Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் தமிழகத்திற்குசெல்ல தயாராகுங்கள் -கூறுகிறார் கலகொட அத்தே ஞானசார தேரர் விக்னேஸ்வரன் உட்பட ‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு போவ தற்கு தயாராகவும் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் வாக்குகளால் வடக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் இன்று நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடந்து கொள்கின்றார். இலங்கையின் வரலாற்றையே மாற்றுகின்றார். அத்துடன் அவர் இரண்டாவது பிரபாகரனாக நடந்…

  2. ‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல “‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியதையே தமிழ் மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. போராட்டங்களை மேற்கொள்வது அவர்களின் உரிமை, பங்கு பற்றுவதும் பங்குபற்றாமல் இருப்பதும் எமது உரிமை. நான் போராட்டத்துக்கு எதிரானவனல்ல, ஆனால் போராட்டத்தில் பங்குபற்றவில்லை. …

  3. ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் மேற்படி மக்களெழுச்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அதற்கான செயற்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தியிருக்கின்றனர். மேலும் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கிவரும் புத்திஜீவிகள் ஆகியோரும் இதற்கான ஆதரவை வழங்கிவருகின்றனர். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலமாக இருந்தவரைக்கும் உள்ளுக்குள்ளும், ச…

  4. ‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி சேர் பொன்னம்பலம் இராமநாதனின் குடும்பத்தைச் சேரிந்தவரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற ஒருவர். சட்டவாளராகவும், உயர்நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த இவர் தற்போது வடமாகாண முதலமைச்சராகவும் பணியாற்றுகின்றார். இவர் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு மனிதராகவும் திகழ்கிறார். அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன், பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு மீதான விவாதம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் சிலோன் ருடே ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது: கேள்வி: புதிய அரசியல் யாப்பில் குறிப்பிட…

  5. ‘ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை’ “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை" என, புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலங்கை உள்ளாகியுள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில குழுக்கள் இப்படியான வதந்திகளை தமது நலனுக்காக பரப்பலாம். எவ்வாறிருப்பினும், அப்படியான ஒரு நிலை ஏற்படுமாயின், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் உள்ளனரெனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்த…

  6. ‘ஐ.தே.க இரண்டாகப் பிளவுபட்டுள்ளது’ ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். கட்சி ஆதரவாளர்களில் 95 சதவீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்துவிட்டது. 25 வருட காலம் கட்சித் தலைவராக இருந்து அவர் முதுமையடைந்துள்ளார். எனத் தெரிவித்த பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, சஜித் பிரேமதாஸவுக்கு கட்சித் தலைமையை வழங்குமாறு கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர் என்றார். திவுலபிட்டிய- மருதகஹமுல்ல பிரதேசத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர் தான் அரசியலில் …

    • 1 reply
    • 327 views
  7. ‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்! கதிர் ‘ஐ.நா. கடித விவ­கா­ரம்’ விளக்­கம்­கேட்டு 9 பேருக்கும் தமிழ் அர­சுக் கட்சி கடி­தம்! ஜெனி­வா­வுக்கு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி எழு­திய கடி­தத்­துக்கு மாற்­றுக் கடி­தம் எழு­திய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட 9 பேரி­ட­மும், தமிழ் அர­சுக் கட்­சி­யின் பதில் பொதுச்­செ­ய­லா­ளர் ப.சத்­தி­ய­லிங்­கம் விளக்­கம் கேட்­டுக் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். தமிழ் அர­சுக் கட்சி ஜெனி­வா­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தில், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீது விசா­ரணை நடத்­த­ வேண்­டும் என்ற விட­யம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அந்த விடயத்தில் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக் கட்சியின் …

  8. ‘ஐ.நாவுடன் இலங்கை இணைந்து செயற்படும்’ ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் அதன் செயற்பாடுகளையும் தொடர்ந்து மதிக்கவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் செயன்முறைகள் தொழிற்படும் முறைமைகள் என்பவற்றுடன் இணைந்து வேலை செய்யுமெனவும் அரசாங்கம் கூறுகிறது. கொழும்பில் உள்ள ஐ.நா வளாகத்தில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 72ஆவது தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐ.நாவுடனான இலங்கையின் தொடர்பு அப்போது இருந்ததைவிடவும் தற்போது சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். “ஐக்கிய நாடுகள் இரண்டு கொடிய யுத்தங்களைத…

  9. ‘ஐநா அறிக்கை சரியானதே’- த.தே.கூட்டமைப்பு இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தர் செவ்வி ஐநா குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள சாராம்சங்களை இலங்கையில் சில நாளிதழ்கள் அண்மையில் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்ககளை நிபுணர் குழு சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து எடுத்துள்ள தீர்மானங்களே என தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் அதிலுள்ள விடயங்களை புறந்தள்ளாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற…

  10. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 19ஆம் தேதி விசேட அறிக்கையொன்றின் ஊடாக இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார் இதையடுத்து, மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடந்த 19ஆம் தேதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் (பிப்ரவரி 20)தெரிவித்திருந்தார். 30/1 தீர்மானம் பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கையின் இணை அனுசரணையில் ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையே 30/1 தீர்மானமாக…

  11. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய சில இலங்கை முஸ்லிம்கள் தமது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் கவலை தெரிவித்தார். "இலங்கையில் முஸ்லிம்கள் மீது கடந்த காலங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம், முஸ்லிம் …

  12. ‘ஒபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது’ August 14, 20156:40 pm “பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வந்திருக்கின்றார். விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்தால், நுவரெலியாவுக்கு போகலாம், கடற்கரைக்கு போகலாம் ஆனால், யாழ்ப்பாணத்துக்கு ஏன் போகவேண்டும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். “அவர், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கின்றார். புதைக்கப்பட்டுள்ள புலிகளை உசுப்புவதற்கே அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். டொனி பிளேயர் அல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது” என்று …

  13. ‘ஒப்­பந்தம் குறித்து மோடி பேச­மாட்டார்’ (எம்.எம்.மின்ஹாஜ்) இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் விஜ­யத்தின் போது திருகோண­மலை எண்ணெய்க் குதங்கள் தொடர்­பான எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­ப­ட­மாட்டார். அத்­துடன் எமது நாட் டின் எந்­த வொரு துறை­மு­கத்­தையும் நாம் விற்­க­மாட்டோம். தற்­போது திரு­கோ­ண­ம­லையின் 14 எண்ணெய் குதங்கள் இந்­திய நிறு­வ­னத்­திற்கு குத்­த­கைக்கு வழங்கப்படுகின்றன. ஏனைய 10 குதங்கள் இலங்­கைக்கும் உரித்­தா­கின்­றன. மீத­முள்ள 74 குதங்கள் பகிர்ந்து கொள்­வ­தற்­கான ஒப்­பந்­தமே கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. மாறாக முழு உரித்­து­ரி­மை பெறவும் இந்­திய நிறு­வ­னத்­திற்கு வழங்க போவ­தில்லை என அரச தொழில் முயற்­சிகள் அம…

  14. ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம், ‘ஏகிய ராஜ்ய’ என்ற சிங்களப் பதத்துக்கு இணையானதா? இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ‘ஏகிய ராஜ்ய’ மற்றும் ‘ஒருமித்த நாடு’ என்ற பதங்கள் தொடர்பாக புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் நேற்றைய கூட்டத்திலும், இறுதி முடிவு எட்ட முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது, புதிய அரசியலமைப்பு வரைவை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கையை, எதிர்வரும் நொவம்பர் 9ஆம் திகதி அரசியலமைப்பு பேரவையில் ( நாடாளுமன்றம்) சமர்ப்பிப்பதென முடிவு செய்யப்பட்டது. நேற்றைய கூட்டத்தில், இந்த அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கங்கள் தொடர்பாக வ…

    • 7 replies
    • 1.1k views
  15. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் கருத்துப்படி, எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெ…

  16. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு... தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமனம்! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2021/1249093

  17. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு? நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி தொடர்பாக தனது கவலைகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியை சப்ரி நேற்று சந்திப்பார் என தகவல் கிடைத்ததாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவர்கள் எப்போது சந்திப்பார்கள் என்ற சரியான திகதி உடனடியாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான வரைவை தயாரித்து அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார …

  18. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு? ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் ஊடகமொன்றுக்கு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் …

    • 19 replies
    • 1k views
  19. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி.சுஜீவ பண்டிதரத்ன, சட…

  20. ‘ஒவேன்’ கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்தும் பொருட்டு பிரான்ஸ் கடற்படைக்கப்பலான “ஒவேன்”, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(3) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலில் அலுவலகப்பணியாளர்கள் 145 பேர் வருகைத் தந்துள்ளனர். மேலும், குறித்த கப்பல் 142 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 600 தொன் எடையும் கொண்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒவேன்-கொழும்பு-துறைமுகத்துக்கு-வந்துள்ளது/175-208317

  21. -க. அகரன் வவுனியா வடக்கு – கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரைகள் நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றம், இது, எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயற்பாடாக இருக்கிறதெனவும் கூறினார். வவுனியா மாவட்ட உண்மை, நல்லிணக்க மன்றத்துக்கும் வவுனியா மாவட்டச் செயலாளர் எம். ஹனீபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில், நேற்று (02) நடைபெற்றது. இதன்போதே, அம்மன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு தொடர்ந்ரைத்த மன்ற உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேசத்தில், தமிழ்மக்களின் பூர்விக கிராமமான கச்சல் சமனங்குளம் பகுதியில், விஹாரை அமைக்கும் பணி இடம்பெற்றுவருதாகவும் அதேவ…

    • 0 replies
    • 413 views
  22. ‘கஜபா’க்களின் அதிபதியாகிறார் போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக பணியாற்றும் சர்ச்சைக்குரிய அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார். கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அ…

    • 0 replies
    • 221 views
  23. ‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்? Editorial / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 -செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாத…

    • 28 replies
    • 3.3k views
  24. ‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச்…

  25. ‘கடவுளுக்கே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளுக்கு முரண்பாடு இல்லாமல் போகுமா?’-பா.அரியநேத்திரன் September 14, 2021 முரண்பாடுகள், ஒத்த கருத்துகள், கருத்தொற்றுமை மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுள்களிடமும் இருந்ததுதான் கடவுள் இடத்திலே முரண்பாடுகள் உள்ளபோது கட்சிகளிடையே முரண்பாடுகள் இல்லாமல் போகுமா என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்பை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன். ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக ஒரு கடிதம் அனுப்பவில்லை. பலரும் வெவ்வேறு விதமாக கடிதங்களை அனுப்பியது உங்களிடம் கருத்தொற்றுமை இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறதே என ஊ…

    • 4 replies
    • 528 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.