ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களஏற்படுத்தியுள்ளது. யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அதனை இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாகவும் , அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார ந…
-
- 6 replies
- 1.4k views
-
-
நோர்வேத் தூதுவரின் பயணத்திற்கு விடுதலைப் புலிகள் உத்தரவாதம் சாமாதான அனுசரனையாளர்களான நோர்வேத் தூதுவரின் கிளிநொச்சி பயணத்திற்கு தம்மால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது தடவையும் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் கைவிடப்பட்டதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்தனர். ஓமந்தையில் இருந்து எம்மால் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். நோர்வே தூதுவர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆகியோரின் கிளிநொச்சிக்கான பயணத்தை பாதுகாப்பு காரணங்களை கூறி அரசு தடுத்துள்ளது. கிழக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சாய்ந்தமருது துப்பாக்கிச்சூடு – குழந்தைகள் உட்பட 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு கல்முனை- சாய்ந்தமருதில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 தீவிரவாதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸ் …
-
- 5 replies
- 1.4k views
-
-
புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/
-
- 8 replies
- 1.4k views
-
-
நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளோம் - இஸ்ரேல் வியாழன், 05 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
யுத்த சூழ்நிலை ஓய்வுபெற்ற நிலையில் கிளிநெச்சியில் குடியேறிய ஒருதொகுதி மக்கள் இன்று நீண்ட நேரமாக செட்டிக்குளம் வாக்குச்சாவடியில் காத்துநின்று ஏமாற்றத்துடன் திரும்பியதாக சிஎம்ஈவி அமைப்பின் இணைப்பாளர் டி எம் திஸாநாயக்க தெரிவித்தார். இவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் செட்டிக்குளம் வாக்குச்சாவடியில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையினாலேயே இவர்கள் தமது வாக்கினை செலுத்த செட்டிக்குளம் வாக்குச்சாவடிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 160 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் காலி பகுதியில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சிஎம்ஈவி இணைப்பாளர் டி எம் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை நண்பகல் 12 மணிவரையில் நாடளாவி…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐம்பதாயிரத்திற்கு அதிமான தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ஐ.நாவின் அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசின் இனப்படுகொலையை விசாரணை செய்யக் கோரி டிவிட்டரில் கவன ஈர்ப்புப் பரப்புரை ஒன்று நடத்தப்படுகிறது. இந்த பரப்புரையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்றும் அவரை யுத்தக் குற்ற கூண்டிலில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் போரில் போர்க்குற்றம் இழைத்தமைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குறிப்பிட்டமைமையும் இந்த பரப்புரையில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கவன ஈர்ப்புப்பரப்புரையில் பெருமளவானோர் ஆதரவளித…
-
- 2 replies
- 1.4k views
-
-
அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டின் ஷ்ரீலங்காவுக்கான முன்னாள் தூதுவராக பதவிவகித்த பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவுக்கு வந்திருப்பதாகவும் அவர் ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களை ஷ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஏற்பாட்டின் பேரிலேயே இங்கு வந்துள்ளதாகவும் அண்மையில் இந்திய பிரபல ஆங்கில நாளேடாகிய `த ஹிந்து' (The Hindu) தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கிக் கொண்டு இருப்பதாக `த ஹிந்து 'தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இந்திய நாளேட்டில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
நொச்சியாகம ராணுவப்பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 2 படையினர் கொல்லப்பட்டு 12 படையினர் காயமடைந்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். படையினருக்கான பயிறிசிகளை வழங்கும் லிண்டவேவா முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 2 replies
- 1.4k views
-
-
முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின் பிரதானி (ரொபட் அன்டனி) முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். என்று கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்…
-
- 15 replies
- 1.4k views
-
-
ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை! நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார். அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி…
-
- 28 replies
- 1.4k views
-
-
Posted on : Sat Oct 27 7:15:00 2007 .அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் அரசின் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையா ரிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத் துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, லூயிஸ் ஆர்பருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதி லேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: நீங்கள் அண்மையில் இலங்கைக்கு மேற் கொண்ட விஜயத்தின்போ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கள மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்குக ஐனாதிபதி உத்தரவு. விடுதலைப் புலிகளால் தீவுச்சேனையில் துணை ஆயுதக்குழுக்கள் மீதான தாக்குதலை அடுத்து பொலநறுவையில் உள்ள மக்களுக்கு சிறீலங்கா படையினரால் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளது. இதேபோல் புல்மோட்டை கடற்கரையில் நடந்த தாக்குதல்களை அடுத்தும் சிங்கள் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்ட இடங்களில் சிங்களவரைக் காப்பாற்றும் நோக்கில் மகிந்த ராஜபக்சவின் பணிப்பில் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளதாக புல்மோட்டை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து சிங்கள் மக்களைக் காப்பாற்றவே இந்த ஆயுதங்…
-
- 4 replies
- 1.4k views
-
-
புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுகின்றன: சிறிலங்கா குற்றச்சாட்டு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துலக மனித உரிமை சட்ட விதிகள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீறுகின்ற போது அனைத்துலக நிறுவனங்கள் அதனை புறக்கணித்து விடுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். ஆனால் செத்துப்போன கனவை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான சந்திப்பு நேற்றைய தினம் (April 9, 2010) நடைபெற்ற போது வேட்பாளர் ஒருவர் நடந்து கொண்ட விதம் அங்கு கூடியிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கேள்வி நேரத்தின் போது அரசியல் ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் இந்த வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளையும் சக வேட்பாளர்களையும் அவமதிக்கும் விதத்திலும் கருத்தாடியதைக் காணக் கூடியதாக இருந்தது. இன்னொரு கேள்வியை தமிழ் அதிகாரியைப் பார்த்துக் கேட்ட குறித்த வேட்பாளர் உங்களுக்குப் புரியவில்லையானால் கேள்வியைத் தமிழில் கேட்பதாக கூறித் தனது ஆங்கிலப் 'புலமை'யை காட்ட முற்பட்டார். ஒரு கட்டத்தில் எனக்கு எனது ம…
-
- 6 replies
- 1.4k views
-
-
மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார். இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன் "நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்" என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 24, 2010 அரச படைகள் போர் முடிவுற்றதும் போராளிகளின் கல்லறைகளை புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கினர். தம் போர்வீரர்களுக்கு அரசாங்கம் வெற்றி தூபிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவிவருகின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இப்படியான விடயங்கள் குடா நாட்டில் உள்ள 10 இலட்சம் மக்களையும் பாதித்துள்ளது. ஏன் இந்த வேலையை அரசாங்கம் செய்கின்றது என மனம் உடைந்துபோயுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதினிதியும் கனடா நாட்டு பிரகையுமாகிய நீல் பூனே. உண்மையில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்தும் படைகளுக்கு வெற்றி சின்னங்களை கட்டுவதும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களிற்கு இடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அளவு கோல் அல்ல …
-
- 1 reply
- 1.4k views
-
-
-
இளவயது திருமண எதிர்ப்பு பிரச்சாரம் இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார். சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய …
-
- 1 reply
- 1.4k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய முடியாது ஜே.வி.பிக்கு சுதந்திரக்கட்சி பதில். நாட்டில் தற்போது தோன்றியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வது தற்போதைக்கு பொருத்தமானதல்ல என்றுசிறீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. சமர்ப்பித்த 20 யோசனைகளுக்கு, சிறீலங்கா சுதந்திரக் கட்சி அனுப்பி வைத்துள்ள பதில் யோசனைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் யோசனைகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் - இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர் - இந்திய ஊடகங்கள் தகவல் தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழு வைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினரே கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் 112பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், இச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் வன்மையா கக் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. டில்லியிலுள்ள பிரத மர் மன்மோகன் சிங்கின் வாசஸ்தலத் தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமி…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடாவில் பாதுகாத்து பேணப்பட்டுவந்த வல்லை ஆவணக்காப்பக நூல்கள் - 07.05.12 அன்று வல்லையில் கையளிப்பு செய்யப்படுகிறது! [sunday, 2012-05-06 21:16:35] 1969 ஏப்பிரல் 7,8,9 மல்லாகம் தமிழரசுக்கட்சி மாநாடு நடந்தது. மேற்படி மாநாட்டில் குரும்பசிட்டி கனகரத்தினத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணக்கண்காட்சியும் பெரு மளவு மக்களினால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அந்த ஆவணக்கண்காட்சி ஈழத் தமிழர்களின் வாழ்வினைச் சித்திரிக்கும் பத்திரிகைச் செய்திகள், துணுக்குகள் என்ப வற்றின் ஊடாக வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருந்தது. மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளிற்கிடையே ஆன பரபரப்பான நேரங்களிலும் ஒரு இளைஞனின் பார்வையில் பட்ட இந்த ஆவணக் கண்காட்சி அவன் மனதைப் பற்றிக் கொண்ட…
-
- 2 replies
- 1.4k views
-