ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மட்டக்களப்பு சிறையில் கைதிகள் மீது தாக்குதல்! கைதிகள் உண்ணாவிரதம்! Published on July 23, 2011-10:44 am மட்டக்களப்பு சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக கைதிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுக்காலை வழக்கம்போல சிறைக் கைதிகள் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அங்கு தண்ணீர் பற்றாக்குறையாக இருந்ததனால் இது பற்றி சிறைச்சாலை அதிகாரிகளிடம் பேசுவதற்காக மூன்று அரசியல் கைதிகள் சென்றபோதே, அதிகாரிகளால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் மிக மேசமாகவும் தரைக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்ததாகவும் தாக்குதலுக்குள்ளான அரசியல் கைதி…
-
- 0 replies
- 248 views
-
-
யாழ்ப்பாணத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக மாற்றும் செயற்றிட்டத்துக்கான நீர்த்தாங்கிகள் அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடிகாலமைப்புச் சபையின் சமூக அணி திரட்டல் விசேடத்தூதுவர் ரி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (12), தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரான்ஸ் நாட்டின் அபிவிருத்தி முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றின் 9,100 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், மருதங்கேணி - தாளையடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. கடல்நீரை நன்னீராக்கி அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகம்…
-
- 1 reply
- 341 views
-
-
சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகைமொழியை பயன்படுத்தக்கூடிய உலகம் என்னும் தொனிப்பொருளில், இன்றைய சர்வதேச சைகைமொழி தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமானதுடன், மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்று அங்கு விசேட நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. குறித்த பேரணியில் இலங்கையின் 10 மாவட்டங்…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
1 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத் தாளை வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பில் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றுவீத பிரிவுக்கு தெரியப்படுத்தி, அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியை சேர்ந்த சந்தேகநபர் கடந்த 16ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், வெளிநாட்டுப்பணத்தை மாற்றுவதற்கு முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர்.…
-
- 1 reply
- 823 views
-
-
வீடுகள்,கோயில்கள்,பாடசாலைகள்,மருத்துவமனைகள் தரைமட்டமாக்கப்பட்டதை சிங்களத்தலைவர்கள் முன்னிலையில் கூறும் விக்கினேஸ்வரன்.
-
- 2 replies
- 829 views
-
-
November 30, 2018 “வவுனியாவில் விபசாரத்தால் எச்.ஐ.வி தொற்று ஏற்படுகின்றது” என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று (30.11.18) வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கருத்து வெளியிட்டுள்ள அவர், “உலக எயிட்ஸ் தினம் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியா…
-
- 0 replies
- 419 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் சகாக்களின் ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தும் பொருட்டு LankaWayNews.com என்ற பெயரில் புதிய இணையத்தளம் ஒன்றினை உத்தியோகபூர்மாக ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் பிரிவு தீர்மானித்துள்ளது. இதற்கான அனைத்து வேலைத் திட்டங்களும் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்று வருகின்றன. இந்த இணையத்தளம் விரைவில் செயற்பாட்டுக்கு வரவள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியினதும் அவரது சகாக்களினதும் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மற்றும் தகவல்களை இந்தப் புதிய இணையத்தளம் உள்ளடக்கியிருக்கும் என்றும் அத்துடன் அவர்கள் தொடர்பிலான புதிய தகவல்களையும் அது கொண்டிருக்கும் எனவும் இந்த இணையத்தின் ஆசிரியர் சத…
-
- 0 replies
- 668 views
-
-
புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! [Wednesday 2015-04-01 21:00] புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அகடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அகடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 61 பிள்ளைகள் வரையில் அங்கு கல்வி பயின்று வர…
-
- 1 reply
- 436 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ள…
-
- 0 replies
- 377 views
-
-
ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு 3000 ரூபா வழங்க உடனடித் திட்டம் - சிங்கள மக்களுக்கே இந்த உதவி கிடைக்கும் ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 3000ரூபா கொடுப்பனவு வழங்க சமூக சேவை அமைச்சு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க முதற்கட்டமாக அனுராதபுர மாவட்டத்தில் அத்தகைய ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு குறித்த அப்பணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் ஊனமுற்றோர் உள்ள் 112 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 3000ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 28,56,000 ரூபா மொத்த கொடுப்பனவாக இக் குடும்பங்களுக்காக வழங்கப்பட…
-
- 1 reply
- 732 views
-
-
யாழ். ஊடகவியலாளர் சிறையில் அடைப்பு APR 08, 2015 | 16:43by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழில், பிரதேச செய்தியாளராகப் பணியாற்றும், ஊடகவியலாளர் ஒருவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என்.லோகதயாளன் என்ற ஊடகவியலாளரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் ஒருவரால், பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த செய்தியை வழங்கியது தொடர்பாகவே ஊடகவியலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தி தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு வருமாறு நெல்ல…
-
- 0 replies
- 500 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விரைவில் நீங்குமாம்! [Wednesday 2015-04-15 08:00] இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. இந்தநிலையில் குறித்த தடையினை நீக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வி.எம்.எஸ். உபகரணங்களை எதிர்வரும் மே மாதத்திற்குள் படகுகளில் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும்,…
-
- 1 reply
- 572 views
-
-
குறித்த நபர் 23 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 153 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்துருந்து குற்றச்சாட்டில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைப்பற்றபட்ட போதைப்பொருளானது பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/46724
-
- 1 reply
- 468 views
-
-
Published By: VISHNU 16 NOV, 2023 | 05:06 PM பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு குறித்து தான் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும் குறித்த எரிபொருள் ஏலவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் என்ன சொன்னாலும் அது நடந்துள்ளதால் இது தொடர்பில் சரியான தகவல்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (16) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த தரக்குறைவான எரிபொருள் நல்ல எரிபொருளுடன் கலந்து சந்தையில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும், இங்கு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதால் இதற்கு பொறுப்பான அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
பெறுநர்: மருத்துவர் இராமதாசு, புரட்சிப்புயல் வைகோ, பழ.நெடுமாறன், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், செந்தமிழன் சீமான், தோழர்.தியாகு, பெ.மணியரசன், கொளத்தூர் மணி, மருத்துவர்.கிருட்டிணசாமி, ஜனாப்.ஜவாகிருல்லா, ஜனாப்.எசு.எம்.பாக்கர், தோழர்.ஜி.இராமகிருட்டிணன், தோழர்.தா.பாண்டியன், தோழர். நல்லக்கண்ணு, பொன்.இராதாகிருட்டிணன், கி.வீரமணி, வே.ஆனைமுத்து, அரிமாவளவன், சுப.வீரபாண்டியன், கண.குறிஞ்சி, பா.செயபிரகாசம், அமரந்தா, திருமுருகன், தமிழரைக் காப்போம் (சேவ் தமிழ்சு).. வணக்கம், தமிழகத்தின அனைத்துப் போராட்டங்களிலும் பல்வகைகளிலும் தங்களின் பங்களிப்புக்களை புலம்பெயர்ந்து வாழும் நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருவதோடு, இயன்ற அளவில் நாங்களும் பங்குகொண்டு வருகிறோம். அந்த வகையில், தமி…
-
- 0 replies
- 597 views
-
-
சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவது எப்போது என்று காத்திருக்கும் பரவிப்பாஞ்சான் கிராம மக்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்ட போதிலும் மேலும் பல பகுதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளமை கவனத்திற்குரியது. தமது சொந்த வாழ்விடங்களை இழந்து மக்கள் படும் அவலம் சொல்லில் அடங்காதது. சொந்தக் காணிகளில் மீளக் குடியேற வேண்டும் என்ற கனவோடு பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் காத்திருக்கின்றனர். சொந்த நிலத்தை பிரிந்து, வாழ்ந்த வீடுகளை இழந்து அலைவது என்பது மிகவும் துயரமானது. வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காய் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் அழைத்து வரப்பட்ட பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் அலைகின்றனர…
-
- 0 replies
- 449 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நாளை பார்வையிடவுள்ளார் வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபட்பட்டுள்ளது. இதனை அமைச்சர் ரஞ்சித் மதுத்துமபண்டார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள், உணவுத்தேவைகள், வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிந…
-
- 0 replies
- 310 views
-
-
27 NOV, 2023 | 09:59 AM யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் , தொடர்ந்து அங்கு வாழ முடியவில்லை என்பதால், தமிழகம் வந்துள்ளோம் எனவும் , இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யுத்தத்தின் மூலம் நிறைவேற்றமுடியாது வீரகேசரி நாளேடு தமிழ் மக்களின் பிரதிநிதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனை கருதமுடியாதென்கிறார் அமைச்சர் விஜேசேகர தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யுத்தத்தின் மூலம் நிறைவேற்றமுடியாது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தமிழ்மக்களின் பிரதிநிதியாக கருதமுடியாது. யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் அபிவிருத்தி உட்பட பல செயற்பாடுகளை முடியாது, என்று விஷேட கருத்திட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேகர தெரிவித்தார். கொழும்பு வர்த்தக மையத்தின் 28 ஆம் மாடியில் விஷேட கருத்திட்ட அமைச்சின் அலுவலகத்தினை திறந்துவைக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமை…
-
- 1 reply
- 1.2k views
-
-
போர்க்குற்றச்சாட்டுக்களை ஜெனிவாவில் எதிர்க்க முயற்சி; சிங்களவரை ஒன்று திரள அழைப்பு Friday, September 2, 2011, 10:19 ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அரசின் மறைமுக ஆதரவுடன் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படலாமென பரவலாக எதிர்பார…
-
- 2 replies
- 371 views
-
-
வடக்கு மாகாணத்தில் காணாமல் போதல் சம்பவங்களில் 60 வீதம் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வீதமான சம்பவங்களை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதாகவும், 5 வீதமான கடத்தல்கள் ஆயுதக் குழுக்களாலும், மிகுதியானவை அடையாளம் தெரியாத குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் போர் நடைபெற்ற காலங்களில் அதிகளவு காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ள, மெக்ஸ்வல் பரணகம தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக்குழு வடக்கு, கிழக்கு முழுவதும் மா…
-
- 2 replies
- 569 views
-
-
மலையக மக்கள் தொடர்பில் குரல்கொடுக்கத் தயார் - விக்கினேஸ்வரன் ஒரு வித்தியாசமான கேள்வி ஒன்று என்மீது தொடுக்கப்பட்டுள்ளது. அதனை இவ் வருட ஆரம்பத்தில் ஆராய்வோம் என வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு, கேள்வி:- நீங்கள் வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நலன் பற்றி மட்டும் பேசி வருகின்றீர்கள். மலையகத் தமிழர்களும் எங்களைச் சேர்ந்தவர்களே என்று மேடைகளில் பேசுகின்றீர்கள். ஆனால் அவர்கள் நலம் பற்றி எதுவுமே கூறுவதில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரையில் எந்த வித மேலதிகக் கொடுப்பனவும் கொடுக்கப்படவில்லை. அதுபற்றி உங்கள் கருத்தைத் தெரி…
-
- 0 replies
- 439 views
-
-
(எம்.மனோசித்ரா) பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும். எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்குள் மனித உரிமைகளை பாதுகாப்பதை நாம் பார்த்துக் கொள்கின்றோம். எம்மை விமர்சிக்கும் நாடுகளில் என்ன மனித உரிமைகள் இருகின்றன? காசாவில் 14 000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதனை நிறுத்துமாறு கூறுகின்றார்களா? மாறாக ஜன…
-
- 2 replies
- 370 views
-
-
மர்ம மனிதர்களை தாக்கக் கூடாது! இராணுவம் கூறுவது எதற்கு? உயர் மட்ட மாநாட்டில் கேள்வி வீட்டில் இருப்பவர்களை மர்ம மனிதர்கள் தாக்கிக் காயப்படுத்தும் போது அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யாதீர்கள் என்று இராணுவத்தினர் கூறுவது சமாதான சூழலில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ். குடாநாட்டு மக்களிடையே அண்மைக் காலமாக நிலவி வருகின்ற பீதி மற்றும் பதற்றநிலை தொடர் பில் ஆராய்ந்து அதற்கான தீர்வு காணும் வகையில் நேற்று யாழ். மாவட்ட கேட்போர் கூடத்தில் உயர்மட்ட மாநாடு ஒன்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட…
-
- 2 replies
- 978 views
-
-
ஞாயிறு 15-07-2007 05:05 மணி தமிழீழம் [சிறீதரன்] தென்மராட்சியில் எறிகணைப்பரிமாற்றத்தில் சிறீலங்காபடையினர் பலர் பலி? வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் எறிகணை வீச்சுப்பரிமாற்றத்தில் அநேக சிறீலங்கா படையினர் தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் இதுதொடர்பில் எதுவித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. விடுதலைப்புலிகளின் எறிகணைகள் சிறீலங்கா இராணுவத்தின் எழுதுமட்டுவாள்இ உசன், மிருசுவில் பகுதிகளில் விழுந்து வெடித்திலேயே பலத்த சேதங்கள் ஏற்பட்டதாக தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 589 views
-