ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALI SABRY FB படக்குறிப்பு, நீதி அமைச்சர் அலி சப்ரி ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…
-
- 3 replies
- 531 views
- 1 follower
-
-
முன்னாள் தமிழ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு திரும்பத் திட்டம்: முரளிதரன் (கருணா) தமிழீழ விடுதலைப் புலி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் தமிழ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு திரும்ப உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக இவர்கள் பாடுபட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆர்.மௌனகுருசாமி ஆகியோர் ஏற்கனவே நாடு திரும்பி உள்ளதாக தேசநிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் ஐக்கிய மக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
தேர்தல் முடிவுகளை நிராகரிக்கக்கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல். இடம்பெற்று முடிந்துள்ள தேர்தலில் பல்வேறுபட்ட மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, அதன் முடிவுகளை ரத்துச் செய்யவேண்டும் எனக்கோரி எதிர்கட்சிகள் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சார்பாக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் தேர்தல் காலங்களில் அரச ஊடகங்கள் , அரச சொத்துக்கள் , அரச அதிகாரிகள் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு சார்பாக செயற்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையாளர் உட்பட 20 அதிகாரிகள் இணைந்து பதிவான வாக்குகளை ராஜபக்சவிற்கு ஆதரவாக மாற்றியாதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது பா.உ ரவி கருணாநாயக்க, பா.உ ஜோன் அமரதுங்க, ஜே.வி.பி தலைவர் சோமவன்ச…
-
- 1 reply
- 700 views
-
-
தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நீரூபித்து காட்டினர். இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சி மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.
-
- 17 replies
- 4.5k views
-
-
இந்திய இராணுவத் தேவைக்கு மத்தலவைப் பாவிக்க முடியாது கட்டுப்பாடு விதிக்கின்றது இலங்கை மத்தல வானூர்தி நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் இலங்கை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்தல வானூர்தி நிலையத்தை இந்திய நிறுவனத்துக்குக் குத்தகை அடிப்படையில் வழங்கும் கூட்டு முயற்சி உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்டு வருகின்றன. மத்தல வானூர்தி நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ள உடன்பாட்டில், இந்த வானூர்தி நிலையத்தை இராணு…
-
- 0 replies
- 127 views
-
-
வட்டுவாகல் கோத்தாபாய கடற்படையினருக்கு தமிழர்நிலங்களை விடுவிக்கும் எண்ணமில்லை; மாறாக நிலங்களை பறிக்கவே தொடர்ந்தும் பிரயர்த்தனம் – ரவிகரன் குற்றச்சாட்டு Digital News Team 2022-03-05 முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர் இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் அக்காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்கும் நோக்கம் கடற்படைக்கோ, ஏனைய அரச திணைக்களங்களுக்கோ இல்லை எனவும், மாறாக தமிழ் மக்களின் காணிகளை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவர்கள் செயற்படுவதாகவும் முன்னா…
-
- 0 replies
- 231 views
-
-
சரத் பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு சிறீலங்காபடையின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்பொன்சேகாவின் துணைவியார் சரத்பொன்சேகாவினை விடுதலைசெய்யுமாறு மனுத்தாக்கல் செய்யதிருந்தார். அடிப்படை உரிமை மீறல் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சரத்பொன்சேகாவினை விடுதலை செய்ய உயர்நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளதுடன் துணைவியார் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. eelaman.com
-
- 1 reply
- 537 views
-
-
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை – ரணில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறினா…
-
- 2 replies
- 254 views
-
-
அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை முடக்குவதற்காக பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்திற்காக மஹிந்த அணியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணி விஜேநாயக்க, இதன் ஒரு அங்கமாகவே அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய புரளியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்…
-
- 0 replies
- 353 views
-
-
கடன் மறுசீரமைப்பிற்காக... அமெரிக்காவை, நாடுகின்றது அரசாங்கம் ! கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை நாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1272879
-
- 0 replies
- 222 views
-
-
உயர் பாதுகாப்பு வலய வீடுகள் விரைவில் சொந்தக்காரர்கள் வசம்! இராணுவ தளபதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வீடுகள் கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனஇராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார் மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று உறுதியளித்தார். ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத…
-
- 2 replies
- 615 views
-
-
ஆவா குழுவின் செயற்பாடுகள் முடக்கம் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செ…
-
- 1 reply
- 296 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது... இ.தொ.கா! இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1273761
-
- 0 replies
- 156 views
-
-
ரணில் விக்கிரமசிங்க குழுவினர் இன்று யாழ்.நகர் வருகின்றனர்:வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டம்! March 19th யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஐ. தே.கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரசாரம் செய்யும் பொருட்டு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொருளாளர் டி.எம். சுவாமிநாதன், ரணிலின் துணைவியார் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் சகிதம் வரும் ரணில், பிற்பகல் இரண்டு மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுவார். யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு ரணில் குழுவினர் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட முன்னா…
-
- 8 replies
- 609 views
-
-
இறுதி அறிக்கை வரும்வரை பொறுமை காத்தல் அவசியம் “தற்போது வெளிவந்திருப்பது இடைக்கால அறிக்கை. இதுவரை பொறுமைகாத்த நாங்கள் இன்னும் கொஞ்சக் காலம் பொறுமை காத்தால் இறுதி அறிக்கை வரும். அதற்கு முன்னரே – இடைக்கால அறிக்கையை நாம் தூக்கி எறிவது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. புதிய அரசமைப்பு முயற்சியை நாமே குழப்பிக் கொண்டதாக இருக்கக் கூடாது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். புதிய அரசமைப்பு முயற்சியில் அமைக்கப்பட்ட உபகுழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்கியிருந்தார். இந்த …
-
- 3 replies
- 552 views
-
-
நல்லூர் ஆலயத்தைச் சூழவுள்ள நடை பாதை வியாபார நிலையங்களை நாளை மறுதினம்ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அகற்றுதல்வேண்டும் என்று யாழ். மாநகர சபை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஏ9 ஊடான போக்குவரத்து முற்று· முழுதாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.கு டாநாட்டில் பிரபல்யமான இடங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வீதியோர நடை பாதை வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒருசில மாதங்களாக நல்லூர் ஆலயச் சூழலிலும் பெருமளவில் நடைபாதை வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. இதற்கான வாடகை வரியையும் இவர்கள் நாளாந்தம் செலுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இப்பிரதேசங்களால் போக்குவரத்துச் செய்யமுடியாதவாறு நெருக்கடி நிலைமை காணப்பட்டுவருகிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
போரில் பயங்கரவாதிகள் மீதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது – குறி தப்பவில்லை என்கிறார் விமானப்படைத் தளபதி. [Tuesday, 2014-02-11 17:38:02] போரில் விமானப்படையினர் பயங்கரவாதிகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம தெரிவித்துள்ளார். விமானப் படையினரின் தாக்குதல் தொடர்பாக எவரும் குற்றம்சுமத்த முடியாது. தேவையானால் வேண்டிய சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை முன்வைக்க தயாராக இருக்கின்றோம்.இலங்கை விமானப்படையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உட்பட வானில் மேற்கொண்ட பணிகள் தொடர்பான எழுதப்பட்ட புத்தகம் ஒன்று அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து ஒழிக்க விமானப் பட…
-
- 3 replies
- 576 views
-
-
கோழிக் கறிக்குள் ஹெரோயின் யாழ்.சிறைச்சாலைக்குள் மீட்பு Share விளக்கமறியல் கைதிக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபரொருவர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. விளக்கமறியலில் இருக்கும் கைதியொருவரைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் போத்தல் ஒன்றினுள் கோழிக்கறி கொண்டு சென்றுள்ளார். அந்த கோழிக் கறி மீது சந்தேகம் கொண்ட சிறைக்காவலர்கள் அதனை பரிசோதித்துள்ளனர். அப்போது கோழிக்கறியின் குழம்ப…
-
- 1 reply
- 209 views
-
-
கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அ…
-
- 6 replies
- 481 views
-
-
-சுமித்தி தங்கராசா 'எனது மகன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் மகனுக்கு இராணுவ சீருடை அணிவித்து அவர் மூலமாக ஏனையவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையொன்றை இராணுவத்தினர் யாழ். மாநகர சபைக்கு முன்பாக முன்னெடுத்தனர்' என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தந்தையொருவர் தெரிவித்தார். இதேவேளை, 'எனது மகன் காணாமல் போகவில்லை. அவரை இராணுவத்தினர் கைது செய்தனர். எனவே அவரை காணாமற் போனவர் என்று கூறாதீர்கள்' என்றும் ஆணைக்குழுவினருடன் மேற்படி தந்தை முரண்பட்டுள்ளார். காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நடவடிக்கை கடந்த வெள…
-
- 0 replies
- 265 views
-
-
முழுமையான உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நடைபெற்ற பாராளுமன்றின் 70 ஆவது ஆண்டு நிறைவு அமர்வு சார்க் நாடுகளின் சபாநாயகர்களுக்கு கௌரவம் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு 70ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வு சார்க் நாடுகளின் சபா நாயகர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த விசேட அமர்வு நடைபெற்றிருந்தது. பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில் சார்க் நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும், இலங்கை நாட்டு தேசியக் கொடிகளால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாராளுமன…
-
- 0 replies
- 424 views
-
-
-
- 4 replies
- 436 views
-
-
பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன்: அவதானமாக இருக்க வேண்டும் அரசாங்கம்; :பொது பல சேனா வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது. எனவே புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாது போனவற்றை செய்ய முயலும் பிரபாகரனின் ஆவியே விக்னேஸ்வரன் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வட மாகாண மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு. அதையெல்லாம் கண்டு க…
-
- 4 replies
- 597 views
-
-
தமிழர்களை... கொலை செய்யும் போது, சிங்கள மக்கள் வேடிக்கை பார்த்தது போன்று... நாங்கள் இருக்கமாட்டோம் – இரா.சாணக்கியன்! மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றினைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் காலி முகத்திடல் பக்கம் சென்றால் சுவையான உணவு உண்டுவிட்டு வரலாம். சமிந்த லக்ஷான் என்ற இளைஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒ…
-
- 0 replies
- 411 views
-
-
சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்.. சைக்கிள் சின்னத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பத்மினி சிதம்பர நாதன் குமுதம் றிப்போட்டர் பத்திரிகைக்காக வழங்கிய பேட்டியில் யாழ்ப்பாண மக்கள் பணத்திற்காகவும் சாராயத்திற்காகவும் ஓட்டுப்போட்டுவிட்டார்கள் என யாழ்ப்பாண மக்களையே தமிழ்நாட்டு பத்திரிகையில் கேவலப்படுத்தியுள்ளார்.. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித் துள்ளது. விரைவில், புதிய பிரதமர் பதவி ஏற்கப்போகிறார். அவர் நிச்சயம் தமிழராக இருக்கப் போவதில்லை. இந்தப் பொதுத் தேர்தலி…
-
- 44 replies
- 3.2k views
-