ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஹிக்கடுவ பிரதேசத்தில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் மீட்கப்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப் பொருள் தொகுதி இதுவென்துபது குறிப்பிடத்தக்கது. ஹிக்கடுவ பிரதேசத்தில் 10 கிலோ எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. லைபீரிய பிரஜை ஒருவரிடம் நடத்திய விசாரணைகிளன் மூலம் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லைபீரிய பிரஜையை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100338/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 644 views
-
-
பருத்தித்துறை கலவர சம்பவம்: பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் -செல்வநாயகம் கபிலன் துன்னாலை சம்பவத்தில், பொலிஸ் திணைக்களத்துக்கு 2 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான பீ.ஆர்.சமன்ஜெயலத் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணற்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனத்தின் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். “இதனையடுத்து, பிரத…
-
- 0 replies
- 358 views
-
-
நிரந்தமான தீர்வொன்றை அடைய பிரித்தானியா வழிவகை செய்ய வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை நிரந்தமான தீர்வொன்றை அடைந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இந்த கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்தார். நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய கொண்டிருக்கும் கரிசனை மற்றும் அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் சம்பந்தன் நன்றி தெரிவித்தார். இரண்டாக இருந்த நாட்டை 1933 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியா ஒன்றாக்கிய பின்னர்…
-
- 3 replies
- 347 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்புக்காக அவர் தம்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்தமையால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்தனர். http://thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=183:2010-01-17-13-21-56&catid=34:ceylonnews&Itemid=71
-
- 0 replies
- 956 views
-
-
ஜனவரி மாதத்திற்குள் மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை! ஜனவரி மாதத்திற்குள் மட்டும் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்கமைய, இம்மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76 ஆயிரத்து 536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதில் 12 ஆயிரத்து 368 பேர் ரஷ்யாவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் போலந்து, மாலைத்தீவு மற்றும் கஸ்க்ஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிக…
-
- 0 replies
- 131 views
-
-
கே.பி.-மகிந்த ரகசிய உடன்பாட்டின் பின்னணியில் கேணல் ராம் உட்பட மூவர் விடுதலை- ரணில் KP–President secret deal behind release of 3 key LTTE activists – Ranil Opposition and UNP leader Ranil Wickremesinghe accused the government of releasing from custody three key LTTE activists under a secret deal reached between K. P. Pathmanathan (KP) and Mahinda Rajapaksa. Claiming that LTTE’s self-styled "Colonel" Ram was amongst those freed from detention, he expressed concern that this terrorist could be used to cause harm to key members supporting Gen. (Retd) Fonseka or may be to the candidate himself. "The government has also released two other LTTE members, Sell…
-
- 2 replies
- 1.5k views
-
-
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் விடுத்திருந்த திறந்த அழைப்பை நிராகரித்திருப்பதாக ஆளும்கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தமிழோசையிடம் தெரிவித்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கருதுவது 'சிறுபி…
-
- 0 replies
- 319 views
-
-
சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைப்பற்றிய போதிலுமு் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாக வவுனியா போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.எ.அனுர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பூந்தோட்டம் மகாரம்பைக்குளம் பகுதிக்கு சென்றபோது மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் முதிரை மரக்குற்றிகள் ஏற்றிய வாகனத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிக மற்றும் சிறீதரன், சாள்ஸ் சந்திப்பு ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர் காலம் குறித்தும், தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையான நிலையான அரசியற்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துக்களை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ச…
-
- 0 replies
- 149 views
-
-
காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள் இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மக்கள் முன்னர் தங்கியிரு…
-
- 2 replies
- 791 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பொறிமுறை சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இங்கு இடம்பெற்றுவருகின்ற இன அழிப்பிற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையே அவசியமெனவும் கோரியுள்ளது. இன அழிப்பிற்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்மான பொறிமுறை பொருத்தப்பாடற்றதென நிராகரித்துள்ள மேற்படி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதனை இங்குள்ள தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமாயின், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஊடகவியியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெள…
-
- 0 replies
- 291 views
-
-
‘நான் ஒரு தமிழ் குடிமகன்’; நிதி நிறுவனம் வழங்கிய சிங்களத்தில் படிவத்தில் எழுதிக் கொடுத்த இளைஞன்: யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார். அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அந்த இளைஞன் பே…
-
- 9 replies
- 706 views
-
-
தமிழர்களை காக்கத் தவறிய தமிழக அரசின் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க முடியாது: மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு திகதி: 09.02.2010 // தமிழீழம் இலங்கைத் தமிழர்களின் துயர நிலையை இந்திய மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிவாரணம் பெற்றுத் தர தமிழக அரசு தவறி விட்டது. எனவே கோவை உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி கூறியுள்ளார். கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில், கலந்து கொண்ட டாக்டர் பி.இராமசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், 'உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் ; அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் (சி.எல்.சிசில்) கலப்பு தேர்தல் முறையும் புதிய தேர்தல் முறையும் அமையும் வரை பழைய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண சபைகளை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட…
-
- 0 replies
- 187 views
-
-
வவுனியா வடக்கு பிரதேசத்தை மது மற்றும் புகைத்தல் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என பிரதேச செயலக மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஊழியாகள் பாடசாலை மாணவர்கள் இன்று (10.1) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மீள்குடியேற்றப்பட்ட பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தியை காணமுடியும் என்ற நோக்கோடு இடம்பெற்ற இந் நிகழ்வில் முதல்கட்டமாக வவனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து பிரதேச செயலகத்தில் இருந்து நெடுங்கேணி மகாவித்தியாலயம் வரை வழிப்புணாவு ஊர்வலமும் இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் முன்பாக ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை இல்லாதொழிக்…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கையுடன் இந்தியாஎப்போதும் ஒட்டி உறவாடும் இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் என்று, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சந்திப்புத் தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை, மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். …
-
- 0 replies
- 155 views
-
-
'தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை' இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார். அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார். இவை க…
-
- 3 replies
- 696 views
-
-
எமது பாதை மாறாது யுத்தக்குற்றம் இடம்பெறவே இல்லை என்கிறார் அமைச்சர் சம்பிக்க (ஆர்.யசி) சர்வதேச அழுத்தங்களின் காரணமாக தேசிய கொள்கைகளையும் இலங் கையின் பாதையையும் திசைதிருப்ப அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. இலங்கையின் உள்ளக விவகாரங்களை நாமே தீர்ப்போம். அதற்கான மாற்றமே இந்த நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய ஒற்றுமையை குழப்பவே சர்வதேச அமைப்புகள் தொடர்ந்தும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன என்றும் அவர் கூறினார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட …
-
- 0 replies
- 375 views
-
-
பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப்போவதில்லை – எதிர்க்கட்சி ராஜபக்ஷ மட்டுமல்ல முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக தாம் நம்புவதால், நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்சவை தனிமைப்படுத்தி அரசாங்கத்தின் சொந்த பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் விரும்பவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி அமைச்சரின் நடத்தையே காரணம் என்றும் அவரை மட்டுமன்றி முழு அரசாங்கத்தையும் நாட்டுக்கு அனுப்புவதே தமது நோக்கம் என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரி…
-
- 2 replies
- 236 views
-
-
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட் பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணை என்ற பெயரில் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், 100 பேர் பூஸா தடுப்பு முகாமிற்கு கடந்த 26ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வரு மாறு: கிளிநொச்சி35, யாழ்ப்பாணம்26, முல் லைத்தீவு13, வவுனியா15, மன்னார்07, மட்டக்களப்பு03, திருகோணமலை01. இவ்வாறு பூஸாவிற்கு அனுப்பப்பட் டவர்களின் விவரங்களை இன்று புதன் கிழமை முதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் பார்வையி டலாம் என்று இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார். இதேவேளை …
-
- 0 replies
- 425 views
-
-
சக்தி டிவி செய்திகள் 19 09 2017 , 8PM
-
- 0 replies
- 291 views
-
-
இராஜாங்க அமைச்சரின், வாகனத்தின் மீது... எரிவாயு சிலிண்டரினால், பொதுமக்கள் தாக்குதல்! இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு, சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று(திங்கட்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கேகாலை மாவட்டத்துக்கான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதான விநியோக முகவரான, கனக ஹேரத் இன்று காலை கேகாலை ரன்வல சந்தியின் ஊடாக பயணித்தபோது, எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வாகனத்தை செலுத்த முற்பட்டதாகவும், அதன்போது வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கையில் இருந்த எரிவ…
-
- 1 reply
- 201 views
-
-
GA of the Vavuniya district today announced approximately one hundred ancient copper coins have been discovered during a road reconstruction exercise in the Marukkarampalai area in Vavuniya. According to the Vavuniya District Government Agent, Bandula Harischandra, a clay pot with copper coins has been discovered in a drain while road reconstruction taken place along Thandikkulam – Kalmadu road. He further stated that the coins are to be handed over to the Archaeological Department to ascertain the period of the coins இது பிற்கால தமிழ் மன்னர்களின் சேது நாணயம் போல் தெரிகிறது. சிங்களவர்கள் வழமைபோல் வரலாற்றை திரித்து விடுவார்கள் எனவே யாழ் பல்கலைக்கழகமோ …
-
- 0 replies
- 656 views
-
-
உணவுப் பொருட்கள் அடங்கிய... ஆயிரம் கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்! உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு டொலர் பற்றாக்குறை…
-
- 0 replies
- 183 views
-
-
மண்டேலா பாணியில் நாட்டை கட்டியெழுப்புவோம்--ஐ.தே.மு WEDNESDAY, 17 MARCH 2010 01:10 செய்திகள் நிறவெறி ஆட்சிக்கெதிராகப் போராடி வெற்றிகண்ட தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பாணியில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப சகல இன மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்புவிடுத்திருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதுடன், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சகல சமூகங்களினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற உறுதியான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று செவ்வாய்க்…
-
- 1 reply
- 778 views
-