ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143617 topics in this forum
-
குறிப்பு: ஈசன் என்பவரை கனடா உலகத்தமிழர் இயக்கமே நியமனம் செய்து கொண்டது. அது மாத்திரமின்றி உலகத்தமிழர் பத்திரிகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர்களுக்கு முதலிடமும் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியல் யார் உள்ளனர்? இவர் ஒரு புளோட் உறுப்பினர் என்பதும், சித்தாத்தனின் நெருங்கிள சினேகிதனும் ஆவர், இவரின் கடந்தகால செயற்பாட்டின் காரணமகா விடுதலைப்புலிகள் அமைப்பால் தண்டனை பெற இருந்தவர் என்றும், அதில் இருந்து தப்பியவரும் ஆவார். இவர் தற்போது கனடாவில் புலத்தில் என்னும் பத்திரியையை நடாத்தி வருவதும். உலகத்தமிழர் இயக்கத்தின்; ஆதரவுடன் புலிதோல் போத்த சிங்கம் இன்று தமிழ் தேசியத்தை சிதறடித்து வருகின்றது என்பது உண்மை. தேசியத்தலைமையின் நம்பிக்கையிலும், மாவீரரின் தியாகத்திற்கு…
-
- 2 replies
- 1.3k views
-
-
சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தாங்களும் தாங்களும் என்று மத்தியில் கூட்டாட்சி வடக்குகிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி கேட்டு ஒட்டுக்குரல் எழுப்பிய தமிழ் தேசிய, தமிழ் மக்கள் துரோக ஆயுதக் கும்பல்கள் இப்போ சிறீலங்கா சிங்கள பெளத்த சுதந்திர தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் உரிமை போதும் என்று தமிழ் மக்களின் உரிமைகளையே அமைச்சுப் பதவிகளுக்காக அடகு வைத்துவிட்டனர். இவர்களின் தமிழீழக் கனவை நம்பி உயிர்விட்ட இவர்களின் தோழர்களின் கதி...அதோ கதிதான்..! ------------------- அடுத்த வருட சுதந்திர தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாட முடியும்: டக்ளஸ் தேவானந்தா அடுத்த வருட சுதந்திரதின நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் கொண்டாடக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகும் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் …
-
- 4 replies
- 1.3k views
-
-
போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல் மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. 4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த மூதாட்டி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட ஒரு வருடமும் எட்டு மாதமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மூதாட்டி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும், தொடர்ந்து இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு மேல் நீதிமன்ற நீதியரசர் லலித் ஜயசூரியவினால் இன்று (10) வழங்கப்பட்டது. இதன்போதே மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மாளிகாவத்தை, கெத்தாராம பிரதேசத்தைச் சேர்ந்த சம்ச…
-
- 21 replies
- 1.3k views
-
-
இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போரின்போது ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். “போரின்போது அப்பாவிப் பொதுமக்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டது உண்மைதான். ஆனாலும் அதற்காக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அவர்களைத் தண்டிக்கவோ ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன்,” என்று மைத்ரிபால சிறிசேன இன்று கண்டியில் இடம்பெற்ற தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் போரின் போது அப்பாவிப் பொது மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதற்கும் மிக அதிகமான தொகையின…
-
- 5 replies
- 1.3k views
-
-
வேல் இருந்த இடத்தில் விகாரை….கதிர்காமம் கதிரமலையில் இனவிரோத சம்பவம் ஜ வெள்ளிக்கிழமைஇ 11 யூலை 2008இ 07:51.36 யுஆ புஆவு +05:30 ஸ வேல் இருந்த இடத்தில் விகாரை கட்டியெழுப்பட்டுள்ளது. கதிரமலை உச்சியில் அரங்கேறியுள்ள இவ் இனவிரோதச் சம்பவம் பற்றி உணர்வுள்ள இந்துக்கள் மனம் புழுங்குகின்றனர். கடந்த 02 வருடங்களாக இவ் விகாரை கட்டப்பட்டு வந்தது. அப்போதும் தமிழின அரசியலாளர்கள் குரல் கொடுக்கவில்லை. இப்போதும் குரல் கொடுக்கவில்லை. காலாகாலமாக அங்கிருந்த வேல் இன்று பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. வேலிருந்த இடத்தில் பாரிய விகாரையும் முன்னால் புத்த சிலையும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. நன்றி:- தமிழ்வின்
-
- 2 replies
- 1.3k views
-
-
21/04/2009, 10:52 [] பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவு பிரித்தானிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பிரித்தானிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதி டெஸ் பிரவுன் ஐநாவில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அனுப்பப்பட்டமையை தமது அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐநாசபை மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பிரித்தானியா முயற்சிப்பதாகவும் எனினும் அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமது அரசாங்கம் ஐநாவின் யுத்த நிறுத்த கோரிக்கையினை திட்டவட்டம…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணசபைகான தேர்தல் இடம்பெற்ற கடந்த 10 ஆம் திகதி முதல்,கிழக்கில் விடுதலை புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கொழும்பில் இயங்கும் சிங்கள நாளேடுகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. தேர்தலுக்கு முன்னிரவு அம்பாறையில் ஹொட்டேல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, இக் குண்டு தாகுதலை யார் மேற்கொண்டது என்பது தொடர்பில் இதுவரை தெளிவு இல்லை.தேர்தல் தினத்தன்று, திருகோணமலை அஸ்ரப் துறைமுக பகுதிக்குள் நிறுத்தபட்டிருந்த MV-Invincibile-520 என்ற கப்பல் மூழ்கடிப்பு, அதே தினத்தில் அம்பாறை பகுதியில் விடுதலை புலிகளால் நடத்தபட்டதாக தெரிவிக்கபடும் எறிகணை வீச்சு, அதனை தொடர்ந்து தற்போது கிழக்கில் இடம்பெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
அனைத்துலகத்தின் அசைவுகளும் உக்கிரமடைந்துவரும் களமுனையும் - வேல்ஸிலிருந்து அருஷ் வன்னியில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற அதேசமயம் இராணுவம் அதிக படையினரை புதுக்குடியிருப்பு களமுனையை நோக்கி நகர்த்தி வருகின்றது. 40,000 படையினரை புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்கு நேரடியாக களமிறக்கியுள்ள அரசாங்கம், வன்னியின் பின்னணி நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு 30,000 படையினரை நிறுத்தியுள்ளது. அதாவது வன்னி நடவடிக்கையின் தற்போதைய படை பலம் 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த வாரம் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தி ருந்தார். இருந்த போதும் அங்கு மோதல்கள் உக்கிரமாக நடந்து வருகின்றன. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து புதுக்குடியிருப்பு மீது 10 தடவைகளுக்கு ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் குறித்து கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வெவ்வேறு கூட்டங்களில் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ப. அரியநேத்திரம் எமது இணையத்துக்கு இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஜயமாகும். இதில் யார் செல்ல வேண்டுமென்றோ எந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தோர் செல்ல வேண்டுமென்றோ நோக்கப்பட வேண்டியதில்லை. முழு கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்தக் குழுவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள். அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள…
-
- 4 replies
- 1.3k views
-
-
Friday, January 7th, 2011 | Posted by admin இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திட உடனடி நடவடிக்கை: தமிழக அரசு வலியுறுத்தல் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஆளுநர் பர்னாலா வலியுறுத்தியுள்ளார். சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதற்கு ஆளுநர் கவலை தெரிவித்தார். முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பகட…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் நேற்று சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தானின் கப்பல்துறை அமைச்சர் சார்டர் நபில் அகமட் கபோல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீதான தாக்குதலை நடத்தியதன் பின்னணியில் இந்தியா உள்ளது. தாக்குதலில் கலந்து கொண்ட குழுவில் இருந்த 3 பேர் இந்தியாவில் இருந்து எல்லை கடந்து பாகிஸ்தானுக்குள் வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பாய் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இதனை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா வெளிப்படையாக …
-
- 6 replies
- 1.3k views
-
-
தியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு. ஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான். பன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான். 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 02.10.2007 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....eecd95b4009adf4
-
- 0 replies
- 1.3k views
-
-
கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
வி.ரி.சகாதேவராஜா கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது. உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார். அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர். சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்கள…
-
- 8 replies
- 1.3k views
-
-
. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி. சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கம்: முன்னதாக பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த…
-
- 8 replies
- 1.3k views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருதமிழ் இளைஞர்கள் கைது திகதி: 18.06.2009 // தமிழீழம் கடந்த ஞாயிறு காலை கட்டார் இல் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறையில் சென்ற இரு இளைஞர்கள் கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தில் வைத்து எதுவித காரணங்களும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் உறவினர்களால் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் செல்ல இருந்த நேரத்தில் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் பின்னர் வாகன சாரதியையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாக தெரியவரகிறது. [sankathi]
-
- 3 replies
- 1.3k views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய றாஜபக்ச உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த சற்குணம் கஜன் என்பவரது தந்தை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜே.விஸ்வநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். தனது மகனை விடுதலைப் புலிகள் பலாத்காரமாக பிடித்துச் சென்றிருந்ததாகவும் எனினும் அவரை மீட்டு புதுமாத்தளன் பகுதியில் தான் இராணுவத்திடம் ஒப்படைத்ததாகவும் அவரை விடுதலை செய்யும் படி கோரியுமே இந்த வழக்கினைப் பதிவு செய்திருந்தார். மேலதிக செய்திகளுக்கு : http://www.eelamweb.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு 4/1/2009 10:39:13 PM - சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் தெற்கில் பாரிய தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் இயக்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். இதனால் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இக்காலப்பகுதியில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகிந்தவின் டேராடூன் மாநாட்டை தமிழக மேயர்கள் புறக்கணிக்கவுள்ளனர். இந்தியாவின் டேராடூனில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைக்கவுள்ள மேயர்கள் மாநாட்டை தமிழ்நாட்டை சேர்ந்த 6 மேயர்களும் புறக்கணிக்கவுள்ளனர். ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாடு டேராடூனில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 32 ஆசிய நாடுகளை சேர்ந்த மேயர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைக்கவுள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அவர் தொடங்கி வைக்கும் மேயர்கள் மாநாட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த மேயர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று பா.ம.க உள்ளிட்ட கட்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நேர்மையான அரசியல்வாதிகளை தற்போதைய சமூகத்தில் தேடித் தானும் கண்டுபிடிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நேர்மையான அரசியல்வாதிகள் தற்போது இல்லை. விஜயகுமாரணதுங்க போன்ற அரசியல்வாதிகள் நேர்மையாக நாட்டுக்காக உழைத்தவர்கள் அவ்வாறு மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணமுடைய அரசியல்வாதிகள் தற்போது இல்லை. சுயலாப நோக்கங்களுக் காகவே பலர் இன்று அர சியலில் ஈடுபடுகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=550951845818801125
-
- 3 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியனத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுணைச் சந்தித்து தன்மீது இலங்கை அரசாங்கம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், அண்மையில் பிரித்தானிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கருந்தரங்கில் கலந்துகொண்டமை பற்றி முன்வைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்தக் கருத்தரங்கில் மலொக் பிரவுணும் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் இவான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று பிரித்தானியாவில் இருந்து சுமார் 50 இலங்கை அகதிகள் நாடுகடத்தபப்டவிருக்கின்றனர். எந்த விமான நிலையத்தின் மூலம் இந்த அகதிகள் நாடு கடத்தபப்டுவர் என்பதனை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் மறைத்துள்ளனர். ஆனால் விசேட விமானம் மூலம் இவர்கள் இன்று மாலை நாடு கடத்தபப்டவுள்ளனர். கடந்த யூன் மாதம் லூட்டன் விமான நிலையத்தில் இருந்து அகதிகள் நாடு கடத்தபப்ட்டமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இவர்கலை நாடு கடத்துவது ஆபத்தானது என மனித உரிமை ஆர்வலர்கள் வாதாடி வருகின்றனர். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 1.3k views
-
-
தற்போது தமிழர்களால் நம்பிக்கையுடன் பார்க்கப்படும் நாடு கடந்த அரசாங்கத்தைச் செயலிழக்கச் செய்ய ஒரு குழு திரைமறைவில் செயற்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்களும் இருப்பதாகவும் இது குறித்து இந்த உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டடமாக நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கத்திற்காக ஆரம்பம் முதலே உறுதியுடன் செயற்பட்டு வரும் சில முக்கியஸ்தர்களை அன்னியப்படுத்துவதற்கான திடடம் தீட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் கடைசி ஆயுதமாகக் கையிலெடுக்கப்பட்டுள்ள இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கெதிராக செயற்படும் தமிழர்கள் குறித்து புலம் பெயர் தமிழர்களும் தா…
-
- 2 replies
- 1.3k views
-