ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
வீரகேசரி இணையம் 5/17/2008 1:04:57 PM - வவுனியா பசார் வீதியில் படையினர் பயணம் செய்த இராணுவ கவச வாகனம் ஒன்றின் மீது இன்று காலை 11 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கவச வாகனத்தின் மீது பட்ட கைக்குண்டு கீழே வீழ்ந்து வெடித்ததில் அவிடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் வந்து நின்ற பஸ் ஒன்றில் இருந்த பிரயாணிகளில் பலரும், அந்த வேளையில் வீதியில் சென்றவர்களும், அருகில் இருந்த கடைகளில் இருந்த சிலருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். இராணுவ வாகனத்திற்கோ அதில் இருந்த படையினருக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பொலிசார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - ஏ.எஸ்.கல்கட் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். ஐ.நாடு மனிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல் எற்பட்டடுள்ளது. 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் …
-
- 9 replies
- 1.2k views
-
-
உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுப்பு அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்து அனுப்பிவிட்டனர். இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீ…
-
- 8 replies
- 1.2k views
-
-
[size=4]கொழும்பு நகரின் மத்தியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் மற்றொரு மனித இனப்படுகொலை நடைபெற்றிருக்கின்றது. வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரங்களில் 27 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், கொல்லப்பட்டவர்களின் தொகை இதனைவிட அதிகமானது. [/size] [size=4]இதனைவிட விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 100 பேர் வரையில் காயமடைந்திருக்கின்றார்கள். [/size] [size=4]சிறையில் வெடித்த கலவரம் சுமார் 10 மணித்தியாலத்தின் பின்னரே இராணுவக் கொமாண்டோக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதிகூடிய பாதுகாப்பான சிறைச்சாலையிலேயே கைதிகளுக்குப் பாதுகாப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் இடம்பெயருகின்றனர் - புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசு படையினரின் போர் நடவெடிக்கை ஏற்படளாமென பல பொதுமக்கள் இடம் பெயருகின்றனர் . என விடுதலைப்புலிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது . இரு பகுதி எல்லைகளில் உள்ள குழந்தைகள் வயோதிபர்கள் பெயர்கள் உட்பட பலர் வெளியேறி வருவதாகவும் வன்னி மத்திய பகுதியில் பலர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார் . என்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆழ ஊடுறு படையிணிகளால் நடத்தப்படும் கிளேமோர் தாக்குதல் காரணம் தற்போதைய கெடுபிடி நில…
-
- 0 replies
- 1.2k views
-
-
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் எதிர்பாராத பல சிக்கல்களை எதிர் கொள்வதாக தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழீழ விடுதலையின் தேவையினையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கான காரணிகளையும் அழுத்தம் திருத்தமாக வெள்ளித் திரையில் பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான சிறுமி புனிதவதியின் துன்பம் நிறைந்த வாழ்வு நமது சொந்தங்கள் தமிழீழத்தில் இந்த வினாடிவரை அனுபவித்து வரும் அல்லல்களைப் பிரதிபலிக்கிறது. தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பாடசாலைகள் மீதான விமானத் bதாக்குதல்கள், தமிழ் இளைஞாகளின் கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி, நி…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலக பொருளாதார வீழ்ச்சிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொறுப்பின்மையே காரணம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வங்கிமுறை முறிவடைந்தமை உட்பட உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டமைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதிவிடயங்களில் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்டமையே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கி ஆளுநர்களின் 46ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசும்போது ஜனாதிபதி இதனை கூறினார். அங்கு உரையாற்றி அவர் மேலும் கூறுகையில், இரட்டை நியமங்கள், கொள்கையில் முரண்பாடுகள், யதார்த்தத்தை ஏற்காத பிடிவாதம், பல்பக்க சர்வதேச நிறுவனங்களை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகள், அவசர நிதியுதவியை வழங்குவதில் உள்ள அசமந்த போக்கு என்பவையே நெருக்கடியை மோசமாக்கிய காரணிகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டவரவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கமாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறிப்பாக யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை, தீர்மானம் பாதிக்கும் என பாகிஸதான் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.eeladhesa...lle-nachrichten
-
- 3 replies
- 1.2k views
-
-
நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலை அடுத்து தீவகம் முழுவதும் ஊரடங்கு. நேற்று அதிகாலை நெடுந்தீவில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து வேலணை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு உதவி அரசாங்க பிரிவு ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பண்ணை பாலத்திற்கு அப்பாலும் காரைநகருக்கு செல்லும் மூளாய் வீதிக்கு அப்பாலும் எவரையும் உள் நுழையவோ வெளி நுழையவோ அனுமதிக்கவில்லை எனவும் தெரியவருகிறது. -Pathivu-
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவத்தினரின் ட்றக் வாகனத்தை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்த இராணுவத்தினர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.eelampage.com/?cn=30263
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழில் வெளிமாவட்டத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை: டக்ளஸ் வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு யாழ்.மாவட்டத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும்சேவை ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
“சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. சபாநாயகர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து கொண்டிருந்தார். …
-
- 6 replies
- 1.2k views
-
-
வெள்ளிக் கிழமை (20/11/2009) இரவு பத்து மணிக்கு "இன அழிப்பின் பின்னணியில்" என்ற தலைப்பில் சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. 'புதிய திசைகள்' அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர். http://kuralweb.com/200911/discussion.aspx
-
- 3 replies
- 1.2k views
-
-
நிதானம் இழந்துவிட்ட சனாதிபதியும் விதானம் இழந்துவிட்ட அரசாங்கமும் - முரளிமாறன்- இப்போது குடும்பிமலையைப் பிடித்துவிட்டதாக கூறி, 19ம் திகதி அதனைக்கொண்டாடும் நிகழ்வுகளும் முடுக்கிவிடப்பட்டது. இந்தியப்படையால் முடியாத ஒன்றை சிறீலங்கா இராணுவம் செய்துவிட்டதாகக் அவர்கள் கூறுகிறார்கள். இலங்கையில் இந்தியப் படைகள் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்தியப் படைகளுக்கு கிழக்கில் தலைமை தாங்கிய இந்திய இராணுவ அதிகாரி அசோக் மேத்தா “கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல காட்டுப்பகுதி எந்தவிதமான கேந்திர முக்கியத்துவமும் அற்றது” எனக்கூறிய பின்னரும் தொப்பிகல என்ற மாய மானை பிடித்துவிட முப்படைகளின் பிரதம தளபதியான சனாதிபதி உத்தரவுகளை படைகளுக்குப் பிறப்பித்தார். மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிராக மத்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர் பாதுகாப்பு தொடர்பிலான கருத்துக்களை இலங்கை செவிமடுக்கத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டுமென ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன் மோகனிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார். மீன…
-
- 4 replies
- 1.2k views
-
-
விரிவடைந்து வரும் போர்க்கள முனைகள் [10 - April - 2008] மடுவை கைப்பற்றுவதிலும் தக்க வைப்பதிலும் இரு தரப்பும் கடும் பிரயத்தனம் ஆர். ஹரிகரன் பாகிஸ்தானிடம் இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளவுள்ளது என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார். தென் ஆசிய ஆய்வு இணையத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்: இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பிப்பதற்காக சமிக்ஞையை காட்டியபோது அமை…
-
- 0 replies
- 1.2k views
-
-
நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் – உடனடியாக தூபி மீளநிர்மாணிக்கப்படவேண்டும் – சுமந்திரன் வேண்டுகோள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவு தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு, காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக சிந்திக்கும் எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதானதும் அல்ல. இது அனுமதியின்றி கட்டப்பட்டது …
-
- 13 replies
- 1.2k views
-
-
ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய கையில் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் சார்க் நாடுகளின் அமைப்பின் தலைவர் என்ற முறையிலேயே நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜபக்சே மட்டுமின்றி சார்க் அமைப்பில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவை தனிப்பட்ட முறையில் பா.ஜ.க விருந்துக்காக அழைக்கவில்லை. ஒட்டு மொத்த சார்க் நாடுகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டதில் அதில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். . இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதுஷிகா, தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். . அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோளாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். . மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்…
-
- 18 replies
- 1.2k views
-
-
யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-16 10:13:47| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியி ட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான துறைகளில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முதலீடு செய்து அதன்மூலம் யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருப்பதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் பெறப்படும் இலாபம் புலிகளின் நிதிக் கட்டமைப்பைச் சென்றடைவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான வர்த்தகர் ஒருவருக்கு புலிகள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
அதி சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு [Wednesday February 13 2008 02:39:38 PM GMT] [யாழ் வாணன்] கல்விச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு 12.02.2008 யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதிசிறப்புச் சித்திபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் பணவைப்புச் சான்றிதழ் வழங்கி மதிப்பளிப்பு சுவிஸ்வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் நடைபெற்று முடிந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப்பெற்ற யாழ் மத்திய கல்லூரி வர்த்தகப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களான கணேச…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத்தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய் இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்கு செல்லணேடியதொரு நிர்ப்பந்தத்தை சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்று உறுதியாக நம்பலாம் என ஈழநாதம் பிரதம் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஈழநாதம் வார இதழில் எழுதியுள்ள ‘வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்’ என்ற தலைப்பிலான பத்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்த அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல…
-
- 1 reply
- 1.2k views
-
-
குடுமியைத் தில்லிக்குக் கொடுத்துவிட்ட முதல்வர் கருணாநிதியால் எதைத்தான் சாதிக்க முடியும்? கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து அதைப் பிடிக்க நினைத்த புத்திசாலி போல தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படை தாக்கிக் கொல்வதில் இருந்து காப்பாற்ற தமிழ்நாட்டில் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ஸ்ரீலங்கா தூதுவரது அலுவலகத்துக்கு முன்பாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஆளும் கட்சியான திமுக மார்ச்சு 12 ஆம் நாள் ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தியது. இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் கொ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணத்திலிருந்து 2000 தமிழ் இளைஞர் - யுவதிகளை விரைவில் பொலிஸ் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் சிவில் பாதுகாப்பு குழுவுக்குப் பொறுப்பான மின்சக்தித்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன உட்பட பாதுகாப்பு அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பதன் நோக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கை;கு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார். “சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால்…
-
- 3 replies
- 1.2k views
-