயிற்றுக்கிழமை, 13, செப்டம்பர் 2009 (22:47 IST) ஈழத்துக்காக அனைவரும் குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும்: சேரன் தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டு பாராதிராஜா மௌனம் காக்கிறார் என்றும், ஈழத்தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும்போது பாரதிராஜாவின் மௌனம் கலையும் என்றும் இயக்குநர் சேரன் கூறியுள்ளார். அமீர் தயாரித்து நடித்துள்ள யோகி படத்தின் இசை வெயியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீப காலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மௌனம் காத்து …

  25. இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக எனக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளும் பிரசாரத்தில் ஈடுபடலாம். பிரபாகரனின் பெற்றோரை ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பொன்சேகா. அரசியல்வாதியாகி விட்டதால் அதிரடியாகவும் பேசப் பழகி விட்டார். கிட்டத்தட்ட நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல அள்ளி விட்டு பேச ஆரம்பித்துள்ளார். கொழும்பில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தால…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.