Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பினர் [saturday, 2011-04-09 05:35:31] வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த அறுநூறு இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பியிருப்பதாகவும், பிரான்ஸ், கனடா, ஜோ்மன், ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கணிசமானவர்கள் அவ்வாறு நாடு திரும்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கான இலங்கைப் பிரதிநிதி மைக்கல் ஸ்வெக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் முடி…

  2. 20/03/2009, 08:40 [ கொழும்பு செய்தியாளர் மயூரன்] வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் இருந்து தப்பியோட்டம் சிறீலங்காவில் முதலிட்டுள்ள பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை முடித்துக் கொண்டு சிறீலங்காவை விட்டு வெளியேறி வருகின்றனர். சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பாரிய பொருண்மிய நெருக்கடி மற்றும் புலம்பெயர் தமிழர்களின் சிறீலங்கா பொருள்கள், சேவைகள் புறக்கணிப்பு பற்றிய அறிவிப்பு என்பன பல ஏற்றுமதித் தொழிலில் பாரிய சரிவை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவர்கள் தமது முதுலீடுகளை முடித்து விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இது பற்றி யேர்மனியைச் சேர்ந்த கடலுணவு பதனிடும் தொழில் முதலீட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,…

  3. விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்கள் அரசினால் திரட்டப்படுகிறது on 09-06-2009 07:12 Published in : செய்திகள், இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொழும்பில் சேர்க்கப்பட்டுள்ள சொத்து விபரங்களை தற்போது அரசாங்கம் திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. புலிகளின் கனடிய கிளையினால் பாரிய அடுக்கு மாடி வீட்டுத் தொடர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இரண்டாயிரம் வர்த்தகர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. TNC …

  4. இலங்கை அரசின் அடுத்த குறிஇ உருத்ரகுமாரன்? கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை கொலை செய்யத் திட்டம்:இ "அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி ஒருவர் ":- குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்களது அடுத்த இலக்கு உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஜளுரனெயலஇ 2009-09-13 10:18:56ஸ குமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளத…

  5. ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு நோர்வேயும், அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு வியந்து பாராட்டத்தக்கதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத் தளபதி பதவியை வகித்த எந்தவொரு நபரும் இந்த வெற்றியை ஈட்டியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற…

  6. கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ACF தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தொடர்பில் அமெரிக்கா தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை முடிவுக்கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவி புரியும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இயலுமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான பாதையைத் திறந்துவிட…

  7. மீண்டும் பனை மரம் ஏறிய வேதாளம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்றிரவு தாக்குதல். [Monday, 2011-02-07 04:20:35] தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைத் துன்புறுத்தியதுடன் கடலில் தள்ளி விட்டு படகிலிருந்த பொருட்களையும் கடலில் வீசினர் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அல்பேர்ட், அந்தனி என்ற இரு மீனவர்களே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம…

  8. ஞாயிற்றுக்கிழமை, 23, ஜனவரி 2011 (9:56 IST) பிரபாகரனின் தாயார் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது: சென்னை திரும்பிய பெண் வக்கீல் இலங்கையில் நடைபெற்ற போருக்கு பிறகு, அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் நிலை குறித்து அறிந்து வருவதற்காக சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல் அங்கயற்கண்ணி, நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த திருமலை ஆகியோர் கடந்த வாரம் சென்றனர். அங்கு, சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். சென்னை திரும்பிய பெண் வக்கீல் அங்கயற்கண்ணி கூறியதாவது, தமிழர்கள் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகளாக உள்ளன. ராணுவச் சிறையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டுத்துறையில் விடுதலைப்புலிகள் த…

  9. கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்! adminMarch 30, 2024 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். த…

  10. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறும் எம்மவர் போராட்டம் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு: http://www.cfra.com/ இரண்டாவது தெரிவுக்கு வாக்களியுங்கள். தயவுசெய்து இதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இந்த வானொலி தலைநகரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு பெரிதும் முயற்சிக்கிறது. மேலும் உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் இவ்விணைப்பை அனுப்புங்கள். பலமுறை கூட வாக்களிக்கலாம்.. நண்பர் கூறும் இவ்வழியை பின்பற்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=55659

    • 2 replies
    • 1.3k views
  11. சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

  12. புலம்பெயர் தமிழர்கள் மகிந்தரை தண்டிக்காமல் விடமாட்டார்கள்: வைகோ சர்வதேசம் சுமத்தியுள்ள ஈழத் தமிழர்கள் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை விரைவில் விடுவிக்கப்பட்டுவிட முடியாதென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்திய சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், யுத்தக் குற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை தண்டிக்காமல் விடமாட்டார்கள் என வைகோ குறிப்பிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள…

  13. நேற்று யாழ் மாநகரசபையில் நடைபெற்ற ஒளிவிழாவில் பங்கு பற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட புரியாணியில் எதுவித மாமிசத் துண்டுகளோ அல்லது மரக்கறி வகைகளோ காணப்படவில்லை என சாப்பாட்டுப் பிரியர்கள் அங்கலாய்க்கின்றார்கள். சிலருக்கு கொடுக்கப்பட்ட புரியாணிப் பார்சலில் காகத்தின் கால் போல் காணப்பட்ட சிறிய 5 கிறாம் நிறையுள்ள மாமிசத் துண்டு காணப்பட்டதாகவும் அந்தத் துண்டு கிடைத்தவர்களை மற்றவர்கள் வயிறு எரியப் பார்த்து பொறாமை பட்டதாகவும் தெரியவருகின்றது. கொடுக்கப்பட்ட பாசல்களில் இரண்டு முந்திரி வற்றல்கள் ஒரு கயு மற்றும் சில பச்சைமிளகாய், வெங்காயங்கள் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இந்தச் சாப்பாட்டுக்கே டோக்கன் கொடுக்கப்பட்டதாகவும் அந்தத் டோக்கனைக் கொண்டு திரிந்து அடிபட்…

  14. கைவிலங்கிட்டு கைது செய்தார்கள்: சீமான் வேதனைப் பேட்டி வழக்கமாக மேடையில் சீமான் சீறினால் இடி முழக்கம். இந்திய மத்திய மாநில அரசுகளுக்கோ சீமான் அச்சமூட்டும் பெயர். வாயைத் திறந்தால் வந்து விழுகிற குண்டுகள் எங்கே வெடிக்கும் என்று தெரியாமல் வழக்கு வழக்குகளைப் போட்டு சீமானை முடக்கப் பார்க்கிறது அரசு. உள்ளூரில் மட்டுமே வழக்குகளையும் சிறைகளையும் சந்தித்து வந்தவர் இப்போது கனடாவிலும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார். கனடாவில் என்னதான் நடந்தது என்றால் வரிந்து கட்டி வார்த்தைகளைக் கொட்டுகிறார். ”ஆமாம் நான் கனடாவில் நடந்த தமிழர் எழுச்சி நாளான தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்காகவும் அதற்கு அடுத்த நாளான மாவீரர் தின நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளச் சென்றிருந…

  15. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் தற்போது எழுந்த ஆதரவு அலை, அதனால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மைகளையும் எற்படுத்தாமலேயே - கலைஞர் தனது கட்சியினரின் பதவி விலகல் முடிவை விலக்கிக் கொண்டதால் - வீணாகப் போய் விட்டது என்றும், கலைஞர் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாகவும், ஒரு பதிவில் வெளியான கட்டுரையை எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். அந்தக் கட்டுரைக்கு பதில் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன், நான் பதிவுலகிற்குப் புதியவன் என்பதால் பதிவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஒருவருடைய பதிவிர்ற்கு நாகரீகமான முறையில் பதில் கூறுவது தவறில்லை என்றே நினைக்கிறேன், அதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் வி…

    • 1 reply
    • 1.3k views
  16. பெர்ணாண்டோ புள்ளேயின் நியமனம் போகல்லாகமவால் நிராகரிப்பு. 09.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் தற்காலிக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயால் வழங்கப்பட்டிருந்த மூன்று வெளிநாடுகளிற்கான தூதர்களுக்கான நியமனங்களை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நிராகரித்திருப்பது- ரோகிதபோகல்லாகம ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் நேரடியாக முட்டிமோதுவதாக இராஜதந்திரவட்டாரங்களால் கருதப்படுகின்றது. அண்மையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மகிந்தராஜபக்சவால் தற்காலிக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் மூன்று வெளிநாடுகளுக்கான தூதுவர்களை நியமனம் செய்திருந்தார். அதன்படி ஏச்.எம.ஜி.எஸ் பலிகக்…

    • 0 replies
    • 1.3k views
  17. 2007-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரம் நான் பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ்( அந்த நேரம் அவர் நிழல் அமைச்சராக இருந்தார்) அவர்களை சந்தித்து சிறிலங்காவில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கூறுவேன். . 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னரும் நான் அவரைச் சந்தித்தேன். அந்த நேரம் போர் முடிவடைந்துவிட்டதாகவும் இனிமேல் சிறிலங்காவில் அபிவிருத்தியினை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஃபொக்ஸ் கூறி இருந்தார். மட்டுமன்றி தன்னால் உருவாக்கப்பட்ட சிறிலங்காவை கட்டியெழுப்பும் நிதியத்திற்கு பலம் சேர்க்க பிரித்தானியாவில் உள்ள தமிழ் செல்வந்தர்களை தனக்கு அறிமுகப்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டார். . மேற்கண்டவாறு கூறியுள்ளார…

    • 3 replies
    • 1.3k views
  18. சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. யாழ் மோதல் சம்பவங்களில் 3 இரணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 9 பேர் வரை காயம் [Tuesday December 26 2006 08:27:33 AM GMT] [யாழ் வாணன்] இலங்கை யாழ் பகுதியில் வீதியோர குண்டு வெடிப்பு சமபவத்தில் 3 இரணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அரசு பாதுகாப்பு செய்தி தெரிவித்துள்தாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை யாழ்பாணத்தில் தானியங்கி கருவி மூலம் வெடிக்கப்பட்ட குண்டிலேயே 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 இராணுவத்தினர் வேறு ஒரு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர் என இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com

  20. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பர்ணாந்து புள்ளே அவர்களின் பதவி ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இவை இப்படி இருக்க கொலைக்கான பொறுப்பை STF ஏற்க மறுத்துள்ளது. ஆரம்பம் முதலே அமைச்சர் ஜெயராஜின் பாதுகாப்பு தொடர்பாக கடமை புரிந்த MSD எனும் பிரபுகளுக்கான பாதுகாப்பு படையை நீக்கி விட்டு STF படையை கடந்த பெப்ரவரி மாதம் முதல் அரசு நியமித்து இருந்தது. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பர்ணாந்து புள்ளே அவர்களின் பதவி ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. ஜெயராஜ் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே இப் பதவியை பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி முயன்ற வேளையில் …

    • 0 replies
    • 1.3k views
  21. செவ்வாய்க்கிழமை, 8, ஜூன் 2010 (11:27 IST) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே உருவமொம்பை எரிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், தா.பாண்டியன் உள்ளிட்டோர் கண்டனப்பேரணியுடன் சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட உள்ளார்கள். இதனால் இலங்கை தூதரகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் மதிமுகவின கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரித்த சிவசேனாவினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் சமத்து மக்கள் கட்ச…

    • 8 replies
    • 1.3k views
  22. இன்று மாலை ஈரோட்டில் 4 மணி அளவில் பெரியார் திராவிடர் கழகம் , தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கம் , தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். ஈரோடு தொடர்வண்டி நிலையம் முன்பாக 4 மணியளைவில் திரண்ட தோழர்கள் ஈழத்தமிழர்க்கு ஆதரவாக முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலமாக ஈரோடு தலைமை தபால்நிலையம் முன்பாக பேரணியை முடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் மோகன்குமார் தலைமையேற்க பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் இராம.இளங்கோவன், ஆதித்தமிழர் பேரவை தோழர் பொன்னுச்சாமி , விடுதலைச்சிறுத்தைகள் தோழர் சேதுபதி,…

  23. [size=5] இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாள உயர்மட்டக்குழு? - ஒபாமா நிர்வாகத்தின் புதிய நகர்வு![/size] அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இதுவரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிமாரே கையாண்டு வந்தபோதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களைக் கையாளவுள்ளது. ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும்போது இராஜாங்கத் …

  24. உடனடியாக உத்தம் நிறுத்த படவேண்டும் - அமெரிக்க மற்றும் பிரிட்டன்

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வாக்காளர் ஒருவர். 21 செப்டெம்பர் 2024, 01:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தலைநகர் கொழும்பில் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. இதில் வெல்லப்போவது யார்? தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும்? …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.