ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள கணனிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் கேள்விப் பத்திரத்தை முறைகேடான வகையில் பாகிஸ்தானின் நெட்ரா நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கத்தின் பொறுப்பு மிக்கவர்கள் சிலர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது. இந்தக் கேள்விப் பத்திரம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம் முழு இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் சென்றடையும் என தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வரும் போது, இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய முக்கியமான பொ…
-
- 13 replies
- 4.4k views
-
-
எத்தகைய இடர்களில் இருந்தும் மீண்டெழும் வல்லமை தமிழருக்கு உண்டு! - கூட்டமைப்பு உறுப்பினர் ரதன் உரை!! 'காலத்திற்குக் காலம் எமது வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தில் எத்தனையோ துயரமான நிகழ்வுகளை எமது தமிழினம் சந்தித்த போதிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவையும், 2009ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் மறக்கத் தயாரில்லை. இவ்வாறான இடர்களிலிருந்து மீண்டெழும் வல்லமை படைத்த இனமே தமிழினம்.' - இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்த மக்களின் எட்டாம் ஆண்டு நிகழ்வு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நகரசபையின் ஏற்பாட்டில் இன்ற…
-
- 1 reply
- 468 views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! இப்படிக் கூறுகின்றார் மைத்திரி "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை. இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றிப் பேசியுள்ளார்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற, 34 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூதூர் நீதிமன்றக் கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்ததன் பின்னர், உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், "பொதுமக்களின் நலன்கருதி…
-
- 0 replies
- 265 views
-
-
மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித் மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன். உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை. இதுவா மக…
-
- 0 replies
- 363 views
-
-
சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் ஒட்டுசுட்டானில் அச்சத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற அவலம் ஏற்படுத்தப்பட்டுளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 398 views
-
-
ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி உற்சவமான பூங்காவனப் பூசைகள் நேற்று (05) இரவு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன்போது பறவைகாவடிகள், பாற்செம்பு காவடி என்பன இடம்பெற்றது. https://newuthayan.com/ஒட்டுசுட்டடான்-தான்தோன்/
-
- 0 replies
- 332 views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் விஸ்வரூபம். அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கும், அரசியல் சுய இலாபங்களுக்கும் ஏற்ற விதத்தில் யுத்த நடவடிக்கைகளை வகுக்கும் தவறுக்கான பாடத்தை இவ்வாரத்தில் கிளிநொச்சி சுற்றாடலில் இலங்கைப் படைகள் நன்கு படிக்க வேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக்கோரும் வற்புறுத்தல் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்தின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை இலங்கை அரசுத் தரப்புக்கு நேரில் எடுத்துரைப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தமிழக முதல்வரிடம் இசைவு தெரிவித்து இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்…
-
- 4 replies
- 2.9k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலை பகுதியில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
26 ஆம் 27 ஆம் திகதிகளில் யாழில் 'டெலோ' வின் எட்டாவது தேசிய மகாநாடு! [Friday, 2013-01-11 09:25:38] தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த மகா நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தலைவர்கள், செயலாளர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காண சாத்வீக ரீதியான உரி…
-
- 0 replies
- 267 views
-
-
வலி. வடக்கில் அடுத்த வாரம் மேலும் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 600 ஏக்கர் வரையிலான நிலம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்படவுள்ள பகுதிகளை யாழ். மாவட்டச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தனர். வலி.வடக்குக் காணி விடுவிப்புத் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது அடுத்த ஆண்டு நடுப் பகுதிக்குள் காணி விடுவிப்பதற்கான கால அட்டவணை தயாரி க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர், விரைவில் 700 ஏக்கர் காணி வரை விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தா…
-
- 0 replies
- 246 views
-
-
ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ" [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:11 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சட்டத்துறை ஆலோசகருமான மோஹான் பீரிஸ் பதவியேற்கவுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அவர் பதவியேற்பார் என இன்று காலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசராகப் பணியாற்றிய சிஷானி பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பிவைத்திருந்தார். இந்த நிலையில் புதிய சட்டமா அதிபராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை காணப்பட்டது. ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குத் தயா…
-
- 1 reply
- 509 views
-
-
புலிகளை அழிக்க உதவிய போது வழங்கிய வாக்குறுதியை மீறிய இலங்கை அரசாங்கத்தை என்ன செய்யப்போகின்றது இந்தியா.? விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் …
-
- 3 replies
- 811 views
-
-
மங்கள சமரவீரவை கொலை செய்ய கோத்தபாய சதித்திட்டம் வியாழன், 08 ஜனவரி 2009, 17:18 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை கொலை செய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குற்றம் சாட்டியுள்ளார். 1931 காலப் பகுதியில் காணப்பட்ட ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி முறையை தற்போதைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நடத்துகிறது ஊடகங்கள் மீதும் அடக்கு முறை, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி மற்றும் அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டுகின்றன. போரினால் மாத்திரம் பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது என்பதற்கு கடந்த கால இலங்கையில் அரசியல் வரலாறு சாட்சியாகும். எனவே, அரசியல் …
-
- 0 replies
- 898 views
-
-
மகாராணி இல்லாத மாநாடா? உலகத் தலைவர்களும் வரார்; பொதுநலவாய விவகாரத்தில் இலங்கைக்கு பேரிடி இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதற்கு கனடா, பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் தீர்மானித்துள்ளன என்று இராஜ தந்திர வட்டாரங்களிலிருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது. அதேவேளை, இந்த மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு இலங்கை வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டனின் மகாராணியுமான எலிசபெத் தனது பயணத்தை இரத்துச் செய்வார் என்றும் அந்தவட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இதனால் இனிவரும் காலங்களில் இலங்கை அரசு அரசியல், பொருளாதார ரீதியில் பல நெருக்கடி…
-
- 5 replies
- 674 views
-
-
கிரிக்கெட் ரசிகர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற இறுதி, ஒருநாள் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மீது பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இறுதிப் போட்டியை பார்வையிடுவதற்கு தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமையால், பெருந்திரளான ரசிகர்கள், குருணாகல்-கொழும்பு பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை களைப்பதற்கே பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் கண்ணீர்ப் புகைப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். - See mor…
-
- 0 replies
- 385 views
-
-
இதுவரையில் கிளிநொச்சியில் மையம் கொண்டிருந்த போர் இப்போது முல்லைத்தீவில் மூர்க்கம் பெறத் தொடங்கியிருக்கிறது.மணலாறின் கொக்குக் தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ பிரதேசத்தினூடாக முன்னேறத் தொடங்கிய பிரிகேடியர் நந்தன துடுவத்தவைத் தளபதியாகக் கொண்ட 59 ஆவது டிவிசன் - இப்போது முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவில் வந்து நிற்கிறது. சிலாவத்தைக்குத் தெற்காக நிலைகொண்டிருக்கும் 59-1 பிரிகேட்டுக்கு மேற்காக இன்னொரு புறத்தில் 59-3 பிரிகேட் தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளையின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கிறது. அதற்கு மேற்காக 59-2 பிரிகேட் குளமுறிப்பு, கற்சிலைமடுப் பகுதிவரை முன்னகர்ந்திருப்பதாகப் பிந்திய தகவல்.சிலாவத்தை வழியாக முல்லைத்தீவை நோக்கி மு…
-
- 5 replies
- 3.3k views
-
-
'இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கவேண்டும். மாறாக அடாத்தாக பிடித்து வைத்து, சுவீகரிக்க முயலக்கூடாது' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின் கடிதத்துக்கமைய, 'வலிகாமம் வடக்கில் விடுவிக்க முடியாத மற்றும் இராணுவம் தொடர்ந்து வைத்திருக்கவுள்ள காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும்' என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், மக்களிடம் தெரிவித்தமை தொடர்பில் சபையில் விவாதம் நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இராணுவ முகாமுக…
-
- 1 reply
- 535 views
-
-
நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினார். நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்…
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
விசுவமடுப் பகுதி மீது மூன்றாவது நாளாக தீவிரமான எறிகணைத் தாக்குதல் - ஏழு பேர் படுகாயம் திகதி: 15.01.2009 // தமிழீழம் // [வன்னியன்] விசுவமடுவையும் அதனையண்டிய கிராமங்களையும் குறிவைத்து சிறிலங்காப் படையினர் இன்று காலை முதல் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். எறிகணைகள் சுண்டிக்குளம் சந்தி, அதிசயவிநாயகர் கோவிலடி, உழவனூர், பிரமந்தனாறு, கல்லாறு, தொட்டியடிப் பகுதிகளில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடிக்கின்றன. இத் தாக்குதல்களில் காயமடைந்த ஏழுபேர் விசுவமடுவில் இயங்கும் கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு நண்பகல்வரை எடுத்துவரப்பட்டுள்ளனர். இரத்தினம் பாக்கியம் (37) சுண்டிக்குளம் சந்தி, கிருஸ்ணமூர்த்தி நிதர்சன் (19) அதிசயவிநாயகர் கோவிலடி, இராமச…
-
- 0 replies
- 836 views
-
-
வௌ்ளத்தால் மூடப்பட்டது மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வீதி வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி வீதி வௌ்ளாவெளி பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 240 மில்லியன் மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதென நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட வாகனம் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் வெல்லாவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் மண்டூர் வெல்லாவெளி வீதியில் கருத்த பாலத்துக்கு அருகே வீதியில் வெள்ளநீர் பாய்வதால் மத்திய முகாமிலிருந்து அநுராதபுரம் செல்வதற்காக இவ்வீதியால் வந்த வாகனமொன்று வெள்ள நீரில் அ…
-
- 0 replies
- 512 views
-
-
வடக்கு ஆளுநராக முன்னாள் கட்டளைத் தளபதி நியமனம்? வடக்கு மாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ பின்னணியைக் கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழல் தற்போது நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் 5ஆவது ஆளுநராக செயற்பட்ட ரெஜினோல்ட் குரேவுக்குப் பின்…
-
- 0 replies
- 362 views
-
-
வன்னியில் சுமார் 300,000 மக்கள் சர்வதேச உதவிகள் இன்றி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரும் அவலப்படும் நிலையில்.. அவர்களுக்கு உதவிகள் போய்ச் சேரும் வகையில் ஜேர்மனி வெளிவிகார அமைச்சு.. மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு சிறீலங்காவையும்.. தமிழீழ விடுதலைப்புலிகளையும் அழைத்துள்ளது. தகவல்.. டெயிலிமிரர். ------------ Germany calls for humanitarian ceasefire German Foreign Minister Frank-Walter Steinmeier today called for a humanitarian ceasefire to enable humanitarian assistance to be delivered to civilians cut off by government and rebel clashes in the north-eastern region of Sri Lanka. Steinmeier expressed concern for more than 300,000 refugees on a…
-
- 1 reply
- 1.8k views
-
-
நேசக்கரம் இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நேசக்கரம் இணையம் கடந்த 2வாரங்கள் வரையில் செயலிழந்து போயிருந்தது. 03.02.2013 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது என்பதனை வாசகர்களுக்கும் நேசக்கரத்தோடு இணைந்துள்ள அனைவருக்கும் அறியத் தருகின்றோம். www.nesakkaram.org தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் : Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org
-
- 15 replies
- 723 views
-