ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143627 topics in this forum
-
காயமடைந்த போராளிகளை காப்பாற்றவே சரணடைகின்றேன் – நடேசனின் மகன் சாட்சியம் – நாடுகடந்த தமிழீழ அரசு * Monday, December 20, 2010, 3:29 இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், நாடு கடந்த தமிழீழ அரசினால் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத போர்க்குற்ற ஆவணங்களை தகுந்த சாட்சியங்களுடன் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகனின் வாக்குமூலமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஸ் அவர்களின் மனை…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்! திகதி: 14.05.2010 ஃஃ தமிழீழம் மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்புஇ கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் தான் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை நாடு தழுவிய ரீதியில் கொண்டாடி மகிழ்ந்த சிங்கள தேசம் இந்தவருடம் மட்டுமல்லஇ இனி வரும் காலங்களிலும் இன்னொரு போர் வெடிக்கும் வரை கொண்டாடவேதான் போகின்றது. இதற்கு மாறாகஇ தமிழர் தரப்பிலும் கடந்த வருடத்தின் சோக நாட்களில் எந்த நாள் அதிக வலி சுமந்தது என்பதில் பெரும் குழப்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசிய வரலாறுகளில் …
-
- 8 replies
- 1.3k views
-
-
-
[ திங்கட்கிழமை, 05 செப்ரெம்பர் 2011, 00:33 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா விவகாரத்தில் தமிழர் விரோத நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே காரணம் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுயிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் முக்கியமான ஆலோசகராக எம்.கே .நாராயணனே இருந்ததாகவும், சிறிலங்கா விவகாரத்தில் அவரே சிங்கள சார்பு நிலையை எடுக்குமாறு அவருக்கு ஆலோசனை கூறியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கொள்கை தொடர்பாக பொய்யான அச்சமூட்டும் தகவல்களைக் கூறியே எம்.கே. நாராயணன், இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகவும் அந்தச் …
-
- 2 replies
- 1.3k views
-
-
18.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயங்களுடன் தப்பியோடி விட்டனர். படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
ஸ்ரீலங்காவிலும் தளத்தைக் கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு இந்தியா தடை? Sunday, 23 March 2008 ஸ்ரீலங்காவிலும் தளத்தைக்கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புகளை இந்தியா தமது நாட்டுக்குள் தடைசெய்துள்ளது. இந்த சேவை இந்திய உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தே இந்தியா அதன் ஒளிபரப்புகளை தமது நாட்டில் தடைசெய்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலதிக செய்திகளுக்கு http://www.ajeevan.ch/content/view/1231/1/
-
- 0 replies
- 1.3k views
-
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சிறிலங்காவில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த அவர் நெடுங்கேணியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தநாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான செயலகத்தின் மூலம் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் காணிக…
-
- 19 replies
- 1.3k views
-
-
போஸ் நிஹாலே ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களது அரசியலரங்கில் மே 2009 ற்குப் பிறகு மூன்று போராட்ட சீசன்கள் உள்ளன. முதலாவது மார்ச் மாதத்தில் சனல் 4 தொலைக்காட்சி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கத் தீர்மானத்துடன் ஐ.நாடுகள் சபைக்கு முன்பாக தீர்த்தத்திருவிழாவில் கொத்துரொட்டித் தானத்துடன் நிறைவு பெறும். இரண்டாவது சீசன் மே மாதத்தின் மூன்றாவது வாரம். இங்கே மூன்றாவது வாரம் என்று குறிப்பாக ஒரு நாளைச் சொல்லாமல் வாரத்தையும் சொல்லுவதற்கு காரணம் உள்ளது. மே பதினேழு, பதினெட்டு,பத்தொன்பது, இனப்பொடுகொலை நாள், துக்கநாள் என்று தமிழன் குழம்புவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளது. அது சரி திருவிழா என்றால் கொடியேற்றம் தேர் ,தீர்த்தம், சப்பரம், திருக்கல்யாணம் எண்டு இ…
-
- 11 replies
- 1.3k views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகவே செயற்படுவோம் – மீண்டும் பிரித்தானியா உறுதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், அனைத்துலக மன்னிப்புச்சபை எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் பதிலளிக்கையில், “அரசியல் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமான பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தும். அரசியல்தீர்வு அடிப்படையானது. அது இலங்கையில் உள்ள…
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பு - கல்கிசையில் இரயில் பாதைக்கு அருகில் சிறிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. - அத தெரண.
-
- 5 replies
- 1.3k views
-
-
மாவீரர் உரையில் இன்று பிரபா இந்தியாவுக்கு சமரச சமிக்ஞை? [27 நவம்பர் 2008, வியாழக்கிழமை 9:30 மு.ப இலங்கை] ‘மயிலே, மயிலே இறகு போடு!’ என்றால் போடாது. பிடுங்கித்தான் எடுக்க வேண்டும். - என்பார்கள். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் வந்துவிட்டன போலும். நேற்று முன்தினம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் கூடிய தமிழக சர்வக் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் இத்தகைய நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஒரு வேண்டுகோளாகத் தொடர்ந்து விட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, அதைச் செய்தாகவேண்டும் என்று குரல் கொட…
-
- 1 reply
- 1.3k views
-
-
சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (17:11 IST) இனி தமிழன் தாக்கப்பட்டால் ஒரு சிங்களவன் கூட தமிழகத்திலிருந்து உயிருடன் திரும்ப முடியாது: சீமான் ஆவேசம் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீதான ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணை குழுவை எதிர்க்கும் சீனா, ரஷியா போன்ற நாடுகளை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் தீரன், இயக்குனர் புகழேந்தி, தமிழ் முழக்கம் சாகுல்அமீது, நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அத…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் …
-
- 8 replies
- 1.3k views
-
-
அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. https://www.newsfirst.lk/tamil/2019/11/29/அனைத்து-அரச-நிறுவன-உயரதி/
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஏப் 20, 2010 மணி தமிழீழம் யாழில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலீயல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார் கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்வந்தபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இவர் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அக்குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நை…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted on : 2007-08-26 உலக அரங்கில் "புகழ்' பதிக்கும் இலங்கை அரசின் நல்லாட்சி தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத் தில்தான் தென்னிலங்கை அரசு மிக மோசமாக நடந்து வருகிறது என்றால், ஏனைய விவகாரங்களிலும் அதன் ஆட்சி முறை அப்படித்தான் இருக்கின்றது என்பதைப் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன. 1996 முதல் 2006 வரையான பத்தாண்டு காலத்தில் உலக நாடுகளில் நல்லாட்சி தொடர்பாக உலக வங்கி நடத்திய விரிவான ஆய்வு, இலங்கை அரசின் "பொட்டுக் கேட்டை' அப்படியே அம்பலப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தருகின்ற போது தமிழர் தாயகப் பிரதேசத்துக்கும் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை அறிய வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300128
-
- 14 replies
- 1.3k views
-
-
தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக் காற்றை விரைவில் சுவாசிப்போம்: சோ.தங்கன். "தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக்காற்றை விரைவில் சுவாசிப்போம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயனில் சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கிக் கிளையின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை அக்கராயன் பிரதேச பொறுப்பாளர் மாறன் ஏற்றி வைத்தார். வங்கியின் பெயர்ப்பலகையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவிப் பணிப்பாளர் ரவிச்சந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் சீசர் தலைமைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம் கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார். வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது. உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை. உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன்…
-
- 7 replies
- 1.3k views
-
-
உலகத் தமிழ் உறவுகளே! உங்கள் அன்புப் பிள்ளை சீமான் பேசுகின்றேன் என விளித்து, புலம் பெயர் தமிழ மக்களிடம் இரு தடவைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறைவைக்கபட்ட, இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீமான் ஒலிவடிவ உரையொன்றில் பேசுகின்றார். உரையின் சுருக்க எழுத்து வடிவமும், ஒலிவடிவமும் முறையே கீழேயுள்ளன. உலகத்தமிழ் சொந்தங்களே! நாம் பிறந்த சொந்த மண்ணிலே உறவுகளின் குருதி தினமும் ஆறாய்ப் பெருகி ஓடுகின்றது. சுpங்கள பேரினவாதமும் இந்திய வல்லாதிக்க சக்திகளும் குளிர்காய்ந்துகொண்டிருக்கி
-
- 0 replies
- 1.3k views
-
-
நல்ல விடயங்களை விமர்சிக்கும் மனோநிலை மாறாத வரைக்கும் எந்தவொரு பதிவினையும் போட விரும்பவில்லை. அனைவருக்கும் நன்றி.
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்தக் குழந்தைகள் 8வயதிலும் 11வயதிலுமான பிள்ளைகள்.அம்மா மாவீரர் அப்பா காணாமல் போய்விட்டார். ஆனாலும் எங்காவது இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இன்னும் இல்லாதோர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தாய்மாமனின் அரவணைப்பில் வாழும் இந்தக் குழந்தைகள் இரண்டினது எதிர்காலமும் அவர்களது வாழ்வும் சிறப்பாய் அமைய வேண்டுமென்ற கனவோடு தனது குடும்ப வறுமையிலும் இயன்றளவு குறைகள் இல்லாது பராமரிக்கும் மாமாவின் செல்ல மருமக்கள் இவர்கள். இந்த குழந்தைகள் இரண்டும் கல்வியில் கெட்டித்தனமாகவும் விளைாயட்டில் வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கேயுரிய துடினமும் கனவுகளும் இவர்களுக்குள்ளும் நிரம்பிக் கிடக்கிறது. காணாமல் போன அப்பாவை மாவீரரான அம்மாவைப் பற்றிய எண்ணங்களை நிறைவேற்ற மிஞ்சிய கல்வியையே விரு…
-
- 7 replies
- 1.3k views
-