ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம் APR 21, 2015 | 3:15by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 24ம் நாள் விசாரணைக்கு முன்னிலையாகும்படி, இலங்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட விவகாரம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நாடாளுமன்றத்தில் நடுவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பின…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவேன்- அமைச்சர் ஹக்கீம் இந்த அரசாங்கத்தில் மீண்டும் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் (26) கடமைகளை பொறுப் பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொது மக்களின் அபிலாஷைகளை உதறித் தள்ள நான் ஒரு போதும் தயாரில்லை. எனது 25 வருட அரசியல் வாழ்வில் அரைவாசி காலம் எதிர்கட்சியில் கழிந்துள்ளது. ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்க் கட்சிய…
-
- 2 replies
- 933 views
-
-
காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை நடாத்துமாறு கோரிக்கை – 02 செப்டம்பர் 2011 இலங்கையில் காணாமல் போன பன்னிரண்டாயிரம் பேர் குறித்து இன மதச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். காணாமல் போனோர் குறித்த உலக தினத்தையிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் அதிகம் காணாமல் போனவர்களின் பட்டியல் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இனத்தையோ மதத்தையோ பாராமல் எங்களுடைய பிள்ளைகளைக் கண்டு பிடிக்க உதவுங்கள் என்று தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போனோர் நினைவு தினமான ஓகஸ்ட் 30 அன்று கோரிக்கை வி…
-
- 1 reply
- 430 views
-
-
January 2, 2019 மாவனல்லைப் பகுதியில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 07 சந்தேகநபர்களும் கடந்த 26ம் திகதி கைது செய்யப்பட்டதுடன், மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மாவனல்லை, தெல்கஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி ஆகிய இருவரே இவ்வாறு காவற்துறையினரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களாவர். …
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்திய - இலங்கை பாலம் குறித்து த ஹிந்து வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில், இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை மேற்கொண்டிருந்தார். எனினும் அது உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை. முன்னதாக இருபது ஆண்டுகளுக்கு முன்னரும் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, சென்னையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தலைமானாருடன் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தை இணைக்கும் பாலம் கட்டும் யோசனையை முன்வைத்திருந்தார். இது பிராந்திய பொருளாதார ஒருங்கி…
-
- 0 replies
- 217 views
-
-
மனித உரிமை கண்காணிப்பாளர்கள் நியமனத்தை தடுத்த நோர்வே சிறிலங்காவிற்கு மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முயற்சிக்கு நோர்வே, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவளிக்காது விட்டதன் மூலம் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவிற்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. கடந்த மாதம் 25 ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் செயற்குழு கூட்டத்தின் போது அதற்கான திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியான ஜேர்மன் தூதுவர் தயாரித்திருந்தார். அனைத்துலகத்தின் தலையீடுகள் இன்றி சிறிலங்கா அரசு தனது பிரச்சனைகளை தானே தீர்க்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் 67 வருடமாக இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டியும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள (OISL) விசாரணைக்குழு தனது விசாரணைஅறிக்கையை உடன் வெளியிட வேண்டும் எனக்கோரியும் , தமிழின அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுயுறுத்தியும், நேற்று புதன் கிழமை(29.04.2015) பிற்பகல் 16.00 மணியளவில் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனஈர்பு போராட்டம்நடைபெற்றது. தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுப்பது அநீதி எனவும் சுட்டிக்காட்டப்பட்டு மகஜர் கையளிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய நாடா…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி! மணி யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது. மகஜரில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு, 4 வருட தாமதத்தின் பின்…
-
- 2 replies
- 366 views
-
-
ஞாயிறு 15-07-2007 12:21 மணி தமிழீழம் [சிறீதரன்] முன்னாள் விமானப்படை அதிகாரி கஜநாயக்கா உயிருக்கு அச்சுறுத்தல் ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. தற்போது குற்றப்புலனாய்வு துறையின் விசாரணையில் உள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்கா விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் அவர் விடுதலை செய்யப்பட்டால் அவரை படுகொலை செய்யவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணையின் போது ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய அரசாங்க தரப்பு முக்கியஸ்தர…
-
- 0 replies
- 1.3k views
-
-
விகிதாசார தேர்தல் முறைப்படி தான் பொதுத்தேர்தல்! - என்கிறார் அமைச்சர் கபீர் ஹாசிம். [Tuesday 2015-05-05 08:00] அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசிம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது. எனினும், 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் சற்று காலதாமத…
-
- 0 replies
- 488 views
-
-
ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு' என்ற சொற்பதம் ஒரு கண்துடைப்பு நாடகமா ; தவராசா கேள்வி 'ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு' என்ற சொற்பதமும் அதற்கான பொருள் கோடலும் அடங்கிய ஓர் அரசியல் அமைப்பு வரைபு ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாம் நம்பிக்கை கொள்ள முடியுமாவென வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசியல் அமைப்பின் (1978 ஆம் ஆண்டின்) சரத்து 2 மற்றும் சரத்து 9 என்பவற்றை பாதுகாத்துத் தான் அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவரும். இதற்கு முரணான கருத்துக்கள் அடங்கிய யோசனைத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம் என்பதற்கா…
-
- 0 replies
- 372 views
-
-
நுகேகொட-தெல்கந்த சந்தியில் சக்தி வாய்ந்த கிளைமோர் மீட்பு! ஜனாதிபதிக்கு இலக்கு வைக்கப்பட்டதா? கொழும்பின் புறநகர்ப்பகுதியான நுகே கொட தெல்கந்த சந்தியில் சந்தை ஒன்றி லிருந்து 8 கிலோகிராம் நிறைகொண்ட கிளைமோர் குண்டொன்றை நேற்று பொலி ஸார் மீட்டிருக்கின்றனர். வாழைப்பழ சீப்புகள் அடங்கிய பை ஒன் றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கிளைமோர்க் குண்டு பற்றிய தகவலை சந் தைப்பகுதியில் நின்றிருந்த சிவிலியன் கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் பேச வல்ல அதிகாரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 17ஆவது வருடாந்த சம்மேளன மாநாடு நேற்று இடம் பெற்ற மஹரகம தேசிய இளைஞர் சேவை கள் மன்றத்திற்கு நான்கு க…
-
- 1 reply
- 1.7k views
-
-
[Monday, 2011-09-19 21:07:15] நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவரும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சா அவர்களின் நியூயோர்க் வருகையை முன்னிட்டு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 23ம் திகதி 2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை ஐக்கிய நாடுகள் சபை முன்பாக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .. நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் குறிப்பாக கனடிய தமிழ் இளையோர்களை கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை தொடர்ந்து செய்து வரும் சிறீலங்கா அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றிய தரப்பினரும் அக்கறையுடைய தரப்பினரும் சற்றுப்பின்னகர்ந்துள்ள ஒரு நிலை காணப்படுகிறது. போர் எல்லாக்கட்டுகளையும் மீறி தன்பாட்டில் விரிவடைந்து செல்லும்போது அதனை வெளியே நின்று பார்க்கும் ஒரு நிலைக்கு இந்தத்தரப்பினர் இப்போது தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை விவகாரத்தில் காத்திரமான பங்கு வகிக்க கனடாவை நிர்ப்பந்திப்போம் : கனடிய மனிதவுரிமை மையம்! [ Monday, 26-09-2011 13:19 ] இந்த மாத முற்பகுதியில் கனடியப் பிரதமர் சிறீலங்கா தொடர்பான பத்திரிகையாளரின் கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் தான் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தது அவரது சரியான நிலைப்பாடாகும் என்று கனடிய மனிதவுரிமை மையம் விடுத்த செய்திக் குறிப்பில் பாராட்டியுள்ளது. இதேவேளை தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான கொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் மேற்படி செய்திக்குறிப்பில், கனடிய மனிதவுரிமை மையத்தின் செயற்பாடுகளைத் தான் கடந்த மூன்று வருடங்களாக அவதானித்து வருவதாகவும், இனிவரும் காலங்…
-
- 0 replies
- 406 views
-
-
நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை. கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய – கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டவர் வெலிவேரிய கெஹல்கந்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 45 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக ஹோண்டா ஃபிட் காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தெரணம கம்பஹா வைத்தியசாலையில் …
-
- 4 replies
- 649 views
-
-
திருக்கணித பஞ்சாங்க கணிதர் காலமானார் திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்கள் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலம் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 5மணிக்கு காலமானார். 18.12.1935 இல் பிறந்த இவர் தென்மராட்சிப் பிரதேசத்தில் பல ஆலயங்களில் பிரதம குருவாகக் குருத்துவப் பணிகளை மேற்கொண்டவர். மட்டுவிலில் இருந்து வெளிவரும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரதம ஆசிரியராகவும் திகழ்ந்தார். வேதாகம சோதிட பூஷணம், சிவாச்சாரிய திலகம், கலாபூஷணம் முதலிய கௌரவப் பட்டங்களையும் இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=351504049024567397#sthash.1b3WriI9.dp…
-
- 0 replies
- 532 views
-
-
Published By: RAJEEBAN 03 FEB, 2024 | 09:30 AM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும், ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாடாளுமன்றத்தில் காணப்படுகின்ற இரண்டு சட்டங்கள் குறித்து நாட்டில் பெரும் கரிசனைகள் காணப்படுகின்றன – முதலாவது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றையது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார் என நான…
-
- 2 replies
- 308 views
- 1 follower
-
-
சர்வதேச கண்காணிப்புக்குழுவின் தேவை ஐ.தே.க.புலிகளுக்கு உண்டு இலங்கையில் சர்வதேச கண்காணிப்புக்குழுவை செயற்படவைக்கும் தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்குமே இருக்கின்றது. அவர்களே இதனை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருக்கின்ற இரு பிரதான கட்சிகளும் ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டாலும் வெளிநாட்டு அமைப்பு தமது நாட்டில் தலையிடுவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்று அரசாங்க சமாதõன செயலகத்தின் செயலாளர் பேராசிரியர் ராஜிவ் விஜேசிங்க தெரிவித்தார். ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோல்மஸ் என்னை சந்தித்தபோது மனிதாபிமான பணியாளர்களுக்கு, உலகில் மிகவும் அபாயகரமான நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற கருத்தை தெரிவிக்கவில…
-
- 0 replies
- 1k views
-
-
அங்கொட வெல்லம்பிட்டிய பகுதியில் இன்று இரவு இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதலொன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அப்பகுதியில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமொன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் இதனால், அப்பகுதி பெரும் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் - கலவரத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.c...ticle_full.aspx
-
- 1 reply
- 735 views
-
-
நோர்வே தூதுவர் தலைமையில் நீரியல் நிபுணர்கள் வடக்கு விவசாய அமைச்சருடன் சந்திப்பு இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் தலைமையில் நோர்வே நீரியல் நிபுணர்கள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் இன்று பிற்பகல் சந்தித்துக் கலந்துரையாடினர். வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அழைப்பின் பேரில், இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அண்மையில் சுன்னாகம் பகுதியில் தரையை ஊடுரும் றேடாரைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதற்கான அனுசரணையை நோர்வே வழங்கியிருந்தது. இதன் அடுத்த கட்ட ஆய்வுக்காகவே நோர்வே புவிச்சரிதவியல் நிறுவகத்தைச் சேர்ந்த நீரியல் நிபுணர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த நோர்வே நிபுணர…
-
- 0 replies
- 682 views
-
-
யாழில் கோர விபத்து : நெல்லைக் காய வைத்தவர் உயிரிழப்பு! மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதால் வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2024/1369405
-
- 0 replies
- 355 views
-
-
19-08-2007 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சலசலப்புக்கள் மக்களின் எதிர்பார்ப்பைப் போல் சத்தமின்றி அடங்கிவிட இந்த வார அரசியலில் ஆவலை அதிகரிக்கும் திருப்பங்களாக ரணில் - மங்கள கூட்டணியின் பேரணிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வரவு என்பவற்றை குறிப்பிடலாம். அதாவது அரசிற்கு எதிரான அணியினது பலம் விரிவடைகின்றதா? என்ற ஒரு தோற்றப்பாடு தென்னிலங்கையில் வலுப்பெற்றுக்கொண்டு செல்கின்றது. இந்த சலசலப்புக்களுக்கு மத்தியில் மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இலங்கை உகந்த இடம் அல்ல, அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான…
-
- 0 replies
- 670 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க சபாநாயகர் பரிந்துரை JUN 03, 2015 | 7:50 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கான வெளியக உறுப்பினர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமானது. எனினும், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இருதரப்பு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியதால், சபை ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், இருதரப்பு உறுப்பினர்களும் விரும்புவதால் நாடாளுமன்றம் விரைவாக கலைக்கப்பட வேண்டும் என்று த…
-
- 0 replies
- 602 views
-
-
றீயூனியனுக்கு படகில் சென்றவர்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்… February 14, 2019 2ஆம் இணைப்பு…. சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கு, பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இன்று, பிரான்ஸின் விசேட விமானத்தினூடாக நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவி விசாரணை பணிப்பாளர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல…
-
- 0 replies
- 293 views
-