ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
தமிழர்களே, இதோ நம் நாட்டில் மட்டைப்பந்து விளையாட வந்துள்ளான் சிங்களவன்...போர் நடந்தபோது இவர்கள் அங்கே போனார்கள்....இப்போது அவர்கள் வந்துள்ளார்கள்...இந்திய ஊடகங்கள் அங்கு நடக்கும் கோடூரங்களை திறமையாக மறைத்துவிட்டது என்று அருந்ததிராய் கூறினார். இதோ மட்டப்பந்து போட்டி தொடங்கிவிட்டது...அநியாயங்கள் தமிழக மக்களுகே தெரியாதபோது எப்படி வட இந்திய மக்களுக்கு தெரியும்... ஏதோ இணயத்தைப் பயன்படுத்துவதால் இளைஞர்களுக்கு ஒரளவு தெரிகிறது. சரி..இதோ நம்மைபோன்ற இளைஞர்கள் மட்டைப்பந்துபோட்டியை அலுவலகத்தில் உள்ளவர்கள் பார்பார்கள்...வட இந்திய ஊடகங்கள் மறைத்துவிட்டன...இணையம் இருக்கிறது... நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்... நாம் இலங்கை அணியினரை திட்ட…
-
- 0 replies
- 684 views
-
-
புதிய அரசமைப்பு மேலும் தாமதமாகுமா? புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி சவாலைச் சந்தித்திருக்கிறது. மகாநாயக்கர்களிடம் இருந்தும் பிக்குகளிடம் இருந்தும் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. புதிய அரசமைப்பு ஒன்று தேவையில்லை, அரச தலைவர் முறைமையை ஒழிக்கத் தேவையில்லை , நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமையையும் மாற்றத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசமைப்புத் திருத்தம் ஒன்றே போதும் என்றும், அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய அர…
-
- 0 replies
- 232 views
-
-
-
- 12 replies
- 1.4k views
-
-
கொழும்பு: வடக்கு, கிழக்கில் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொடர்பாக கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திற்கான ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்புகள் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் கிராம சேவகர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். வரும் 21 ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, அதற்கான பயிற்சிகள் வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது. போர் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக சரியான கணக்கெடுப்பை நடத்துமாறும், ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர் சேதங்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் பல வருடங்களாக இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. நிலங்க…
-
- 1 reply
- 461 views
-
-
‘அரசியல் கைதிகளே இல்லையென்பது தமிழ் அரசியலை இல்லாது செய்வதாகும்’ -எஸ்.நிதர்ஷன் நாட்டில் அரசியல் கைதிகள் தற்போது இல்லை என்று அரசாங்கம் கூறுவது, தமிழ் மக்களின் அரசியலை இல்லாமற்செய்வதற்குச் சமனாகும் என, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பு, நல்லை ஆதீன குரு முதல்வரை, நல்லை ஆதீனத்தில் இன்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சந்திப்பு தொடர்பாக அருட்தந்தை மா.சக்திவேல் கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம், அரசியல் ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.…
-
- 1 reply
- 295 views
-
-
யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார் பாடசாலைக்கருகாக நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக ஆளும் தரப்பினர் பரவலாக ஜனாதிபதி மஹிந்தவின் தனியான உருவப் படங்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி இணைந்திருக்கும் உருவப்படங்களை நிறுவி வைத்திருந்தது. வடக்கின் அபிவிருத்தி வெறுமனே விளம்பரப் பலகைகளில் இருப்பதாக வெளிநாட்டு ராஜதந்திரிகள் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மைக் காலமாக இத்தகைய விளம்பரப்; பலகைகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டும் கிழிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணசபை தேர்தலின் பின்னதாக இத்தகை…
-
- 0 replies
- 493 views
-
-
சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு! பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை தற்காலிகமாக ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்கவின் சட்டத்தரணி சமர்ப்பித்த பிரேரணையைக் கருத்திற் கொண்டு கடவுச்சீட்டை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தமித் தொட்டவத்த தீர்மானித்துள்ளார். பிரேரணையின் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா செல்வதற்கான வீசாவிற்கு விண்ணப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இராஜகிரியவில…
-
- 0 replies
- 207 views
-
-
வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தேயிலை, ரப்பர் ஆகியவற்றுக்கான கொள்வனவுக் கட்டளைகள் அதிகரித்திருப்பதை அடுத்து சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சி குறையத் தொடங்கியுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2SUOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 3 replies
- 860 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் போர்வலயத்தில் இவ்வாரம் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற Agence France-Presse – AFP ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளியன்று சிறிலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது. முன்னாள் போர் வலயத்திற்குள் நுழையும் ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட வேண்டும் என தமக்குக் கட்டளை வழங்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். AFP ஊடகத்தைச் சேர்ந்த காணொலிப் பதிவு ஊடகவியலாளரும், ஒளிப்பட ஊடகவியலாளரும் வடக்கு மாகாணத்தில் செய்திகளைச் சேகரிப்பதற்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் திங்களன்று தடைவிதித்தனர். தமது கட்டளைத் தளபதிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற கட்டளையின் அடிப்படையிலேயே தாம் இதனைச் செய…
-
- 0 replies
- 331 views
-
-
தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம் December 24, 2021 இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகள…
-
- 1 reply
- 155 views
-
-
கப்பப் பணம் கட்டிய பின்னரும் விடுதலை செய்ய மறுக்கப்படும் யாழ் இளைஞர்கள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரு துணை ராணுவக்குழுவும், ராணுவ உளவுப்பிரிவினரும் சேர்ந்து ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக கடத்தப்பட்டுக் காணாமல்ப் போன இளைஞர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்படும் ஒவ்வொரு இளைஞருக்கும் தலா 200,000 கப்பமாகக் கேட்கப்பட்டு ராணுவம் முகாமொன்றின் வாயிலில் நிற்கும்படி பெற்றோர்கள் கேட்கப்படுகின்றனர். சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வரும் மோட்டார் சைக்கிளில் வரும் இருவரால் பணம் வாங்கப்பட்டு குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு விடுக்கும்படி கேட்கப்படுகின்றனர். ஆனால் அத்தொலைபெச்சி இலக்க்மோ பாவனையில் இல்லாதது என்பது பின்னர் தெரிய வருகிறது. …
-
- 2 replies
- 928 views
-
-
வடக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோருகின்ற நாம் எமது விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள இந்தப் பச்சை இராணுவத்தையும் உடனடியாக விரட்டவேண்டியவர்களாக உள்ளோம் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். வட மாகாண விவசாய அமைச்சினால் பார்த்தீனிய ஒழிப்பு மாதம் நேற்று ஆரம்பமாகியது. அதன்படி புத்தூர் நிலாவரையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பார்த்தீனியம் ஒழிப்புச் சிரமதானப் பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும்போது சில வேளைகளில்…
-
- 1 reply
- 463 views
-
-
வெளியாகியது புதிய தகவல் : சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிகிச்சைப்பெற்றுவரும் கடற்படை முன்னாள் ஊடகப்பேச்சாளர் டி.கெ.பி. தஸநாயக்கவுக்கு பிணை வழங்க முடியாது என கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று அறிவித்தார். தஸநாயக்க சார்பில் கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல பிணை கோரல் தொடர்பில் தீர்ப்பறிவித்தே நீதிவான் இந்த அறிவித்தலை விடுத்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப…
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கையில் தடைசெய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வடக்கில் சாதாரண மருந்தகங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் தாயரிக்கப்படும் குறித்த மாத்திரை இலங்கையில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் யாழில் சில மருந்தகங்களில் மூவாயிரம் ரூபாய் தொடக்கம் நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. குறித்த மாத்திரையினால் 5 மாதங்கள் வளர்ந்த சிசுவை கூட அழிக்க முடியும். இதனால் தாய்க்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் நிகழும் வாய்ப்புக்கள் கூட உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். அவர் …
-
- 0 replies
- 382 views
-
-
தமிழர்கள் ஏன் பொலிஸில் இணைய வேண்டும்; சி.வி விளக்கம் ow தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கு பகுதில் பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகள் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக மொழி ரீதியிலான சிக்கலை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில இன்று சந்திப்பு ஒ…
-
- 1 reply
- 417 views
-
-
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் அங்கீகாரம் அளிக்ககூடாது இவர்களுடைய காலத்தில் தமிழர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தார்கள். யுத்தத்தினை நடத்தி வன்னி பிரதேசத்தை நாசமாக்கியவர்களுக்கு நாம் வாக்களிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. வவுனியாவில் இன்றுமாலை (திங்கள்) நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது இவர் கூறியதாவது: வன்னியில் பெரும் இராணுவ மயமாக்கல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. எமது மண்ணில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுகின்றது. இதற்கு எல்லாம் நாம் அனுமதிக்கலாமா? அதனால்தான் நாம் ஏகோபித்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களை மாற்றவேண்டும் என்பதாகும். ஆட்சிமாற்…
-
- 39 replies
- 2.6k views
-
-
சர்ச்சைக்குரிய கட்டுவான் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு , கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவான் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக காணப்படுகிறது. குறித்த 400 மீற்றர் நீளமான வீதியினை விடுவிக்க பல்வேறு கால கட்டங்களில் , பல்வேறு தரப்பினரும…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது: இலங்கை எம்.பி., ஜெயலத் ஜெயவர்த்தனா சென்னை வந்துள்ள இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் உதவி செயலாளர் ஜெயலத் ஜெயவர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜனதா விமுக்தி பிரமுனா கட்சியும் இணைந்து வேறு சில அமைப்புகளின் ஆதரவோடு இலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ளோம். இலங்கையில் 17 வது அரசியல் சட்டதிருத்தம் அமல்படுத்தப்படாததால் அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. போலீஸ் கமிஷன், நீதித்துறை, தேர்வாணையம், தேர்தல் கமிஷன் ஆகியவை சுதந்திரமாக செயல்படவில்லை. ஒரு சட்டத்தின் ஆட்சி இல்லாமல், காட்டுமிராண்டித்தனமான ஒரு ஆட்சி நடக்கிறது. இலங்கைய…
-
- 0 replies
- 647 views
-
-
சீனாவின் முகவர்களா? தமிழ் தேசிய மக்கள் முன்னணி சீனா எதிர்பார்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றனர் என– பா- உ- கோவிந்தன் கருணாகரன் தெரிவிப்பு– (கனகராசா சரவணன்;) நாங்கள் இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணரே அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்பதைதானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள். எனவே 13 ஊடக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்யும் இவர்களை தமிழ் மக்கள் விரட்டியக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கண்ணகி அ…
-
- 0 replies
- 240 views
-
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் சற்றுமுன்னர் தனியார் வைத்தியசாலையில் காலமானார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் சுகவீனமுற்றநிலையில், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார். http://www.virakesari.lk/article/23741
-
- 1 reply
- 436 views
-
-
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளரும், உறுப்பினருமான ச.குலநாயகம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் முறைப்பாடு ஒன்றைச்செய்துள்ளார்.அவரது முறைப்பாட்டின் படி, கடந்த 27.12.2013 அன்று வல்வெட்டித்துறையின் நகர சபையின் அமர்வு நடைபெற்ற போது,தான் உட்பட ஏனைய நான்கு உறுப்பினர்களுக்கு சபைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமைக்கும், பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்தமையால்,தமது பிரசன்னமின்றி 2014 ஆம் ஆண்டு;ககான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்கள் சமுகமளித்திருந்த நிலையில் தலைவர் ந.அனந்தராஜ் அவர்களினால் ச…
-
- 0 replies
- 367 views
-
-
விமானப்படை பயிற்சி முகாமில் வெடிப்பு (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று (07) வெடிபொருளொன்று வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நான்கு பேரும் இராணுவ வீர்கள் எனவும் அதில் மேஜரொருவரும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/விமானப்படை-பயிற்சி-முகாமில்-வெடிப்பு/175-203403
-
- 0 replies
- 279 views
-
-
யாழ். நகரில் அண்மைக் காலத்தில் சிறுவர்கள் பிச்சை கேட்பது அதிகமாகி வருகிறது. இதில் அதிமாகப் பெண் பிள்ளைகள் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. இவ்வாறு பிச்சை கேட்கும் பெண் பிள்ளைகளின் வயது எல்லையாக 8 முதல் 14 வரை உள்ளதாகக் காணப்படுகிறது. பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கொப்பி, பேனா போன்றவற்றை இவர்கள் பிச்சையாகக் கேட்பதைக் காணமுடிகிறது. யாழ். பேரூந்து தரிப்பிடத்திலேயே இவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.thinamurasam.com/
-
- 18 replies
- 2.5k views
-
-
இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத் தீர்வில் காட்டும் முகமாக பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இதற்கு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டுமென மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் பிரேரணையை முன்வைத்தார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் நடைபெற்ற சபையின் நான்காவது அமர்வின்போதே சிவாஜிலிங்கம் இப்பிரேரணையை முன்வைத்தார். இப்பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முன்மொழிய மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்று உரையாற்றினார். பிரேரணையை முன்வைத்…
-
- 0 replies
- 482 views
-
-
பட்டதாரிகளுக்கு பொதுஅறிவு பூச்சியம் – கிழக்கு விவசாய அமைச்சர் எங்கள் பட்டதாரிகள் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைகின்றார்கள் இல்லை. அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவாக இருக்கின்றது. தமக்குப் பரீட்சை வைக்காமல் அரச வேலை தருமாறு கேட்கின்றனர். இதுதான் தற்போதைய நிலமையாக இருக்கின்றது. இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை, நாசிவன்தீவுப் பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டடத் தெகு…
-
- 0 replies
- 213 views
-