ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
கொழும்பு செல்கிறார் சிவசங்கர மேனன்- கண்டனம் தெரிவிப்பாரா, சமாதானம் பேசுவாரா? கொழும்பு: சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை பேசி வரும் நிலையில் இதுதொடர்பாக இந்தியாவின் கண்டனத்தை நேரில் தெரிவிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இந்த வாரத்தில், கொழும்பு செல்லவுள்ளார். தனது பயணத்தின்போது ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே ஆகியோரை மேனன் சந்திப்பார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலாளராக பலமுறை மேனன் கொழும்பு சென்று வந்துள்ளார். ஆனால் எந்த பயணத்திலும் அவர் இந்தியாவின் கோபத்தையோ, கண்டனத்தையோ தெரிவித்ததாக செய்தி இல்லை. எனவே மேனனின் தற்போதைய பயணம் எந்த வகையானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை…
-
- 5 replies
- 947 views
-
-
16 MAR, 2025 | 02:56 PM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்…
-
- 2 replies
- 239 views
- 1 follower
-
-
2552ம் ஆண்டு புத்தஜயந்தியை முன்னிட்டு நேற்றிலிருந்து எதிர்வரும் 24ம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. தொடர்ந்து படிக்க...
-
- 0 replies
- 648 views
-
-
நாடு கடத்தப்பட்ட இருவர் கைது அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைது கைதுசெய்துள்ளனர். அவ்விருவரும் சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/165701/%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.x…
-
- 0 replies
- 236 views
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இன்று (04) அவசர மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் யே.யாட்சன் பிகிறாடோ தலைமையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த மகஜரை கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத் துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழ…
-
- 4 replies
- 326 views
- 2 followers
-
-
கட்சித்தாவல்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் .சித்தார்த்தன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாடுகள், கூட்டமைப்பினுள் கட்சித்தாவல்கள், வெளிநாட்டுச் சந்திப்புக்கள், தென்னிலங்கையின் மாறாத நிலைப்பாடுகள், பிராந்திய, சர்வதேச நாடுகளின் ஆட்சிமாற்றத்தின் பின்னரான நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வழங்கிய செவ்வியில், தீர்வு விடயத்தில் அதியுச்ச கோரிக்கைகளையே முன்…
-
- 0 replies
- 289 views
-
-
Published By: DIGITAL DESK 2 13 APR, 2025 | 02:28 PM சித்திரை புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தாண்டு காலங்களில் விபத்துக்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும்பாலும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
அடுப்பில் இருந்த சோற்றுப்பானை வீழ்ந்து, குழந்தை உயிரிழப்பு – யாழில் துயர சம்பவம்! அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானியம் தோடடத்தை சேர்ந்த யசிந்தன் கஜலக்சி (வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோடடத்தில் வசித்து வரும் குறித்த குழந்தையின் வீட்டில் அவரது தாயார் கடந்த 23 ஆம் திகதி நிலத்தில் மண்ணெண்ணெய் அடுப்பில் சோறு சமைத்துள்ளார். அப்போது அடுப்புக்கு அண்மையில் இந்த குழந்தையும் இருந்துள்ளது. குழந்தை எதிர்பாராத விதமாக அடிப்பினை காலால் உதைந்துள்ளது. இதனால் அடுப்பில் கொதி நிலையில் இருந்த சோற்றுப் பானை குழந்தை மீது வீழந்…
-
- 2 replies
- 907 views
-
-
24 APR, 2025 | 04:46 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் கொட்டடி - மீனாட்சிபுரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்தார். இக்காணி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் பரப்பளவுள்ள காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இந்த காணியை விடுவித்து தரும்படி கோரிக்கை விடுத்துவருகிற போதும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை. இக்காணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியாகும். இந்த காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலை…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
இந்த நாட்டில் பிரஜாவுரிமைச் சட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதனாலேயே தமிழ் அரசுக் கட்சியினை தந்தை செல்வா தோற்றிவித்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு உரையாற்றிய அவர், http://www.tamilwin.com/show-RUmuyCRaSWerzF.html
-
- 2 replies
- 1.6k views
-
-
சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகர்ப்பகுதி சந்தை சுவர்களில், கடைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களையும் தொழில்நுட்பங்களையும் பிரதி பலிக்கக்கூடிய வகையிலான வர்ணப்படங்களை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களது நிதிப்பங்களிப்பில் வரைந்து அழகுபடுத்துவதற்கான அனுமதியினை கோரி சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் உபதவிசாளர் செ.மயூரன் பிரேரணையாக சமர்ப்பித்திருந்தார். கலை பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிப்படுத்தக் கூடியதும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஓவியங்களை கொடிகாமம் பிரதேச ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வரைவதற்கு சபையின் ஒருமித்த தீர்மானத்தின் பிரகாரம் கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து இ…
-
- 1 reply
- 836 views
-
-
தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரில் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மணலாறு போர் அரங்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. மணலாறு போர் அரங்கில் படைத்தரப்பு தமது உச்சகட்ட படைவலுவைப் பயன்படுத்தி முன்னேளறும் நடவக்ககைளை ஆரம்பிரத்ததிருக்கிறது. இதையடுத்து 'மணலாறு' 'மரணஆறு' ஆக மாறிவருகிறது. கடந்த வாரம் சிங்கள நாளிதழான தினமினவுக்கு அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு முனைகளில் நெருங்கி வருகின்றனர். இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு முன்னெறிச் சென்றால் படையினர் இறுதி இலக்கை அடைந்துவடுவர். அத்;துடன் பதுங்குகுழியில் ஒளிந்திருக்கும் பிரபாகரனை படையினர் பிடித்து விடவார்;' என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 2.2k views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் சலுகைகள் மற்றும் பணத்துக்காக அரசுடன் இரகசிய ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதுடன் பகிரங்கமாக அரசை எதிர்ப்பது போன்று செயற்பட்டு மக்களது வாக்குகளை சேகரித்து அரசுக்கு விற்பனை செய்யும் சதித் திட்டத்தை தீட்டியுள்ளது என்று என்று முஸ்லிம் மக்களே தெரிவிக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின்ன் தேசியக் குழு மற்றும் கிழக்கு மாகாண குழுத்தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஐ.தே.க தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முஸ்லிம் மக்களுக்கு நன்மை செய்வது போல் செயற்பட்டு அவர்களை அரசுக்கு விற்று மக்களின் உரிமைகளை மீறி தனது இருப்பைப் பேணிக் கொள்ள முயற்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கு எ…
-
- 0 replies
- 519 views
-
-
இந்திய மீனவர்கள் 8 பேர் கைது! எல்லை தாண்டி வந்து யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்றொழிலில் இரு படகுகளில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி வந்த 8 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. …
-
- 1 reply
- 541 views
-
-
காணாமல்போன பல்கலை மாணவனை தேட தனி பொலிஸ் குழு by reka sivalingamJanuary 14, 2020January 14, 2020040 காணாமல்போயுள்ள மலையகத்தை சேர்ந்த மருத்துவபீட மாணவனை தேடும் பணி இன்று (14) நான்காவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. எனினும் எவ்வித தகலும் கிடைக்கவில்லையென மாணவனின் உறவினர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவனின் கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சீசீடிவி கமரா காட்சிகளும் ஆராயப்பட்டுவருகின்றன. தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்படவுள்ளன. இவ்விவகாரத்தை கையாள்வதற்…
-
- 3 replies
- 760 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 11:07 AM திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்று சனிக்கிழமை (17) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு இரு வாரங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாம பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215031
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
தவறுதலான வெடிவிபத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரி காயம் சனி, 21 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கரடியனாறு பிள்ளையான் ஆயுதக்குழுவின் முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஆயுததாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்தவர் ஆயுததாரி தமிழ்வாணன் (அகவை 19) எனத் தெரியவருகிறது. இவர் தற்பொழுது மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1352
-
- 0 replies
- 610 views
-
-
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virake…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவன்கேணியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 741 views
-
-
[size=5]"டெசோ' மாநாடு நடக்கும் இடம் மாற்றம்: தி.மு.க., ஆபீசில் நடத்த முடிவு[/size] [size=3][size=4]டெசோ மாநாடு நடக்கும் இடத்தை, தி.மு.க., தலைமை அலுவலகமானஅறிவாலயத்துக்கு மாற்றி நேற்றிரவு தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். மாநாட்டை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்த, சென்னை மாநகர போலீஸ் தடை விதித்ததால், இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி, இம்மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, டெசோ எனப்படும் தமிழ் ஈழ பாதுகாப்பு அமைப்பின் சார்பாக சென்னை ராயப்பேட்டை ஒ…
-
- 9 replies
- 860 views
-
-
28 இந்திய மீனவர்கள் கைது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை இன்று கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர், பத்தாம் திகதி நான்குபேர் என முன்னதாக 41 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர். இதன்படி இன்று கைதானவர்களுடன் சேர்த்து மொத்தம் 69…
-
- 1 reply
- 348 views
-
-
அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் - கருணா குற்றச்சாட்டு அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளனர். அரசியல் இலஞ்சம் செய்வதில் தமி…
-
- 11 replies
- 915 views
-
-
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை! June 6, 2025 தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன் (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார். குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்…
-
- 0 replies
- 184 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்தவும் அவரது ஆதரவாளர்களும் ”எட்கா” எனப்படும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் ஊடாக, மகிந்த ராஜபக்ஷ கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=153603&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 469 views
-
-
18 JUN, 2025 | 09:49 AM யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியள…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-