ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143580 topics in this forum
-
சுவிஸ்முரசம் கிழக்கு மாகாணத்தில் மிஞ்சியிருந்த தமிழர்களின் உரிமைகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் தொடர்ச்சியாக பறிபோய்கொண்டிருப்பது குறித்து இன்று என்னோடு கலந்துரையாடிய திருகோணமலையை சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவர் கவலை தெரிவித்தார். கிழக்கு மாகாண தமிழர்களின் பாரம்பரிய நகராக திகழும் திருகோணமலை இன்று பேரினவாதிகளின் கைக்குள் செல்வதற்கு அமைச்சர் முரளிதரன் மும்முரமாக ஈடுபட்டுவருவது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் கிழக்கில் தமிழர்கள் அரசியல் அனாதைகளாக நின்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அயராத முயற்சியினால் தமிழ் உணர்வுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு “தமிழ் தேசிய கூட்டணி”உருவாக்கப்பட்டு அத…
-
- 2 replies
- 736 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற போதும், இந்தியாவை தாம் பிரதிநிதித்துவப்படுத்தவிருப்பதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். எனினும் இந்த மாநாட்டுக்கான இந்தியாவின் குழு, யாரின் தலைமையில் இலங்கை வரும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் அல்லது துணை ஜனாதிபதி ஹமிட் அன்சாரி ஆகிய மூவரில் ஒருவர் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று எதிர…
-
- 1 reply
- 663 views
-
-
இலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை "லக்ருவணி மெதகம" என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய "இருதின" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது. இன்று, 'மஹிந்த சகோதர' நிறுவனத்தின் 363 பேர் பலதரப்பட்ட அரச பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைக்கு அமைய இப்பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் "சகோதர நிறுவனத்தின்" உறுப்பினர்கள் என்பது மட்டுமேயாகும். அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வைத்து மேற்குறிப்பிட்டவாறு கருத்து வழங்கியவர் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள …
-
- 0 replies
- 988 views
-
-
’ராஜபக்ஷ குடும்பமே நாட்டுக்கு சுமை’ பா.நிரோஸ் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையில்லை என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்ஷக்களின் குடும்பமே நாட்டுக்கு சுமை என்றும் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் பசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த முன்னாள் அரசாங்கத்திலேயே 87 சதவிதமான அரச ஊழியர்கள் சேவைக்கு இணைத்துகொள்ளப்பட்டுள்ளனர் என்றார். உண்மையில் நாட்டுக்கு ராஜபக்ஷக்களின் கு…
-
- 0 replies
- 407 views
-
-
நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் எனவும், அவ்வாறு மறுக்கப்பட்டால் அவர்களை மூன்றாம் நாடொன்றில் குடியேற்றுவதற்கான முயற்சிகள் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுமெனவும், அதுவும் சாத்தியப்படாது விட்டால் அவர்கள் பப்புவா நியூகினியா தீவுகளிலேயே குடியேற்றப்படுவார்கள் என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரி படகுகள் மூலம் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளில் ஒரு தொகுதியினர் நௌரு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள்…
-
- 2 replies
- 289 views
-
-
பிரபாகரன் குறித்த, டக்ளஸின் கருத்திற்கு.. செல்வராசா கஜேந்திரன் எதிர்ப்பு! பிரபாகரனின் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “போதைப்பொருளால் வடக்கு, கிழக்கில் எமது சமூகம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது தொடர்பில் சிறிதரன் கருத்து வெளியிடுகையில், அந்த உண்மையை சகித்துக்கொள்ள முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொய்யான கருத்தை முன்வைத்தார். எங்களுடைய தேசியத் தல…
-
- 1 reply
- 387 views
-
-
அண்மையில் நடைபெற்ற யுத்த நடவடிக்கையின் போது இலங்கை அரசாலும் படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் டப்ளினில் நடைபெற இருக்கும் மாநாட்டில் ஆராயப்பட இருக்கிறது. இலங்கை, இந்திய, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தனிப்பிட்ட நபர்களும் இந்த மாநாட்டிற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் மூலம்: http://www.tamilstar.org
-
- 0 replies
- 554 views
-
-
கொழும்பில் இவ்வாரம் பொதுநலவாயத்தின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால் சிறிலங்காவின் ஆளும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். இவர்களில் சிலர் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்கு ஒன்றாக இணைந்துள்ளனர். ஆகவே இந்த ராஜபக்சக்கள் யார்? 2005லிருந்து சிறிலங்காவின் அதிபராக ராஜபக்ச உள்ளார். இவர் நாட்டில் வாழும் மக்களின் அரைவாசிப் பேரின் வாக்குகளை மட்டுமே பெற்று நாட்டின் அதிபராகினார். மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தை இவர் நிறைவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ்ப் புலிகளை அழித்ததன் மூலம் பிரபலமடைந்துள்ளார். 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிலங்கா அத…
-
- 0 replies
- 695 views
-
-
யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் ஒரு மணி நேர கதவடைப்பு. IMAGE யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடைகளைப் பூட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவிற்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – ஐந்து சந்தி பகுதியில் ஒன்றுகூடிய முஸ்லிம் மக்களால் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இன்றைய தினம் ஒரு மணி நேரம் கடைகளை மூடி தமது எதிர்ப்பை வெளியி…
-
- 0 replies
- 563 views
-
-
இலங்கை அகதிகள் போலித் தரகர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென மலேசிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேறும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்து அனேக இலங்கையர்கள் மலேசியாவிற்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு மலேசியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் போலி முகவர்களினால் ஏமாற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. வேறும் நாடுகளுக்கு செல்லும் நோக்கில் பல இலங்கையாகள் சட்டவிரோதமான முறையில் மலேசியாவை சென்றடைவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலியாஇ நியூசிலாந்து கனடா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து போலி முகவர்கள் இலங்கை அகதிகளை ஏமாற்றுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வா…
-
- 0 replies
- 568 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனையும் சந்திக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த போது, வடக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரித்தானியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, பிரித்தானியப் பிரதமருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பரிமாறிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ம…
-
- 29 replies
- 2.1k views
-
-
(ஆர்.யசி) நாட்டில் 70 வீதமான மக்கள் மிகவும் வறுமையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாவும், எரிபொருள் விலை அதிகரிப்பு ஏனைய சகல செயற்பாடுகளையும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், இது நாட்டில் உணவு பஞ்சமொன்றை நோக்கி கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார். நாட்டில் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டுள்ள வாழ்வாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் இன்றைய நிலைமையில் பொதுமக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். 70 வீதமான மக்கள் மிகவும் வறுமையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு ஏனைய சகல செயற்…
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அதுகுறித்து ஆராய முடியும். ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரியை மட்டுமே முன்வைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு, அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை. பதிலளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டப்பின்னணியைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளோம்…
-
- 0 replies
- 763 views
-
-
அவசரகாலச்சட்டம் மேலும் நீடிப்புhttp://meenakam.com/?p=2134 தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான காரணம் என்னவென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இன்று சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் இவ்விவாதத்தில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றுகையில், உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்றதொரு அவசரகாலச்சட்டம் இல்லையெனத் தெரிவித்தார். அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டால் நடைபெறப்போகும் அதிபர் தேர்தல் எவ்வாறு நீதியாகவும் ந…
-
- 0 replies
- 373 views
-
-
எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாத, வளைந்து கொடுக்காத அணிசேரா கொள்கையே எமது வெளிநாட்டுக் கொள்கையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். எமக்கு சிறந்த சட்டம், நீதிக் கட்டமைப்பு உள்ளது. எனவே, சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சனி க்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் குழுநிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுதந்திரத்தை எதிர்பார்க்கும் அனைவரினதும் தந்தை மண்டேலாவின் மறைவுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமக்…
-
- 3 replies
- 659 views
-
-
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது January 11, 2022 தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலையே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்திரம் வழங்கி வருகின…
-
- 1 reply
- 344 views
- 1 follower
-
-
கரவெட்டி வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சபைத் தலைவர் பொ.வியாகேசுவின் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, மாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, இ.ஆர்னோல்ட், க.பரஞ்சோதி, வே.சிவயோகன், எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், என்.சர்வேஸ்வரன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் சிறுவர்களது இசையணி மற்றும் நாதஸ்வர மங்கல ஒலி வரவேற்புடன் வரவேற்று அ…
-
- 0 replies
- 462 views
-
-
யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை – பிரதமர் ஏறாவூர் நகர சபையின் புதிய கட்டடம் இன்று பிரதமர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க… யுத்தத்தின் பின்னர், கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. அதனால், இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக எமது துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டங்களை முன்வைத்துள்ளோம். இதற்காக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து…
-
- 2 replies
- 331 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24 08 2017 , 8PM
-
- 0 replies
- 456 views
-
-
மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது – சுமந்திரன்! நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ சுமந்திரன், நாடு எ…
-
- 2 replies
- 237 views
-
-
சிங்களத்தின் கருணா! "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்றொரு சொல் வழக்குண்டு. இயற் பியல் விதிக்குள்ளும் இது வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. What goes around, comes around -என ஆங்கிலத்தில் அழகாகச் சொல்வார்கள். செய்த வினைகள் நம்மைச் சூழ வரும், தன்வினை தன்னைச் சுடும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் -போன்ற தமிழரின் அறநெறிச் சொல்லாடல்களும் அந்த "சுற்றித் திரிவது கிட்ட வரும்' என்ற விதியையொட்டியதே. ராஜபச்சேவா, பொன்சேகாவா என்பது தமிழர்களுக்கு இன்று முக்கியமே அல்ல. ஆலகால விஷம் கக்கும் சிங்களப் பேரினவாதம் என்ற பெரும் பாம்பின் இரு தலைகள் இவர்கள். பாம்பு ஒன்று, தலைகள் இரண்டு என்பது மட்டும்தான் இன்றைய வேறுபாடு. சேனநாயகேக்கள், பண்டார நாயகேக்கள…
-
- 9 replies
- 2k views
-
-
எங்களின் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று அரசாங்க அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் தீர்வினை மேற்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுகிறது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்கும் திறனை அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது குறித்து வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு நான்கு வருடங்களே கடந்துள்ளன. இந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் அளப்பரியவை. இந்த விடயத்தை பாராட்டாமல், இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வ…
-
- 2 replies
- 687 views
-
-
மீண்டும் ஒரு சர்வதேச தினத்தை துயரத்தோடு எதிர்கொள்கின்றோம்: இரா.சம்பந்தன் பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது மற்றுமொரு சர்வதேச தினத்தை மனக் கவலைகளோடும் துயரத்தோடும் நாம் எதிர்கொள்கிறோம். பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் …
-
- 0 replies
- 300 views
-
-
தமிழர்களின் ஆயுத போராட்டம் தோல்வியடைய யார் காரணம்? இராஜ தந்திர ரீதியில் செயற்பட தவறியமையே தமிழர்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோல்வியடைய காரணம் என வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். உலகிலே சிறந்த ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என உலக நாடுகளினால் பெருமையைக போசப்பட்ட தமிழர்கள் இந்த போராட்டங்களினால் எதனை பெற்றுக்கொண்டார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில் - மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 321 views
-
-
ஜெனிவா கூட்டத்தொடரில் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள கணநாதன் பேச்சு (ஆர்.யசி) இம்மாத இறுதியில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆபிரிக்க கண்டத்தில் இருபது நாடுகளுக்கான உயர் ஸ்தானிகரும், ஆபிரிக்காவிற்கான இலங்கை பிரதமரின் சிறப்பு தூதுவருமான வேலுப்பிள்ளை கணநாதன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுதும் அதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பரந்த அளவிலான பேச்சுவ…
-
- 3 replies
- 520 views
-