Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: NANTHINI 14 JUL, 2023 | 07:27 PM பனை அபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதை கொண்டாடாமல் கைவிடவோ மாற்றியமைக்கவோ வட மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வட மாகாண கூட்டுறவுத் திணைக்களம் ஆடிப் பிறப்பை முன்னிட்டு ஜூலை 14 முதல் 16ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் நல்லூர் கிட்டு பூங்காவில் பனை உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கண்டனக் கருத்தினை அவர் பதிவு செய…

  2. ஹிஸ்புல்லாக்கள் போன்று விமானத் தாக்குதல் நடத்தியிருக்கும் விடுதலைப்புலிகள் [10 - April - 2007] கடந்த மார்ச் 26 ஆம் திகதி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கட்டுநாயக்க விமானப்படை முகாம்கள் மீது நடத்திய விமானத் தாக்குதல் இற்றைக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா இயக்கப் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலைப் போன்றதாகும். மேற்படி தாக்குதலை ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய நஷாறியா மீது மேற்கொண்டனர். இந்த விமானத் தாக்குதலின் போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் செலுத்திகள் இல்லாத தன்னியக்க விமானம் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி லெபனானிலிருந்து ஏவினர். அந…

  3. இலங்கையின் இன ஒற்றுமைக்காக அமைச்சர் ராஜித உரைத்த மகா தத்துவம் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இன்னொரு பிரபாகரன் வரும் வரை காத்திருக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்தக் கருத்து மிகவும் மரியாதைக்குரியதும், சரியான நேரத்தில் சொல்லப்பட்டதுமாகும். அதிலும் அமைச்சராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியமை அவரின் நேர்மையையும் யதார்த்தமான சிந்தனையையும் எடுத்துக்காட்டும். ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, தென்மராட்சிப் பகுதியில் ஏற்பட்ட யுத்த அழிவுகளை வியட்நாம் அழிவுக்கு ஒப்பானதெனக் கூறியிருந்தார். அழிவுகளை, அதன் தாக்கங்களை தமிழ், சிங்கள இனத்துவ அடிப்படையில் நோக்காமல் இ…

  4. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும். இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு (21) நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்கள…

  5. அதிகாரப்பகிர்வு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் 12 அம்ச யோசனை ஒப்படைப்பு கொழும்பு , செவ்வாய், 28 ஜூன் 2011( 14:51 IST ) அதிகாரப்பகிர்வு குறித்த 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இலங்கை அரசு ஒப்படைக்கப்படவுள்ளது இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே அதிகாரப் பகிர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அப்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக,வட மாகாணத்தில் அமல்படுத்தக் கூடிய வகையிலான 12 அம்ச யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 23 ஆம் தேதியன்று இலங்கை அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழ தேசிய கூட்டமைப்பினர் 51 அம்ச யோச…

    • 1 reply
    • 497 views
  6. குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டமையை அடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பதவியேற்கவிருந்தபோதும் அது நடைபெறவில்லை. ஜனநாயக கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெயந்த கெட்டகொட பதவி விலகி, இடம்தராமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளமையால் சரத் பொன்சேகா, மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும் என்று சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார். இந்தநிலையில் கெட்டகொட பதவி விலகினால் மாத்திரமே சரத் பொன்சேகாவினால் பதவியேற்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சரத் பொன்சேகா. புதவியேற்க வேண்டுமானால் கெட்டகொட பதவிவிலக வேண்டும் என்ற…

  7. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல்… October 16, 2018 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபை உறுப்பிப்பினர் உள்ளிட்ட குழவினர் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் காவற்துறையின…

  8. [sunday, 2011-07-03 13:51:28] மஹிந்த பாலசூரிய பொலிஸ்மா அதிபர் பதவிலிருந்து இராஜினாமாச் செய்திருந்த நிலையில் தொடர்ந்தும் அரசாங்க சலுகைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததனையடுத்து அனைத்து விசேட அரச சலுகைகளையும் இழந்த இவர் இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் சலுகைகளைத் தொடர்ந்து அனுபவிப்பது தொடர்பில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடமையிலிருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட அரச விமானப் பயண அனுமதிப் பத்திரத்தைத் தொடர்ந்தும் வைத்துக்கொண்டே ஓய்பெற்ற பின்னரும் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெற்றதன் பின்…

  9. யாரும் காலை வாரிவிடக் கூடாது : மனோ கணேசன்! அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் நிலைப்பாட்டில் உள்ளவர் என்று பிரசன்ன ரணதுங்க கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, நாங்கள் உங்களை சந்தித்தபோது, அதிகாரத்தை பரவலாக்கி அரசியல் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தினோம். ஆனால், அவர் செய்யவில்லை. இப்போது மீண்டும் ஒரு சந்தர…

    • 5 replies
    • 332 views
  10. மனிதநேயப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் தலையிட ஐ.நா. செயலாளரிடம் கோரிக்கை மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் முறையீடு கொழும்பு, ஏப்.26 கிழக்கில் பணியாற்றும் மனிதநேய அமைப்புகளின் இணையத்தின் உறுப்பினர் களுக்கும் ஐ.நா. முகவர் அமைப்புகளின் அலுவலர்களுக்கும், கருணா தலைமையி லான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருப்பதாகத் தெரிவித்து, இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு ஐ.நா. செய லாளர் நாயகம் பான் கீன் மூனைக் கோரி யிருக்கின்றது மனித உரிமைகளுக்கான ஆசிய மையம். மனிதநேயப் பணியாளர்களுக்கும், ஐ.நா. முகவர் அமைப்புகளின் அலுவலர்களுக் கும் ஏப்ரல் 17 ஆம் திகதியும், ஏப்ரல் 20 ஆம் திகதியும் அச்சுறுத்தல் விடுக்கும் "ஈ மெயில்' செய்திகள் இரண்டை கருண…

  11. நீங்கள் இந்தியாவிலிருந்து இலங்கை செல்பவராகவிருந்தால் சென்னையில் இருக்கும் சாஸ்திரிபவனுக்கு செல்லுங்கள்.அங்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்தானிகர் அலுவலகம் உண்டு. அங்கு சென்று உங்கள் விபரங்களை பதிவுசெய்தால் அவர்கள் நீங்கள் விசா இன்றி தங்யிருந்த காலத்திற்கான சான்றிதழ் (EXIT VISA) பெற்றுகொடுப்பதோடு உங்களுக்குரிய விமான பயணச்சீட்டு,அங்கிருந்து வவுனியாவரை செல்வதற்கான இலவச பயண ஒழுங்குகள் செய்து கொடுப்பார்கள்.இதைவிட உங்களுக்கான உதவித்தொகை ரூபா 10,000 வழங்குகிறார்கள்.ஆகவே ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறாதீர்கள்.இப்படி செல்வதால் பாதுகாப்பும்கூட.ஏனெனில் ஐக்கிய நாடுகள் பதிவேட்டில் உங்கள் விபரங்கள் சேமிக்கபட்டிருக்கும்

  12. ஜெனீவா அறிக்கை விவகாரம் .. ஜெனீவா அறிக்கை பல ஆயிரக்கனைகானோரின் படுகொலை மறும் காயப்படுத்தல் தொடர்பான வழக்கு . படுகொலையை மனிக்கவும் படுகொலைகளை நேரில் பார்த்தவர்களின் வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல், அந்த கொலைகளின் பொழுது காயப்பட்டவர்களின் சாட்சியங்களின் வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல் , கொலையின் பொழுது எற்பட்ட பொருட்சேதங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல் வழக்கு நடத்த வேண்டும் என்று கோருபவன் முழு முட்டாளாக அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அரசியல் செய்யும் நபராக அல்லது விபரம் அறியாத நபராக மட்டுமே இருக்க முடியும் . மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அரசியல் செய்வது தமிழ் அரசியல்வாதிகளின் வழக்கமாக இருந்ததாலேயே …

  13. தாம் விரும்புபவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – முன்னாள் சபாநாயகர் அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது என முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஸவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட முடியாது. சபாநாயகருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டி…

  14. Published By: VISHNU 28 AUG, 2023 | 01:31 PM இந்தியா அனுசரணை இன்றி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் மக்களின் தளபதி அமரர் அமிர்தலிங்கம் கருதியதால் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்றுக் கொண்டார் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கா. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்த தின நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமரர் அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு தலைமை …

  15. மகிந்தரின் சகோதரர் லண்டன் வருகிறார்: வரவேற்ப்பு எப்படி இருக்கப்போகிறது ? எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்தரின் சகோதரரும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ பிரித்தானியா வருகிறார். இவர் வரும் 17ம் திகதி லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் டேர்மினல் 4 ஊடாக லண்டன் வர இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இவருடன் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் உடன் வர இருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா வந்தபோது தமிழர்கள் எவ்வாறு வரவேற்றார்கள் என்பது ஊரறிந்த விடையம். இ…

    • 1 reply
    • 1.1k views
  16.  மூதூர் பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரும் இணைந்து சஞ்ஜீவி திட்டத்தினூடாக 'ஒரு கோப்பை உணவில் நிறை உணவு' தயாரிக்கும் திட்டத்தை மூதூரில் உள்ள சகல கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். கிராம மட்டத்திலுள்ள அன்னையர் ஆதரவு குழு மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 80 கிராமங்களில் இச்செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உள்ளுர் உற்பத்தியான காய்கரிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், புரத உணவுகளை பாவித்து குறைந்த செலவில் மனித உடலுக்கு தேவையான 6 வகையான போசாக்கு சத்துக்களை எவ்வாறு பெறலாம் என்பத…

  17. மனித உரிமை மீறல் தீவிர யுத்த முனைப்பு - இலங்கை மீது கவனத்தை திருப்ப காரணமென்கிறார் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பும் மீண்டும் முனைப்பெடுத்திருக்கும் யுத்தமும் சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் ஸ்தம்பித நிலையுமே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் பக்கம் தமது கவனத்தை திருப்பவும் கரிசனையுடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் காரணமாக அமைந்தது என்று அந்த நாட்டின் உயர் ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எவ்வளவு தூரத்திற்கு கவலையடைந்துள்ளனர் என்பதன் வெளிப்பாடே அங்கு நடத்தப்பட்ட விவாதம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை நிலைவரம் தொடர்…

  18. வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது சாவல் மிக்கது – 19 ஜூலை 2011 ஐ.நா. வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது சவால் மிக்கது என ஐக்கிய நாடுகள் அமைப்பு என சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சரியான முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான மனிதாபிமான இணைப்பாளர் சுபினாய் நென்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நென்டி முதல் தடவையாக வடக்கிற்கு விஜயம் செய்துள்ளார். மெனிக்பாம் முகாம்…

  19. Published By: VISHNU 17 SEP, 2023 | 01:19 PM குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல்…

  20. அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் - தயாசிறி 23 ஜூலை 2011 அமெரிக்கா உதவிகளை நிறுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் - தயாசிறி அமெரிக்காவினால், இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உதவிகள் நிறுத்தப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலைமை மேலும் உக்கிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் உதவிகள் நிறுத்தப்பட்டால் அதன் மூலம் பாதிக்கப்பட போவது அப்பாவி மக்கள் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில் வி…

    • 1 reply
    • 591 views
  21. 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் வலுவாலன ஓர் அதிகாரப் பகிர்வு முறைமை அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமைய வாய்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் இலங்கை தமிழர் விவகாரத்தில் காண்பித்து வரும் கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் பொருத்தமற்றது என்பதனை மோடி புரிந்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மாதிரியில் இலங்கையில் அதிகாரப் பகிர்வில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் வட மாகாணச…

    • 33 replies
    • 1.4k views
  22. இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் அதே வேளையில், நான்கு வயதை எட்டும் அனைத்து குழந்தைகளுக்கும் சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளின் சார்பில் அரசு தலையிட்டு, தேவையின் அடிப்படையில், இடவசதி உள்ள ஆரம்ப பாடசாலைகளில் குழந்தை பருவ வளர்ச்சி மையங்களை நடத்தலாம். மூடப்படும் சவாலை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நாட்டில் குழந்தைகளின் முறையான ஆரம்ப குழந்தை பருவ வளர்ச்சியே கல்வி மாற்ற சீர்திருத்தங்களில் வெற்றி ப…

  23. Published By: VISHNU 08 OCT, 2023 | 01:46 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு சனிக்கிழமை (7) வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக்கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்சினைகளுக்க…

  24. 8/4/2011 10:32:02 AM மத்திய அரசாங்கத்தின் சரிபாதி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சரும் சர்வகட்சி குழுக்களின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தினார். நல்லாட்சியையும் அரசியல் தீர்வையும் உறுதிப்படுத்தாமல் இலங்கையால் ஒரு போதும் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது. எனவே தேசிய இலக்குகளில் சிறுபான்மை இன மக்கள் உள்வாங்கப்பட வேண்டுமாயின் அவர்களின் சுயகௌரவம் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த உள்ளூராட்சி ம…

    • 2 replies
    • 647 views
  25. November 30, 2018 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோப்பரேட் சேர்வீஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று (30.11.18) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார். முறைப்பாட்டாளர் தரப்பில் சாட்சியாளர்கள், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்களை அனைவரும் அடுத்த வழக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.