Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இயக்க போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி சனல்4 ஆவனம் பொய் என கூற பெரும் முயற்சியொன்றை எடுத்துள்ளதாக காண்பிக்கின்றனர். அப்படியென்றால் போராளிக்கு என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாம் என மறைமுகமாக சிங்களம் சொல்கின்றதா?. . விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தை அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவராம் என கூறியுள்ளது. . 1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டவராம் எ…

  2. இசைப்பிரியா குடும்பத்தை நான் ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும். அவர்கள் மாவீரர் குடும்பம். அவர்களை காட்டிக் கொடுத்தால் நான் எவ்வாறு தமிழனாக இருக்க முடியும் என இந்தியா - பெங்களூரை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கு.கணேசன் தெரிவித்துள்ளார். யாழ் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இசைப்பிரியாவின் ஊடக பயணத்தை திரைப்படமாக்கினேன் ஆனால் அதனை வெளிவரவிடாது பலர் தடைகளை ஏற்படுத்தினர். ஆனாலும் அதனையும் தாண்டி ஏழாண்டுகளுக்குப் பின்னர் இசைப்பிரியாவின் வரலாறு வெளிவந்துள்ளது. இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் சிங்கள மக்களை விட தமிழ் மக்கள் சுயநலம் மிக்கவர்களாக மாறி விட்டனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஈழத்தமிழர்களே தான் காரணம், எல்லாவற்…

  3. இசைப்பிரியா படுகொலை குறித்து சர்வதேச விசாரணை! - ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நியூயோர்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இப்போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமையை உறுதி செய்வதற்கான சான்றாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் அமைந்ர்ள்ளதாக இவ்வமைப்பின் ஆசியப் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் Bob Dietz தெரிவித்துள்ளார். இசைப்பிரியா விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர் என சிறிலங்கா படைத்துறைச் செயல…

    • 1 reply
    • 1.6k views
  4. வன்னியில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் கொடூரமான படுகொலை தொடர்பாக வெளிவந்திருக்கம் புதிய தகவல்கள் இது ஒரு அப்பட்டமான போர்க் குற்றம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஐரோப்பிய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. 27 வயதான 'சோபா' எனப்படும் இசைப்பிரியா விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர் என்பதுடன், இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் இருந்தமையால் ஊடகத் துறையிலேயே அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவக்குழுவினரிடம் இவர் தன்னுடைய இருதய நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோத…

  5. 3 நவம்பர், 2013 இசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். 'பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது' என்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 'சேனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது ச…

  6. இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். எனவே, உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதைச் செய்யவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.இசைப்பிரியா தொடர்பில் சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியை இலங்கை அரசும் இராணுவமும் நிராகரித்துள்ளன. இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மை…

    • 25 replies
    • 1.7k views
  7. இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பாளை ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உட்பட பலர் கண்டன உரியாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்த போது…

    • 0 replies
    • 481 views
  8. Ilayaraja Sir's Upcoming Kannada Film"Yuddabhumiyalli Ondu Hoovu" based on the real life incident of "Isaipriya" a Srilankan who was raped and murdered by 9 Srilankan soliders: The maestro was in bangalore at Chamundeswari studio to record a song for theKannada film YuddabhumiyalliOndu Hoovu. Maestro is scoring music for five songs.Raja sir said that there was stuff in the story and that's why he readily accepted to score music. Addressing the media, The Maestro said"I like to score music for newcomers. Look at all the top directors, my name would be attached".Having completed 926 films and gearing towards 1000, The Maestro said "It was Music when I came to score my fir…

  9. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம்பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சேனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது. சேனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார். 'இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கர்ணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறுயாருமோ உயிரோடு பிடிபடவில்லை. …

    • 6 replies
    • 1k views
  10. 13 Jun, 2025 | 04:28 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது. சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்( இசைப்பிரியா,மற்றும் பாலசந்திரன் பிரபாகரன் உட்பட ) தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். இது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது. இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் …

  11. November 3, 2013 தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா அவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான வீடியோ ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 31-10-2013 அன்று வெளியிட்டுள்ளது. இவ் வீடியோகாட்சி இசைப்பிரியா யுத்தம் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவோ, காணாமல்போகவோ இல்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. கைதியாக உள்ள ஒரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இர…

  12. இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் மார் 8, 2013 விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும். யுத்த காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசயிக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்க எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசன…

  13. இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்? அரியநேத்திரன் எம்.பி. கண்டனம்! [Monday, 2013-11-04 10:22:33] இசைப்பிரியா காணொளி விவகாரம் உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பெண்ணொருவருக்கு இழைக்கப்பட்ட உயர்ந்த கொடூரத்தை பார்த்திருந்தும் இலங்கையிலுள்ள எந்த ஒரு மாதர் அமைப்பும் பெண்ணுரிமை சங்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காமை கவலை தருகின்ற விடயமாகும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தனது கருத்தைத் தெரிவிக்கையில்; இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை சாதாரண ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாகப் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எத்தனையோ மாதர் அமைப…

    • 12 replies
    • 1.3k views
  14. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பரணகம ஆணைக்குழுவுக்குச் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. எனவே, விசாரணையை இறுதிப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை'' என்று ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். அத்துடன், "காணாமல் பேகச் செய்யப்பட்டோர் தொடர்பில் மக்களிடம் முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் தமது…

  15. கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப…

    • 27 replies
    • 3.1k views
  16. இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்…

  17. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வன்னியில் இருந்து - துவாரகா கலைக்கண்ணன் - 'நந்திக் கடலோரம் எங்கள் தமிழ் வீரம் வந்து நின்று ஆடியது நேற்று......' இது கவிஞர் புதுவையின் பாடல் வரிகள். அதே நந்திக்கரையில் நாதியற்று நடைபிணமாய் போனது தமிழ் இனம். விடுதலைப் போராளிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு மக்கள் தமது ஊரை இழந்து, உறவுகளை பிரிந்து, உணவின்றி, உடல் காயங்களுடன் இராணுவத்தின் ரவை மழையினுள் பாலஸ்தீனத்தின் நீண்ட பயணம் போல் பயணித்துக் கொண்டிருந்தனர். கரையோரங்களில் பல போராளிகள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தனர். ஆனால் அந்த வீரன் மிகத்தெளிவாக தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கான ஆயத்தங்களுடன் நின்றிருந்தான். 'சரணாகதி' என்பது சரித்திரத்தில் இல்லை என்பதே அவனது நிலையாக…

  18. இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற காணொலியை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என சனல் - 4 இயக்குநர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் காணொலியை சனல் - 4 ஊடகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் - 4 ஊடகமே வெளியிட்டிருந்தது. இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையி…

    • 2 replies
    • 1.8k views
  19. பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆரம்ப நாள் வைபவத்திற்கு மாத்திரம் 50 மில்லியன் செலவாகும் என அதிகாரிகள் அறிவித்திருக்கின்றார்கள். பொதுநலவாய மாநாட்டை நடத்துவதென்பது அதனை நடத்துகின்ற நாட்டுக்கு அரசியல் ரீதியாகக் கிடைக்கின்ற ஓர் உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அந்த நாட்டின் செயற்பாடுகள் ஆட்சி முறை என்பவற்றைப் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் ககொண்டிரு;கின்றன என்றதோர் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. அந்த வகையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திலும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போதும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை அரச படைகள் மோசமான முறையில் மீறியிருந்தன. பயங்கரவ…

  20. இசைப்பிரியா எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் கண்டிக்கதக்கதென இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றும் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்க செயல் என்றார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன எனவும், மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது ப…

    • 12 replies
    • 2.1k views
  21. சிறிலங்கா படையினரால் இரக்கமற்ற முறையில் போர் விதிகளை மீறி அப்பாவித் தமிழ் மக்களும் ஆயுதம் தரித்திராத போராளிகளும் படுகொலை செய்யப்பட்ட காணொளிக் காட்சியை “சணல் 4” ஒளிபரப்பியதோடு மட்டுமல்லாமல் சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்கான வழிவகைகளையும் மிகவும் பொறுப்புடன் ஏற்படுத்தி வருகிறது. மற்றைய பன்னாட்டு ஊடகங்களையும் சிறிலங்கா அரசின் போர்குற்றத்திற்கு எதிரான குரல் கொடுக்க வைத்திருக்கிறது. சணல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தப் போர்குற்ற ஆதார காணொளி வெளியாகுவதற்கு முன்னரேயே இந்த படுகொலை தொடர்பான ஒளிப்படங்கள் உலகத் தமிழ் பேரவையினால் வெளியிடப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டவர்களில் போராளி ஊடகவியலாளரான இசைப்பிரியாவும் உள்ளாரென அடை…

  22. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- இணைப்பு - 2 முதற் பதிவேற்றம்- 19-05-2014 - 15:37 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர். இது தொடர்பில் உஷாளினியின் பெற்றோர் தெரிவிக்கையில் 'இறுதிப்போரின் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார். மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல…

    • 11 replies
    • 993 views
  23. இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எட…

  24. இசைப்பிரியாவுக்கும்... நீதிகோரி, காலி முகத்திடலில்... போராட்டம் !! காலி முகத்திடலில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவுக்கு நீதி கோரிய பதாதைகள்கட்சிப்படுத்தப்பட்டன. அந்தவகையில் ராஜபக்ஷ… அவர்களின் இரத்தம் உங்கள் கைகளில் உள்ளது என சிங்கள மொழியில் பதாகை அமைக்கப்பட்டிருந்தது. தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் செய்திகளை வழங்கிவந்த அவர், 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் மௌனிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavann…

    • 4 replies
    • 472 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.