ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் தங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளையே கருதுகின்றார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. கடந்த வார இறுதியில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் 'இங்கையின் இனப்பிரச்சினை' எனும் தலைப்பிலானா அனைத்துலக மாநாட்டில் தென்னாபிரிக்கா சார்பில் படையாச்சி கலந்துகொண்டா போதே இக்கருத்தைத் தெரிவித்தார்; அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் இடம் பெற்று வரும் இனப்பிரச்சினைக்கு ஓர் இறுதித் தீர்வைக் காண்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தென்னாபிரிக்கா அரசு தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளது. இம்மாநாட்டில் நான் கண்ட உணர்வுகளையும் முடிவுகளையும் தென்னாபிரிக்கா அரசிற்குத் தெர…
-
- 3 replies
- 1.4k views
-
-
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வில்லியம்ஸ் ரோட்டில் ஒரு பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் வளாகத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் இன்று மாலை திடீரென்று சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. பின்னர் அந்த கும்பல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அருகே சென்று இலங்கை ராணுவத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலக கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதில் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறின. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பர போர்டுகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டு அலுவலகத்துக்குள் பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். கண்ணாடிகளை நொறுக்கும் சத்தம் கேட்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
போரியல் வரலாற்றில் விடுதலைப் புலிகள் தற்போது நிலவிவரும் சமாதான சூழல் அற்றுப்போய் மீண்டும் போர் மூளலாம் என்பதே பலரதும் ஊகமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இது சரியானதாகவும் இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் தொடங்கும் பட்சத்தில் அது எவ்வாறானதாக அமையும் என்பது பற்றியும் புலிகளின் தாக்குதல் இலக்குகள், வியூகங்கள், அதன் உக்கிரத்தன்மை என்பன எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றியுமே இன்று பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், புலிகளின் இராணுவ வல்லமையையும் தேசியத் தலைவரின் போரியல் தந்திரோபாயங்களையும், தாக்குதல் உத்திமுறைகளையும் அறிந்து கொள்ளகடந்த காலத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான போரியல் சரிதங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாணம் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு விட்டது. வடக்கும் படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் விரைவில் வந்துவிடும். இந்த நிலையில் எம் முன் பாரிய பொறுப்பு ஒன்று உள்ளது. இந்த இருமாகாணங்களிலும் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதே அந்தப் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு கூறுகிறார் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்; மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரை நேற்றுச் (25) சந்தித்த பின்னர் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரத…
-
- 1 reply
- 1.4k views
-
-
முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம்! – நடராஜன் மகிந்தவிற்கு ஆலோசனை Friday, June 10, 2011, 17:30 உலகம், சிறீலங்கா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பணம் கொடுத்து வாங்கலாம் எனவும் ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் உறவினரான திருகுமார் நடராஜனை ஜனாதிபதி நேற்றிரவு ஆபாச வார்த்தைகளினால் திட்டித் தீர்த்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய யோசனை பற்றி ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரியொருவர் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு திட்டித்தீர்த்துள்ளார். தமிழ் நாடு அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நேற்றிரவு 8 மணியளவிலேயே ஜனாதிபதிக்க …
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது. எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் க…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோர் வழிநடாத்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலையடுத்து சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும், இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும், இதனையடுத்து உடனடியாக மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும், மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 20ம் கஜபாகு படையினர் மீதும் நான்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
அடுத்த வருட ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு - மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்த வருட முற்பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி அல்லது பெப்ரவரியில் இத்தீர்வு ஆலோசனை வரைவை சர்வகட்சி மாநாடு முன்வைக்கும். எப்படியிருந்தும் அரசு புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனினும், ஆயுத வன்முறையி…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி! சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சுமார் 1000 வரையான பாடசாலை மாணவர்கள் 40 பிளட்டூன்களாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாரகாலம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் வைத்து இவர்களுக்கு ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாளும் போர்ப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மீசை முளைக்காத பாடசாலை …
-
- 4 replies
- 1.4k views
-
-
வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்ட கிளிநொச்சி வர்த்தகர் நான்காம் மாடியில்! ஞாயிற்றுக்கிழமை, 13 பெப்ரவரி 2011 22:46 கிளிநொச்சி மாவட்டத்தின் அம்பாள் குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11.00 மணி அளவில் மர்மக் கும்பல் ஒன்றால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார் என்று நம்பப்பட்ட வர்த்தகர் தற்போது கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். கறுப்பையா தியாகராஜா (வயது-53) என்பவரே இவ்வர்த்தகர் ஆவார். இவரின் வர்த்தக நிலையத்துக்கு வந்த சிலர் இவரை வெள்ளை வான் ஒன்றில் ஏற்றிச் சென்று இருந்தனர். வந்தவர்கள் யார்? என்பது மர்மமாகவே இருந்தது. பின்னர் வர்த்தகருடன் தொடர்பு கொள்ள எவராலும் முடியவில்லை. இந்நிலையில் வர்த்தகரின் குடும்ப அங்கத்தவர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
கொழும்பில் இன்று மாலை மூன்று பேர் விடுதி ஒன்றில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த மூவரும் வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து பொது மக்களையும், விடுதலைப்புலி உறுப்பினர்களையும் கடத்தி அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பும் வேலையினை செய்து வந்தார்கள் என சந்தேகிக்கபடுவதாக கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்றி http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்… சுதந்திரத் தமிழீழப் போராட்டம் முடிந்தேபோனது என்று சிங்களவர்கள் கொக்கரித்தாலும்… புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.ஐ.நா. வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், “ஐ ஹேவ் ட்ரீம்” என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். திருகோணமலையில் இல…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14.08.2007 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 1 reply
- 1.4k views
-
-
“எனது மகன் எனக்கு வேண்டாம்" என கடிதம் எழுதி மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்! By VISHNU 11 OCT, 2022 | 01:13 PM "எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி, தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து பொலிஸ…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழுவின் சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து ஐ.நா.வையும் அதன் பின்னர் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் மூன்று வாரங்களுக்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் கேட்க ஆரம்பித்தது. இலங்கை தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர்குழுவின் அறிக்கையில் போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாக சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணி திரும்பத் திரும்ப பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இதனை ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டிருந்ததாக இன்னர் சிற்றி பிரஸுக்கு பங்களாதேஷின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பெப்ரவரி 14 இல் கூறியிருந்தார். பெப்ரவரி 16 …
-
- 3 replies
- 1.4k views
-
-
மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களே! மூன்றாவது முறையாகத் தமிழ் நாட்டு மக்கள் தமது முதலமைச்சராகத் தெரிவுசெய்து, இப்பொறுப்பு மிக்க பதவியை ஏற்றிருக்கும் தங்களுக்கு, தென்துருவத்தில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழரதும் மற்றும் ஈழம் வாழ் தமிழ் மக்களதும் நலன் குறித்துக் கடந்த 27 வருடங்களாகச் செயலாற்றிவரும் தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் (தெ.த.ச.ச – AFTA)எமது பாராட்டுக்களையும் உளம்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தம்மினம் ஈழத்தில் செத்துமடிவதைக் கைகட்டிப்பார்த்து நின்ற அரசொன்றைத் தூக்கி எறிந்து, அவ்வினம் காக்கத் தங்களில் நம்பிக்கை வைத்து, மக்கள் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ள இந்த வேளையில், நீங்கள் முதன்முதல் அளித்த பேட…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
17/04/2009, 21:34 [] ஐநா வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஐநாவின் விசேட பிரதிநிதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளது. ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். பாதுகாப்பு வலயத்தின் கடல் பிராந்தியத்தில் வாடகைக்கு அமர்த்திய படகுகளை செஞ்சிலுவை கொடிகளுடன் நிறுத்தி பொதுமக்களை அவற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் வன்னியின் …
-
- 5 replies
- 1.4k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி] அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகளை அறிய.. http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 0 replies
- 1.4k views
-
-
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்? [16 - February - 2008] *பழ.நெடுமாறன் கேள்வி சென்னை: பலஸ்தீன மக்களுக்கு உதவ துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை செல்லவிடாமல் இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் இந்தப் போக்கை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், அந்த மக்களுக்கு உணவு மற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேசியத் தலைவருடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம்: பொட்டம்மான் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் தமிழீழத் தேசியத் தலைவருடன் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் தெரிவித்துள்ளார். பாலா அண்ணன் "தேசத்தின் குரல்" என்ற உயர்ந்த விருதால் தமிழீழம் உள்ளவரை நினைவு கூரப்படுகின்ற ஒருவராக தன்னுடைய சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார் எனவும் பொட்டம்மான் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது: தமிழீழம் உள்ளவரை அவருடைய நினைவுகள் தமிழ் மக்களுடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த…
-
- 6 replies
- 1.4k views
-
-
வியாழன் 08-11-2007 16:33 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு ஆயுத உதவி செய்ய வேண்டாம் - அமெரிக்காவிடம் வலியுறுத்தல் சிறீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதால், அந்தநாட்டிற்கு ஆயுத உதவி அளிக்க வேண்டாம் என நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான கடிதம் ஒன்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் அமெரிக்க அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.4k views
-
-
May 22, 2011 / பகுதி: செய்தி / சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரை விசாரணை செய்தோம்: நோர்வே நெதர்லாந்தில் நடைபெறும் வழக்கு ஒன்றிற்கு தேவையான சாட்சியாக நோர்வேயில் தங்கியிருக்கும் தமிழர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் பிரதித் தலைவர் ஜோன் ஓ புறோகோல்ட் நேற்று (20) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவை சேர்ந்த தமிழர் ஒருவரிடம் நோர்வே நீதிமன்றம் சாட்சிய வாக்குமூலம் பெற்றுள்ளது. நெதர்லாந்து காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஆனால் நாம் அவரை கைது செய்யவில்லை. நெதர்லாந்தில் நடைபெறும் வழக்கு ஒன்றிற்கு தேவையான சாட்சியாக அவரிடம் வாக்குமூலம் …
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
வியாழன் 29-11-2007 16:16 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் இரு சிங்களவர் சுட்டுக்கொலை இன்று மதியம் 12 மணியளவில் மட்டக்களப்பு ஜயங்கேணிப்பகுதியில் இருசிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர்கள் 42 அகவையுடைய டொடான் ரட்ணசிறி குணதிலக 22 அகவையுடைய கேவா பொன்சேகா டில்றுக் பொன்சேகா எனவும் தெரியவருகிறது. இதனையடுத்து மட்டக்களப்பு சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.4k views
-