Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வல்வெட்டித்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை - சோழன் Friday, 12 January 2007 00:10 {சங்கதி} இன்று(வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரணி பகு தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 35 வயதான காங்கேசமூர்த்தி சண்முகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீன்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் தொழிலின் நிமித்தம் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

  2. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட : புலிகள் பகுதிக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, இந்தியா விரும்பவில்லை ஆழிப்பேரலை இலங்கைக் கரையோரங்களை மிக மோசமாகத் தாக்கிய போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உதவிகளை வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. உதவிகள் அனைத்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2005 ஜனவரி மாதம் புதுடில்லியில் இருந்து அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்ட ஆவணத்தில், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஊடாகவே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு "ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது'' என்று புதுடில்லி கருதுவதா…

  3. யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். வாள்களுடன் வந்தவர்கள் அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்க…

    • 24 replies
    • 1.8k views
  4. இறுதிப் போரின்போது, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால், புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்குழுவிடம் சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா.வுக்கான இலங்கையின் துணை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியொருவரும் ரகசியமான முறையில் ஜெனீவா மனித உரிமைகள் குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் இராணுவத்…

  5. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்திலிருந்து நேற்றைய தினம் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியமையைத் தொடர்ந்து. மேலும் சிலர் எதிர்க் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்களுக்குள் இருக்கும் அதிருப்தியை சமாளிக்கும் வகையிலே நிமல் சிறிபால டி சில்வாவிற்கு தற்காலிகமாக பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. திங்கட்கிழமைக்குள் புதிய பிரதமர், புதிய அமைச்சரவையுடன் தேர்தல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=299…

  6. வன்னேரிக்குளம் மைதானத்திலிருந்து 14 வருடங்களின் பின் வெளியேறிய இராணுவம் கிளிநொச்சி – வன்னேரிக்குளம் வன்னொளி விளையாட்டு மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் இருந்து வன்னொளி விளையாட்டுக் கழக மைதானத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். இதன் காரணமாக விளையாட்டுக் கழகத்தினால் முழுமையாக மைதானத்தை பயன்படுத்துவதிலும் பொது நிகழ்வுகளை நடாத்துவதிலும் நெருக்கடிகள் காணப்பட்டன. கிராம, பிரதேச, மாவட்ட மட்டங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் மைதானத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகளும் மனுக்களும் கையளிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் தற்போ…

    • 1 reply
    • 342 views
  7. பிரிந்து சென்றோரின் கட்சி அங்கத்துவத்தை பறிப்பதற்கு ஐ.தே.கட்சி சட்ட நடவடிக்கை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் கட்சி அங்கத்துவத்தைப் பறிப்பதற்கும் அவர்களின் தொகுதிகளுக்குப் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குமான நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கட்சியைவிட்டு பலர் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக கட்சி பலமிழந்து விட்டது என்று அர்த்தமல்ல. கட்சியைப் பலமிழக்கச் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தகர்த்தெறியும் மாற்றுத் திட்டம் எம்மிடம் உள்ளது. எமது பலம், கட்சி உறுப்பினர்கள் அல்லர்; கட்சிக்கு வாக்களித்த மக்கள்தான். கட்சிய…

  8. SRI LANKA: Kevin Rudd silent on the plight of the Tamils It is two years since the civil war ended in Sri Lanka between the majority Sinhalese government in Colombo and the Tamil minority struggling for autonomy in their north-east homeland. he Tamils were crushed by overwhelming, undiscriminating firepower that rained down on them from the Sinhalese air force and ranks of artillery. Only when the guns fell silent were civilians separated from soldiers. The former were herded into largely known concentration camps while the fate of the latter is still unknown. The entire Tamil population of the north-east was caught up in the conflict. According to the Ca…

  9. நேற்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா உயிலங்குளம் இராணுவமுகாம் மீது எறிகணைத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புமையம் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலின்போது ஒருஇராணுவத்தினர் கொல்லப்பட்டும் மூவர்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது. காயமடைந்த இராணுவத்தினரை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. thanks: www.pathivu.com

    • 0 replies
    • 1.1k views
  10. - சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்துக்குட்பட்ட கோட்டை கட்டிய குளம், மருதங்குளம், பழைய முறிகண்டிக்குளம் ஆகிய குளங்களில் கொள்ளளவைவிட நீர்மட்டம் அதிகரித்தமையால், அக்குளங்களில் நீர் வான் பாய்கவதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றமையடுத்து, வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து மேற்படி மூன்று குளங்களிலும் வான் பாய்கின்றது. கோட்டை கட்டிய குளத்தில் 9 அடி 11 அங்குலமும் (5 அங்குலம் வான் பாய்கின்றது), மருதங்குளத்தில் 9 அடி 10 அங்குலமும் (4 அங்குலம் வான் பாய்கின்றது), பழைய முறிகண்…

  11. வெள்ளி, 29 ஏப்ரல் 2011 10:43 .தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்று தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது நிபுணர்குழு தொடர்பான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று ஊடகவியலாளர் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் 8 ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அறிக்கையை நாம் எவ்வாறு ஏற்பது என ஊடகவியலாளர் மத்தியில் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வி …

    • 1 reply
    • 1.9k views
  12. எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவொன்றினை எடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசரமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்ப உள்ளாதாக தெரிய வருகிறது. நேற்று முன்தினம் கூட்டமைப்பின் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் கூட்டமொன்று அவசரமாக யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினர்களதும் கருத்துக்கள் கோரப்பட்டதாகவும் எனினும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான இறுதி முடிவுகள் ஏதும் நேற்றைய கூட்டத்தில் எய்தப்பட்டிருக்கவில்லை என்றும் இது தொடர்பில் பரவி வரு…

  13. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத…

  14. இந்தியா, இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? – சு.ப.வீரபாண்டியன் கேள்வி! Posted by admin On May 6th, 2011 at 1:10 pm / No Comments இந்தியா உதவக் கூட வேண்டாம். குறைந்த பட்சம் இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி ஐ.நா. குழு அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்ற திராவிடர் கழக பொதுக்கூட்டம் அண்மையில் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:- இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா.மனித உரிமை குழு …

  15. கடல்வழிப் பட்டுப்பாதை என்ற கோட்பாட்டின் கீழ், சிறிலங்காவின் கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்தும் திட்டத்தைச் செயற்படுத்த சீனக் கடற்படை தயாராகியுள்ளதாக, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அவுஸ்ரேலிய இந்திய நிறுவகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் பிரூஸ்டர் தெரிவித்துள்ளார். ரோக்கியோவைத் தளமாக கொண்ட டிப்ளோமற் இதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கடல்வழிப்பட்டுப் பாதை மூலம், தெற்காசியாவில் இருந்து ஐரோப்பா வரை பீஜிங் தனது தரைவழி பட்டுப்பாதையை விரிவாக்க முனைகிறது. துறைமுகங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள், சிறப்பு பொருளாதார வலயங்களை இணைக்கும் வகையில், தெற்காசியாவில் இருந்து வட இந்திய பெருங்கடல் வரை இந்த கடல்வழிப் பட்டுப…

  16. கோப்பாய் வாகன விபத்தில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் பவுசருடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றது. கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனும் நகைக்கடை உரிமையாளர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை பின்னால் பயணித்த எரிபொருள் பவுசர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் 45 வயதுடைய ரஞ்சன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க…

  17. வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 வீதத்தினால் குறைக்கப்படும், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும்" தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொதுவாக சில ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ள மைத்திரிபால சில தரப்பினருடன் தனித் தனியாக இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொள்ளப்பட்ட ஆவணமொன்று தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 1ம் திகதி இவ்வாறான ஒப்பந்தமொன்று ரணில் விக்ர…

    • 5 replies
    • 2.6k views
  18. புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார். 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்…

  19. மண்சரிவு அபாயம் மற்றும் தீவிபத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக கொட்டகைகளில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மலையக சமூக ஆய்வு மையத்துடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்திருந்தது. கடந்த பல மாதங்களாக மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ள மக்களும் தீ அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களின் தொடச்சியான அவலத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து மலையக மக்களும் குறைந்தபட்சம் தீவின் ஏனைய பகுதி மக்களைப் போல் சமத்துவமாக வாழும் உரிமைகளப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மலையக சமூக ஆய்வு மையத…

  20. டிசம்பருக்குள் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – 780 மில்லியன் ரூபாவை ஒதுக்க திறைசேரி இணக்கம் வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள – உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் உள்ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார். ”தனியார் காணிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக, அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இராணுவ முகாம்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழ…

  21. தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டும்! கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம் தமிழ்த் தலைவர்கள் ஐக்கியப்பட வேண்டிய நேரம் இது என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் கிளிநொச்சியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகர்ப்பகுதி மற்றும் தர்மபுரம் பகுதிகளில் நேற்று இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த துண்டுப்பிரசுரத்தை, தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற அமைப்பு விநியோகித்துள்ளது. இதேவேளை, துண்டுப் பிரசுரத்தில் “முதலில் நாம் ஒரு தமிழ்த் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை…

  22. திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை விருப்பத்துக்கு மாறாக குடியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு மட்டக்களப்பில் தங்கியிருக்கும் திருகோணமலை அகதிகள் பலர் பாதுகாப்புக் காரணமாக சொந்த இடம் திரும்ப மறுத்து விட்டதால், மிகக் குறைவானவர்களே இன்று அங்கு திரும்பியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை தம்மை பலவந்தமாக மீளக்குடியமர்த்த முயல்வதாக சில அகதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தரிப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமரத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

  23. கோத்தபாயவின் ஊழல்களை உறுதிப்படுத்திய பொன்சேகா! வெள்ளி, 27 மே 2011 16:37 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ நான்காம் ஈழப்போரைக் காரணமாக வைத்து ஊழல்களை மேற்கொண்டுள்ளார் என்பதை முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கில் வாக்குமூலமளிக்கும்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சகம் மிகப்பெரும் ஊழல்களை மேற்கொண்டிருந்தது. நான் இராணுவத்தளபதியாக இருந்தபோதும் எனது அனுமதிகளைப் பெறாது அவர்கள் இந்த கொள்வனவுகளை மேற்கொண்டிருந்தனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஸவுக்கு அதில் அதிக தொடர்புகள் உண்டு. பி.எம்.டபிள்யூ ரகத்தை சேர்ந…

  24. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என சுயாதீன சோதிடர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் சோதிடர்களான நாத்தாண்டியே பீ.டி. பெரேரா, காமினி புளத்சிங்கள, கே.ஏ.யூ. சரத்சந்திர ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் எனவும், பெண் ஒருவர் இதற்கு தலைமையேற்பார் என்றும், எதிர்பாராத நபர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் தாம் கூறிய சோதிட எதிர்வுகூறல் உண்மையாகியுள்ளதாகவும் நாத்தாண்டியே பீ.டி. பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு பல ராஜயோகங்கள் இருப்பதனால் ஜனாதிபதித் தேர்தலில்…

  25. 06 JUN, 2023 | 09:58 AM அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி முன்னாள் இலங்கைத்தமிழரசுக்கட்சி தலைவரும், பாண்டிருப்பை வதிவிடமாக கொண்டவருமான மருத்துவர் தோமஷ் தங்கத்துரை வில்லியம் அவர்கள் இன்று(06/06/2023) காலை காலமானார். https://www.virakesari.lk/article/157026

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.