Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா சிறுவர் நிதியம் உருவாக்கும் சிறுவர் சினேக மாநகர் தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசேப்) ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன்,சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல்,மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன,மாநக…

  2. இந்திய உளவு பிரிவும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து மதக்கலவரம், ஜாதிக்கலவரம் ஆகியவற்றைத் தூண்டிவிடும் நோக்கில் இறங்கியுள்ளது இனியும் இருளில் கிடக்காதே தமிழா என்று தன்னையே ஒளிச்சுடராக்கி தமிழர் மனங்களில் தமிழின விடுதலை உணர்வை ஊட்டிவிட்டுப்போயிருகின்றான

    • 8 replies
    • 1.5k views
  3. புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக கோத்தா கவலை நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுமாயின் எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தான் எங்கு செல்வதென்பதை கண்டறிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துப் பார்க்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு வரவேண்டியதில்லை. என்னுடைய நிகழ்ச்சி நிரலை கேட்டால் நான் வழங்குவேன். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நேரம் செலவிட வேண்டியதில்ல. கடந்த காலத்தில் புலனாய்வுத் துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளவர்களைப் பற்றியே தகவல் திரட்ட உத்தரவு பி…

    • 4 replies
    • 411 views
  4. இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை; மங்கள சொன்ன கருத்து குறித்து பொலிஸார் விசாரணை இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை எனத் தெரிவித்தமை குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் சுமார் இரண்டு மணிநேரம் மங்கள சமரவீரவை அவரது கருத்துக் குறித்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதை மங்கள உறுதிப்படுத்தினார். மங்கள சமரவீர வாக்கு மூலம் வழங்குவதற்காகச் சென்றவேளை அவருடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சிலரும் சென்றனர். ஒரு நோக்கத்துக்காக இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டமை இதுவே தல்தடவை என மாத்தறை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் மங்க…

    • 12 replies
    • 958 views
  5. மட்டக்களப்பில் வீடற்றோர் பிரச்சினை: துறைசார் அமைச்சுடன் சாணக்கியன் கலந்துரையாடல்! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/07/R.Sanakkiyan-2.jpg தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுரத்தவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றதுடன், இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை…

  6. ஐ.எஸ். குறித்து எச்சரித்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளவில்லை – விஜயதாச by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/09/Wijeyadasa.jpg ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து தான் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால், பயங்கரவாத தாக்குதல்கள் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், குறித்த தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற …

  7. இராணுவ நடவடிக்கையின் பின்னர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது அவசியமானது என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் இணக்கத்தையும் பெறுவது அவசியமானது. பிரதான இரண்டு கட்சிகளால் இணங்கப்படாத தீர்வுதிட்டமானது தமிழர்களாலும், சர்வதேச சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதனை அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதேநேரம், ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் வித்தியாசமான கொள்கையையே கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அனைத்துக் கட்சிகளும்…

    • 0 replies
    • 1.3k views
  8. மதத் தலங்கள் அழிக்கப்படுவது தொடர்பாக கலைஞர் கூறியது பொய் - குடாநாட்டில் இராணுவ அச்சுறுத்தல் இல்லை – டக்ளஸ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போதில்லை ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றி அதனை முன்னெடுக்க பாடுபடுகின்ற பலருள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று கச்சதீவில் அவரைச் சந்தித்த இந்திய பத்திரிகையாளர்கள் பலரும் அவரிடம் பிரபாகரனது இருப்பு பற்றி தொடர்ந்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காது தவிர்க்க முற்;பட்ட அமைச்சர் ஒரு கட்டத்தில் இவ்வாறு பதிலளித்தார். அத்துடன் யாழ்.குடாநாட்டின் தற்போதைய மேம்பாடு தொடர்பில் உண்மை நிலவரங்களை அறிய இந்திய ஊடகவியலாளர்களை நேரில் வருகைதருமாறு அவர்; அழைப்பும் விடுத்தார். கச்சதீவு புனித அந்தோனிய…

    • 5 replies
    • 1.1k views
  9.  சுன்னாகத்தில் வாள்வெட்டு: பொலிஸார் இருவர் படுகாயம் செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் சந்தை பகுதியில், மர்ம நபர்கள் இருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த பொலிஸார் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் இலக்கத்தகட்டையும், முகத்தையும் துணியால் மறைத்தபடி வந்த இருவரே இவ்வாறு வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http:/…

    • 6 replies
    • 1.1k views
  10. யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் – 3 ஆயிரத்து 915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில்..! யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக 3 ஆயிரத்து 915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அ…

  11. விமல் வீரவன்ச வீட்டில் இளைஞன் மரணம்: காதல்தான்காரணமா? கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் மர்மமான முறையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவமானது விமலின் மகளுடனான காதலே காரணமென தெரிவிக்கப்படுகிறது. 24 வயதான திஸாநயக்க முதியஸ்செலாகே லஹிரு ஜனித் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது. அந்த அறிக்கையின் படி இளைஞரின் மரணம் இயற்கையான மரணம் அல்ல எனவும் சந்தேகத்திற்குரிய மரணம் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய மேலதிக விசாரணைக்காக சடலத்தின் பாகங்களை அரசா…

  12. யாழ்.பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவினை சங்கிலியன் பூங்கா என மாற்ற யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த பூங்காவை சங்கிலியன் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதுடன் நவீன முறையில் புனரமைப்பதற்கும் மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த புனரமைப்பு பணி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ். மாநகர சபை மண்டபத்தில் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. எனவே பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இதனை சிறந்தமுறையில் பயன்படுத்தக் கூடிய வகையில் யாழ். மாநகர சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. நவீன முறையில் அமையும் இந்த பூங்காவின் மாதிரி உத்தேச விபரணப்படம் கட்டிடக்கலை நிப…

    • 4 replies
    • 522 views
  13. முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங் கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார்.சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்…

  14. 'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத்தரவும்' தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதனை மீட்டுத்தருமாறு, இலங்கைக்கு உத்தியோகபூர்வ குறுகியகால விஜயத்தை மேற்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தூதுக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘30 வருடகாலங்களாக இடம்பெற்ற அழிவுப்போரிலிருந்து படிப்படியாக முன்னேறிவரும் நாட்டை பல்வேறு திட்டங்கள் மூலமாக முன்னேற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் பாராட்டுகிறது. ‘இந்நாட்டிலுள்ள …

  15. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. October 25, 2020 இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அவர்களால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு. ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தார். ஞாயிற்றுக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று பாதுகாப்பு நடைமுறையினைக் கருத்திற்கொண்டு குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசட…

    • 8 replies
    • 1k views
  16. இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது..உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது. எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழ…

    • 28 replies
    • 3.1k views
  17. இலங்கையில் நெடுஞ்காலமாக இனவாத சிங்கள அரசால் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி அல்லலுற்று, அவதியுற்று, வாழ்கின்றனர். நடந்த உள்நாட்டு போரின் , போது ஒரே நேரத்தில் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டவர்களில் முதியோர்கள், பெண்கள், சிறார்கள், போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதற்கு பதில், தமிழ்முகாம்களில் அடைத்து வைத்து தொடர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இதன் உச்சக்கட்டமாக 12 வயது பாலகன் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் எந்த குற்றச்சாட்டும் இன்றி கொடூரமான முறையில் கொல்லப்பட்டான். இராஜபக்சே அரசின் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் தொடராமல் …

  18. ட்ரம்பின் வெற்றியை முன்னுதாரணமாக வைத்து அரசியலில் இறங்கவுள்ள கோத்தா! [Sunday 2016-11-13 08:00] முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய வெற்றியின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கோத்தபாய ராஜபக்ச தனது ட்விட்டர் கணக்கில்,டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை இலங்கையர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பாடம் என குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு வெற்று வாக்குறுதி வழங்கும் அரசியல்வாதிகள் வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டமையாலேயே டொனால்ட் டரம்ப் வெற்றி பெற்றார…

    • 0 replies
    • 265 views
  19. லாகூரில் இலங்கை கிரிக்கட் அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய விசேட ஒலிபரப்பு சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளரான திலீபன் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார் இந்த தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமா என ஒலிப்பரப்பாளர் கேட்டபோது, அது உண்மையல்ல என திலீபன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அது தொடர்பாக கருத்து கூறவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முல்லைத்தீவில் இன்றும் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருப்பதாக தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் க…

  20. இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது – ஆனந்தவிகடன் அடுக்கடுக்கான போர்க் குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால்ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் இணைய வழி உரையாடல் நடத்தினேன்… : ”ஐ.நா-வின் 22-வது மனித உரிமை அமர்வுகள் ஜெனிவாவில் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஈழ மக்களுக்கு நன்மை பயக்குமா?” ”ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேறவே செய்யும் என்றாலும், அந்தத் தீர்மானம் சிறீ…

  21. யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்’ Bharati November 8, 2020யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்’2020-11-08T22:28:43+05:30 FacebookTwitterMore இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ மற்றுமொரு கட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூ…

  22. ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றத்தை அனைத்துலக சமூகம் கிளர்ந்தெழுந்து கண்டிக்க வேண்டும் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. தற்கொலை அங்கி, ஐ.எஸ் கதை, பிக்குவின் இனவாதம் : இராணுவ புரட்சியை ஏற்படுத்த இனவாதிகள் எடுத்து கொண்ட ஆயுதங்களாகும் - சிவில் அமைப்புக்கள் எச்சரிக்கை இனவாதிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எடுத்துக்கொண்டுள்ள கருவியே இராணுவ புரட்சி சதித்திட்டமாகும். வடக்கில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்டமை, ஐ.எஸ் தொடர்பில் கூறப்பட்ட கருத்துக்கள், பிக்குவின் இனவாத கருத்துக்கள் போன்ற வரிசையில் தற்போது ஆட்சியை கைப்பற்ற இனவாதிகள் எடுத்துக்கொண்ட ஆயுதமே இந்த இராணுவ புரட்சி கதையாகும். இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கதும் வெட்கப்படகூடியவைலயாகும் என்று சிவில் அமைப்புக்கள தெரிவித்துள்ளன. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழலை அழிக்கும் செயற்பாடு பக்கச்சார்புடையதாக…

  24. இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை.. : விளக்குகிறார் கமலா ஹரிஸின் மாமனார் *உலகத்தில் உள்ள மக்கள் குழுமங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கமலா அதுபற்றி கரிசனை கொண்டு நிச்சயமாக குரல் கொடுப்பார் *சர்வதேசத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு மூலோபாய அடிப்படையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாற்றமடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமுள்ளன *ட்ரம்பின் நிருவாக முறைக்கு நேர் எதிரான தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான ஆட்சியையே பைடன்-கமலா கூட்டணி முன்னெடுக்கும் 'அவர் அவருடைய தாயாரைப் போன்றவர். அவருடைய தாயாரான சியாமளாவும் தான் எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியடைய வேண்டும் என்று உறுதியான நம்பிக்கையுடனேயே செயற்படுவார். அதில் வெற்றியும் காண்பார். அப்படியொரு தீர்மானத்தினை எடுத்தே அவர் 1958இல் …

  25. முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லத்தை தூய்மையாக்கும் பணி ஆரம்பம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் அண்மையில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு கமலேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகளவிலான மக்களும் இந்த சிரமதான பணியில் ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் கலந்து கொண்டுள்ளனர்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.