ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய …
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை 22 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட்டால் பாரியளவில் எதிர்ப்புப்போராட்டம் ஜே.வி.பி.அறிவிப்பு அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்பதாக ரத்துச் செய்து அந்த உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகும் வரை நாங்கள் அதனை ரத்துச் செய்ய வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராடுவோம் என்று ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். போர்நிறுத்த உடன்படிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ரத்துச் செய்துவிடுமாறு ஜே.வி.பி. அரசாங்கத்தைக் கோரி வருகின்றது. இந்நிலையில் இவ்விடயம்…
-
- 3 replies
- 1.4k views
-
-
நான்கு வருட போர் நிறுத்தம் புலிகளை பலமுள்ள போர்ப்படையாக்கிவிட்டது! அமெரிக்காவில் இலங்கை இராணுவத் தளபதி தெரிவிப்பு. வாஷிங்டன் வந்திருந்த இலங்கையின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் உட்பட சிரேஷ்ட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரைச் சந்தித்துப் பேசி, இலங்கையின் நிலைவரங்களை, குறிப்பாக பாகாப்பு மற்றும் அரசியல் நிலைவரங்களை எடுத்துக்கூறினார். தனிநாடு கேட்டுப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது சமீப சில காலமாக கடும்போக்கை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் நிக்கலஸ் பேர்ன்ஸுடன் இராணுவத் தளபதி நடத்திய பேச்சுகள் மிக ஆக்கபூர்வமாக இருந…
-
- 4 replies
- 1.4k views
-
-
மீனவர்கள் மீது தாக்குதல். 22.03.2008 / நிருபர் எல்லாளன் வடமராட்சி சக்கோட்டை கடற்பரப்பில் மீனவர்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். வடமராட்சி கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையை சிறிலங்காக் கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய சாக்கோட்டைக் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கி வேட்டுக்களை கடற்படையினர் தீர்த்தனர். இதனால், மீனவர்கள் அவசரமாகக் கரைதிரும்பினர். குறிப்பிட்ட மீனவர்கள் கரையில் இருந்த படையினரிடம் அனுமதிபெற்றே மீன்பிடிக்கச்சென்றனர். இவ்வாறு சென்றவர்களையே கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;uc…
-
- 1 reply
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.! முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் சிலரால் இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரம் யுகம் நிறைவடைந்த காலமான கிருஸ்து வருடம் 946 முதல் 954 ஆகிய யுகத்தில் அதனை ஆட்சி செய்த 4 ஆவது உதய மன்னருக்கு சொந்தமான பழமைவாய்ந்த கல்வெட்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்த…
-
- 14 replies
- 1.4k views
-
-
நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிட்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிட்சயம் தடுக்க முடியும். எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறிக்கப்படாது, சிங்கள சிறிலங்கா அரசு முள்ளிவாய்காலுக்கு அடுத்து புலம் பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிட்சயம் தடுத்து நிறுத்த முடியும். பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதை தடுக்க முடியும். மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நட…
-
- 14 replies
- 1.4k views
-
-
பிடுங்கி எடுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு ஏது வழி? தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள் தாம்" என்று சில வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல இருகட்சிகளுமே செயற்படுகின்றன. பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அணி திரட்டி, அவர்களின் ஐக்கியத்தைத் தனது வலிமையாக்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலங்காலமாகத் தான் பின்பற்றி வரும் சிங்களத் தேசியவாத இரும்புப் பிடியில் இருந்து சற்றேனும் விலகுவாதாக இல்லை. அதன் சிங்களத் தேசியக் கடுங்கோட்பாட்டுப் பிடிக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கின்றது மஹிந்த ராஜபக்ஷவின் திமிர்த்தனத் தலைமை. இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமிஞ்சிய கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்பொழுது வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் ஒரு வருடத்துக்குள் முடிவுக் கொண்டுவரப்பட்டுவிடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். தமிழர்களுக்கு எனத் தனிநாடு கோருபவர்களால் மோதல்கள் வழிநடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, எனினும் இலங்கையிலுள்ள சிங்களவர்கள் தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை அனுமதிக்கமாட்டார்கள் என கனடாவின் நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறினார். “இந்த நாடு சிங்களவர்களைச் சார்ந்தது என நாம் உறுதியாக நம்புகின்றோம். ஆனால், சிறுபான்மைச் சமூகங்களும் இங்கு இருப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
"இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்' இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி இலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று தெரிவித்தது. வடபகுதியில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளி 30-03-2007 00:54 மணி தமிழீழம் [தாயகன்] தமிழீழ வான் படையை அவதானிப்பவர்கள் தகவல் கூற புதிய தொலைபேசி சேவை தமிழீழ வான் படையின் விமானங்களின் நடமாட்டத்தை அவதானிப்பவர்கள் தகவல் தெரிவிப்பதற்கு என புதிய 24 மணிநேர தொலைபேசி சேவையொன்றை சிறீலங்கா வான் படையினர் ஆரம்பித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் மீது தமிழீழ வான் படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான விபரங்களை இந்த தொலைபெசி இலக்கத்தின் ஊடாக வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க வான் படைத் தளம் மீது கடந்த 26ஆம் திகதி வான் புலிகள் நடத்திய தாக்குதலால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காப் படையினர், எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாது தடுப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் மே…
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=JaDt8C1fUoY திரு ரபி பெர்னாட் மற்றும் திரு சுரேஷ் கலந்துரையாடல் 24 ஜூலை2011 இலங்கை போர் குற்றம்
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால், யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. வரும் 15ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையகம் இந்த உணவுத் திருவிழாவை நடத்தவுள்ளது. யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் சிவில் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று அனைத்துலக அளவில்…
-
- 8 replies
- 1.4k views
-
-
கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது வா.கிருஸ்ணா வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது. முன்னாள் மீள்கு…
-
- 13 replies
- 1.4k views
-
-
CNN தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்யுமா? அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அரச நிர்வாகக் கட்டிடத்தொகுதியில் சென்ற வாரம் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களும் மனித உரிமை காப்பக முக்கியஸ்தர்களும் அரசின் படமாளிகையில் பார்த்தனர். அமெரிக்க அரசு இந்த படத்திற்குக் கொடுத்த பகிரங்க அங்கீகாரமாக இந்த நிகழ்ச்சி இடம் பெறுவதாக AFP செய்திச் சேவை குறிப்பிடுகிறது. அதிபர் ஓபாமாவின் ஆளும் ஜனநாயகக் கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள் படக்காட்சியை ஒழுங்கு செய்தனர். சிஎன்என், பொக்ஸ் நியூஸ் போன்ற இணையங்களில் இலங்கையின் கொலைக்களம் பொதுமக்கள் பார்வைக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. வீடியோச் செய்திகளை வெளியிடும் யூரியூப் (You Tube) இண…
-
- 1 reply
- 1.4k views
-
-
குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே என்ற போதும், சிங்கள பௌத்த குழுக்கள் இதனை சாட்டாக வைத்து திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதன்மூலம், இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று ஏனையவர்களுக்கு காட்ட முனைகின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அல்லது கிறிஸ்தவ சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்ட…
-
- 6 replies
- 1.4k views
-
-
பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்?? பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 22 மே, 2011 பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்? - ஆய்வு. சிறீலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பனாக பல வழிகளில் உறுதி செய்து இறுதியில் மகிந்த தோழில் கைபோட்டு மகிழ்ந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தற்பொழுது நடந்தது என்ன? கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் ஆக்கிரமிப்பின் பின்னர் நல்லாட்சி நிலவுகின்றது, மக்களாட்சி நிலவுகின்றது என காட்டுவதற்கு வேடமிடப்பட்ட ஒரு சிறீலங்காவின் சார்பு தமிழ் தலைவராக காட்டப்பட்டவர் இப்போது என்ன நிலையில் இருக்கின்றார். சிறீலங்காவின் தற்போதைய பாணியில் கூறுப்போனால் புனர்வாழ்வளிக்கப்படாத விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி இவர். தற்போது அவர் பற்றியும் அவர…
-
- 1 reply
- 1.4k views
-
-
'கோழி கடத்தல்": சிறிலங்காவின் புதிய கண்டுபிடிப்பு -அருஸ் (வேல்ஸ்)- பொதுவாக இலங்கைத்தீவில் என்ன கோளாறு வந்தாலும் அதற்குக் காரணம் தமிழர்களே என கண்ணை மூடிக்கொண்டு கூறும் வழக்கம் சிங்களவர்களிடம் உண்டு. இது அவர்களுக்கு பரம்பரையினு}டாகக் கடத்தப்பட்ட வியாதி. அரசியல்வாதிகளிலிருந்து பத்திரிகையாளர்கள் வரை எவருமே இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாற்ற முடியாத புற்றுநோயின் ஒரு வெளிப்பாடே இந்தியாவிலிருந்து படகுகளில் கடத்திக் கொண்டு வரப்படும் கோழிகள் மூலம் இலங்கையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பறவைக்காய்ச்சல் நோய் தொற்றக்கூடிய அபாயம் இருப்பதாக வெளிவந்துள்ள கூற்று அமைந்துள்ளது. இது தொடர்பான செய்தியொன்றினை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.4k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது சனிக்கிரக தோசம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரகமாக விசேட யாகமொன்று செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது. நுவரெலியாவிலுள்ள ரம்பொடை, தவலம்தென்ன, Wawandam'' தோட்டத்தில் உள்ள அனுமான் ஆலயத்தில் இன்று (25) இந்த யாகம் செய்யப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த யாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. இந்த யாகத்திற்காக இந்தியாவில் இருந்து விசேட குருக்கள் சிலர் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த யாகத்தில் சுமார் 500 பேர் வரை கலந்துகொள்கின்ற அதேவேளை, இவர்களுக்கான உணவு, தங்குமிட வசதிகளை '''தொண்டமான் நிதியத்தினால்'' செய்துகொடுக்கப்பட்டுள்ளது. ht…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கை அரசுக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தர் பணியில் 1997 முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே ஈடுபட்டது. ஆனால் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டது என்று ஐரோப்பிய கவுன்சிலின் செயலாளர் நாயகமும்- நோர்வேயின் முன்னாள் பிரதமரும்- நோர்வே தொழில் கட்சிப் பிரமுகருமான Torbjørn Jagland பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவரைப் போலவே சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் இவ்வாறான விமர்சனங்களை அடிக்கடி முன்வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் உண்மையில் நோர்வே…
-
- 9 replies
- 1.4k views
-
-
தமிழகத்தை தளமாக்க விடுதலைப் புலிகள் முயற்சி சகல கட்சிகளும் சிவப்பு கம்பளம் விரிக்கின்றன ஜெயலலிதா கடும் விசனம் தமிழகத்தை தளமாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி செய்கின்றனர். எமது கட்சியினைத் தவிர தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி.மு.க. வில் இணைந்து கொண்ட வைபவம் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் இல்லை என்ற பேச்சுக்கள் வருத்தத்தை …
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னேரியில் படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 25 படையினர் பலி; 85 பேர் காயம் [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 85 படையினர் காயமடைந்துள்ளனர். படையினர் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னேரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்டனர். படையினரின் இத்தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான தாக்குதலை நடத்தினர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு. 19.02.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு பகுதியில் சிறிலங்காப் பொலிசார் மீது இன்று ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் பொலிசார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலின் பின்னர் அவ்விடத்தில் சிறிலங்காப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/articles/files/100622_jaffna_reporter.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா
-
- 7 replies
- 1.4k views
-
-
தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது. உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று. காங்கிரஸ்காரனும் கருணாநிதி முதுகில் ஏறி கரை ஏறி விட்டான். அதே கெத்தோடு போய் ஏழு மந்திரிப் பதவிகளையாவது பெற்று விட வேண்டும். பிள்ளைகளையோ பேரனையோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....2ab86dff8a46af6 http://www.yarl.com/videoclips/view_video....d4a733fcfb77bd7
-
- 2 replies
- 1.4k views
-