Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வியாழக்கிழமை (24) அம்பாந்தோட்டை, டீ.ஏ.ராஜபக்ஷ தேசிய பாடசாலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். எமது அணிக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். எம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. தற்போதுள்ள அரசாங்கம் சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டைக் கட்டியெ…

  2. சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு foreign policy journal ஊடகத்தில் டுபாயை தளமாக கொண்ட, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலக விவகார ஆய்வாளர் Aijaz Zaka Syed எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘. புலியில் சவாரி செய்வது, அதன் முதலாளிக்கு மிகச் சிறப்பான சந்தர்ப்பங்களில் இலகுவான கலை…

    • 7 replies
    • 1.2k views
  3. விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கன வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். …

  4. "சார்க்' மாநாட்டுக்கு மன்மோகன் சிங்கை அழைத்து வருவதில் இலங்கை அரசு தீவிரம் ரோஹித போகொல்லாகம புதுடில்லியில் கடும் முயற்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவிருக்கும் தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கலந்துகொள்ளச் செய்வதில் கொழும்பு அரசு பகீரதப் பிரயத்தன முயற்சி எடுத்துவருகின்றது எனத் தெரிகின்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் தாமே நேரடியாகக் கலந்துகொள்வதற்கு இணங்கினார் என்ற பதிலுடன் வருமாறு பணித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்றும் தெரியவருகின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை கொழும்பு அரசு கையாளு…

  5. சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் கதிர்வீச்சை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரப் பகுதிகளில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். “தென்னிந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தால், ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் இந்தப் பகுதியே அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மன்னார் நகரில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள கூடங்குளத்தில் இந்த அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கதிர்வீச்சின் அடிப்படை அளவை கண்டறிவதும், அதனை அடிப்படையாக வைத்து உள்ளூர் அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக கதிர்வீச்சு அளவை கண்காணிப்பதற்குமே …

    • 1 reply
    • 556 views
  6. “தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள்” : தமிழ் மக்கள் பேரவை… September 13, 2019 தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையில் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்று தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்…

  7. 30 NOV, 2024 | 10:17 AM ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

  8. ஈரான் அரச தலைவர் மொகமட் அகமட்னிஜாத் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்கா பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  9. வட, கிழக்கில் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் [ வியாழக்கிழமை, 03 டிசெம்பர் 2015, 02:58.32 PM GMT ] வடக்கு கிழக்கில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது. இந்தத் தகவலை இலங்கை மற்றும் மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டலி தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் மத்திய நிலையம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த …

  10. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 08 Dec, 2024 | 03:29 PM ஆர்.ராம் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள…

      • Downvote
      • Like
      • Thanks
      • Haha
    • 21 replies
    • 1.1k views
  11. யாழ். இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி வேதநாயகி பேரின்பநாதன் திடீரென யாழ். கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் இந்த இடமாற்ற உத்தரவை வழங்கியுள்ளார். எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இரு மாதங்களுக்கு முன்னர் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் கல்லூரி அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்து மகளிர் கல்லூரி வாளகத்தில் அமைந்திருந்த நல்லூர் கோட்டக் கல்வி அலுவலகத்தை அகற்றுமாறு கோரியே மாணவிகள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர் என்று ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விசா…

    • 2 replies
    • 641 views
  12. வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு சபையில் தமது அனுதாபத்தைத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழக மக்களுக்கு உதவி செய்வதற்காக வடக்கு மாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு ஆதரவு வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. நாடாளுமன்றத்தில் நேற்று காலை இடம்பெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு அனுதாபம் தெரிவித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில், "எமது இனப்படுகொலைக்கு எதிராக தமிழ…

  13. ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு புதுடெல்லியில் சிறப்பான வரவேற்பு! 15 DEC, 2024 | 08:05 PM உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். …

  14. யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்போது தந்தை செல்…

  15. யாழ்ப்பாணம் (Jaffna) சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை. ஆனாலும் அவை மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகவும், உற்பத்திப் பிரதேசங்களை மையமாகவும் கொண்டவை. விவசாயப் பொருட்கள் உற்பத்தி சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் தான் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையமானது, யாழ்ப்பாணம் விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற…

  16. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஆணையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு மாதாந்தப் பரிசோதனைகளுக்காக சென்ற சமயம் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணையின்போது யாழ். பொலிஸாரினால் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையின் இணைப்பாளர் மற்றும் சக ஊழியர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு கடமையிலிருந்த பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவித்துத் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் யாழ். பிராந்திய கிளையின் ஆணையாளரால், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக…

    • 0 replies
    • 507 views
  17. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊவா மாகாண ஆளுநராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவை நியமித்துவிட்டு டிலான் பெரேராவின் இடத்தினை தான் நிரப்புவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து தற்போது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினராக உள்ள டிலான் பெரேராவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். பொதுஜனபெரமுனவுடன் இணைந்தமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை; டிலான் பெரேரா எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ச…

    • 0 replies
    • 238 views
  18. இனந் தெரியாத ஆயுததாரிகளால் கொலை முயற்சியில் இருந்து தப்பித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தர்ஷானந் தலையில் ஏற்பட்ட பாரிய காயத்திற்கு 7 தையல்கள் போடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது ஒரு கை தூக்க முடியாத நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். thx http://www.newjaffna.com/index.php

    • 7 replies
    • 5k views
  19. தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வர…

    • 8 replies
    • 2.2k views
  20. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் வொசிங்டனுக்குச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்கா குழுவினருடனான சந்திப்பின் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ஐ.நாவுடன் நெருக்கமாக இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு சிறிலங்கா குழுவினர், நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்கனவே பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டு விட்டதாக பதிலளித்துள்ளனர். ஆனால் அவர் தனது பயணத்துக்கு முன்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழ…

  21. நாம் யார் என்பதனை எதிரிக்கு கொடுக்கப்போகும் பதிலடி மூலம் உலகமும் சிங்கள தேசமும் வெகுவிரைவில் உணரப்போகின்றது. இது விரைவில் நடந்தே தீரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி தளபதி கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  22. யாழ் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ். செந்தூரன் (30 வயது) மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஊடகவியலாளர் செந்தூரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (30) பிற்பகல் மரண வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை, கோண்டாவில் புகையிரத வீதிக்கு அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள், இவர்களை வழி மறித்து பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதல் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%…

    • 0 replies
    • 566 views
  23. நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா கைது [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 05:03.00 AM GMT ] தெமட்டகொடை கடத்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிருணிகாவை கைதுசெய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் இன்று காலை அவரது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கைது செய்யப்பட்ட ஹிருணிக்க பிரேமச…

  24. 12 Feb, 2025 | 01:10 PM யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ எரியூட்டியில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அதில் இருந்து கிளம்பும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை, தூர் நாற்றம் என்பன ஏற்படுவதால் அயலில் வசிக்கும் தாம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் ஆ…

  25. சிங்கள இளைஞர்கள் பலியாவதற்கு அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் Saturday, 26 April 2008 யுத்தம் ஒன்றினால் தேசிய பிரச்சனையை தீர்க்க முடியும் என நினைக்கும் அரசின் கருத்து பொய்யானது என முகமாலையில் விடுதலைப் புலிகளோடு இடம் பெற்ற மோதல்களினால் ஒப்புவிக்கப் பட்டுள்ளது என இடதுசாரி முன்னணி தெரிவித்திருக்கிறது. முகமாலை மோதல்களில் சுமார் 150 படையினர் கொல்லப்பட்டும் 400 படையினருக்கு மேல் காயப்பட்டும் உள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் இழப்புகள் நேரிட்டுள்ளது. விடுதலைப் புலிகளில் உள்ள இளைஞர்கள் அவர்களது தாயக பூமியில் அவர்களது பனை மரங்களின் கீழ் இறக்கும் போது சிங்கள இளைஞர்கள் பலா மற்றும் தேங்காய் மரங்களின் கீழ் உள்ள கிராமங்கிளில் இருந்து புறப்பட்டு போய் அடுத்தவ…

    • 2 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.