Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்கட்டும் – விமல் வீரவன்ச சவால் முடிந்தால் சமஸ்டி முறையிலான அரசிலய் சாசனத்தை அரசாங்கம் உருவாக்கட்டும் என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியல் சாசனப் பேரவையிலிருந்து தாம் உள்ளிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி; கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கத்தினால் அரசியல் சாசனப் பேரவையை உருவாக்கி அதன் ஊடாக சமஸ்டி முறையிலான அரசியல் சாசனத்தை உருவாக்க இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புறக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/33547

    • 0 replies
    • 405 views
  2. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி! இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர். அதேவேளை கடந்த சில நாட்களாகவே யாழ்.பல்கலைக்கழக சூழலில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு , பல்கலை சூழல் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டு…

    • 2 replies
    • 553 views
  3. ஜனாதிபதி மைத்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் நாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கொள்கைகளை அமுல்படுத்தி வருவதாகவும், இதனால் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கமும் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். http://gl…

  4. இந்து மகளிர் கல்லூரியின்புதிய கட்டடத் திறப்பு விழா யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி நேற்றுத் திறக்கப்பட்டது. அமெரிக்த் தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் பிரதி நிதி ரொபேர்ட் ஹில்டன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தைத் திறந்தனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன், அமெரிக்க தூதரகத்தின் ஐக்கிய மாநிலங்களின் நிதி உதவியுடன் இந்தக் கட்டம் அமைக்கப்பட்டது. கட்டடத் தொகுதியின் தளபாடங்கள் 15 மில்லியன் ரூபா செலவிலும், கட்டிட தொகுதி 75 மில்லியன் ரூபா செலவும் அமைக்கப்பட்டன. .நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர…

  5. கிளிநொச்சி விளையாட்டுத் திடலில் 68 கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கத் தீர்மானம்! எதிர்வரும் ஐனாபதித் தேர்தலில் இடம்பெயர்ந்து மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சி விiளாயாட்டுத் திடலில் 68 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைப்படவுள்ளன. இதுகுறித்து நேற்று கிளிநொச்சிக்குச் சென்று கிளிநொச்சி செயலகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் மேலதிகள் தேர்தல் ஆணையாளர், இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பு தொடர்ப்பான பிரதி ஆணையாளர், அரச அதிகர்கள் உட்பட உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆராயந்துள்ளனர். கரைச்சி, கண்டாவளை, பளைப் பகுதியில் மீள்குடியேற்றப்படாத 68 கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக கிளிநொச்சி விளையாட்டுத் திடலில் 68 கொத்தணி அடிப்படையில் வாக்களிப்பு நிலையங்கள் அ…

  6. இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். அவரிடமிருந்து அரச தலைவர்கள் என்ன வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சந்திரிகா தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். சொந்த நலன்களை பற்றி மட்டும் சிந்திக்காத ஒரு அரசியல்வாதியாக மன்னித்தல், மீள் நல்லிணக்கம் ஒரு தேசமாக எல்லோரிடமும் அன்புடன…

  7. சஜித் பிரேமதாச நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு! எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (புதன்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்த தினமான இன்று காலை காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavan…

  8. வலிகாமம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்ற ஈபிடிபியினர் மக்களால் விரட்டியடிப்பு! யாழ் வலிகாமம் சுண்ணாகம் மற்றும் மல்லாகம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற ஈபிடிபியினர் பலர் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துள்ளது. மகிந்தவின் யாழ் வரவை ஒட்டி மக்களை திரட்டும் முகமாக வலிகாமத்தில் சில இடங்களில் கூடிய ஈபிடிபியினர் மக்களை யாழ் பொது விளையாட்டரங்குக்கு வரும் படியும் பிரச்சினைக்கு தீர்வுகளை மகிந்த மூலம் தாம் பெற்ற தருகின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது சில பெற்றோர் தமது காணமல் போன பிள்ளைகள் பற்றி கேள்வி எழுப்பவே அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் அது படையிகர் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் நழுவ முற்ப…

    • 2 replies
    • 951 views
  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன் January 21, 2022 (வரதன்) சேதனப்பசளை பாவனை பாரிய விவசாய புரட்சி திட்டமாகும்.இராணுவத் தினர் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி சேதனப் பசளையை உற்பத் தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பசுமை செயலணி திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உணவு சுகாதாரம் ஆகிய பாதுகாப்புக்கள் முக்கியமானவை.உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெ டுக்கிறது.எமது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதற் காகவே இந்த பசுமை செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது மட்டு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தை 33 …

    • 3 replies
    • 310 views
  10. முறிப்புக் குளத்தையண்டிய ஊற்றுப்புலம் எனும்காட்டுப் பகுதியில் 2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மீது வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து வனத்தை அழிப்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து மக்களின் வீடுகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து அச்ச நிலையில் வாழ்கின்றனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, யுத்தம் காரணமாக 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்த காணிகளற்ற 36 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் பதிவுகளை மேற்கொண்டனர். இதற்கமைவாக, குறித்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் முறிப்புக் குளத்தையண்டிய ஊற்று…

    • 0 replies
    • 265 views
  11. திரு ரவி நெதர்லாந்தில் வட்டுகோட்டை தீர்மானம் பற்றி - Audio http://eelamsoon.com/upload/thiruravi.mp3 http://www.eelamsoon.com

    • 0 replies
    • 707 views
  12. வாக்களித்தோர் தொகை 64,692 ஓம் என்று வாக்களித்தோர் 99.33%

  13. (நா.தனுஜா) இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கமுடியும். அதேவேளை குறித்த நபருக்கெதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தடைவிதிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்று சட்டத்தரணியும் சர்வதேச குற்றவியல் சட்டம் தொடர்பான நிபுணரும் சர்வதேச நீதிக்கான கனேடிய கூட்டாண்மையின் ஆய்வாளருமான அமன்டா கஹ்ரெமனி வலியுறுத்தியுள்ளார். அதேவேளை 'தடைவிதிப்பு' என்பது பொறுப்புக்கூறல் செயன்முறையின் ஒரு பகுதி மாத்திரமே என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆகவே பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய நடவடிக்கைகள் சிவில் சமூக அமைப்புக்…

  14. "மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு சந…

  15. வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரபல நபர் யார்.? (எம்.ஆர்.எம்.வஸீம்) வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/24116

  16. (நா.தனுஜா) உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்றும் ஏனைய நாடுகள் இதனைப் பின்பற்றுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு அளவிலான படையெடுப்பிற்கு சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பொது கட்டமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் இணக்கப்பாட்டுடன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள …

    • 3 replies
    • 426 views
  17. கவிழ்ந்தது கூட்டமைப்பின் வலி.கிழக்கு பிரதேசசபை!! தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள வலி.கிழக்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பிற்குள்ளாக்கப்பட்ட நிலையில் ஆதரவாக தற்போதைய தவிசாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் வாக்களித்திருந்தனர். எதிராக கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுவரும் ஈபிடிபி சார்பு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜந்து உறுப்பினர்களுமாக பன்னிருவர் எதிராக வாக்களித்திருந்தனர். முன்னதாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையினில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்களிப்பினை எதிர் தரப்புகளிற்கு அழைப்பிதழ் ஏதும் அனுப்பாது நடத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து இன்று …

  18. இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் மூடைகள் பறிமுதல் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற .10லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் . தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ பிரான்ச் போலீசார் மாவட்டம் முழுவதும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கியூ பிரான்ச் போலீசார் 2 படகுகளில் சோதனையிட்ட போது மொத்தம் 14 மூடைகளில் 550 கிலோ ஏலக்காய் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10லட்சம் என்று கூறப்படுகிறதோடு , மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்…

  19. முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்றய தினம் (24-02-2010) மாலை 7.30 மணியளவில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வீதி அருகில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென அங்விடத்திற்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களது அடையாள அட்டைகள் பெறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை அவ்விடத்திலேயே நிற்க வைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நன்றி சங்கதி

  20. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பிக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் ச…

  21. அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னும் காலவரையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ண் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் விலாவுட்டிலும் இப்போராட்டம் மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் நான்கு ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியா அல்லது இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள…

  22. http://www.nerudal.com/nerudal.14307.html அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:27க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படு…

    • 0 replies
    • 465 views
  23. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கையை, இந்திய அரசு எதிர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழின உணர்வாளர்களை ஒன்று திரட்டிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் "உதயனுக்குத்' தெரிவித்தார். எதிர்வரும் முதலாம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை நிறைவேற்றுவதற்காக இந்திய அரசு செயற்பட வேண்டும். அதற்கு இந்திய மத்திய மற்றும் ம…

  24. நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உடனடியாக ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை. அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்டாயமாக வெற்றிப்பெறும். ரணில் மற்றும் சஜித்துடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகள் எதுவுமே என்னிடத்தில் இல்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் என்பது பொய்யாகும் என்றார். Tamilmirror Online || “நான், விட்டுட்டு போகமாட்டேன்”: மஹிந்த எனக்கு பிரதமராக பதவியேற்க வேண்டிய அவசியமி…

    • 4 replies
    • 514 views
  25. செனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் சில சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், செனல்4 ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமைகளின் போது வழக்குத் தொடர்வதனை விடவும் மிகவும் காத்திரமான சில தந்திரோபாயங்களின் மூலம், பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.