ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143644 topics in this forum
-
பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" -கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்! 22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. "கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆக்கம்: மதி 2. ஏப்ரல் 2008 22:12 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றென கூறிக்கொள்ளும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் மனச்சாட்சிக்கு மாறாகவே நடந்து வருகின்றது. ஈழத்தமிழர் உறவு விரும்பத்தகாதது என்ற மனோநிலையினை தக்கவைத்தும் வருவதை அவதானிக்க முடிகிறது. மிகவும் அண்மித்த காலப்பகுதியில் ஈழத்தமிழரின் குருதியில் பிழைப்புவாத அரசியலை நடத்தும் சிங்களப் பேரினவாத அரசின் படைதளபதியான சரத் பொன்சேகாவிற்கான இந்தியாவின் வரவேற்பு என்பது ஈழத்தமிழரின் செங்குருதியை பிசைந்துழக்கிய கால்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதாகவே ஈழத்தமிழ் சிந்தனையாளர்கள் நோக்குகின்றனர். இந்தியாவின் இத்தகைய போக்கிற்கு காரணம் ராஜீவ்காந்தியின் படைகொலை தானென பரவலாக பேசப்படுவதை பலரும் அறிவோம். ஆனால்..... ஈ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொஹண, சவேந்திர சில்வா ஆகியோரை ஐ.நா.விற்கான பதவிகளிலிருந்து வெளியேறுமாறு கோதாபய உத்தரவு Thursday, May 12, 2011, 9:45 சிறீலங்கா ஐ.நா. சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண மற்றும் துணை நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் விரைவில் அங்கிருந்து அகற்றப்படவுள்ளதாக சில நம்பகரமான தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கை வெளிவர முன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கைக்குப் பாதகமான விடயங்கள் குறித்து ஓரளவுக்கேனும் அழுத்தங்களைப் பிரயோகித்து நெகிழ்வுத் தன்மை கொண்டதாக அறிக்கையை வெளிவரச் செய்வதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளமையே அதற்கான காரணம் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் மட்டுமன்றி நியூயோர்க…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
'பயங்கரவாத அமைப்பென்று விடுதலைப் புலிகளை இந்தியா பட்டியலிட்டிருக்கன்ற போதும், தமிழக அரசியல்வாதியான வைகோ புலிகளின் அனுதாபியாகவும் ஆதரவாளராகவும் பேச்சாளராகவும் இருப்பது அறிந்ததொன்றே' என்று கெஹெலிய கூறியுள்ளார். மேலும் : ஒஸ்லோவில் அண்மையில் இடம் பெற்ற சர்வதேச மாநாட்டில் வைகோ உரையாற்றியுள்ளார். வட,கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதன் மூலம் புலிகள் தவறு இழைத்திருக்கக் கூடுமென அவர் கூறியுள்ளார். ஆனால் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதை விளங்கிக் கொண்டிருப்பது அவசியமாகும். பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான வழிவகைளை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகம் அரசை வலியுறுத்துகிறது. அவ்வாறாயின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஸ்பைன் அரசின் நிதியுதவியுடன் மூன்று பாலங்கள் புனரமைப்பு வீரகேசரி நாளேடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய பாலங்களைப் புனரமைப்புச்செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் திருகோணமலை கச்சேரி ஆளுநர் விடுதியில் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் டீ.டீ.ஆர்.டி. சில்வா தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத், வீதி அபிவிருத்திச்சபை உயர்அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். யான்ஓயா, புல்மோட்டை, புடைவைக்கட்டு ஆகிய பாலங்கள் புனரமைப்பு செய்வது சம்பந்தமாகவே இவ் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது. இப்பாலங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் வேலைத்திட்டக்காரியாலயம் (யுனொப்ஸ்) அமுல்படுத்தவுள் ளது. இதற்கான நிதிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஆயுதங்களை கொண்டு இயக்கும் பிள்ளையான் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை தேர்தலுக்கு முன்னர் களையுமாறு கோரி ராஜகிரிய தேர்தல் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தற்போது ஜயவர்தனபுர கோடடை மாநகர சபையின், குப்பை காவி வண்டிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பையும் கொட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது. ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த பொது கடையடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20928
-
- 7 replies
- 1.2k views
-
-
கடத்தல்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி. நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஆட்கடத்தல், காணாமல் போதல், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றுடன் அரசுக்கு எதுவித தொடர்பும் கிடையாது. ஆனால், இதனைத் தடுத்துநிறுத்த அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்கும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இக்கருத்தை முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜே.வி.பியினர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. நாட்டில் இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடு…
-
- 3 replies
- 1.2k views
-
-
1956இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை(முத்திரை) ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இத் தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையைப் பார்த்த பெரும்பான்மையினத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே, இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள். இதன் காரணமாக, இந்தத் தபால் தலையை இலங்கை…
-
- 0 replies
- 1.2k views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தடைகளை தாண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரை நாலாம் மாடிக்கு அழைப்பதன் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நிகழ்வினை தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது. இன்று காலை 11.15மணியளவில் ஒன்று குவிந்த மாணவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக அனைவரும் முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர்.அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர். முன்ன…
-
- 8 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே வவுனியா, மன்னார், மணலாறு பகுதிகளில் மோதல் சிறீலங்கா படையினர் விடுதலைப்பலிகளின் தெற்கு முன்னரங்க நிலைகளை நோக்கி மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய பகுதிகளை நோக்கி முன்னகர முற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் இத்தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 8.20 மணியளவில் சிறீலங்கா படையினர் இருமுனைகளில் முன்னகர்ந்து விடுதலைப்புலிகளின் நாவற்குளம் பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும் இத்தாக்குதல் 20 நிமிடநேரம் நீடித்ததாகவும் இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆக்கிரமிப்பு முயற்சியாக காலை 9.45 மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பாலமோட்டை பகுதி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிட்டனின் அகதிக்கொள்கை மற்றும் மனித உரிமை கொள்கைகளுக்கு இடையே முரண்பாடு காணப்படுவதாக சனல் 4 கூறியுள்ளது. தமிழர்களை திருப்பி அனுப்புவது ஆபத்தானது எனவும் கூறியுள்ளது.சிறிலங்காவில் ஈழத்தமிழர்கள் நாள்தோறும் சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள், மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பிரிட்டன் தமிழ் அகதிகளை சிறிலங்காவிற்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிரிட்டனின் அகதிக்கொள்கையும், மனித உரிமை தொடர்பான கொள்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் லிவர்பூலில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். சித்திரவதைகளில் இருந்து விடுபடுபவர்களுக்கான தொண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கூ…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் World at the Crossroads participants: இலங்கை அரசாங்கம் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்பதோடு தமக்கான சுதந்திரமான அரசை நிறுவும் உரிமையுடன் கூடிய தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெற்ற World at the Crossroads participants: அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுவும் திட்டமிட்ட முறையில் பாரபட்சமாக இனஒதுக்கல் அரசியல் ஆறு …
-
- 1 reply
- 1.2k views
-
-
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் இன்று ஆரம்பம்! தியாக தீபம் திலீபனின் நினை வேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இன்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறும் . ந…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். “வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட…
-
- 4 replies
- 1.2k views
-
-
கண்காணிப்பாளர்களுக்காக புதிய நாடுகளில் அவசரமாக ஆள் தேடும் நெருக்கடியில் நோர்வே! இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்று வதற்காக புதிய நடுநிலை நாடுகளில் ஆள்களை அவசர அவசரமாகத் தேட வேண்டிய இக்கட்டில் அனுசரணைத்தரப்பான நோர்வே சிக்கியிருப்பதாகத் தெரியவருகின்றது. தற்போது நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருபது கண்காணிப் பாளர்களும் டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 37 கண்காணிப்பாளர் களுமாக மொத்தம் 57 கண்காணிப்பாளர்கள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டிருக்கின்றனர். நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்தோரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை அரசும், புலிகளும் போர் நிறுத்தத் துக்கு வழிசெய்த…
-
- 2 replies
- 1.2k views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
கொள்ளுப்பிட்டி பாலத்தில் எழுந்த புகையால் பதற்றம் வீரகேசரி நாளேடு கொழும்பு3 கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க நிலையத்திற்கு முன்னாலுள்ள பாலத்தின் ஓரத்தில் வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து எழுந்த மர்ம புகையினால் அப்பகுதியில் நேற்று பிற்பகல் பெரும் பதற்றம் நிலவியது.மர்ம சத்தத்தையடுத்து எழுந்த புகையினால் அமெரிக்க நிறுவனம் . மற்றும் இந்திய தூதரகம் உள்ளிட்ட அருகிலுள்ள அரச,தனியார் நிறுவனங்களுக்கு வருகைதந்திருந்தவர்கள் அல்லோல கல்லோலப்பட்டனர். . புறக்கோட்டையிலிருந்து காலிக்கு செல்லும் பக்கத்தில் பாலத்தில் நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த சுமார் நான்கு அங்குலம் உயரமான தரை ஓடுகளுக்கிடையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 12 மணியளவில் கேட்ட …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் மனித உரிமை தொடர்பாக பிரிட்டனின் வெளியுறவு செயலகம் கருத்தினை வெளியிட்டது தெரிந்ததே. இந்த அறிக்கையில் சிறிலங்காவில் மனித உரிமை நிலமை கவலையளிப்பதாக கூறி இருந்தது. ஆனால் பிரிட்டன் இந்த கருத்துக்களை எந்த அடிப்படையில் கூறியது அவர்களுக்கு என்ன அருகதை உள்ளது என சிறிலங்காவின் வெளியுறவு துணை அமைச்சர் கேள்வி கேட்டுள்ளார்.இலங்கையின் அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தவும், போர் காலத்தில் இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்தவும் அரசு முன்வர வேண்டும் எனவும் பிரிட்டன் கோரியிருந்தது. ஆனால் அரசு தாங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதன் அடிப்படையில் பிரிட்டன் கூறுகிறது…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார் பள்ளமடுவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு [Wednesday January 02 2008 01:38:42 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் பள்ளமடுவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் 5 தடவைகள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இச்சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் நடைபெற்றது. முதல் தடவை கிபீர் வானூர்திகள் இரு குண்டுகளை வீசின. இதில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் கோவில் என்பன அழிந்து சேதமாகி உள்ளன. இதன் பின்னர் 4 தடவைகள் வந்த வானூர்திகள் செறிவான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தின. இதனால் ஏற்கனவே அப்பகுதியில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்றைய குண்டுவீச்சினாலு…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்கா நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது!-ஜனாதிபதி. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா, நியாயமற்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் ஊடக முதன்மையாளர்களை நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஏ.எப்.பி. செய்திசேவை தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு, பரந்துப்பட்ட நிலையில் நல்லிணக்கம் தொடர்பான பரிந்துரைகளை செய்துள்ளது. எனினும் அமெரிக்கா மாத்திரம் போரின் இறுதிக்கட்ட நாட்கள் தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொது…
-
- 2 replies
- 1.2k views
-
-
கொழும்பில் கிளைமோர் குண்டு - தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை திசை திருப்பும் நடவடிக்கை கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அரசின் நடவடிக்கைக்கு அனைத்துலக ரீதியில் எதிர்ப்புத் தோன்றியுள்ளதால், அரசு சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள சேர் பறோன் ஜயதிலக்க வீதியில் இன்று ஏழு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக, அரசு தகவல் வெளியிட்டுள்ளது, சிங்கள, ஆங்கில பெரும்பான்மை இன ஊடகங்களும் அரசின் இந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பில் தங்ககங்களில் தங்கியுள்ள தமிழர்களால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்ற அரசின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில், …
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். நேற்று (16.07.2023) நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது முக்கியமான அவசியமான பணியாகவுள்ளது. சமகால வரலாற்று நிகழ்வுகளை அது நிகழ்ந்த நாட்டிலே பேணிக்கொள்ள முடியாத நிலையில் அயல் நாட்டிலும் வெளிநாட்டிலும் நினைவகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றாம். பாதுகாக்க தவறி விட்டோம் இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. எ…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
பருத்தித்துறை பல்லப்பை படைமுகாம் இடம்மாற்றம். வடமராட்சி பிரதேசத்தின் பாரிய ஆட்லறி மற்றும் மோட்டார் தளமாக விளங்கிவரும் வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள பல்லப்பை படைமுகாமை மந்திகை மருத்துவமனைச் சுற்றாடலில் மாற்ற படைத்தரப்பு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற படையினருக்கான விசேட கூட்டம் ஒன்றிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்முகாமை இப்பகுதியிலிருந்து மாற்றவும் படை உயர் அதிகாரிகள் தீர்மானித்து இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் படைத்தரப்பு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகதாகவும் மந்திகை வைத்தியசாலையையும் அதன் சுற்றாலையும் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசமாக மாற்றவும் படைத்தரப்பு தீர…
-
- 2 replies
- 1.2k views
-
-
பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழர் திருநாள் பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (13.01.2021)சிறப்பாக இடம்பெற்றது. இன்றுகாலை முதல் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று அபிஷேகம் இடம்பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, பல பொலிஸார், அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அளவுக்கதிகமான பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்பை தவிர எந்தவிதமான இடையூறுகளும் இன்றி பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இந்தப் பொங்கல் நிகழ்வில் செம்மலை கிராம மக்கள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலர்…
-
- 13 replies
- 1.2k views
-