ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143589 topics in this forum
-
மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள்! February 4, 2025 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே, முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ”இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து சில…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
ஒரு இனப்படுகொலையாளியை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க விடாதீர்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரித்தானிய மாகாராணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானிய மகாராணியாரின் அழைப்பினை ஏற்று, லண்டனுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணம் தொடர்பில், பிரித்தானியா மாகாராணியாருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். தங்களின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதன் வழியே, இரத்தம் தோய்ந்த, தனது சர்வதேச போர்குற்றங்களை, மூடிமறைக்க மகிந்த ராஜபக்சவிற்கு வாய்பளிப்பதோடு, இத்தகைய குற்றவாளிகள், எதுவித அ…
-
- 0 replies
- 582 views
-
-
அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c) and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.
-
- 22 replies
- 2.9k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 FEB, 2025 | 02:21 PM நாளை வியாழக்கிழமை (13) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பகல் வேளையில் வெப்பமாகவும் இரவு வேளையில் குளிராகவும் வெப்பநிலையில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும்…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை கிழக்கு மாகாணம் காணுகின்றபோது பிரபாகரினின் தமிழீம் என்கின்ற கனவு தகர்த்தெறியப்படும். வடக்கு கிழக்கு இணைகின்ற போது தான் தமிழீழம் பற்றி பேச முடியும். இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சரும் ஐ.ம.சு.முன்னணியின் மட்டு.வேட்;பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கில் தொடர்ந்து தெரிவித்தாவது : 'முதலமைச்சாராக முஸ்லிம் ஒருவர் வரமுடியுமாக இருந்தால் அது ஆளும் கட்சியுடன் இணைவதன் மூலம் தான் சாத்தியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது முஸ்லிம் முதலமைச்சர் தேவையில்லை என. அவ்வாறாயின் தேர்தலில் ஏன் அவர்கள் போட்டியிட வேண்டும்'. என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நன்றி வீரகேசரி
-
- 11 replies
- 3.2k views
-
-
இலங்கை இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் முத்தலிப்பை, சக இராணுவ அதிகாரி ஒருவரே புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. வன்னியில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் இரகசிய ஆவணம் ஒன்றையடுத்து இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேகநபரான இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது கிருலப்பனையில் வைத்து லெப்.கேணல் முத்தலிப் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வன்னியிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் மீது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 953 views
-
-
தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை! தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. எனினும் குறித்த தகவல்களில் உண்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதி…
-
- 1 reply
- 566 views
-
-
தேசிய பிரச்சினைக்கு போரினால் தீர்வுகாண முயன்ற ராஜபக்ஸ அரசாங்கம் விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதான பேச்சு மேசைக்கு அழைத்து வர சர்வதேச பின்னணியுடனான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையின் அரசாங்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும்,.............. தொடர்ந்து வாசிக்க................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1828.html
-
- 0 replies
- 1.1k views
-
-
http://naathamnews.com/ சிறிலங்கா தொடர்பில் ஐரோப்பிய ஊடகங்களில் வெளிவருகின்ற எதிர்மறையான செய்திகளினால், இலங்கைதீவிற்கான உல்லாச்துறையில், இழப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சம், சிறிலங்கா அரச உல்லாசத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகளினால், சிறிலங்காவின் உல்லாதச் துறையில், முதலீகளைச் மேறகொள்ள ஐரோப்பிய நிறுவனங்கள் ஆர்வங்காட்டாமையே, இந்த அச்சத்துக்கு காரணமமென தெரிவிக்கப்படுகின்றது. தேயிலை ஏற்றுமதி மற்றும் ஆடை உற்பதத்தி சந்தைகளுக்கான வாய்ப்புக்களில் இழப்பு என சிறிலங்காவின் பொருளாதார வருவாய்க்கு, உல்லாசப் துறைiயினை, கணிசமாக சிறிலங்கா எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் , இதனைச் சமாளிக்க ஐரோ…
-
- 1 reply
- 347 views
-
-
தமிழரின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்! தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். இன்று பத்தரமுல்லையில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். காலத்தை க…
-
- 7 replies
- 598 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 789 views
-
-
[size=4]இலங்கைக்குள் நவநீதம்பிள்ளை காலடி எடுத்து வைக்க அரசாங்கம் இடமளிக்குமானால் அது எமது நாட்டின் அழிவிற்கு ஆரம்பமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்காவினதும் நாடகத்தின் இறுதிக் கட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.[/size] [size=4]இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெளிவுபடுத்துகையில்:[/size] [size=4]வேலுப்பிள்ளை பிரபாகரனை பயன்படுத்தி பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் முயற்சிகள் தோல்வி கண்டதையடுத்து தற்போது அரசியல் கருத்துக்கள் மூல…
-
- 0 replies
- 1.4k views
-
-
இனவழிப்பை செய்தவர்கள் என்றோ ஒருநாள் மண்ணில் வீழ்ந்து அழு(ந்து)வார்! [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2016, 06:35.02 AM GMT ] [ வலம்புரி ] நவாலியில் சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது நடந்த விமானக்குண்டுத் தாக்குதலில் போது அப்பாவிப் பொதுமக்கள் இறந்த செய்தி அறிந்து தான் அழுது குழறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கன்மவினை பற்றி சைவ சித்தாந்தம் மிகத் தெளிவாகப் போதிக்கின்றது. இந்த உலகில் இடம்பெறும் அனைத்து வினைப்பயன்களுக்கும் கன்மாவே காரணம் என்பது சைவ சித்தாந்தத்தின் தத்துவம். இங்குதான் தன்னை அறிதல் என்ற விடயம் முக்கியம் பெறுகிறது. உன்னையே நீ அறிவாய் என்ற சோக்கிரட்டிஸின் தத்துவமும் இதன் வழி வந்தவைதான். ஆக, முதல…
-
- 0 replies
- 427 views
-
-
கிழக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப்போவதில்லையென மிரட்டிவந்த ஹிஸ்புல்லா, அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவியைப் பெறுப்பேற்கத் தற்பொழுது இணங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லாவை அலரிமாளிகையில் சந்தித்து, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு கோரியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்த ஹிஸ்புல்லா, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்கவு…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு மதிமுக ஆதரவளிக்காது என்றார் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வைகோ. மயிலாடுதுறைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது: மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதுடன், இலங்கையில் போர் உச்ச நிலையில் இருந்தபோது சென்னைக்கு வந்திருந்த பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, போரை நிறுத்துவது எங்கள் வேலையில்லை எனக் கூறினார். ஆயுதங்களை வழங்கி ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரை நடத்…
-
- 0 replies
- 422 views
-
-
வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்று யாழ். விஜயம் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் 35 பேர் கொண்ட குழுவினர் இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். விஜயம் மேற்கொண்ட தூதுவர் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னான நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர் . இலங்கை நாட்டில் தூதுவராலயங்கள் இல்லாத நாடுகளின் தூதுவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தூதுவர்களே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.இவர்கள் வடமாகாண ஆளுனரின் ஒழுங்கமைப்பில் வடபகுதிக்கான விஜயத்தை இன்றைய தினம் மேற்கொண்டிருந்…
-
- 0 replies
- 331 views
-
-
Pillayan no darling of Tamils, Hisbullah no champion of Muslims Pillayan and M.L.A.M. Hizbullah By M.S. Shah Jahan It was 12.20 am March 3.. Six men armed with rifles got into the house by force as Logeswaran opened the door. "Where is Pushparani?" asked the gang. The sight of them chilled Logeswaran’s spine. It was he and his only sister Pushparani, who was preparing to sit for her GCE O/Level exams, who were living in the house as the 2004 tsunami had taken away their parents and other siblings. The goons having tied her hands and legs, carried her forcibly to the white van. "My sister was screaming, begging me to help her. But I was unable to do anyt…
-
- 11 replies
- 2.9k views
-
-
வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ; மூவர் பலி [ Wednesday,10 February 2016, 03:59:18 ] கொழும்பை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய கித்தம்பஹுவ பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 19, 24 மற்றும் 49 வயதுடைய மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவம் குற…
-
- 0 replies
- 193 views
-
-
எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த யூதர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க "புல்மஸ் நடவடிக்கை"யைப் போன்று கடற்புலிகளின் சிங்களத்தின் "சிறுத்தீவு" தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=4]வடகிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் கடந்த அறுபது(60) ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் காலடிவைத்திருக்கும் இத்தருனத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கின்றது.[/size] [size=4]தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் முஸ்லீம் காங்கிரஸின் இந்தமுடிவினை முஸ்லீம் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விமர்சித்துள்ளதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லீம் காங்கிரஸ் அக்கரையின்றி செயற்பட்டு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு துரோகத்தை செய்யப்போகின்றதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.[/size] [size=4]…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீங்கள் வாள் எடுத்தால் நாங்களும் வாள் எடுக்கத் தயங்கமாட்டோம். ஆனாலும் அந்த நிலைமைக்கு எங்களையும் நிர்ப்பந்திக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென்று தெற்கில் எழுப்பப்படுகின்ற கோரிக்கை மற்றும் வாள் கொண்டு விரட்டியடிப்போம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே அவர் மேற…
-
- 4 replies
- 560 views
-
-
சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன. அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
ராஜபக்சக்களினால் எனது உயிருக்கு ஆபத்து ; சந்திரிகா குமாரதுங்க தகவல் [ Saturday,20 February 2016, 03:29:43 ] தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார். ஆனால் அவற்றை அவர் இன்று மறைக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எமது கட்…
-
- 0 replies
- 380 views
-
-
சிலாபத்தில் 10 ஜே.வி.பி உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் திங்கள், 09 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இன்று காலை அரைச்சிக்கட்டுவ சிலாபம் பகுதியில் ஜே.வி.பி யினர் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் இதனை ஜே.வி.பியின் வடமத்திய மாகாண கவுன்சிலர் சித்தார நொனிஸ் ஒழுங்கடைத்ததாகவும் தெரியவருகிறது. இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தப
-
- 0 replies
- 562 views
-
-
[size=3]ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல்வார்கள். உலகத்து நாடற்றவர்கள் கண்கள் அனைத்தும் அவன் மேலேயே இருக்கும். அவன் பெயர் குவோர் மாரியல்.[/size] [size=3]குவோர் மாரியலுக்கு 28 வயது. தெற்கு சூடானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக 12 வருடங்களுக்கு முன்ன…
-
- 4 replies
- 815 views
-