Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 12:38 PM யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது அப்பகுதிக…

  2. அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘2016 தீர்வு உங்களின் வாக்குறுதி நிறைவேறுமா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்போது அவர் பதிலளிக்கையில், தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்ற எனது கணிப்பை குழப்பும் விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார். தீர்வு ஒன்றை எட்டவேண்டுமாயின் அதற்கென சில ஒழுங்குகள் உள்ளன. சில கருமங்கள் நடைபெறவேண்டும். என்னுடைய கணிப்பின் பிரகாரம் ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கிறது. மகிந்த வீட்டுக்குப் போயிருக்கிறார். மைத்திரி பதவியேற்றிருக்கிறார். ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சி…

  3. இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் இரகசியத் திட்டமொன்றை சர்வதேச சமூகம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றியவுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளதாக இருதின வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன்களுக்கு உரிய வகையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் த…

  4. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் கையை விரித்து விட்டார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தவே அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான எந்தப் பரிந்துரைகளும் செய்யப்படாதது குறித்து சிறிலங்கா தரப்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழ…

  5. தனது சொந்த மகளான 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எஸ்.மானவடு தெரிவித்தார். 3ஆம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயது மகளையே தந்தை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திருப்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.http://www.tharavu.com/2010/10/8.html

    • 0 replies
    • 1.2k views
  6. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து இலங்கை கடற்படை தாக்கியது. அதனால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது சர்வதேச கடல் பகுதியில் இந்திய, இலங்கை கூட்டுப்படை ரோந்துப் பணி மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கூட்…

  7. பிரசுரித்தவர்: NILAA June 21, 2011 மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் கருணா குழுவினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை சந்திவெளி பிரதேச மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த இந்த நினைவுத் தூபி வாகரையில் விடுதலைப்புலிகளுக்கும் கருணாகுழுவிற்கும் இடையில் நடைபெற்ற ஆயத மோதலின் போது உயிரிழந்த கருணாகுழு உறுப்பினர்களின் நினைவாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் (கருணா) அமைக்கப்பட்டிருந்தது. இன் நினைவுத் தூபியையே சந்திவெளி மக்கள் நேற்றுக் காலை அடித்து நொருக்கியுள்ளனர். ஏற்கனவே இந்த இடத்தில் விடுதலைப்புலிகளின் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை உடைத்துவிட்டே கருணா குழுவினர் தங்களுடைய உறுப…

  8. விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் -பலவீனத்தின் வெளிப்பாடா? இராசதந்திர நகர்வா? புலிகளின் இவ் அறிவிப்பானது சிங்களம் கூறுவதைப் போன்று விடுதலைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக தம்மிடம் இருக்கும் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் அசுர பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமே சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை கடந்த வாரம்(01.08.08) தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறி லங்கா தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை ஒட்டி பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள். மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் பு…

  9. மகசீன் சிறைச்சாலையில் கலவரம் 15பேர் வரையில் காயம் மகசீன் சிறைச்சாலையில் இன்று காலை பதினொரு மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அண்மையில் மகசீன் சிறைச்சாலைக்கு நியமிக்கப்பட்ட எமில் நிறஞ்சன் என்ற அதிகாரியின் கடும் போக்கிற்கு எதிராக இன்று சிங்களக் கைதிகள் அதிகாரிகள் மீது பொல்லுகள் கல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நடவடிக்கைக்கு எதிராக கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 15கைதிகள் வரையில் காயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதலில் தமிழ்க் கைதிகளும் பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலமை மிகவும் பதட்டமான நிலையில் இருப்பதாகவும் தற்போது மகசீன் சிறைச்…

    • 16 replies
    • 1.2k views
  10. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப், தனது விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதைத் தெரிவித்துள்ளார். நம்பகத்தன்மையுடன் கூடிய சுயாதீனமான விசாரணைகள் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா ஊக்குவிக்கிறது எனவும் அவர் வெளியிட்டுள்ள அற…

  11. மறைமலையில் திரண்டது தமிழ்நாடு எரிமலையாய்ச் சினந்தது மாநாடு - தணிகைச்செல்வன் நீலச்செங்கொடி நட்சத்திரங்கள் நிறைந்து பறந்த பெருந்திடலில் ஈழச் சங்கொலி முழக்கிடத் திரண்ட இளஞ்சிறுத்தையர் இனத் திரளில் தேகத் தீயினில் சாகத் துணிந்த ஈகப் புலிகளின் எரி தழலை தேசத் தலைவன் திருமா ஏந்தித் தொடர்வான் ‘தம்பி’யின் அடிநிழலை தமிழர் இறையாண்மை மாநாட்டிலிருந்து கிளம்பித் தமிழ்நாட்டின் திக்கெட்டும் திரும்பிக் கொண்டிருந்த சிறுத்தைகளின் ஒவ்வொருவர் நெஞ்சிலும் மேலே உள்ள வரிகளின் சாரம்தான் அழுத்தமாய்ப் பதிவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், ஈழத்துக…

  12. தமிழீழம் பெரும் போரை சந்திக்கத் தயாராகி வருகின்ற இவ்வேளையில் தமிழீழத்திலேயே வாழ்ந்து தங்கள் மண்ணின் விடிவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள போராளிகளின் மக்களின் மன மகிழ்வுக்காக போர்க்கால இசை விருந்து என்ற கலை கலாசார நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. அந்த நிகழ்வில் சங்கிலியன் என்ற வரலாற்று நாடகமும் மேடையேற்றப்பட்டது. அந்த நிகழ்வின் மேடையமைப்பில் சிவபெருமான் நடனமாடும் பின்னணி ஓவியமும் வைக்கப்பட்டிருந்தது தமிழர்களின் கலாசார வெளிப்பாட்டோடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை புலிகளின் குரல் ஏற்பாடு செய்திருந்தது. எமது விடுதலைப் போராட்டம் எந்த மத உணர்வாளர்களையும் மிதித்துக் கொண்டு மக்களின் மத உணர்வுகளை கிழித்தெறிந்து கொண்டு நடை போட முனையாமல்.. கலை கலாசார பி…

    • 1 reply
    • 1.2k views
  13. ஒன்று சேர்வோம்; குரல் கொடுப்போம்! வெகு அபூர்வமாகத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருசேர இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக குரல் கொடுத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்துடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு உடனடியாகத் தலையிடக் கோரியதுடன் - `தி.மு.க. அரசு தேவையா என்பதற்கு விடை காணவேண்டும்' என்று உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறார். இலங்கையின் முற்றிவரும் போர் நெருக்கடியும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களும், இந்திய மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறல்களும் இலங்கை அரசின் வரம்பற்ற சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகின்றன. ஏற்கெனவே சுமார் 70000 பேர் வரை தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் நிரம்ப…

  14. வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை DEC 31, 2014 | 0:00by அ.எழிலரசன்in செய்திகள் வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், தனது இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 20 வீத வாக்குகளைக் கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற முடியவில்லையே என்று, எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தாம் இம்முறை வடக்கில் 30 தொடக்கம் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில…

  15. அரசியலில் விரைவில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் ஐ.தே.கசெயலாளர் திஸ்ஸ அரசாங்கம் மக்கள் மத்தியில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றது. நாட்டின் அரசியல் நிலைமைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாகவே இருக்கின்றன. நாங்கள் மேற்கொண்டு வருகின்ற மக்கள் அலை எதிர்ப்பு கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் தொடரும். அரசியலில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். மனித உரிமை மீறல்களை தடுக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : நாட்டில் சிவில் சட்டம் சரியான…

  16. 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுன் தாலிக் கொடி அறுத்தார் என்ற குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறையைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பேருந்துக்காக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அரியாலையைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து பொக்கெற்றில் வைத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளார். பெண் கூக்குரல் இட்டார். அதனால் அப்பகுதியில்…

  17. மக்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவு வாள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாரின் சீருடைகளுக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்தால், அதனை பொலிஸாரிடன் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடன் அதற்கான காலக்கெடு நிறைவடையவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினத்திற்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாளைய தினம் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நி…

  18. "சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்: "த இன்டிபென்டன்" நாளேடு லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது. ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  19. சீதுவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை கைது செய்தமை தொடர்பில் எழுந்த வாக்குவாதமே பின்னர் இருதரப்பினருக்குமிடையில் கைகலப்பு ஏற்படக்காரணம் என்று சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். இம்மோதல் சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர்கள் இருவர் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் கூறினர். கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த சீதுவபொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் குழுவினர், அச்சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த…

  20. வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். ஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். முதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நே…

  21. வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்! 2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT செலுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9 ஆயிரத்து 941 ரூபாவை VAT வரியாக செலுத்தி வருகின்றது. இதன்படி, இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய VAT வரித் தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மறைமுக வரி வருமானம…

  22. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு பிரஜை நியமனம் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக சுவீடன் நாட்டு இராணுவ பிரிகேடியர் ஒருவரை நோர்வே அரசாங்கம் இன்று நியமித்துள்ளது. இலங்கை போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரு தரப்பினரின் ஆலோசனையின் பின்னர் நியமிக்கப்பட்ட பிரிகேடியர் உல்வ் கென்றிக்சன், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது பதவியை பொறுப்பேற்பார். இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்பாளரும், சமாதான முயற்சிகளுக்கான மத்தியஸ்தர்களும் ஒரே நாட்டவர்களாக இருக்கக் கூடாது என்று இலங்…

  23. அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டு மீண்டும் இனவாதம் தூண்டப்படுமாயின் நாட்டை பிளவுபடுத்தும் போராட்டம் இனி வன்னிக் காட்டிலன்றி, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நியூயோர்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும் என ஸ்ரீ.சு.க.மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். நாட்டில் யுத்தம் முடிவடைந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்துவிட்ட போதிலும் அரசாங்கத்துக்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிந்ததா? எனினும் வன்னி பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெ…

  24. கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் விமானப்படையான வான்புலிகள் பிரிவின் தலைவராக இருந்தவர் சென்னை பொறியியல் கல்லூரியில் பி.இ படித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர் புலிகளின் வான் புலிகள் பிரிவினர். நள்ளிரவில் பலத்த பாதுகாப்பு மிக்க கொழும்பு விமான நிலையம் அருகே உள்ள விமானப் படை தளத்தை விமானம் மூலம் தாக்கி 3 பேரைக் கொன்று விட்டு பத்திரமாக தங்களது பகுதிக்குத் திரும்பியுள்ளது புலிகளின் விமானங்கள். புலிகள் நடத்தியுள்ள இந்த முதல் விமானத் தாக்குதல் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் சிங்கள மக்கள் உறைந்து போயு…

    • 0 replies
    • 1.2k views
  25. முகமாலைஎழுதுமட்டுவாள் பகுதிகளில் புலிகளை விரட்ட படையினர் கடுஞ்சமர் முறியடித்துவிட்டதாக புலிகள் அறிவிப்பு முகமாலை நாகர்கோவில் கிளாலி முன்னரங்கப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்துக் கொண்டு எழுதுமட்டுவாள் பகுதிக்குள் முன்னேறியுள்ள விடுதலைப் புலிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அரசுத் துருப்புகள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன என்று களமுனைத் தகவல்கள் தெரி விக்கின்றன. முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் பகுதிகளில் இருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதற்கான படை நடவடிக்கை ஒன்றை நேற்று அதிகாலை முதல் அரசுப் படைகள் ஆரம்பித்தன என்று பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிய முடிகின்றது. படையினரின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றி கரமாக முறியடித்துவிட்டனர் என்று விடுதலைப் புலிகள் அறிவித்…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.