ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143623 topics in this forum
-
'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம் நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்" நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு தனது அரசாங்கம் மீது பழிசுமத்துவதற்கு சிறிசேன அரசாங்கம் முயன்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .தனது அரசாங்கம் பெற்றுக்கொண்ட அளவுக்கதிகமான கடன்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தான் இரகசிய கடன்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் மகிந்தராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். தனது இன…
-
- 4 replies
- 460 views
-
-
அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா இந்தோ பசிபிப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை என்னும் தலைப்பில் இடம்பெறும் கலந்துரையாடல் ஒன்றுக்காக அரசியல் ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான யதீந்திரா அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளார். மூன்று வாரங்களை உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல்களின் போது, இந்து சமூத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் கொள்கை இலக்கு அதன் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு துறைசார் நிபுனர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைசார் நிபுனர்கள் பலரும் பங்குபற்ற உள்ளனர். ஆரசியல் ஆய்வாளர் யதீந்திரா இந்து சமூத்திர பிராந்தியத்தை மையப்படுத்தி நகிழும…
-
- 3 replies
- 484 views
-
-
18 Jun, 2025 | 05:35 PM திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கப்பட்டது. மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020…
-
-
- 1 reply
- 222 views
-
-
மனித உரிமை மக்களாட்சி, மக்களின் கருத்துச் சுதந்திரம் ,ஊடக மற்றும் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றி கூரை மீதேறிக் கொக்கரிக்காத அரசுகளும் அரசியல் வாதிகளும் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர்களே தாம் நினைத்தபடி பிறர் மீது பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட்டு வகை தொகையற்ற கடத்தல் , கற்பழித்தல், கொலை, களவு, காணாமல் செய்து ஆளையே கொன்று புதைத்து விடுதல் என்பன எல்லா நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகும். சட்டம் ஒழுங்கு என்ற சாட்டில் சட்டமும் அப்பாவிப் பொது மக்களும் இருட்டறைக்குள் தவிக்கின்றனர். இதில் உலகின் நாட்டாமை நாடுகளின் பங்களிப்பு பற்றி இங்கு பார்வையே இது. விபரம் http://www.swissmurasam.info/content/view/7389/1/
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]மக்களது காணிகளில் முகாம்களை அமைப்பது தொடர்பிலும் எடுத்துக் கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. இருப்பினும் அது கூறிய பரிந்துரைகளை நிறைவேற்றினாலேயே மக்களுக்கு உதவியாக இருக்கும்.[/size] [size=4]யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அது திருப்திகரமானதாக இல்லை என்று யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்றைய தினம் வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாம்நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைன், யாழ். ஆயரை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.[/size] [size=4]கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கரு…
-
- 4 replies
- 558 views
-
-
சிறிய மற்றும் மத்தியதர கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, 1 பில்லியன் ரூபாய் நட்டயீடு கோரி, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மேற்படி அமைச்சில், நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த அமைச்சர் விமல் வீரவன்ச, தன்னைப்பற்றி உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டமைக்கு எதிராகவே தான் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைப்பற்றி போலியானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் எனவும் அமெரிக்காவில் தான் வங்கிக் கணக்கொன்றை வ…
-
- 1 reply
- 364 views
-
-
உள்ளகப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்ற உண்மை உயர்ஸ்தானிகர் வோல்கரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும் - தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல் 28 JUN, 2025 | 06:52 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அவ்வறிக்கையில் உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற விடயமும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்கேற்பு அவசியம் என்ற வலியுறுத்தலும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் தெர…
-
-
- 1 reply
- 135 views
- 1 follower
-
-
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் ஏனைய நாட்டு தலைவர்களுக்காக இலங்கை அரசாங்கம் 12 குண்டுத்துளைக்காத கார்களையும் பி எம் டபில்யூ பாதுகாப்பு மோட்டார் சைக்கிள்களையும் இறக்குமதி செய்யவுள்ளது. இவற்றுக்காக சுமார் 960 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் சுமார் 31 கார்களை 8.6 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. 12 கார்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படையினரின் நிதிஒதுக்கீட்டின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் 31 கார்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன உட்பட்டோரின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதுமட்டுமன்றி “சார்க்” மாநாட…
-
- 1 reply
- 927 views
-
-
இலங்கை அணி வீரர்கள் விளையாடுவதனை பார்ப்பதில் பெருமிதம் - ஜனாதிபதி இலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் திறமைகள் பெருமிதம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருபதுக்கு 20 நடப்பு உலக சாம்பியன்களான இலங்கை அணி நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து அணியுடன் தோல்வியைத் தழுவி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் அணியை தைரியப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி டுவிட்டரில், நேற்றைய தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். வெற்றியோ தோல்வியோ இலங்கை அணி வீரர்களின் அபராமான திறமைகளை கண்டு களிப்பதில் தாம் பெருமிதம் அடைவதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த த…
-
- 0 replies
- 309 views
-
-
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தான் போட்டியிட உள்ளதாக முன்வைக்கப்படும் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், மலையக சமூகத்தின் மீது அக்கறை கொண்டே தனது சகோதரர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாமல் போயுள்ளமை வருத்தத்துக்குரியதென தெரிவித்துள்ள அவர், அதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். http://www.tam…
-
- 0 replies
- 436 views
-
-
அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை! நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு …
-
- 0 replies
- 76 views
-
-
'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'. இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான். டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா.. அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது : கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் ந…
-
- 32 replies
- 4k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து போரினால் இடம்பெயர்ந்த சுமார் 852 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இன்னமும் மீளக்குடிய மர்த்தப்படாமல் மெனிக் பாம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்றில் அம்பலவன் பொக்கணை யில் 127 குடும்பங்களைச் சேர்ந்த 459 பேரும், முள்ளிவாய்க்கால் மேற்கில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேரும், கேப்பாப்புலவில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 568 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மந்துவில் பகுதியில் 241 குடும்பகளைச் சேர்ந்த 796 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 107 குடும்பங்களைச…
-
- 0 replies
- 401 views
-
-
மஹிந்தவுக்கு நாள் இல்லை புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள, நாளொன்றை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்த போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு - ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்கினார் என்றும் விஜேநாயக்க கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/169308/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%…
-
- 0 replies
- 482 views
-
-
18 JUL, 2025 | 04:26 PM (எம்.நியூட்டன்) யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஊழலுக்கு துணைபோகிறதா? என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அர்ச்சுனா கூறுகையில், யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அவை தொடர்பான முறையான விசாரணைகளை நடத்த தாமதிப்பது எதற்காக? தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக நான் பல விடயங்களை முன்வைத்…
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
இலங்கை சேர்ந்த 184 சிங்களவர்கள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் , தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாரத சிங்களவர்களை அழைத்துவந்த பேருந்து ஓட்டுனர் சிங்களவர்களை விட்டு ஓடினார். முற்றுகைப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைவகித்தார், நாம்தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விவேகான்ந்தன் உட்பட 100க்கு மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். h…
-
- 42 replies
- 2.6k views
-
-
இனப்பிரச்சனைக்கான தீர்வு கேள்விக்குறியே எனவும், பேரினவாத சக்திக்குட்டப்பட்ட அரசியலே தற்போது நடைபெறுகின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனைச் சந்தித்ததன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் தற்கொலை அங்கி வெடிபொருட்கள் மீட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். சிங்கள ஊடகங்கள் இதனைப் பிழையான முறையில் வெளிப்படுத்தி வருகின்றன. இதிலுள்ள விளைவுகள் குறித்து நன்கு விளங்கி கருத்துக்களை வெளியிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். என்ன நடந்ததென்று விரிவாக ஆராயாது பேசுவது நாட்டிற்கு உகந்ததல்ல. …
-
- 0 replies
- 497 views
-
-
மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்! இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு மேற்குறித்த இரண்டு திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர். இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது. https…
-
- 0 replies
- 109 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட வேட்பாளா்கள் இவா்களே..! அறிவித்தது கட்சி.. நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டிருக்கின்றது. வழக்கம்போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இம்முறையும் களமிறங்குகின்றனர். அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகா்க…
-
- 1 reply
- 653 views
-
-
தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு ! வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த முதலாம் திகதி கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய அரசியல் …
-
- 0 replies
- 151 views
-
-
[size=4]வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் அவர் கூறினார். 2013 செப்டெம்பரில் இத்தே…
-
- 7 replies
- 621 views
-
-
இன்று உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் 2020 அனுஷ்டிக்கப்படுகின்றது, இந்நிலையில் இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை ஆகும். 2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வல்லுறவு வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்றும் சிற…
-
- 0 replies
- 361 views
-
-
[size=5]நான் தோற்கடிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல்: நிஜாமுதீன் [/size] [size=4]நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எனக்கான வாக்கெண்ணும் முகவர்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தமையால் திட்டமிடப்பட்டே எனது வாக்குகள் குறைக்கப்பட்டு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது என்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்ருமான எஸ்.நிஜாமுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தவிடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் முறையாக வாக்கெண்ணும் முகவர்களை நியமிப்பதற்காக விண்ணப்பித்தும் இறுதி வேளையில் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனூடாக எனக்குப் பெரும் அந…
-
- 1 reply
- 868 views
-
-
<p>Your browser does not support iframes.</p> பிரபாகரனால் முடியாது போனதை சம்பந்தன் செய்கிறார் - கம்மன்பில பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார். பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாகவும், இது தொடர்பில் பிரதமர் அல்லது ஜனாதிபதி எந்தவொரு கருத்தை…
-
- 0 replies
- 474 views
-
-
எரிபொருளை பதுக்கினால் விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரம் இரத்தாகும் எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிலர் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டு வரவதாகவும், தற்பொழுது சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவதாகவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. பெருந்தொகை எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருப்பதாகவும் மின் சக…
-
- 0 replies
- 259 views
-